''உச்ச நீதிமன்றத்தைவிட உயர்வானது பிபிசி என்ற நினைப்பு சிலருக்கு இருக்கிறது'': கிரண் ரிஜிஜூ விமர்சனம்

புதுடெல்லி: உச்சநீதிமன்றத்தைவிட பிபிசி உயர்வானது என்ற எண்ணம் சிலருக்கு இருக்கிறது என மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜூ விமர்சித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக பிரிட்டனின் பிபிசி செய்தி நிறுவனம் இரண்டு ஆவணப்படங்களை வெளியிட்டது. இந்த ஆவணப்படங்கள் கண்ணியமானவை அல்ல என்று மத்திய வெளியறவு அமைச்சகம் விமர்சித்தது. இந்த ஆவணப்படங்களை ஆதரித்து சிலர் சமூக ஊடகங்களில் கருத்துக்களை பதிவிட்டனர். இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ள மத்திய சட்ட அமைச்சர் … Read more

அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் துப்பாக்கிச்சூடு – 9 பேர் உயிரிழப்பு

லாஸ் ஏஞ்சல்ஸ்: அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் சீன புத்தாண்டு கொண்டாட்டத்தில் நிகழ்ந்த துப்பாக்கிச்சூட்டில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். கலிஃபோர்னியா மாகாணத்தின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகருக்கு 16 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மான்டெரி பார்க் நகரில் இந்த துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது. ஆசிய கண்டத்தைச் சேர்ந்தவர்கள் அதிகம் உள்ள இங்கு, ஆயிரக்கணக்கானோர் ஒன்றாகக்கூடி சீன புத்தாண்டை கொண்டாடிக்கொண்டிருந்தபோது அமெரிக்க நேரப்படி சனிக்கிழமை இரவு 10.22 மணி அளவில் இந்த துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது. நடன அரங்கில் இந்த … Read more

பிப்ரவரி 2-வது வாரத்தில் சென்னை சர்க்கரைத்துறை ஆணையர் அலுவலகம் முற்றுகை: தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம்

கும்பகோணம்: கும்பகோணத்தை அடுத்த சுவாமிமலையில் தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது. மாநில தலைவர் வேல்மாறன் தலைமை வகித்தார். மாநிலப் பொதுச் செயலாளர் டி. ரவீந்திரன், பொருளாளர் ஏழுமலை, மாநிலச் செயலாளர் தங்க.காசிநாதன், தமிழ்நாடு விவசாய சங்க மாநிலச் செயலாளர் சாமி.நடராஜன், தஞ்சாவூர் மாவட்ட தலைவர் செந்தில்குமார், திருமண்டக்குடி திரு ஆரூரான் சர்க்கரை ஆலை கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் நாக. முருகேசன் உள்ளிட்ட மாநில நிர்வாகிகள் பங்கேற்றனர். திருமண்டக்குடி திருஆரூரான் சர்க்கரை … Read more

டெல்லி நட்சத்திர ஓட்டலில் ரூ.23 லட்சம் மோசடி செய்த நபர் கைது

புதுடெல்லி: டெல்லி நட்சத்திர ஓட்டலில் ரூ.23 லட்சம் மோசடி செய்த நபர் கைது செய்யப்பட்டார். டெல்லியில் உள்ள லீலா பேலஸ் 5 நட்சத்திர ஓட்டலில் முகமது ஷெரீப் என்ற நபர் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 1-ம் தேதி அறை எடுத்து தங்கியுள்ளார். அவர், தான் ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிப்பதாகவும் அரச குடும்பத்தை சேர்ந்த ஷேக் ஃபலா பின் சயத் அல் நஹ்யானின் அலுவலக ஊழியர் என்றும் கூறியுள்ளார். சுமார் 4 மாத காலம் ஓட்டலில் தங்கிய … Read more

தமிழகத்தில் 71 தனியார் வேலைவாய்ப்பு முகாம்கள் மூலம் 1.14 லட்சம் பேருக்கு வேலை: அமைச்சர் சி.வி.கணேசன்

கரூர்: தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு நடத்தப்பட்ட 71 தனியார் வேலைவாய்ப்பு முகாம்கள் மூலம் 1.14 லட்சம் பேருக்கு பணிகள் வழங்கப்பட்டு உள்ளதாக மாநில தொழிலாளர் நலன் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வி.கணேசன் தெரிவித்துள்ளார். தொழிலாளர் நலத்துறை, கரூர் மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மையம், கரூர் மாவட்ட மாநில ஊரக, நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் இணைந்து நடத்தும் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் இன்று (ஜன. … Read more

அயோத்தியில் நடக்க இருந்த இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் அவசர கூட்டம் ரத்து

அயோத்தி: இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் அனைத்து நடவடிக்கைகளையும் நிறுத்தி வைக்குமாறு விளையாட்டுத்துறை அமைச்சகம் அறிவுறுத்தியதைத் தொடர்ந்து, இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்க இருந்த, கூட்டமைப்பின் அவசர பொதுக்குழுக் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் கூட்டமைப்பின் உதவி செயலாளர் வினோத் தோமரையும் இடைநீக்கம் செய்து அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. முன்னதாக விளையாட்டுத்துறை அமைச்சகம் உத்தரப் பிரதேசத்தின் கோண்டாவில் நடக்கும் தர நிர்ணயத்திற்கான போட்டி உள்ளிட்ட மல்யுத்த கூட்டமைப்பின் அனைத்து நடவடிக்கைகளையும் உடனடியாக நிறுத்துமாறு உத்தரவிட்டிருந்தது. இதுகுறித்து அமைச்சகம் வெளியிட்ட ஒரு அறிக்கையில், … Read more

சந்தன மரம் வெட்டிய 4 பேர் கைது; 11.5 கிலோ சந்தன கட்டைகள் பறிமுதல்

தருமபுரி: தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே சந்தன மரம் வெட்டிய 4 பேரை வனத்துறையினர் கைது செய்தனர். பென்னாகரம் வனச் சரகர் முருகன் தலைமையிலான வனத்துறையினரும், தருமபுரி வனப் பாதுகாப்புப் படையினரும் இணைந்து பென்னாகரம்-தருமபுரி நெடுஞ்சாலையில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். சாலை குள்ளாத்திராம்பட்டி பகுதியில் சென்றபோது சிலர் மரத் துண்டுகளை வைத்து சுத்தம் செய்து கொண்டிருந்தனர். அவர்களிடம் விசாரணை நடத்தியபோது, சந்தன மரத்தை வெட்டி துண்டுகளாக்கி சுத்தம் செய்து கொண்டிருந்தது தெரியவந்தது. மேலும், அவர்கள் சாலை குள்ளாத்திராம்பட்டியைச் … Read more

கல்வித்துறையில் மோடி அரசு தோற்றுவிட்டது: கல்விநிலை அறிக்கையை பகிர்ந்து மல்லிகார்ஜூன கார்கே விமர்சனம்

புதுடெல்லி: கல்வித்துறையில் மோடி தலைமையிலான அரசு தோல்வியடைந்து விட்டதாக மல்லிகார்ஜூன கார்கே இ குற்றம்சாட்டியுள்ளார். சமீபத்தில் வெளியான 2022ம் ஆண்டுக்கான கல்விநிலையின் அறிக்கையை சுட்டிக்காட்டி இந்த குற்றச்சாட்டை அவர் முன்வைத்துள்ளார். இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், கல்விநிலை குறித்த மோடி அரசின் ரிபோர்ட் அட்டையும் “எஃப்” பெறுகிறது. எஃப் என்றால் ஃபெயில் என்று தெரிவித்துள்ளார். மேலும் அதில் சமீபத்திய கல்விநிலை குறித்த ஆண்டு அறிக்கை (ASER 2022) செய்தியை சுட்டிக்காட்டி … Read more

சென்னை குடிநீர் வாரியத்துக்கு வரி, கட்டணங்களை செலுத்தாவிட்டால் ஜப்தி நடவடிக்கை

சென்னை: குடிநீர் மற்றும் கழிவுநீர் வரி, கட்டணங்களை செலுத்தாவிட்டால் ஜப்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை குடிநீர் வாரியம் எச்சரித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு: சென்னை மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட வீட்டின் உரிமையாளர்கள், குடிநீர் மற்றும் கழிவுநீர் இணைப்பு பெற்றிருப்பின், குடிநீர் மற்றும் கழிவுநீர் வரியுடன் அதற்குரிய குடிநீர் கட்டணத்தையும் வாரிய ஒழுங்குமுறை விதிகளின்படி உரிய காலத்துக்குள் செலுத்த வேண்டும். குடிநீர் மற்றும் கழிவுநீர் இணைப்பு இல்லாவிடினும் குடிநீர் வரி, கழிவுநீர் வரி ஒவ்வொரு அரையாண்டும், … Read more

பிரதமர் மோடியின் தலைமையில் உலகின் 4வது மிகப்பெரிய பொருளாதார நாடாக இந்தியா மாறும்: யோகி ஆதித்யநாத்

லக்னோ: பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் இந்தியா, உலகின் நான்காவது மிகப்பெரிய பொருளாதார நாடாக மாறும் என்று உத்தரப்பிரதசே முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். உத்தரப்பிரதேச தலைநகர் லக்னோவில் நடைபெற்ற மாநில பாஜக செயற்குழுக் கூட்டத்தில் உரை நிகழ்த்திய யோகி ஆதித்யாநாத், ”உத்தரப்பிரதேசத்தில் பாதுகாப்பு மிகப் பெரிய கேள்விக்குறியாக இருந்து வந்தது. புதிய நடைமுறையின் மூலம் கடந்த 5 ஆண்டுகளில் மாநிலத்தின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. பாதுகாப்பான மாநிலமாகவும், நல்லாட்சி நடைபெறும் மாநிலமாகவும் உத்தரப்பிரதேசம் திகழ்வதால் உலகின் மிகப் … Read more