கடந்த 9 ஆண்டு கால மோடி ஆட்சியில் எப்போதும் இல்லாத வகையில் இந்தியா வளர்ச்சி கண்டுள்ளது – ஜே.பி.நட்டா தகவல்

அகர்தலா: பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு பொறுப்பேற்று 9 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதை முன்னிட்டு திரிபுரா மாநிலம் சன்டிர்பஜார் பள்ளி மைதானத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா பேசியதாவது: இந்தியா முன்பு ஊழல், மோசமான நிர்வாகம் ஆகியவற்றுக்கு பெயர் பெற்ற நாடாக விளங்கியது. இப்போது சிறந்த நிர்வாகம் மற்றும் அனைத்து நிலையிலும் வளர்ச்சி ஆகிய காரணங்களால் உலக நாடுகள் இந்தியாவை மதிக்கின்றன. பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சியின் கீழ், முன் … Read more

வாக்குக்கு பணம் – நடிகர் விஜய் கருத்துக்கு உதயநிதி வரவேற்பு

சென்னை: மாணவர்கள் தங்களது பெற்றோர், வாக்களிக்க பணம் வாங்குவதைத் தடுக்க வேண்டும் என்று நடிகர் விஜய் பேசியதற்கு, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக உதயநிதி ஸ்டாலின் கூறும்போது, “வாக்களிக்க பணம் வாங்க வேண்டாம் என்று பேசியது நல்ல விஷயம்தான். விஜய் நல்லதுதானே சொல்லியிருக்கிறார். யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். அதேபோல, அரசியலுக்கு யார் வரவேண்டும், வரக்கூடாது என்று கூறுவதற்கு யாருக்கும் உரிமை இல்லை” என்றார். இதேபோல, விசிக தலைவர் திருமாவளவன், சமக தலைவர் … Read more

எலும்பு முறிவு ஏற்பட்ட மகனுக்கு சக்கர நாற்காலி கிடைக்காததால் மருத்துவமனை மாடிக்கு ஸ்கூட்டரில் சென்ற வழக்கறிஞர்

கோட்டா: மருத்துவமனையில் சக்கர நாற்காலி கிடைக்காததால், காலில் எலும்பு முறிவு ஏற்பட்ட மகனை, மின்சார ஸ்கூட்டரில் ஏற்றி, லிப்ட் வழியாக 3வது தளத்துக்கு சென்ற வழக்கறிஞரால் பரபரப்பு ஏற்பட்டது. ராஜஸ்தான் மாநிலம் கோட்டா நகரில் உள்ளது எம்பிஎஸ் மருத்துவமனை. மிகப் பெரிய மருத்துவமனையில் நாள் ஒன்றுக்கு 3,000 பேர் புறநோயாளிகளாக சிகிச்சை பெற்று செல்கின்றனர். இங்கு நோயாளிகளுக்கு சற்கர நாற்காலி போதிய அளவில் இல்லை. இந்த மருத்துவமனைக்கு மனோஜ் ஜெயின் என்ற வழக்கறிஞர், காலில் எலும்பு முறிவு … Read more

கல்விக் கடன் வசூலில் வங்கிகள் கெடுபிடியால் மாணவர்கள், பெற்றோர் மன உளைச்சல் – திமுக வாக்குறுதிப்படி அரசே ஏற்குமா?

திருவாரூர்: மாணவர்கள் பெற்ற கல்விக் கடனை வசூலிக்கும் பணியில் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் தீவிரம் காட்டி வரும் நிலையில், திமுக தேர்தல் அறிக்கையில் கூறியபடி, கல்விக் கடனை அரசே ஏற்க வேண்டுமென மாணவர்கள், பெற்றோர் வலியுறுத்தியுள்ளனர். கடந்த 2021 சட்டப்பேரவைத் தேர்தலின்போது திமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், 159-வது வாக்குறுதியாக, “தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் பயின்று, தமிழக கல்லூரிகளில் பட்டப்படிப்பை மேற்கொள்ள வங்கிக் கடன் பெற்ற தமிழக மாணவர்கள், ஓராண்டு காலத்துக்குள் கடனை திருப்பிச் செலுத்த இயலாவிட்டால், 30 … Read more

அசாம் மாநிலத்தில் கனமழை வெள்ளத்தில் மூழ்கிய 11 மாவட்டங்கள்: 34,000-க்கும் மேற்பட்டோர் பாதிப்பு

திஸ்பூர்: அசாமில் பெய்து வரும் கனமழையால் 11 மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. சுமார் 34,000-க்கும் மேற்பட்டோர் வெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டு உள்ளனர். வடகிழக்கு மாநிலமான அசாமில் கடந்த 10-ம் தேதி முதல் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அந்த மாநிலத்தில் மொத்தமுள்ள 31 மாவட்டங்களில் 11 மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. குறிப்பாக விஸ்வநாத், தராங், லட்சுமிபூர், தாமல்பூர், உதல்குரி, திப்ரூகர் உள்ளிட்ட மாவட்டங்கள் வெள்ளத்தால் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த மாவட்டங்களை சேர்ந்த 34,000 பேர் … Read more

தமிழகத்தில் 16 மாவட்டங்களில் இன்று கனமழை – வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: தமிழகத்தில் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சேலம், திருச்சி உள்ளிட்ட 16 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக்கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களில் இன்றும், நாளையும் பெரும்பாலான இடங்களிலும், வரும் 20, 21-ம் தேதிகளில் சில இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை … Read more

விடுதலைப்புலிகள் அமைப்பை புதுப்பிக்க முயற்சி – 13 பேருக்கு எதிராக என்ஐஏ குற்றப்பத்திரிகை

புதுடெல்லி: விடுதலைப்புலிகள் அமைப்பை புதுப்பிக்க போதைப்பொருள் மற்றும் ஆயுத வர்த்தகத்தில் ஈடுபட்டது தொர்பான வழக்கில் இலங்கையை சேர்ந்த 10 பேர் மற்றும் இந்தியாவை சேர்ந்த 3 பேருக்கு எதிராக என்ஐஏ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. இந்தியாவிலும், இலங்கையிலும் தமிழீழ விடுதலைப்புலிகள் (எல்டிடிஇ) அமைப்பை புதுப்பிக்கும் சதிச் செயல் தொடர்பான வழக்கை என்ஐஏ விசாரித்து வருகிறது. இது தொடர்பான வழக்கை என்ஐஏ கடந்த 2022, ஜூலையில் பதிவு செய்து 13 பேரை கைதுசெய்தது. இந்நிலையில் இவர்களுக்கு எதிராக இந்திய … Read more

உகாண்டா பள்ளியில் தீவிரவாதிகள் தாக்குதல் – மாணவர்கள் உட்பட 41 பேர் உயிரிழப்பு

கம்பாலா: கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள உகாண்டா, ஆங்கிலேயர் ஆட்சியின் கீழ் இருந்தது. கடந்த 1962-ல் அந்த நாடு விடுதலை அடைந்தது. ஆனால் சர்வாதிகாரம், தீவிரவாத குழுக்களால் உகாண்டாவில் இன்றளவும் அசாதாரண சூழல் நிலவுகிறது. மேற்கு உகாண்டா பகுதியில் ஏடிஎப் என்ற தீவிரவாத குழு செயல்படுகிறது. ஐஎஸ்ஐஎஸ் ஆதரவுடன் செயல்படும் இந்த தீவிரவாத குழு அரசுப் படைகளுக்கு எதிராக ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது. இந்த சூழலில் உகாண்டாவின் பாண்ட்வோ நகரில் உள்ள பள்ளி விடுதியின் மீது ஏடிஎப் … Read more

கிராமப்புற ரயில் நிலையங்களில் யுடிஎஸ் செயலி மூலம் டிக்கெட் எடுக்கும் வசதி

சென்னை: தெற்கு ரயில்வேயில் ஹால்ட் ரயில் நிலையங்களில் (கிராமப்புறங்களில் உள்ள ரயில் நிலையங்கள்) யுடிஎஸ் செல்போன் செயலி மூலமாக, காகிதமில்லாத டிக்கெட் பதிவு செய்யும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையங்களுக்கு உள்ளே நுழைவதற்கு முன்பாக டிக்கெட் பதிவு செய்து, ரயிலில் பயணிக்க முடியும். முன்பதிவில்லாத ரயில் டிக்கெட்டை பெற, டிக்கெட் கவுன்ட்டரில் நெடுநேரம் காத்திருக்காமல், எளிதாக டிக்கெட் எடுக்கும் வகையில், யுடிஎஸ் செல்போன் செயலி தெற்கு ரயில்வேயில் கடந்த 2015-ம் ஆண்டு ஏப்ரலில் அறிமுகப்படுத்தப்பட்டது. முதல்கட்டமாக, சென்னை … Read more

அமெரிக்கா, கனடாவில் உள்ள இந்திய தூதரகம் தாக்குதல் என்ஐஏ விசாரணை

புதுடெல்லி: அமெரிக்கா மற்றும் கனடாவில் உள்ள இந்திய தூதரகம் மீதான தாக்குதல் வழக்கை டெல்லி போலீஸார் என்ஐஏ வசம் ஒப்படைத்துள்ளனர். கனடாவில் உள்ள இந்திய தூதரகத்துக்கு வெளியே கடந்த மார்ச் மாதம் காலிஸ்தான் பிரிவினைவாத அமைப்பின் ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தினர். அங்கிருந்த இந்திய வம்சாவளி பத்திரிகையாளர் மீது அவர்கள் தாக்குதல் நடத்தியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இதுபோல அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ நகரில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தில் காலிஸ்தான் ஆதரவாளர்கள் கடந்த மார்ச் 20-ம் தேதி தாக்குதல் நடத்தினர். மேலும் … Read more