ஊழியர் வேலைநிறுத்தம் காரணமாக இடையில் ஒருநாள் தவிர வங்கிகள் நாளை முதல் 5 நாட்கள் செயல்படாது

சென்னை: குடியரசு தின விழா மற்றும் ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டம் காரணமாக, இடையில் ஒரு நாள் தவிர நாளை முதல் வங்கிகள் 5 நாட்கள் செயல்படாது. இதனால், வங்கி சேவைகள் கடுமையாக பாதிக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. தொழில் நிறுவனங்கள், வர்த்தகர்கள், அரசு கருவூலங்கள் மற்றும் பொதுமக்களின் தினசரி பணப் பரிவர்த்தனைக்கு வங்கிகள் முக்கியப் பங்காற்றி வருகின்றன. ஒருநாள் வங்கிக்கு விடுமுறை விடப்பட்டாலே பணப் பரிவர்த்தனை, காசோலை சேவைகள் பாதிக்கப்படுகின்றன. அத்துடன், மறு நாள் அனைத்து வங்கிகளிலும் … Read more

சுகேஷ் சந்திரசேகரின் கருப்பு பணத்தை சட்டப்பூர்வ வெள்ளை பணமாக்க மனைவி உதவி

புதுடெல்லி: சுகேஷ் சந்திரசேகர் மோசடி வழக்கை விசாரித்து வரும் பொருளாதார குற்றப் பிரிவு போலீஸார் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகை: சுகேஷ் சந்திரசேகர் மோசடியான வழிமுறைகளைப் பின்பற்றி பணத்தை குவித்துள்ளார். அதில், பெரும்பாலானவை கணக்கில் காட்டப்படாதவை. சிறு வணிக நிறுவனங்கள் மூலமாக கருப்புப் பணத்தை வெள்ளைப் பணமாக்கி முறையான வருமானமாக சுகேஷ் தம்பதி மாற்றிக் காட்டியுள்ளனர். நெட்பிளிக்ஸில் வெளியான ஓஸார்க் தொடரின் கதைக் கருவும் கருப்பு பணத்தை வெள்ளையாக எப்படி மாற்றுவது என்பதே. அதில் வரும் காட்சிகளை அடிப்படையாக … Read more

சந்தையில் சிப் தட்டுப்பாடு காரணமாக மடிக்கணினி வழங்குவதில் தாமதம் – அமைச்சர் அன்பில் மகேஸ் விளக்கம்

சென்னை: சந்தையில் நிலவும் சிப் தட்டுப்பாடு காரணமாக அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்குவதில் தாமதம் நிலவுவதாக பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஸ் விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்குவதற்கு அதற்குரிய விவரங்களை நிதித்துறையின் வலைதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். ஆனால், தொழில்நுட்பக் கோளாறால் ஆசிரியர்கள் தகவல்களை பதிவேற்றுவதில் சிரமம் இருந்தது. இந்த விவரத்தை நிதித்துறைக்கு தெரிவித்து சிக்கல் சரிசெய்யப்பட்டது. தற்போது … Read more

நேபாள விமான விபத்தில் உயிரிழந்த 4 இந்தியர் உடல்கள் சொந்த ஊர் கொண்டுவரப்பட்டன

காஜியாபாத்: நேபாளத்தில் கடந்த வாரம் நிகழ்ந்த விமான விபத்தில் உயிரிழந்த 4 இந்தியர்களின் உடல்கள் நேற்று அவர்களுடைய சொந்த ஊர்களுக்கு கொண்டுவரப்பட்டன. நேபாள தலைநகர் காத்மாண்டுவில் இருந்து அந்த நாட்டின் போக்கரா நகருக்கு எட்டி ஏர்லைன்ஸ் விமானம் கடந்த 15-ம்தேதி காலையில் புறப்பட்டது. இதில் 5 இந்தியர்கள் உட்பட 68 பயணிகளும் விமானி உள்ளிட்ட 4 ஊழியர்களும் பயணம் செய்தனர். போக்காரா நகரில் புதிதாக திறக்கப்பட்ட விமான நிலையத்தில் விமானம் தரையிறங்கும்போது எதிர்பாராத விதமாக விழுந்து நொறுங்கியது. … Read more

ஈரோடு கிழக்கில் மாதிரி வாக்குப்பதிவு – கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மின்னணு இயந்திரங்கள் சரிபார்ப்பு

ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பயன்படுத்தப்பட உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்பட்டது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பயன்படுத்தப்பட உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், ஈரோடு வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளன. இந்த வாக்குப்பதிவு இயந்திரங்களில், அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் நேற்று மாதிரி வாக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதை பார்வையிட்ட ஆட்சியரும், மாவட்டத் தேர்தல் அலுவலருமானஎச்.கிருஷ்ணன் உன்னி கூறியதாவது: ஈரோடு கிழக்கு தொகுதியில் உள்ள 238 வாக்குச்சாவடிகளில் பயன்படுத்துவதற்காக 500 … Read more

டெல்லி, உத்தர பிரதேசம் உள்ளிட்ட 6 மாநிலங்களில் நிலநடுக்கம் – பீதியடைந்து வெளியேறிய மக்கள்

புதுடெல்லி: டெல்லி, உத்தர பிரதேசம், உத்தராகண்ட், பிஹார், ஹரியாணா, ராஜஸ்தான் மாநிலங்களில் நிலநடுக்கம் ஏற்பட்டது. வீடுகள், கட்டிடங்களில் அதிர்வுகள் உணரப்பட்டதால் பீதியடைந்த மக்கள் அங்கிருந்து வெளியேறி, சாலை, தெருக்களில் திரண்டனர். இந்தியாவின் அண்டை நாடான நேபாளத்தின் சுதர்பாசிம் பகுதியை மையமாக கொண்டு நேற்று பிற்பகலில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அலகில் 5.9 புள்ளிகளாக பதிவானது. சுதர்பாசிம் மாகாணத்தின் பஜுரா, கைலாலி, தான்காதி மாவட்டங்களில் நிலநடுக்கம் கடுமையாக உணரப்பட்டது. அப்பகுதியில் ஏராளமான வீடுகள் சேதமடைந்துள்ளன. இதில் … Read more

மெட்ரோ ரயில் கட்டுமானப் பணி | அயனாவரம் ஆண்டர்சன் சாலையில் நாளை முதல் போக்குவரத்துக்கு தடை

சென்னை: மெட்ரோ ரயில் கட்டுமான அலுவல் மேற்கொள்வதற்காக ஆண்டர்சன் சாலை நாளை (ஜன.25) முதல் மூடப்பட்டு வாகன போக்குவரத்து தடைசெய்யப்பட உள்ளது என்று சென்னைப் பெருநகர போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக சென்னைப் பெருநகர போக்குவரத்துக் காவல்துறை வெளியிட்டுள்ள செய்தி: அயனாவரம் ஆண்டர்சன் சாலையில் மெட்ரோ ரயில் கட்டுமான அலுவல் மேற்கொள்வதற்காக 25.01.2023 புதன் கிழமை முதல் 7 நாட்களுக்கு சோதனை அடிப்படையில் பின்வருமாறு போக்குவரத்து மாற்றங்களைச் செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளது. எனவே கீழ்கண்ட போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்படுகிறது. … Read more

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இளைஞருக்கு 20 ஆண்டு கடுங்காவல் தண்டனை: போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு

சென்னை: ஐந்து வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சென்னை பெரவள்ளூர் பகுதியை சேர்ந்த 29 வயது இளைஞர் அருகில் உள்ள வீட்டில் தாயுடன் வசித்து வந்த ஐந்து வயது சிறுமியை, கத்தியைக் காட்டி மிரட்டி, பலமுறை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதுதொடர்பாக சிறுமியின் தாய் அளித்த புகாரின் பேரில், பெரவள்ளூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. … Read more

பிரதமர் மோடி குறித்த பிபிசி ஆவண பட திரையிடலுக்கு எதிர்ப்பு – டெல்லி ஜேஎன்யு மாணவர்கள் நள்ளிரவில் போராட்டம்

புதுடெல்லி: டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் பிரதமர் நரேந்திர மோடி பற்றிய சர்ச்சைக்குரிய பிபிசி ஆவண படத்தை திரையிட சில மாணவர்கள் திட்டமிட்டிருந்ததால் மின்சாரம் மற்றும் இணையம் துண்டிக்கப்பட்டது. அதையும் மீறி செல்போன்களில் ஆவண படத்தை பார்த்தவர்கள்மீது கற்கள் வீசப்பட்டதாக மாணவர்கள் புகார் தெரிவித்துள்ளனர். கடந்த 2002-ம் ஆண்டில் குஜராத்தில் கலவரம் ஏற்பட்டபோது அந்த மாநில முதல்வராக நரேந்திர மோடி பதவி வகித்தார். இந்த கலவரம் தொடர்பாக இங்கிலாந்து அரசு ஊடகமான பிபிசி கடந்த 17-ம் தேதி … Read more

புதுச்சேரி | பறிமுதல் செய்யப்பட்ட 2 டன் பிளாஸ்டிக் பொருட்களை கொண்டு தார் சாலை அமைப்பு

புதுச்சேரி: புதுச்சேரி அரசு ஒருமுறை பயன்படுத்தும் பாலித்தீன் பைகள், பிளாட்டிக் குவளைகள், தெர்மாகோல் தட்டுகள், தண்ணீர் பாக்கெட், பிளாஸ்ட்டிக் உறிஞ்சு குழல் (ஸ்டா), பிளாஸ்டிக் கொடி உள்ளிட்ட பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்துள்ளது. இருப்பினும் இப்பொருட்களை சில தொழிற்சாலைகள் ரகசியமாக உற்பத்தி செய்து வருகின்றன. இத்தகைய தொழிற்சாலைகளை புதுச்சேரி மாசுக்கட்டுப்பாட்டு குழுமம் ஆய்வு செய்து, அத்தகைய பொருட்களை பறிமுதல் செய்து வருகின்றது. உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளின் மின் இணைப்பு துண்டிக்கப்படுகிறது. குறிப்பாக கடந்த 3 மாதங்களில் மட்டும் … Read more