ராமேசுவரம், ஸ்ரீரங்கம், குமரியில் ஆயிரக்கணக்கானோர் தை அமாவாசையையொட்டி புனித நீராடல்

ராமநாதபுரம்/திருச்சி/ நாகர்கோவில்: தை அமாவாசையையொட்டி ராமேசுவரம் அக்னி தீர்த்தக் கடல், ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம், குமரி முக்கடல் சங்கமம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஆயிரக்கணக்கானோர் புனித நீராடி முன்னோருக்கு தர்ப்பணம் கொடுத்தனர். ஆடி, தை அமாவாசை நாட்களில் புண்ணிய நதிகளில் நீராடி முன்னோருக்கு தர்ப்பணம் அளிப்பது அவர்களது ஆன்மாக்களுக்கு செய்யும் கடமையாகும் என்பது ஐதீகம். அந்த வகையில், தை அமாவாசையான நேற்று, புண்ணியத் தலமான ராமேசுவரம் அக்னி தீர்த்தக் கடலில் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க … Read more

மஜத கட்சி வேட்பாளர் மாரடைப்பால் உயிரிழப்பு

பெங்களூரு: கர்நாடகாவில் ஏப்ரல் அல்லது மே மாதம் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இன்னும் தேர்தல் தேதியே அறிவிக்காத நிலைில் 150 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை மஜத கட்சித் தலைவர் எச்.டி.குமாரசாமி அறிவித்துள்ளார். இந்நிலையில் பீஜாப்பூர் மாவட்டம் சிந்தகி தொகுதி வேட்பாளர் முன்னாள் ராணுவ வீரரான சிவானந்த பாட்டீல் (55) பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில் வெள்ளிக்கிழமை நள்ளிரவில் அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு, கீழே மயங்கி விழுந்தார். உடனடியாக அவரை மருத்துவமனையில் சேர்த்தனர். எனினும் சிகிச்சை பலனின்றி சிவானந்த … Read more

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் – காங்கிரஸுக்கு ஆதரவாக பிரச்சாரத்தை தொடங்கியது திமுக

ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸுக்கு ஆதர வாக திமுக நேற்று பிரச்சாரத்தை தொடங்கியது. இங்கு பிப்ரவரி 27-ம் தேதி நடைபெற உள்ள இடைத்தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடுகிறது. நேற்று, அமைச்சர்கள் முத்துசாமி, கே.என். நேரு ஆகியோர், தொகுதிக்கு உட்பட்ட பெரியார் நகரில் பிரச்சாரத்தை தொடங்கினர். இருவரும் வீடு வீடாகச் சென்று காங்கிரஸ் சின்னத்துக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்ய கேட்டுக் கொண்டனர். அப்போது செய்தியாளர்களிடம் அமைச்சர் முத்துசாமி கூறியதாவது: வரும் நாட்களில் திமுக … Read more

அனைத்து சீதோஷ்ண காலங்களிலும் அமர்நாத்துக்கு சென்று வர புதிய சாலை வசதி

ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் அருகே அமைந்துள்ளது அமர்நாத் குகைக் கோயில். இங்குள்ள கோயிலில் பனிக்காலத்தில் இயற்கையாகவே உருவாகும் சிவலிங்கத்தைக் காண ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். இந்நிலையில் கோயிலுக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக 11 கிலோ மீட்டர் தூர சுரங்கப்பாதையுடன் 22.3 கிலோ மீட்டர் தூரத்துக்கு புதிய சாலை வசதி அமைக்கப்படுகிறது. கோயிலுக்குச் சென்று வரும் பக்தர்களுக்கு மட்டுமல்லாமல் அனைத்து சீதோஷ்ண காலங்களிலும் அப்பகுதிக்கு மக்கள் எளிதில் சென்று வர இந்த புதிய சாலை அமைக்கப்படுகிறது. இதற்கான … Read more

வெம்பக்கோட்டை பட்டாசு ஆலை வெடி விபத்தில் மேலும் 2 பேர் உயிரிழப்பு

வெம்பக்கோட்டை: வெம்பக்கோட்டை பட்டாசு ஆலை வெடி விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த மேலும் 2 பேர் உயிரிழந்தனர். விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே கனஞ்சாம்பட்டியில் மாயக்கண்ணன் என்பவருக்குச் சொந்தமான பட்டாசு ஆலையில் கடந்த 19-ம் தேதி வெடி விபத்து ஏற்பட்டது. அங்கு பணிபுரிந்த சத்திரப்பட்டியைச் சேர்ந்த முனீஸ்வரி (30), அமீர்பாளையத்தைச் சேர்ந்த சங்கர் (60) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். கருப்பசாமி (26), மாரிமுத்து (54), ராஜ்குமார் (38), மகேஸ்வரன் (42), மாரியப்பன் (42), தங்கராஜ் … Read more

உ.பி.யில் பூனை காணாமல் போனதால் கோபம் 35 புறாக்களை விஷம் வைத்து கொன்ற பெண்

பரேலி: உ.பி.யின் ஷாஜகான்பூர் நகரின் ஜலால்நகர் பகுதியை சேர்ந்தவர் வாரிஸ் அலி (32). புறாக்களுக்கு பயிற்சி அளிப்பதை தொழிலாகக் கொண்டுள்ளார். இவர் தனது வீட்டு மாடியில் சுமார் 80 புறாக்கள் வைத்துள்ளார். இந்நிலையில் 35 புறாக்களை அண்டை வீட்டுப் பெண் விஷம் வைத்து கொன்று விட்டதாக அப்பகுதி காவல் நிலையத்தில் வாரிஸ் அலி புகார் அளித்துள்ளார். இதுகுறித்து வாரிஸ் அலி கூறும்போது, “கடந்த மாதம் பக்கத்து வீட்டுப் பெண் வளர்த்து வந்த பூனை காணாமல் போனது. இதற்கு … Read more

மாநிலத்தின் மொழியை கற்றுக் கொள்ளுங்கள் பயிற்சி ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி அறிவுறுத்தல்

சென்னை: எந்த மாநிலத்துக்கு சென்று பணியாற்றினாலும், அம்மாநில மொழியை கற்று கொண்டால் மக்களுடன் நன்கு பழக உதவியாக இருக்கும் என்று பயிற்சி ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அறிவுறுத்தினார். கிண்டியில் உள்ள ராஜ்பவனில் தமிழகம், பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த பயிற்சி ஐஏஎஸ் அதிகாரிகளுடன் ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று கலந்துரையாடினார். அப்போது, அவர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்து ஆளுநர் கூறியதாவது: மத்திய அரசின் நடவடிக்கைகளால், வடகிழக்கு மாநிலங்களில் நல்ல மாற்றமும், முன்னேற்றமும் ஏற்பட்டுள்ளது. என்னுடைய … Read more

திருப்பதி ஏழுமலையான் கோயிலை ட்ரோன் மூலம் வீடியோ எடுத்தது யார்? – தேவஸ்தான விஜிலென்ஸ் துறையினர் விசாரணை

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலை ட்ரோன் கேமரா மூலம் வீடியோ எடுத்தது குறித்து தேவஸ்தான பாதுகாப்பு துறை அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உலக பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயில்தீவிரவாதிகளின் தாக்குதலுக்குகுறியாகாமல் இருக்க 24 மணிநேரமும் ஆக்டோபஸ் படைகள் ரோந்து பணிகளில் ஈடுபட்டுள்ளன. திருமலையில் சுமார் ஆயிரக்கணக்கில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. ஆயுதப் படையினர், ஊர்க்காவல் படையினர், ஸ்ரீவாரி சேவகர்கள், விஜிலென்ஸ் அதிகாரிகள், ஊழியர்கள் என அலிபிரி முதற்கொண்டு திருப்பதி ஏழுமலையான் கோயில் முழுவதும் … Read more

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டி உறுதி – கூட்டணி கட்சித் தலைவர்களை சந்தித்து ஆதரவு கோரினார் ஓபிஎஸ்

சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட இருப்பதாக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். தொடர்ந்து, கூட்டணிக் கட்சித் தலைவர்களை சந்தித்து ஆதரவு கோரி வருகிறார். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில், திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடுகிறது. ஓரிருநாளில் வேட்பாளர் அறிவிக்கப்பட உள்ளார். அதேபோல, அதிமுக கூட்டணியில் பழனிசாமி தரப்புபோட்டியிடுவதும் உறுதியாகியுள்ளது. இதற்காக கூட்டணிக் கட்சித் தலைவர்களின் ஆதரவைக் கோரும் பணிகளை மூத்த நிர்வாகிகள் மேற்கொண்டு வருகின்றனர். அதிமுக போட்டியிட தமாகா ஆதரவு தெரிவித்துவிட்டது. … Read more

ஜம்முவில் குண்டுவெடிப்பு – 7 பேர் படுகாயம்

ஜம்மு: ஜம்மு அருகிலுள்ள நர்வால் பகுதியில் அடுத்தடுத்து 2 இடங்களில் நேற்று காலை சக்தி வாய்ந்த குண்டுகள் வெடித்தன. சாலையோரத்தில் புதைக்கப்பட்டு இருந்த நிலையில் இந்த குண்டுகள் வெடித்துள்ளன. இதில் 7 பேர் படுகாயம் அடைந்தனர். தகவல் அறிந்ததும் பாதுகாப்பு படை வீரர்களும், போலீஸாரும் விரைந்து சென்று 7 பேரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். இதைத் தொடர்ந்து குண்டு வெடிப்பு நடைபெற்ற பகுதி முழுவதையும் பாது காப்பு படையினர் தங்கள் கட்டுப் பாட்டுக்குள் … Read more