”2 லட்சம் பொதுத் துறை வேலைகளை ஒழித்த மோடி அரசு” – ராகுல் காந்தி குற்றச்சாட்டு

புதுடெல்லி: பிரதமர் மோடியின் அரசாங்கம், பொதுத்துறை நிறுவனங்களில் இரண்டு லட்சம் வேலைகளை ஒழித்துக் கட்டி, ஒப்பந்த வேலைகளை அதிகரித்திருப்பதாக காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து இன்று (ஜூன் 18) தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ராகுல் காந்தி: பொதுத்துறை நிறுவனங்கள் இந்தியாவின் பெருமையாக இருந்ததோடு, இந்திய இளைஞர்களின் வேலை வாய்ப்புக் கனவாகவும் இருந்தது. ஆனால், இன்று இவை அரசாங்கத்தின் முன்னுரிமை அல்ல. நாட்டின் பொதுத்துறை நிறுவனங்களில் 2014ஆம் ஆண்டில் 16.9 லட்சமாக இருந்த … Read more

பாளையங்கோட்டை சிறையில் பட்டியலின பிரிவு இளைஞர் உயிரிழப்பு: நீதி விசாரணை வேண்டும்: சிபிஎம் வலியுறுத்தல் 

சென்னை: பாளையங்கோட்டை சிறையில் பட்டியலின வகுப்பைச் சார்ந்த தென்காசி இளைஞர் உயிரிழந்தது குறித்து உயர்மட்ட நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டுமென சிபிஎம் கட்சி வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து இக்கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் விடுத்துள்ள அறிக்கையில், ”தென்காசி மாவட்டம் புளியங்குடி வட்டம், நடு கருப்பழகத் தெருவைச் சேர்ந்தவரும், பட்டியலின வகுப்பைச் சார்ந்தவருமான மாடசாமி என்பவரின் மகன் தங்கசாமி (வயது 26) கட்டிடத் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இவரை புளியங்குடி காவல்துறையினர் ஜூன் 11ந் தேதியன்று கைது செய்து … Read more

ஜூன் 25 இந்திய வரலாற்றில் ஒரு கருப்பு அத்தியாயம்: மனதின் குரல் நிகழ்ச்சியில் 'எமர்ஜென்ஸி'-யை விமர்சித்த பிரதமர் மோடி

புதுடெல்லி: “நாம் ஜூன் மாதம் 25ஆம் தேதியையும் மறந்து விடக்கூடாது. இந்த நாளன்று தான் நமது தேசத்தில் அவசரநிலை பிறப்பிக்கப்பட்டது. இது இந்திய நாட்டு வரலாற்றில் ஒரு கருப்பு அத்தியாயம்” என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். 102-வது மனதின் குரல் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி இதனைத் தெரிவித்தார். பிரதமர் மோடி மனதின் குரல் நிகழ்ச்சியில் இன்று பேசுகையில், “இந்தியா மக்களாட்சியின் தாய். நாம் நமது மக்களாட்சி முறையின் ஆதர்சங்களை தலையானதாகக் கருதுகிறோம், நமது அரசமைப்புச் … Read more

அரசு பள்ளி மாணவர்களுக்கு சீருடை துணி தயாரிக்கும் பணி – விருதுநகரில் 8,000 தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு

விருதுநகர்: அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவ, மாணவியருக்கு வழங்க இலவச சீருடை தயாரிக்கும் பணிகள், விருதுநகரில் விறுவிறுப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் சத்துணவு திட்டத்தில் பயன்பெறும் மாணவ, மாணவிகளுக்கு பள்ளி கல்வித் துறை சார்பில் இலவசமாக ஆண்டுதோறும் 4 ஜோடி சீருடைகள் வழங்கப்படுகின்றன. இதற்காக, 2022-23-ம் ஆண்டில் ரூ.150 கோடி ஒதுக்கப்பட்டது. இந்த ஆண்டு, முதல் கட்டமாக ரூ.100 கோடிக்கு மேல் ஒதுக்கப்பட் … Read more

மணிப்பூரில் மீண்டும் கலவரம் | போலீஸ் ஆயுத கிடங்கை தகர்க்க முயற்சி – வன்முறையாளர்கள் விரட்டியடிப்பு

இம்பால்: மணிப்பூரில் பல இடங்களில் நேற்று முன்தினம் இரவு கலவரம் ஏற்பட்டது. அவர்களை பாதுகாப்புப் படையினர் விரட்டியடித்து கொடி அணிவகுப்பு நடத்தினர். மணிப்பூரில் பெரும்பான்மையாக உள்ள மைதேயி இனத்தவர் பழங்குடியினர் அந்தஸ்து கோருவதால், அவர்களுக்கும் குகி மற்றும் நாகா பழங்குடியினருக்கும் இடையே கடந்த மாதம் மோதல் ஏற்பட்டது. வன்முறையை கட்டுப்படுத்தும் பணியில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டும், அங்கு தொடர்ந்து வன்முறை நடைபெறுகிறது. மணிப்பூரின் விஷ்ணுபூர் மாவட்டத்தில் உள்ள குவக்தா, சூரசந்த்பூர் மாவட்டத்தில் உள்ள காங்வாய் பகுதியில் தானியங்கி … Read more

போடி ரயிலால் கேரள மக்களும் உற்சாகம் : ஐயப்ப பக்தர்களின் சிரமமும் குறைந்தது

போடி: கேரளாவின் இடுக்கி மாவட்டத்துக்கு ரயில் போக்குவரத்து இல்லாத நிலையில், போடி ரயில் சேவை அப்பகுதி மக்களுக்கு பெரும் வசதியை ஏற்படுத்தித் தந்துள்ளது. மேலும், ஐயப்ப பக்தர்களின் சிரமமும் வெகுவாகக் குறைந்துள்ளது. தேனி மாவட்டத்தின் எல்லை அருகே கேரளாவின் இடுக்கி மாவட்டம் அமைந்துள்ளது. இங்கு, மூணாறு, தேக்கடி, வாகமன், ராமக்கல்மேடு என ஏராளமான சுற்றுலாத் தலங்கள் உள்ளதால், சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் வந்து செல்கின்றனர். இங்கு, தமிழகத்தை பூர்வீகமாகக் கொண்ட தோட்டத் தொழிலாளர்கள் பெரும்பான்மையாக உள்ளனர். இதனால், … Read more

உ.பி.யில் பிரம்மோஸ், ட்ரோன்கள் தயாரிக்கப்படும் – மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தகவல்

லக்னோ: உத்தர பிரதேசத்தின் பாதுகாப்பு தொழில்துறை வழித்தடத்தில் பிரம்மோஸ் ஏவுகணைகள், ஆளில்லா விமானங்கள் (ட்ரோன்கள்) தயாரிக்கப்படும் என்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். உத்தர பிரதேசத்தின் ஆக்ரா, அலிகர், ஜான்சி, கான்பூர், லக்னோ உள்ளிட்ட 6 பகுதிகளை ஒன்றிணைத்து பாதுகாப்பு தொழில்துறை வழித்தடம் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த தொழில் வழித்தடத்தில் லக்னோவில் ரூ.300 கோடி செலவில் 80 ஹெக்டேர் பரப்பளவில் பிரம்மோஸ் ஏவுகணை உற்பத்தி ஆலை கட்டப்பட்டு வருகிறது. அடுத்த ஆண்டில் புதியஆலையை … Read more

அதிமுக யாருக்கும் அடிமை இல்லை; திமுகதான் காங்கிரஸுக்கு அடிமையாக இருக்கிறது: இபிஎஸ் குற்றச்சாட்டு

சேலம்: “1999-ல் மத்தியில் பாஜக ஆட்சி நடந்துகொண்டிருந்தபோது, திமுகவைச் சேர்ந்த எம்.பி.,க்கள் அதில் அமைச்சர்களாக இடம்பெற்றார்களா? இல்லையா? காலத்துக்கு ஏற்றபடி தங்களுடைய நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளக்கூடிய ஒரே கட்சி திமுகதான். நாங்கள் யாருக்கும் அடிமை இல்லை” என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். சேலம் மாவட்டம் ஆத்தூரில் ஞாயிற்றுக்கிழமை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், “தமிழகத்தில் மிகப்பெரிய பணியை நாங்கள் செயல்படுத்திக் கொண்டிருக்கிறோம். எனவே நாங்கள் யாருக்கும் … Read more

வட இந்தியாவை வாட்டும் வெப்ப அலை: உத்தரப் பிரதேசம், பிஹாரில் 98 பேர் பலி

பாட்னா / லக்னோ: வட இந்தியாவில் வெயில் வாட்டி வதைக்கும் சூழலில் பிஹார் மற்றும் உத்தரப் பிரதேசத்தில் வெப்ப அலைகளால் 98 பேர் பலியாகினர். இவர்களில் உத்தரப் பிரதேசத்தில் 54 பேரும், பிஹாரில் 44 பேரும் பலியாகியதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. மிரட்டிய ஜூன் 15, 16, 17: வழக்கமாகவே கோடை காலத்தில் வட இந்தியாவில் வெப்பம் வாட்டி வதைக்கும். இந்த ஆண்டும் அதே நிலைதான். அதுவும் கடந்த ஜூன் 15, 16, 17 தேதிகளில் உத்தரப்பிரதேசம் மற்றும் … Read more

வாக்களிப்பதற்கு பெற்றோர் பணம் வாங்குவதை தடுக்க வேண்டும் – மாணவ, மாணவிகளுக்கு நடிகர் விஜய் அறிவுரை

சென்னை: பெற்றோர் பணம் வாங்கிக்கொண்டு வாக்களிப்பதை மாணவர்கள் தடுக்க வேண்டும் என்று, அரசு பொதுத் தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு நிதியுதவி வழங்கும் விழாவில் நடிகர் விஜய் அறிவுறுத்தினார். அகில இந்திய தளபதி விஜய்மக்கள் இயக்கம் சார்பில் தமிழகத்தில் 234 தொகுதிகளிலும், 10, 12ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் சிறப்பிடம் பிடித்த மாணவ, மாணவிகளுக்கு நிதியுதவி வழங்கி, கவுரவிக்கும் விழா சென்னை நீலாங்கரையில் நேற்று நடைபெற்றது. ரசிகர்கள் புடைசூழ அங்குவந்த நடிகர் விஜய், மேடையின் கீழ் அமர்ந்திருந்த … Read more