சீனாவில் 3 ஆண்டுகளாக கோமாவில் இருந்த கணவர் மீண்டதால் நன்கொடையை திருப்பித்தர மனைவி முடிவு

ஜியாங்சு: கடந்த 3 ஆண்டுகளாக கோமா நிலையில் இருந்த கணவர், இயல்பு நிலைக்கு திரும்பியதால் சமூக இணையதள விளம்பரம் மூலம் கிடைத்த ரூ.21 லட்சம் நன்கொடையை திருப்பி அளிக்க சீன பெண் முடிவு செய்துள்ளார். கிழக்கு சீனாவின் ஜியாங்சு மாகாணத்தில் வசிப்பவர் ஜியாங் லீ. இவரது மனைவி டிங். கடந்த 2020-ம் ஆண்டு நடந்த கார் விபத்தில், ஜியாங் லீ கோமா நிலைக்கு சென்றார். அவரை, அவரது மனைவி டிங் உடனிருந்து கடந்த 3 ஆண்டுகளாக கவனித்து … Read more

சீமைக்கருவேல மரங்களை அகற்றுவதில் அதிகாரிகள் அக்கறை காட்டுவதில்லை – உயர் நீதிமன்ற நீதிபதிகள் அதிருப்தி

சென்னை: தமிழகத்தில் சீமைக்கருவேல மரங்களை அகற்றும் விவகாரத்தில் அதிகாரிகள் அக்கறை காட்டுவதில்லை என அதிருப்தி தெரிவித்துள்ள உயர் நீதிமன்ற நீதிபதிகள், இதில் உண்மையிலேயே தமிழக அரசுக்கு ஆர்வம் உள்ளதா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் சீமைக் கருவேல மரங்களை அகற்றக் கோரி மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்ட பலர் தாக்கல் செய்திருந்த வழக்குகள் மீதான விசாரணை, சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் என்.சதீஷ்குமார், டி.பரதசக்ரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் நடந்தது. அப்போது அரசு தரப்பில் தாக்கல் … Read more

அமர்நாத் யாத்திரையில் 40 உணவுகளுக்கு தடை

ஜம்மு: காஷ்மீரில் அமர்நாத் ஆலய வாரியம் பக்தர்களுக்கு விடுத்துள்ள சுகாதார ஆலோசனையில் கூறியுள்ளதாவது: அமர்நாத் யாத்திரையில் பானங்கள், வறுத்த மற்றும் துரித உணவுகளை பக்தர்கள் பயன்படுத்துவது தடை செய்யப்படுகிறது. பக்தர்கள் தங்களது உடல் ஆரோக்கியத்தை பேண வேண்டும். தடைசெய்யப்பட்ட 40 உணவுகளில் புலாவ், ப்ரைடு ரைஸ், பூரி, பாத்துரா, பீட்சா, பர்கர், தோசை மற்றும் வறுத்த ரொட்டி, வெண்ணெய், கிரீம் சார்ந்த உணவுகள், ஊறுகாய், சட்னி, பொறித்த அப்பளம் உள்ளிட்டவை அடங்கும். அதற்கு பதிலாக, அரிசி உணவுகளுடன் … Read more

ராமநாதபுரம் | பரிசளிப்பு விழாவில் எம்.பி, அமைச்சர் இடையே வாக்குவாதம் – ஆட்சியரை கீழே தள்ளிவிட்ட திமுகவினர்

ராமநாதபுரம்: முதல்வர் கோப்பைக்கான பரிசளிப்பு விழாவில் எம்.பி., நவாஸ்கனி, அமைச்சர் ராஜகண்ணப்பனிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. சமாதானம் செய்ய முயன்ற ஆட்சியரை கட்சியினர் கீழே தள்ளிவிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ராமநாதபுரம் முஹம்மது சதக் தஸ்தகீர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில், முதல்வர் கோப்பைக்கான மாவட்ட அளவில் நடைபெற்ற விளையாட்டுப்போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஆட்சியர் பி.விஷ்ணு சந்திரன் தலைமை வகித்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ரா.கோவிந்தராஜலு, மாவட்ட முதன்மை கல்வி … Read more

குஜராத்தில் பிபர்ஜாய் புயல் கரை கடந்தபோது உயிரிழப்பு இல்லை – 1,000 கிராமத்தில் மின்சாரம் துண்டிப்பு

கட்ச்: அரபிக் கடலில் உருவான பிபர்ஜாய் புயல், குஜராத்தின் சவுராஷ்டிரா மற்றும் கட்ச் பகுதியில் நேற்று முன்தினம் நள்ளிரவு அதி தீவிர புயலாக கரை கடந்தது. அப்போது மணிக்கு 140 கி.மீ. வேகம் வரை காற்று வீசியதால், 5,120 மின்கம்பங்கள் சாய்ந்தன. இதனால் 4,600 கிராமங்களில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. 3,580 கிராமங்களில் நேற்று மின் இணைப்பு சீரமைக்கப்பட்டது. 3 மாநில நெடுஞ்சாலைகளில் 600 மரங்கள் வேரோடு சாய்ந்ததால், நேற்று போக்குவரத்து தடை ஏற்பட்டது. 9 வீடுகள், … Read more

வீரர்களை சாம்பியன்களாக ஆக்கும் கேப்டனாக இருக்கிறார் அமைச்சர் உதயநிதி – முதல்வர் ஸ்டாலின் பாராட்டு

சென்னை: விளையாட்டுத் துறையின் கேப்டனாக இருந்து அனைத்து வகை விளையாட்டு வீரர்களையும் சாம்பியன்களாக ஆக்கிக் கொண்டு இருக்கிறார் அமைச்சர் உதயநிதி என்று சென்னையில் நடந்த ஸ்குவாஷ் உலகக் கோப்பை நிறைவு விழாவில் முதல்வர் ஸ்டாலின் பாராட்டியுள்ளார். ஸ்குவாஷ் உலகக் கோப்பை தொடர் சென்னையில் நடைபெற்றுவந்த நிலையில், இன்று தொடர் முடிவுக்கு வந்தது. இதன் நிறைவு விழாவில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்று ஸ்குவாஷ் போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு கோப்பைகளை வழங்கினார். பின்னர் விழாவில் பேசிய முதல்வர், “தமிழ்நாட்டைத் … Read more

அமைதி மற்றும் வளத்தை பரப்புவதே யோகாவின் நோக்கம்: மத்திய அமைச்சர் மீனாட்சி லேகி

புதுடெல்லி: அமைதி மற்றும் வளத்தை பரப்புவதே யோகாவின் நோக்கம் என்று மத்திய அமைச்சர் மீனாட்சி லேகி தெரிவித்துள்ளார். சர்வதேச யோகா தினம் வரும் 21ம் தேதி கொண்டாடப்பட இருக்கிறது. இதை முன்னிட்டு டெல்லியில் வெளியுறவுத்துறை உயரதிகாரிகள் பங்கேற்றும் யோகா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட மத்திய வெளியுறவுத்துறை மற்றும் கலாச்சாரத்துறை இணை அமைச்சர் மீனாட்சி லேகி, பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, எல்லாவற்றிற்கும் மேலாக உயர்ந்து, அமைதி, செழிப்பு ஆகியவற்றை பரப்புவதே யோகாவின் செய்தி என … Read more

உலக அரங்கில் இந்தியாவின் மதிப்பு உயர பிரதமரின் திறமையான நிர்வாகம்தான் காரணம் – பாஜக மாநிலத் துணைத் தலைவர் கருத்து

தருமபுரி: உலக அரங்கில் இந்தியாவின் மதிப்பு இன்று உயர்ந்து நிற்க, நம் பிரதமர் மோடியின் திறமையான வழிநடத்தல் தான் காரணம் என பாஜக மாநில தலைவர் தருமபுரியில் தெரிவித்தார். தருமபுரி அடுத்த செட்டிக்கரை பகுதியில் உள்ள மாவட்ட பாஜக அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற இன்று(17-ம் தேதி) கட்சியின் மாநில துணைத் தலைவர் நரேந்திரன் தருமபுரி வந்தார். கட்சி நிகழ்ச்சிக்கு முன்னதாக அவர் செய்தியாளர்களிடம் கூறியது: பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு 9 ஆண்டு ஆட்சியை … Read more

எதையும் எதிர்கொள்ள தயாராக இருப்பதற்கான நடவடிக்கைகளை நமது விமானப்படை எடுத்து வருகிறது: குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு

ஹைதராபாத்: ஒட்டுமொத்த பாதுகாப்பு சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு எப்போதும் தயாராக இருக்க இந்திய விமானப்படை நடவடிக்கை எடுத்து வருகிறது என்று குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு தெரிவித்துள்ளார். தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் அருகே துண்டிகலில் உள்ள இந்திய விமானப்படை அகாடமியின் ஒருங்கிணைந்த பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, விமானப்படையின் அணிவகுப்பை பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அவர், “1948, 1965, 1971 ஆகிய ஆண்டுகளில் பகை நாடுகளுடன் ஏற்பட்ட போர்களில் … Read more

தி.மலை | பிரசவத்தில் தாயும், சேயும் உயிரிழப்பு: அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முற்றுகை

திருவண்ணாமலை: பிரசவத்தில் தாயும், சேயும் உயிரிழந்ததால் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை உறவினர்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். திருவண்ணாமலை அடுத்த சாவல்பூண்டி கிராமத்தில் வசிப்பவர் மாதவன் மனைவி ராஜலட்சுமி (32). நிறை மாத கர்ப்பிணியான இவர், திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நேற்று (ஜூன் 16) அனுமதிக்கப்பட்டார். அவருக்கு இன்று ஆண் குழந்தை பிறந்துள்ளது. இக்குழந்தை உயிரிழந்துவிட்டதாக குடும்பத்தினரிடம் தெரிவிக்கப்பட்டது. மேலும், ராஜலட்சுமியின் உடல்நிலையும் மோசமடைந்துள்ளது. பிரசவத்தின்போது ரத்த போக்கு அதிகம் இருந்ததால், அவருக்கு … Read more