பணிநிரந்தரம் செய்யக் கோரி சிறப்பு பயிற்றுநர்கள் தொடர் உண்ணாவிரதம்

சென்னை: பணிநிரந்தரம் செய்யக் கோரி மாற்றுத்திறன் மாணவர்களுக்கான பயிற்றுநர்கள் சென்னை டிபிஐவளாகத்தில் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழக அரசுப் பள்ளிகளில் 1 முதல் 12-ம் வகுப்பு வரை 2 லட்சம் மாற்றுத் திறன் மாணவர்கள் படிக்கின்றனர். இவர்களுக்கு கல்வி பயிற்றுவிக்க 3 ஆயிரம் பேர் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் பணிநிரந்தரம் செய்யக் கோரி 300-க்கும் மேற்பட்ட பயிற்றுநர்கள் சென்னை டிபிஐ வளாகத்தில் 23-ம்தேதி முதல் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 2-வது நாளாக நடைபெற்ற உண்ணாவிரத போராட்டத்தில் … Read more

தெலங்கானா புதிய தலைமை செயலக கட்டிடம் பிப்ரவரி 17-ம் தேதி திறப்பு – தமிழக முதல்வர் ஸ்டாலின் பங்கேற்பு?

ஹைதராபாத்: தெலங்கானா மாநிலத்தின் புதிய தலைமை செயலக கட்டிட திறப்பு விழா வரும் பிப்ரவரி மாதம் 17-ம் தேதி ஹைதராபாத்தில் பிரம்மாண்டமாக நடத்த அம்மாநில அரசு தீர்மானித்துள்ளது. இக்கட்டிட திறப்பு விழாவில் பல்வேறு மாநில முதல்வர்கள் வருகை தர உள்ளனர். ஆதலால், இவ்விழாவினில், தமிழக முதல்வர்மு.க. ஸ்டாலினும் கலந்துக்கொள் வார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஹைதராபாத் ஹுசைன் சாகர் அருகே 64,989 சதுர அடியில், 11 அடுக்கு மாடி கட்டிடமாக, ரூ.650 கோடி செலவில் தெலங்கானாவின் புதிய தலைமை … Read more

ஈரோடு கிழக்கு தொகுதி வேட்பாளர் தேர்வு குறித்து சேலத்தில் இபிஎஸ், சென்னையில் ஓபிஎஸ் ஆலோசனை

சேலம் / சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் குறித்தும், தேர்தல் வியூகம் குறித்தும் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் பழனிசாமி, முன்னாள் அமைச்சர்கள், நிர்வாகிகளுடன் சேலத்தில் நேற்று ஆலோசனை நடத்தினார். இதேபோன்று சென்னையில் ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை நடத்தினார். ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதிக்கான இடைத்தேர்தலில் திமுக கூட்டணியில், காங்கிரஸ்கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் போட்டியிடுகிறார். அதிமுக சார்பில்இன்னும் வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை. இந்நிலையில், சேலம் மாவட்டம் ஓமலூரில் உள்ள அதிமுக புறநகர் மாவட்ட … Read more

எகிப்து அதிபரை வரவேற்ற குடியரசுத் தலைவர், பிரதமர்

புதுடெல்லி: எகிப்து அதிபர் அல் சிசிக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவும், பிரதமர் நரேந்திர மோடியும் உற்சாக வரவேற்பு அளித்தனர். நாட்டின் 74வது குடியரசு தினம் நாளை நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு டெல்லியில் நடைபெற உள்ள குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்வதற்காக எகிப்து அதிபர் அல் சிசி நேற்று (செவ்வாய்கிழமை) மாலை டெல்லி வந்தடைந்தார். விமான நிலையத்தில் நாட்டுப்புற நடனக் குழுவினரின் இசை நிகழ்ச்சியுடன் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அவருடன் … Read more

வணிகவரி, பதிவுத்துறையில் ரூ.1.17 லட்சம் கோடிக்கும் மேல் வருமானம்

சென்னை: வணிகவரி மற்றும் பதிவுத்துறை வருவாய் ரூ.1.17 லட்சம் கோடியாக உயர்ந்து, கடந்தாண்டு மார்ச் மாதம் வரையிலான வருவாயை இந்தாண்டு ஜனவரி மாதத்திலேயே தாண்டி சாதனை படைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பி.மூர்த்தி தெரிவித்தார். சென்னை, நந்தனத்தில் உள்ள ஒருங்கிணைந்த வணிகவரி அலுவலக கூட்டரங்கில் அமைச்சர் பி.மூர்த்தி தலைமையில், வணிக வரி அதிகாரிகள் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் பி.மூர்த்தி கூறியதாவது: வணிகவரி மற்றும் பதிவுத்துறையில், கடந்தாண்டு மார்ச்மாதம் இறுதியில் கிடைத்த வருவாயானது, இந்தாண்டு ஜன.24-ம்தேதிக்குள் … Read more

பிஹாரை அடுத்து உ.பி.யிலும் ‘ராம்சரித்மானஸ்’ சர்ச்சை – சமாஜ்வாதி மூத்த தலைவர் மவுரியா மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

புதுடெல்லி: இந்துக்களின் புனித நூலான ‘ராம்சரித்மானஸ்’ குறித்து பிஹாரை தொடர்ந்து உ.பி.யிலும் சர்ச்சை எழுந்துள்ளது. இந்நூலை அவமதித்த சமாஜ்வாதி மூத்த தலைவர் சுவாமி பிரசாத் மவுரியா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. சம்ஸ்கிருத அறிஞரும் ராம பக்தருமான துளசிதாசரால் 15-ம் நூற்றாண்டில் எழுதப்பட்டது ராம்சரித்மானஸ். அவதி மொழியில் கவிதை நடையில் எழுதப்பட்ட இந்தநூலை இந்துக்கள் புனித நூலாகக்கருதி தங்கள் பூஜை அறையில்வைத்து பூஜிக்கின்றனர். இந்நூல் குறித்து உ.பி. தலித்சமூகத்தின் முக்கியத் தலைவருமான சுவாமி பிரசாத் … Read more

உண்மை கண்டறியும் சோதனை அறிக்கை நீதிமன்றத்தில் 2 வாரத்தில் தாக்கல்: ராமஜெயம் கொலை வழக்கில் தீவிரம்

சென்னை: ராமஜெயம் கொலை வழக்கில் உண்மை கண்டறியும் சோதனை அறிக்கை 2 வாரங்களில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். அமைச்சர் கே.என்.நேருவின் தம்பியும், திருச்சியைச் சேர்ந்த தொழில் அதிபருமான ராமஜெயம் கடந்த 2012 மார்ச் 29-ம் தேதி நடைபயிற்சி சென்றபோது மர்ம நபர்களால் கடத்தி கொடூரமாகக் கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கை சிபிசிஐடி எஸ்பி ஜெயக்குமார் தலைமையில், டிஎஸ்பி மதன், சென்னை சிபிஐயைச் சேர்ந்த ரவி உள்ளிட்டோர் அடங்கிய சிறப்பு புலனாய்வுக் குழு … Read more

10 ரூபாய் நோட்டுகளை பறக்கவிட்டு போக்குவரத்துக்கு இடையூறு – மனநலம் குன்றியவரை தேடும் பெங்களூர் போலீஸார்

பெங்களூரு: பெங்களூருவில் உள்ள பெரிய சந்தைகளில் ஒன்றான கே.ஆர்.மார்க்கெட் பகுதியில் பூ, காய்கறி, பழம், துணி, மின்சாதன பொருட்கள் உள்ளிட்டவை விற்பனை செய்யப்படுகின்றன. இதனால் கே.ஆர்.மார்க்கெட் சாலை மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்து எப்போதும் பரபரப்பாக காணப்படும். இந்நிலையில், நேற்றுகாலையில் கே.ஆர்.மேம்பாலத்துக்கு இரு சக்கர வாகனத்தில் வந்த 35 வயது மதிக்கத்தக்க இளைஞர் கோட் சூட் அணிந்து அவரது கழுத்தில் பெரிய கடிகாரத்தையும் தொங்கவிட்டிருந்தார். திடீரென மேம்பாலத்தில் சென்ற வாகனங்களை நிறுத்திய அவர், தனது பையில் இருந்த … Read more

''2019ல் பாகிஸ்தானும் இந்தியாவும் அணுஆயுத போருக்கு தயாராகின'': அமெரிக்க முன்னாள் வெளியுறவு அமைச்சர்

வாஷிங்டன்: பாகிஸ்தானும் இந்தியாவும் கடந்த 2019ம் ஆண்டு அணுஆயுத போரை நடத்த இருந்ததாக அமெரிக்க முன்னாள் வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோ அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளார். அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் இருந்தபோது அந்நாட்டின் வெளியுறவு அமைச்சராக 2018 முதல் 2021 வரை இருந்தவர் மைக் பாம்பியோ. தனது அனுபவங்கள் தொடர்பாக இவர் எழுதி சமீபத்தில் வெளியான Never Give an Inch: Fighting for the America I Love எனும் புத்தகத்தில், கடந்த 2019ம் … Read more

திமுக இளைஞரணி மாவட்ட அமைப்பாளர்கள் பதவிகளுக்கு 4,500-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: அமைச்சர் உதயநிதி தலைமையில் நேர்காணல்

சென்னை: திமுக இளைஞரணியில் மாவட்ட அமைப்பாளர், துணை அமைப்பாளர் பதவிகளுக்கு 4500-க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்ட நிலையில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நேற்று நேர்காணல் நடைபெற்றது. திமுகவில் இளைஞரணி, மாணவரணி உள்ளிட்ட 23 அணிகள் உள்ளன. இந்த அணிகளுக்கு மாநில அளவில் நிர்வாகிகள் உள்ளனர். இதற்கிடையே, திமுக உட்கட்சித் தேர்தல் முடிவுற்று, தலைவராக முதல்வர் மு.க.ஸ்டாலின் மீண்டும் தேர்வு செய்யப்பட்டார். அதைத்தொடர்ந்து, 23 அணிகளின் மாநிலசெயலாளர்கள், தலைவர்கள்பொறுப்புக்குத் தகுதியானவர்களை திமுக தலைமை நியமித்து அறிவித்தது. அதன்பின், … Read more