அதிமுக கூட்டத்திற்கு கடைசி நேரத்தில் போலீஸ் அனுமதி மறுப்பு: முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் சாடல்

கரூர்: “திமுகவின் வேலைக்காரர்களாக காவல் துறையினர் செயல்படுன்றனர்” என்று முன்னாள் அதிமுக அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார். கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஏ.சுந்தரவதனத்திடம் முன்னாள் அமைச்சரும், கரூர் மாவட்ட அதிமுக செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமையிலான அதிமுகவினர் இன்று (ஜன. 25) மதியம் 12.50 மணிக்கு மனு அளித்தனர். இதுகுறித்து செய்தியாளர்களிடம் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கூறியது: ”அதிமுக சார்பில் கட்சி நிர்வாகரீதியான மாவட்டங்களில் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நடத்தப்படுகிறது. கரூர் மாவட்ட அதிமுக சார்பில் இன்று (ஜன. 25 … Read more

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: ஓபிஎஸ் அணிக்கு தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை ஆதரவு

சென்னை: “அதிமுக ஒன்றுபட்டு களத்திற்கு வரவில்லை என்றாலும், ஓபிஎஸ், டிடிவி தினகரன், சசிகலாவை நிராகரித்துவிட்டு தேர்தல் களத்திற்கு சென்றாலும் அதிமுகவின் பாரம்பரிய வாக்குகளே எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அணியினருக்கு கிடைக்காது” என்று தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவையின் தலைவர் தனியரசு கூறியுள்ளார். தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவையின் தலைவர் தலைவர் தனியரசு, ஓ.பன்னீர்செல்வத்தை புதன்கிழமையன்று சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியது: “ஈரோடு கிழக்கு தொகுதி … Read more

சரியான நேரத்தில் சரியான முடிவெடுத்த கமல்ஹாசனுக்கு நன்றி: கே.எஸ்.அழகிரி

சென்னை: “மதச்சார்பற்ற முற்போக்கு சக்திகள் ஓரணியில் திரள வேண்டும் என்பதில் தலைவர் ராகுல் காந்தியும், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும் ஒத்த கருத்தோடு செயல்பட்டு வருகிற நேரத்தில், அதற்கு வலிமை சேர்க்கிற வகையில் கமல்ஹாசனின் கருத்து அமைந்திருக்கிறது” என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத் தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளராக காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிடும் ஈ.வெ.கி.ச. இளங்கோவனை … Read more

பணமோசடி வழக்கில் திரிணமூல் காங். செய்தித் தொடர்பாளர் சாகெட் கோகலே கைது – அமலாக்கத் துறை நடவடிக்கை

புதுடெல்லி: திரிணமூல் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் சாகெட் கோகலேவை பணமோசடி வழக்கில் அமலாக்கத் துறை கைது செய்துள்ளது. மக்களிடம் இருந்து திரட்டிய பணத்தை தவறாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் கடந்த ஆண்டு டிசம்பர் 29-ம் தேதி குஜராத் போலீசாரால் சாகெட் கோகலே கைது செய்யப்பட்டார். அகமதாபாத் சிறையில் உள்ள அவர் பணமோசடி வழக்கின் கீழ் தற்போது அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து, சாகெட் கோகலேவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அவரை அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத் … Read more

இந்தியாவில் ஒரு மணி நேரம் முடங்கிய மைக்ரோசாப்ட் சேவைகள்

சென்னை: இந்தியா உள்ளிட்ட சில நாடுகளில் மைக்ரோசாப்ட் சேவைகள் முடங்கியதால் பயனர்கள் அதன் சேவையை பயன்படுத்த முடியாமல் தவித்தனர். இந்நிலையில், தற்போது மைக்ரோசாப்ட் சேவைகள் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளது. மைக்ரோசாப்டின் அவுட்லுக், டீம்ஸ், மைக்ரோசாப்ட் 365 போன்றவற்றின் சேவைகள் முடங்கியதாக தகவல். அவுட்லுக் சேவை முடக்கத்தால் பயனர்கள் தங்களால் மின்னஞ்சல் அனுப்பவும், பெறவும் முடியவில்லை என தெரிவித்துள்ளனர். இந்த பாதிப்பு குறித்து இந்திய பயனர்கள் அதிகம் புகார் தெரிவித்துள்ளதாக சொல்லப்படுகிறது. இதுகுறித்து முடங்கிய தளங்கள் … Read more

“தமிழக அரசுக்கு ஈரோடு இடைத்தேர்தல் தாக்கத்தை ஏற்படுத்தும்” – சசிகலா கருத்து

தஞ்சாவூர்: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தமிழக அரசுக்கு தாக்கத்தை ஏற்படுத்தும் என்று வி.கே.சசிகலா தெரிவித்துள்ளார். தஞ்சாவூர் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் மொழிப்போர் தியாகிகளுக்கு சசிகலா இன்று (புதன்கிழமை) அஞ்சலி செலுத்தினார். அப்போது செய்தியாளர்களிடம் சசிகலா கூறியது: “வீரவணக்கம் நாள் நிகழ்ச்சி இங்கு நடப்பது தமிழினம், நாடு என்பது இல்லாமல் தமிழரின் ஒற்றுமையைக் குறிக்கும். இங்கு உயிர்த் தியாகம் செய்த வீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது. வரும் நாடாளுமன்றத் தேர்தலின்போது கூட்டணி அமைப்பது குறித்து உங்களிடம் நிச்சயமாகச் சொல்வோம். ஈரோடு … Read more

இந்தியா – எகிப்து இடையே ஒப்பந்தங்கள் கையெழுத்து: இருதரப்பு உறவை மேம்படுத்த முடிவு

புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடி – எகிப்து அதிபர் அல் சிசி முன்னிலையில் இரு நாடுகளுக்கு இடையே இன்று பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இருதரப்பு உறவை மேலும் வலுப்படுத்த இரு தலைவர்களும் ஒப்புக்கொண்டுள்ளார்கள். குடியரசு தின சிறப்பு விருந்தினராக புதுடெல்லி வந்துள்ள எகிப்து அதிபர் அல் சிசி, பிரதமர் நரேந்திர மோடியை புதுடெல்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இதையடுத்து, இரு தரப்பு அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் சேர்ந்து இருவரும் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, … Read more

வடகொரியாவில் கரோனா பரவல்? – ஊரடங்கு அறிவிப்பின் பின்னணி

பியோங்யாங்: மூச்சுத் திணறல் தொடர்பான நோய்கள் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து வடகொரிய தலைநகரில் 5 நாட்களுக்கு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக வடகொரிய தலைநகர் பியோங்யாங்கில் சுவாச நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேரும் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சிகிச்சை பெறும் அனைவரும் கடுமையான சளியினால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால், வடகொரியா இதனை கரோனா என்று குறிப்பிடவில்லை. எனினும், பாதுகாப்பு முன்னெச்சரிக்கை கருதி அங்கு 5 நாட்களுக்கு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் அனைவரும் வரும் ஞாயிற்றுக்கிழமை வரை … Read more

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் சமக போட்டியில்லை; யாருக்கும் ஆதரவு இல்லை: சரத்குமார் அறிவிப்பு

சென்னை: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை என்று சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் அறிவித்துள்ளார். இது குறித்து சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி, ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் நிலைப்பாடு குறித்து நேற்று (ஜன.24) காலை சென்னை தலைமை அலுவலகத்தில் மாநில நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்களுடன் காணொளி காட்சி வாயிலாக ஆலோசனைக்கூட்டம் நடந்ததை அறிவீர்கள். மேலும், நேற்று மாலை உயர்மட்டக்குழு … Read more

உடல் நலக்குறைவு: நாஞ்சில் சம்பத் மருத்துவமனையில் அனுமதி

சென்னை: உடல் நலக்குறைவு காரணமாக பேச்சாளர் நாஞ்சில் சம்பத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கன்னியாகுமரியில் திருவட்டார் அருகேவுள்ள மணக்காவிளையைச் சேர்ந்தவர் பேச்சாளர் நாஞ்சில் சம்பத். உடல் நலக்குறைவு காரணமாக கடந்த சில ஆண்டுகளாக இவர் வீட்டில் இருந்தவாறு சிக்சை எடுத்து வருகிறார். இந்நிலையில், உடல்நிலை மேலும் பாதிக்கப்பட்டதை அடுத்து கன்னியாகுமரி மாவட்டம் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நாஞ்சில் சம்பத் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு, மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர். Source … Read more