வெப்ப அலை தாக்கம் | 3 மாநிலங்களில் 100 பேர் பலி; உத்தரப் பிரதேசத்தில் தள்ளிப்போகும் பருவமழை

லக்னோ: உத்தரப் பிரதேசம், பிஹார், ஒடிசா உள்ளிட்ட மூன்று மாநிலங்களில் வெப்ப அலை காரணமாக 100 பேர் பலியாகியுள்ளனர். இந்நிலையில் நாட்டில் பரவலாகப் பல பகுதிகளிலும் இன்றும் வெப்ப அலை விசக்கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. உத்தரப் பிரதேசத்தில் பாலியா மாவட்டத்தில் ஜூன் 11 தொடங்கி நேற்று வரை 83 பேர் வெப்ப அலை சார்ந்த நோய்களால் இறந்துள்ளனர். உத்தரப் பிரதேசத்தில் பருவமழை தள்ளிப்போகும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. பிஹாரில் 45 பேர் வெப்ப … Read more

சென்னையில் விடிய விடிய கொட்டித் தீர்த்த கனமழை; பல மாவட்டங்களில் மழை நீடிப்பு

சென்னை: சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களில் விடிய விடிய கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் பல்வேறு பகுதிகளில் சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. மழை தொடரும் நிலையில், பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கோடைக் காலத்தில் தமிழகத்தின் உள் பகுதியில் வெப்பம் அதிகரித்தாலும் கடலோரப் பகுதியான சென்னை, புறநகர் பகுதிகளில் வெப்பம் சற்று குறைவாகவே இருக்கும். ஆனால், இந்த ஆண்டு கடந்த மே மாதம் முதல் ஜூன் 16-ம் தேதிவரை சென்னை, புறநகரில் வெயில் சுட்டெரித்தது. கடந்த … Read more

பொது சிவில் சட்டத்தை எதிர்க்கிறோம்; போராட்டம் நடத்த மாட்டோம் – ஜமியத்தலைவர் மதானி தகவல்

புதுடெல்லி: பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து மத்திய சட்ட ஆணையம் பல்வேறு அமைப்புகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறது. இது 2024 மக்களவைத் தேர்தலுக்கு முன்பே அமல்படுத்தப்படலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்து ஜமியத் உலமா இ-இந்த் அமைப்பின் தலைவர் அர்ஷத் மதானி நேற்று கூறியதாவது: பொது சிவில் சட்டத்தை எதிர்ப்போம். ஆனால், அதை எதிர்த்து தெருவில் இறங்கி போராட மாட்டோம். எங்கள் மதத்துக்கென தனி சட்டங்கள் … Read more

நடப்பாண்டு எம்பிபிஎஸ், பிடிஎஸ் கலந்தாய்வில் 650 அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்புக்கான இடம் கிடைக்க வாய்ப்பு

சென்னை: நடப்பாண்டு மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வில் 650-க்கும் மேற்பட்ட அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இடம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த மே 7-ம் தேதி நாடு முழுவதும் நீட் தேர்வு நடத்தப்பட்டது. மொத்தம் 20 லட்சத்து 38,596 மாணவர்கள் தேர்வெழுதினர். தமிழகத்தில் மட்டும் 1.4 லட்சம் பேர் நீட் தேர்வில் பங்கேற்றனர். கடந்த 13-ம் தேதி நீட் தேர்வு முடிவுகள் வெளியாகின. நாடு முழுவதும் 11.46 லட்சம் பேரும், தமிழகத்தில் அரசுப் பள்ளி மாணவர்கள் 3,982 பேர் … Read more

கடந்த மூன்று நாட்களில் கடும் வெயிலில் பாதிக்கப்பட்டு உ.பி. மருத்துவமனையில் 54 பேர் உயிரிழப்பு

புதுடெல்லி: உத்தர பிரதேசத்தின் பாலியா மாவட்ட மருத்துவமனையில் காய்ச்சல், மூச்சுத் திணறல் உள்ளிட்ட பிரச்சினைகளுடன் நோயாளிகள் 400 பேர் கடந்த 3 நாட்களாக அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் 23 பேர் கடந்த 15-ம்தேதியும், மறுநாள் 20 பேரும், நேற்றுமுன்தினம் 11 பேரும் உயிரிழந்தனர். 3 நாட்களில் மொத்தம் 54 பேர் உயிரிழந்ததாக பாலியா மாவட்ட மருத்துவமனை கண்காணிப்பாளர் எஸ்.கே.யாதவ் தெரிவித்தார். அசம்கர் வட்டார் கூடுதல் சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் திவாரி கூறுகையில், ‘‘அதிக வெப்பம் அல்லது குளிர் நிலவும்போது, … Read more

13 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: தமிழகத்தில் டெல்டா மாவட்டங்கள், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட 13 மாவட்டங்களில் இன்று கனழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரை கண்ணன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகம், புதுச்சேரியில் இன்று (ஜூன் 19) பெரும்பாலான இடங்களிலும், 20, 21, 22-ம் தேதிகளில் சில இடங்களிலும் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான … Read more

காசநோயை 2025-க்குள் ஒழிப்போம்: ‘மனதின் குரல்’ நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உறுதிபட தெரிவித்தார்

புதுடெல்லி: இந்தியாவில் இருந்து 2025-ம் ஆண்டுக்குள் காசநோயை முற்றிலுமாக ஒழிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதற்கு அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார். 102-வது ‘மனதின் குரல்’ (‘மன் கீ பாத்’) நிகழ்ச்சி நேற்று ஒலிபரப்பானது. இதில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது: வழக்கமாக, மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் ‘மனதின் குரல்’ நிகழ்ச்சி ஒலிபரப்பாகிறது. அடுத்த வாரம் அரசுமுறை பயணமாக நான் அமெரிக்கா செல்வதால் ஒரு வாரம் முன்னதாகவே இந்த … Read more

சர்ச்சைப் பேச்சு | திமுக தலைமைக் கழகப் பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி நிரந்தர நீக்கம் – துரைமுருகன் அறிவிப்பு

சென்னை: தமிழக ஆளுநர் குறித்தும், நடிகையும் பாஜக நிர்வாகியுமான குஷ்பு குறித்து தகாத வார்த்தைகளில் பேசிய திமுக தலைமைக் கழகப் பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தியை கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலிருந்து டிஸ்மிஸ் செய்து அக்கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் உத்தரவிட்டுள்ளார். திமுக பேச்சாளர்களில் ஒருவரான சிவாஜி கிருஷ்ணமூர்த்தி, சமீபத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் தமிழக ஆளுநர் குறித்தும், நடிகையும் பாஜக நிர்வாகியுமான குஷ்பு குறித்து தகாத வார்த்தைகளில் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. … Read more

மணிப்பூர் தலைநகரில் வீடுகளுக்கு தீவைப்பு – உச்ச நீதிமன்றத்தில் பழங்குடி கூட்டமைப்பு சார்பில் வழக்கு

இம்பால்: மணிப்பூர் தலைநகர் இம்பாலில் ஒரு கும்பல் நேற்று வீடுகளுக்கு தீ வைத்தது. இதன்காரணமாக தலைநகரில் கலவரம் ஏற்பட்டது. வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் மைதேயி சமூகத்தினருக்கும் குகி சமூகத்தினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டிருக்கிறது. இதன்காரணமாக கடந்த மே 3-ம் தேதி முதல் ஒரு மாதத்துக்கும் மேலாக அந்த மாநிலத்தில் வன்முறை, கலவரம் நீடிக்கிறது. இதுவரை 105 பேர் உயிரிழந்துள்ளனர். மணிப்பூரின் கமென்லாக் கிராமத்தில் குகி சமூகத்தை சேர்ந்த தீவிரவாதிகள் நேற்று முன்தினம் நடத்திய தாக்குதலில் மேதேயி சமூகத்தை … Read more

திருவண்ணாமலையில் சாதி சான்றிதழ் வழங்க மறுப்பு: மாணவி தற்கொலை முயற்சி

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருகே சாதி சான்றிதழ் வழங்காததால் கல்லூரி படிப்பு தடைப்பட்ட காரணமாக பன்னியாண்டி சமுதாயத்தைச் சேர்ந்த மாணவி தற்கொலைக்கு முயன்றுள்ளார். திருவண்ணாமலை அடுத்த எடப்பாளையம் கிராமம் எம்ஜிஆர் நகரில் வசித்தவர் முருகன். இவரது மகள் ராஜேஸ்வரி. தந்தையின் மறைவுக்கு பிறகு தாய் சரோஜாவின் அரவணைப்பில் வளர்ந்து வருகிறார். பிளஸ் 2 பொதுத் தேர்வில் 375 மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்ற மாணவி ராஜேஸ்வரி, உயர்கல்வி கனவுகளுடன், கல்லூரிக்கு விண்ணப்பித்துள்ளார். அப்போது சாதி சான்று இல்லாததால், மாணவியின் … Read more