குடியரசு தின விழா சிறப்பு விருந்தினர் | டெல்லி வந்தடைந்தார் எகிப்து அதிபர் அல் சிசி

புதுடெல்லி: குடியரசு தின விழாவின் சிறப்பு விருந்தினரான எகிப்து அதிபர் அல் சிசி தனி விமானம் மூலம் டெல்லி வந்தடைந்தார். நாட்டின் 74வது குடியரசு தினம் நாளை மறுநாள் நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு டெல்லியில் நடைபெற உள்ள குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்வதற்காக எகிப்து அதிபர் அல் சிசி இன்று (செவ்வாய்கிழமை) மாலை டெல்லி வந்தடைந்தார். விமான நிலையத்தில் நாட்டுப்புற நடனக் குழுவினரின் இசை நிகழ்ச்சியுடன் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. … Read more

விமான நிலையம் முதல் கிளாம்பாக்கம் வரை 12 நிலையங்களுடன் மெட்ரோ ரயில்: ரூ.4,528 கோடியில் திட்டம்

சென்னை: சென்னையில் விமான நிலையம் முதல் கிளாம்பாக்கம் வரை ரூ.4,528 கோடியில்,12 ரயில் நிலையங்களுடன் மெட்ரோ ரயில் அமையவுள்ளது. சென்னை மெட்ரோ ரயில் முதல் கட்ட திட்டம் 54.1 கி.மீ தொலைவிற்கு விம்கோ நகர் முதல் சென்னை விமான நிலையம் வரை, சென்ட்ரல் முதல் பரங்கிமலை வரை என இரண்டு வழித்தடங்களில் முழுமையாக செயல்பாட்டில் உள்ளது. இந்நிலையில் 2-வது கட்ட மெட்ரோ பணிகள் மிக வேகமாக நடைபெற்று வருகிறது. ரூ.69,180 கோடி செலவில், 118.9 கிலோ மீட்டர் … Read more

பிரபல கட்டடக் கலை நிபுணர் பி.வி.தோஷி மறைவு: பிரதமர் மோடி இரங்கல்

புது டெல்லி: பிரபல கட்டடக் கலை நிபுணர் டாக்டர் பி.வி.தோஷி மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். இது குறித்து பிரதமர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ‘டாக்டர் பி.வி.தோஷி மிகச் சிறந்த கட்டடக்கலை நிபுணராகவும், பல்வேறு நிறுவனங்களை நிர்மாணித்தவராகவும் திகழ்ந்தவர். இந்தியா முழுவதும் அவர் மேற்கொண்ட நுட்பமான சிறந்த பணிகள் மூலம் வருங்கால தலைமுறையினர் கட்டடக்கலை நுட்பத்தை அறிந்து கொள்வார்கள். அவருடைய மறைவு கவலை அளிக்கிறது. அவருடைய குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு இரங்கல். … Read more

விமானம், கிரீன் காரிடார்… 2 மணி நேரத்தில் மதுரையில் இருந்து சென்னை வந்த இதயம்!

சென்னை: விமானம் மற்றும் கிரீன் காரிடர் மூலம் மதுரையில் இருந்து சென்னைக்கு 2 மணி நேரத்தில் இதயம் கொண்டு வரப்பட்டது. மதுரையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஒருவர் மூளைச்சாவு அடைந்தார். இந்நிலையில், அவரின் இதயத்தை சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று ஒரு நோயாளிக்கு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மூலம் பொருத்த முடிவு செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து மரணம் அடைந்தவரிடம் இருந்து அறுவை சிகிச்சை இதயம் எடுக்கப்பட்டு பாதுகாப்பான … Read more

உளவு அமைப்புகளின் அறிக்கைகளை உச்ச நீதிமன்ற கொலீஜியம் வெளியிட்டது கவலை அளிக்கிறது: கிரண் ரிஜிஜு

புதுடெல்லி: உளவு அமைப்புகளின் அறிக்கைகளை உச்ச நீதிமன்ற கொலீஜியம் வெளியிட்டது மிகவும் கவலைக்குரிய விஷயம் என்று மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார். உயர் நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கக் கோரி உச்ச நீதிமன்ற கொலீஜியம் அளித்த பரிந்துரைகளில் சில பெயர்களை மத்திய அரசு நிராகரித்தது. மீண்டும் அதே பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டதை அடுத்து, அந்தப் பெயர்கள் ஏன் நிராகரிக்கப்பட்டன என்பதற்கான ஐபி, ரா ஆகிய உளவு அமைப்புகள் கொடுத்த அறிக்கைகள் கொலீஜியத்திடம் பகிர்ந்துகொள்ளப்பட்டன. இந்நிலையில், கொலீஜியம் கடந்த … Read more

‘எல்லோருக்கும் வணக்கம்’ – முடக்கப்பட்ட ட்விட்டர் கணக்கு பயன்பாட்டுக்கு வந்ததும் கங்கனா ரனாவத் ட்வீட்

சென்னை: இந்திய சினிமா நடிகை கங்கனா ரனாவத்தின் முடக்கப்பட்ட ட்விட்டர் கணக்கு மீண்டும் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. அதன் காரணமாக ‘எல்லோருக்கும் வணக்கம்’ என சொல்லி அவர் இப்போது ட்வீட் செய்துள்ளார். 35 வயதான கங்கனா ரனாவத் திரைத்துறையில் கடந்த 2006 வாக்கில் என்ட்ரியானவர். தமிழ் உட்பட இந்தியாவின் பல்வேறு மொழிகளில் இவர் நடித்து வருகிறார். அவ்வப்போது சர்ச்சையான கருத்துகளை சொல்வது இவரது வழக்கமாக உள்ளது. ட்விட்டர் சமூக வலைதளத்தில் தொடர்ச்சியாக வெறுப்புணர்வை ஏற்படுத்தும் கருத்துகளை தெரிவித்து வந்த … Read more

புதுச்சேரியில் ரூ.1,000 உதவித்தொகை திட்டத்தில் குளறுபடி: மாதர் சங்கம் குற்றச்சாட்டு

புதுச்சேரி: புதுச்சேரியில் ரூ.1,000 உதவித்தொகை வழங்கும் திட்டம் அவசரகதியில் தொடங்கியுள்ளனர் என்று அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர். இது குறித்து அச்சங்கத்தின் புதுச்சேரி செயலாளர் இளவரசி இன்று செய்தியாளர்களிடம் கூறியது: ”அனைத்து பெண்கள் கூட்டமைப்பு சார்பில் 2020-ல் பொதுமக்கள் மத்தியில் கள ஆய்வு செய்து அரிசி தான் வேண்டும், பணம் வேண்டாம் என்று அப்போதைய ஆளுநர் கிரண்பேடி மற்றும் அமைச்சர்கள், அதிகாரிகளிடம் மனு கொடுத்தோம். அதனடிப்படையில் மூன்று மாதம் அரிசி வழங்கப்பட்டது. படிப்படியாக குறைந்து புதுச்சேரி … Read more

“ராணுவம் நடத்திய துல்லியத் தாக்குதலுக்கு ஆதாரம் தேவையில்லை” – ராகுல் காந்தி

ஜம்மு: இந்திய ராணுவம் நடத்திய துல்லியத் தாக்குதலுக்கு ஆதாரம் தேவையில்லை என்று காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். ஜம்முவில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங், பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய ராணுவம் துல்லியத் தாக்குதல் (சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்) நடத்தியதற்கு ஆதாரம் ஏதும் இல்லை என்று விமர்சித்திருந்தார். ”பாகிஸ்தானுக்குள் சென்று துல்லியத் தாக்குதல் நடத்தப்பட்டதாக மத்திய அரசு கூறுகிறது. ஆனால், அதற்கு எந்த ஆதாரமும் இல்லை. பொய்களின் உதவியுடன் பாஜக … Read more

திங்கள், வியாழக்கிழமைகளில் 12 நாட்டிக்கல் மைல்களுக்கு அப்பால் சுருக்குமடி வலையைப் பயன்படுத்த உச்ச நீதிமன்றம் அனுமதி

புதுடெல்லி: 12 நாட்டிக்கல் மைல்களுக்கு அப்பால், திங்கள் மற்றும் வியாழக்கிழமைகளில் சுருக்குமடி வலையைப் பயன்படுத்த அனுமதியளித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழக கடற்பரப்பில் பவளப்பாறைகள் மற்றும் மீன் குஞ்சுகள் சிக்கிக்கொள்வதால் ‘சுருக்கு மடி வலையைக்’ கொண்டு மீனவர்கள், மீன் பிடிக்க தடை விதித்து கடந்த 2000-ம் ஆண்டு தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. இந்தநிலையில், மத்திய அரசு அமைத்த நிபுணர் குழு, ‘சுருக்கு மடி வலையைக்’ கொண்டு மீன் பிடிக்கலாம் என்று கடந்த 2014-ம் ஆண்டு பரிந்துரைத்தது. … Read more

மணிக்கு 160 கி.மீ வேகம் | இந்தியாவின் அதிவேக மெட்ரோ ரயில்: சோதனை ஓட்டத்தில் RRTS சாதனை

சென்னை: இந்தியாவில் அதிவேக மெட்ரோ ரயில் என்று அழைக்கப்படும் ஆர்ஆர்டிஎஸ் (RRTS) ரயில் சோதனை ஓட்டத்தில் மணிக்கு 160 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் ரயில்களின் வேகத்தை அதிகரிக்க மத்திய அரசு பல்வேறு தொழில்நுட்பங்களில் புதிய வகையில் ரயில்களை இயக்கும் முயற்சியில் ஈடுபட்டுவருகிறது. தற்போது இந்தியாவின் அதிக வேக ரயிலாக வந்தே பாரத் ரயில் உள்ளது. இதற்கு அடுத்த கட்டமாக மணிக்கு 160 கி.மீ வேகத்தில் இயங்க கூடிய RRTS என்று அழைக்கப்படும் Regional Rapid … Read more