சாலை பணிகளில் தரத்துக்கு முதலிடம் – பிரதமர் நரேந்திர மோடி உத்தரவு

புதுடெல்லி: சாலை பணிகளில் தரத்துக்கு முதலிடம் அளிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி உத்தரவிட்டுள்ளார். துவாரகா எக்ஸ்பிரஸ் சாலை திட்டத்தில் டெல்லி, குருகிராம் பகுதிகளை இணைக்கும் வகையில் 29 கி.மீ. தொலைவுக்கு சாலை அமைக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக ரங்புரியில் புதிய பாலம் கட்டப்படுகிறது. கடந்த 14-ம் தேதி பாலத்தின் ஒரு பகுதி இடிந்து அங்கு பணியில் ஈடுபட்டிருந்த ஜேசிபி ஓட்டுநர் ஷகீல் உயிரிழந்தார். கடந்த சில மாதங்களாக தேசிய நெடுஞ்சாலை, எக்ஸ்பிரஸ் … Read more

விஷஜந்துக்களின் கடிக்கு மருந்தாகும் அழிஞ்சில்: மரங்கள் அறியும் பயணத்தில் பேராசிரியர் தகவல்

மதுரை: மதுரை தானம் அறக்கட்டளை, மதுரை கிரீன் மற்றும் ஹெச்சிஎல் பவுண்டேசன் சார்பில் 108-வது மரங்கள் அறியும் பயணம் ஞாயிறு அன்று நத்தம் சாலையிலுள்ள கேத்தாம்பட்டி சங்கிலி கருப்பு கோயில் காட்டின் பசுமை வளாகத்தில் நடைபெற்றது. திட்ட ஒருங்கிணைப்பாளர் என்.சிதம்பரம் தலைமையில் பயணம் நடைபெற்றது. இதில், அமெரிக்கன் கல்லூரி தாவரவியல் பேராசிரியர் ஸ்டீபன், கோயில் காடுகளிலுள்ள மரங்கள், செடிகள் குறித்து விளக்கி கூறினார். அப்போது அவர் கூறியதாவது. அழிஞ்சில் மர இலைகள் விஷக்கடிகளுக்கு முறிவு மருந்தாகும். மேலும் … Read more

எந்தச் சூழலையும் எதிர்கொள்ள நவீன தொழில்நுட்பங்களுடன் இந்திய விமானப் படை தயார் – குடியரசுத் தலைவர் முர்மு உறுதி

ஹைதராபாத்: தெலங்கானா மாநிலம் ஹைதரா பாத்தில் விமானத்துறை பயிற்சி நிறுவனத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உரையாற்றினார். அப்போது நாட்டின் பாதுகாப்புத் துறையின் வளர்ச்சி குறித்தும், நவீன தொழில்நுட்பங்களின் முக்கியத்தும் குறித்தும் அவர் பேசினார். “இந்திய பாதுகாப்புத் துறை இந்திய நில எல்லையையும், கடல் எல்லையையும், வான் பரப்பையும் பாதுகாத்து வருகிறது. தற்போது ராணுவம் தொடர்பாக புதிய தொழில்நுட்பங்கள் அறிமுகமாகி வருகின்றன. நவீன பாதுகாப்புக் கட்டமைப்புக்கு இந்தத் தொழில்நுட்பங்கள் இன்றியமையாதவை. இந்திய பாதுகாப்புத் … Read more

சர்ச்சைப் பேச்சு | திமுகவில் இருந்து நீக்கப்பட்ட சிவாஜி கிருஷ்ணமூர்த்தி கைது

சென்னை: தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி குறித்தும், நடிகையும் பாஜக நிர்வாகி குஷ்பு குறித்தும் தகாத வார்த்தைகளில் பேசிய சிவாஜி கிருஷ்ணமூர்த்தியை கைது செய்தனர் கொடுங்கையூர் போலீஸார். தொடர்ந்து அவர் நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார். முன்னதாக, திமுக தலைமைக் கழகப் பேச்சாளராக செயல்பட்டு வந்த சிவாஜி கிருஷ்ணமூர்த்தியை கட்சியின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் டிஸ்மிஸ் செய்து அக்கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் உத்தரவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அண்மையில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி … Read more

ராமநாதபுரத்தில் போட்டியிட பிரதமர் மோடி தீவிர யோசனை

புதுடெல்லி: கடந்த 2014 மக்களவைத் தேர்தல் முதல் வீசத் தொடங்கிய மோடி அலையை, வட மாநிலங்கள் அளவுக்கு தென் இந்தியாவிலும் நிலைநாட்டுவது பாஜகவின் திட்டமாக உள்ளது. இதில் தமிழகத்தை குறிவைத்து பல்வேறு அறிவிப்புகளை வெளியிடுகிறது. உலகின் மூத்த மொழி தமிழ் எனக் கூறிய பிரதமர் மோடி, தமிழ் இலக்கியங்களின் முக்கியத்துவத்தை பறைசாற்றத் தொடங்கினார். புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தில் செங்கோல் வைக்கப்பட்டது. அடுத்த திட்டமாக மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் போட்டியிட விரும்புகிறார் பிரதமர் மோடி. இந்த வருடம் ஜனவரியில் … Read more

அறிவிக்கப்படாத நெருக்கடி நிலையை தமிழக முதல்வர் உருவாக்குகிறார்: பாஜக மாநில பொதுச்செயலாளர் ராம.சீனிவாசன்

மதுரை: தமிழகத்தில் அறிவிக்கப்படாத நெருக்கடி நிலையை தமிழக முதல்வர் உருவாக்குகிறார் என்று பாஜக மாநில பொதுச்செயலாளர் ராம.சீனிவாசன் தெரிவித்துள்ளார். மதுரையில் இன்று பாஜக ஊடகப்பிரிவு மதுரை பெருங்கோட்ட நிர்வாகிகள் கூட்டம் மாநிலச் செயலாளர் நாகராஜன் தலைமையில் நடைபெற்றது. இதில் பாஜக மாநில பொதுச்செயலாளர் ராம.சீனிவாசன் சிறப்புரை ஆற்றினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ”தமிழகத்தில் அறிவிக்கப்படாத நெருக்கடி நிலையை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உருவாக்கிக்கொண்டிருக்கிறார். திமுக தொடர்ந்து மத்திய அரசுடன் மோதல் போக்கை கடைபிடித்து வருகிறது. செந்தில்பாலாஜி … Read more

ஆங்கிலம் பயில மாணவர்களுக்கு தடை – உ.பி.யின் தியோபந்த் மதரஸா உத்தரவால் சர்ச்சை

புதுடெல்லி: உத்தரபிரதேச மாநிலத்தின் சஹரான்பூர் மாவட்டம், தியோபந்தில் உலகப் புகழ்பெற்ற தாரூல் உலூம் மதரஸா உள்ளது. சுமார் 4,000 மாணவர்கள் பயில்கின்றனர். இது கடந்த1866-ல் தொடங்கப்பட்டது. பாகிஸ்தான் உள்ளிட்ட முஸ்லிம் நாடுகளில் நன்மதிப்பை இந்த மதரஸா பெற்றுள்ளது. இங்கு மாணவர்களுக்கு இஸ்லாமிய மறைக் கல்வியுடன் ஆங்கிலம், அறிவியல், கணிதம் போன்ற பொதுக் கல்வியும் போதிக்கப்படுகிறது. இதன்பலனாக மதரஸாவில் படித்த பிறகு இதர பொதுக் கல்வி நிறுவனங்களிலும் இம்மாணவர்கள் சேர்ந்து உயர்க்கல்வி பயில்வது உண்டு. இதற்கு அவர்களுக்கு ஆங்கிலம் … Read more

சிவகங்கை | காளையார்கோவில் அருகே தரமற்ற முறையில் கட்டப்பட்ட 3 சுகாதார வளாகங்கள்: பயன்பாட்டுக்கு வராமலேயே சேதம்

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே தரமற்ற முறையில் 3 சமுதாய சுகாதார வளாகங்கள் கட்டப்பட்டன. மேலும் அவை பயன்பாட்டுக்கு வராமலேயே சேதமடைந்தன. மாரந்தை ஊராட்சியில் மாரந்தை, மேலச்சேத்தூர், கோலாந்தி ஆகிய 3 கிராமங்களில் தூய்மை பாரத இயக்கம் சார்பில் தலா ரூ.5.25 லட்சத்தில் சமுதாய சுகாதார வளாகங்கள் கட்டப்பட்டன. இந்த வளாகங்கள் கட்டும்போதே தரமின்றி கட்டுவதாக புகார் எழுந்தது. ஆனால் ஒன்றிய அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை. கோலாந்தியை தவிர்த்து மற்ற 2 சுகாதார வளாகங்களுக்கு தண்ணீர் இணைப்பு … Read more

நேதாஜி உயிருடன் இருந்திருந்தால் இந்தியா இரண்டாக பிரிந்திருக்காது – தேசிய பாதுகாப்பு ஆலோசகர் கருத்து

புதுடெல்லி: சுதந்திரத்தின் போது நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் உயிருடன் இருந்திருந்தால் இந்தியா இரண்டாக பிரிந்திருக்காது என தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் தெரிவித்துள்ளார். சுதந்திரப் போராட்ட வீரர் நேதாஜியின் முதல் நினைவு சொற்பொழிவு டெல்லியில் நேற்று நடைபெற்றது. இதில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் பேசியதாவது: நேதாஜி தனது வாழ்நாளில் பல்வேறு சந்தர்ப்பங்களில் துணிச்சலை வெளிப்படுத்தி உள்ளார். குறிப்பாக மகாத்மா காந்திக்கு சவால் விடுக்கும் துணிச்சலும் அவரிடம் இருந்தது. ஆனால் காந்தி அரசியல் … Read more

சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு: கொடுங்கையூர் போலீஸார் நடவடிக்கை

சென்னை: தமிழக ஆளுநர் குறித்தும், நடிகையும் பாஜக நிர்வாகியுமான குஷ்பு குறித்து தகாத வார்த்தைகளில் பேசியதால், திமுகவில் இருந்து நீக்கப்பட்ட சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது கொடுங்கையூர் போலீஸார் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். திமுக பேச்சாளர்களில் ஒருவரான சிவாஜி கிருஷ்ணமூர்த்தி, சமீபத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் தமிழக ஆளுநர் குறித்தும், நடிகையும் பாஜக நிர்வாகியுமான குஷ்பு குறித்து தகாத வார்த்தைகளில் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. பலரும் அவரது பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவித்து … Read more