திருவாரூர் | ஓடம்போக்கி ஆற்றில்  ஆகாயத் தாமரைகள் அகற்றும் பணிகள்: முதல்வர் ஸ்டாலின் ஆய்வு

திருவாரூர்: திருவாரூர் மாவட்டம், ஓடம்போக்கி ஆற்றில் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் ஆகாயத் தாமரைகள் அகற்றும் பணிகளை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜூன் 19) திருவாரூர் மாவட்டம், திருவாரூர் வட்டம், விளமல் அருகில் 10 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ஓடம்போக்கி ஆற்றில் உள்ள ஆகாயத் தாமரைகளை அகற்றும் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தமிழக முதல்வர் … Read more

பிரதமர் மோடியின் அமெரிக்கப் பயணம் இருதரப்பு உறவில் ஒரு மைல்கல்: வெளியுறவு செயலாளர் குவாத்ரா

புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடியின் அமெரிக்கப் பயணம், இந்திய – அமெரிக்க உறவில் ஒரு மைல்கல் என்று இந்திய வெளியுறவு செயலாளர் வினய் மோகன் குவாத்ரா தெரிவித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “இரு தரப்பு உறவில் இது ஒரு மைல்கல். இது குறிப்பிடத்தக்க ஒரு பயணம். மிக முக்கிய பயணம். அதன் காரணமாகவே, இந்தப் பயணம் தொடர்பாக அமெரிக்கா உண்மையான, விரிவான, ஆழமான ஆர்வத்தைக் காட்டி உள்ளது. பிரதமரின் இந்த அமெரிக்கப் பயணம் ஆக்கபூர்வமானதாகவும், பொருள் … Read more

இந்தியாவால் தேடப்பட்ட காலிஸ்தான் புலிப்படை தலைவர் நிஜ்ஜர் கனடாவில் சுட்டுக்கொலை

புதுடெல்லி: இந்தியாவால் தேடப்பட்டு வந்த காலிஸ்தான் புலிப்படைத் தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜர் கனடாவில் அடையாளம் தெரியாத இரண்டு இளைஞர்களால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். பஞ்சாபின் ஜலந்தர் மாவட்டத்தில் உள்ள பர்சிங்பூர் கிராமத்தைச் சேர்ந்தவரான ஹர்தீப் சிங் நிஜ்ஜர், காலிஸ்தான் புலிப்படைத் தலைவராக இருந்து வந்தார். கடந்த 2021-ம் ஆண்டு இந்து மதகுரு ஒருவரை தாக்கியதாக இவர் மீது வழக்கு உள்ளது. இந்த வழக்கில் நிஜ்ஜர் மற்றும் மூவருக்கு தொடர்பு உள்ளதாக தேசிய புலனாய்வு அமைப்பின் குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குற்றப்பத்திரிகை … Read more

சென்னையில் மழையால் பெரிய அளவில் எந்த பாதிப்பும் இல்லை: கூடுதல் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா 

சென்னை: மழை காரணமாக சென்னையில் பெரிய அளவில் எந்த பாதிப்பும் இல்லை என்று கூடுதல் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா தெரிவித்தார். சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகையில் உள்ள ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தில் மழை பாதிப்புகளை நகராட்சி நிர்வாகத்துறை கூடுதல் தலைமை செயலாளர் சிவதாஸ் மீனா ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளரிடம் பேசிய அவர், “சென்னையில் 10.3 செ.மீ மழை பெய்துள்ளது. சில இடங்களில் 14 முதல் 15 செ.மீ மழை பெய்துள்ளது ஆலந்தூர், … Read more

அசாம் | கனமழை, வெள்ளம், நிலச்சரிவுக்கு 33 ஆயிரம் பேர் பாதிப்பு; பயிர்கள் சேதம்

கவுகாத்தி: அசாம் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இரவு முழுவதும் பெய்த கனமழை காரணமாக மாநிலத்தில் வெள்ள அபாயம் நிலவி வருகிறது. கிராமங்கள், நகரங்கள், விவசாய நிலங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. அசாம் மாநிலத்துக்கு ‘ரெட் அலட்ர்ட்’ விடுத்துள்ள இந்திய வானிலை ஆய்வு மையம், வியாழக்கிழமை வரை மாநிலத்தின் பல்வேறு மாாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யக் கூடும் எனக் கணித்துள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையத்தின் குவாஹாட்டி பிரந்திய வானிலை ஆய்வு மையம் ‘ரெட் அலட்ர்ட்’ விடுத்து … Read more

கடலூரில் இரண்டு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து: 6 பேர் பலி; 80 பேர் படுகாயம்.

விருத்தாசலம்: கடலூரில் இரண்டு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 6 பேர் பலியாகினர். 80 பேர் படுகாயமடைந்தனர். பண்ருட்டி – கடலூர் சாலையில் மேல்பட்டாம்பாக்கம் என்ற இடத்தில் இரண்டு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 6 பேர் உயிரிழந்த நிலையில் காயமடைந்த 80 பேர் கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கடலூர் மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ், காவல் கண்காணிப்பாளர் ராஜாராமன் உள்ளிட்டோர் கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் … Read more

பருவநிலை மாற்ற விவகாரம் | 3வது ஜி20 நிலையான நிதி செயற்குழு கூட்டம் மாமல்லபுரத்தில் தொடங்கியது

சென்னை: பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்கான நிதி ஆதாரம் குறித்த ஜி20 அமைப்பின் ஆலோசனைக் கூட்டம் மாமல்லபுரத்தில் தொடங்கியது. ஜி20 அமைப்புக்கு இந்தியா தலைமை வகித்து வரும் நிலையில், பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்கான நிதி ஆதாரம் குறித்து ஆலோசிப்பதற்கான மூன்றாவது நிதி செயற்குழு கூட்டம் மாமல்லபுரத்தில் தொடங்கியது. நிலையான நிதி செயற்குழு (SFWG) கூட்டத்தின் முதல் கூட்டம் கவுகாத்தியிலும், இரண்டாம் கூட்டம் உதய்பூரிலும் நடைபெற்ற நிலையில், 3வது கூட்டம் மாமல்லபுரத்தில் தொடங்கி உள்ளது. இதில், பருவநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்தத் … Read more

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்துக்கு  9 மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும்

சென்னை: தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்துக்கு 9 மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களில் விடிய விடிய கனமழை பெய்து வருகிறது. மேலும், தமிழகத்தில் டெல்டா மாவட்டங்கள், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட 13 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் அடுத்த 3 மணி நேரத்தில் 9 மாவட்டங்களில் மிதமான மழை … Read more

மதுரை அமைப்பினர் வழங்க முன்வந்த பெரியார் செங்கோலை ஏற்க மறுத்த சித்தராமையா

பெங்களூரு: புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவில் தமிழக ஆதீனங்கள் பிரதமர் மோடிக்கு செங்கோல் வழங்கினர். இதேபோல மதுரையைச் சேர்ந்த மக்கள் சமூகநீதி பேரவை சார்பில், பெரியார் செங்கோல் மற்றும் நினைவுப் பரிசு கர்நாடக முதல்வர் சித்தராமையாவுக்கு சனிக்கிழமை மாலை 6 மணிக்கு பெங்களூருவில் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதற்காக அந்த அமைப்பின் தலைவர் மனோகரன் தலைமையில் 50-க்கும் மேற்பட்டோர் முதல்வரின் இல்லத்துக்கு சென்றனர். பெரியார் முகம் பொறிக்கப்பட்ட பித்தளையிலான 4 அடி செங்கோல், நினைவுப்பரிசு, சால்வை ஆகியவற்றை … Read more

சென்னையில் 27 ஆண்டுகளுக்குப் பின்னர் ஜூன் மாதத்தில் கனமழை – தனியார் வானிலை ஆர்வலர் தகவல்

சென்னை: சென்னையில் 27 ஆண்டுகளுக்குப் பின்னர் ஜூன் மாதத்தில் கனமழை பெய்துள்ளதாக தனியார் வானிலை ஆர்வலர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட வட கடலோர மாவட்டங்களில் நேற்று தொடங்கிய மழை விடிய விடிய கொட்டித் தீர்த்தது. விடிந்த பின்னர் மழை நீடித்து வருகிறது. இந்நிலையில் ஜூன் மாதத்தில் பெய்த இந்த மழை குறித்து தனியார் வானிலை ஆர்வலர் பிரதீப் ஜான் ‘தமிழ்நாடு வெதர்மேன்’ என்ற தனது சமூக வலைதள பக்கத்தில் சுவாரஸ்யத் தகவலைப் … Read more