பெசன்ட் நகர் பேருந்து நிழற்குடை சரிந்து 4 பெண்கள் காயம்

சென்னை: சென்னை, பெசன்ட் நகர் வண்ணான்துறை பேருந்து நிறுத்தத்தில் பேருந்து நிழற்குடை சரிந்து விழுந்ததில் 4 பெண்கள் காயமடைந்தனர். இது தொடர்பான பதறவைக்கும் சிசிடிவி காட்சிகளும் வெளியாகி உள்ளன. சென்னை, பெசன்ட்நகர் வண்ணான்துறை பேருந்து நிறுத்தத்தில் நேற்று மாலை பேருந்துக்காக 6 பயணிகள் காத்திருந்தனர். அப்போது திடீரென பேருந்து நிறுத்த நிழற்குடை சரிந்து அமர்ந்திருந்த 4 பெண்கள் மீது விழுந்தது. இதனால் மற்றவர்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர். அருகில் இருந்த பொதுமக்கள் நிழற்குடையின் கீழ் சிக்கிய … Read more

கட்சிக்காரர்களின் சந்தேகத்துக்குரிய பணப் பரிவர்த்தனையை வழக்கறிஞர்கள் தெரிவிப்பது கட்டாயமாகிறது?: மத்திய அரசு பரிசீலனை

புதுடெல்லி: பணமோசடி சட்டங்களை வலுப்படுத்துவதற்கான கூடுதல் முயற்சிகளின் ஒரு பகுதியாக, தங்களது கட்சிக்காரர்களின் பணப் பரிவர்த்தனைகளின் பதிவை வைத்திருக்கவும், அதேநேரம் சந்தேகத்துக்கு இடமான செயல்கள் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வழக்கறிஞர்கள் தெரிவிக்க வேண்டும் என்பதை மத்திய அரசு வலியுறுத்த திட்டமிட்டுள்ளது. போலி நிறுவனங்கள் மற்றும் பணமோசடி சம்பந்தப்பட்ட சந்தேகத்துக்கிடமான பரிவர்த்தனைகளை விரைவாக கண்டறிய இந்த திட்டம் உதவும் என்று மத்தியஅரசு தெரிவித்துள்ளது. ஆனால், சில வழக்கறிஞர்கள் மத்திய அரசின் இந்த முன்மொழிவுக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். இந்த செயல் … Read more

செந்தில் பாலாஜியை பதவி நீக்க கோரி மாவட்ட தலைநகரங்களில் அதிமுக 21-ல் ஆர்ப்பாட்டம் – பொதுச்செயலாளர் பழனிசாமி அறிவிப்பு

சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜியை பதவி நீக்கம் செய்யக் கோரி, வரும் 21-ம் தேதி அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படும் என்று கட்சியின் பொதுச்செயலாளர் பழனிசாமி அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: 2021 சட்டப்பேரவைத் தேர்தலின்போது, நிறைவேற்ற முடியாத பல்வேறு வாக்குறுதிகளை அளித்து, மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்த திமுக, கடந்த 2 ஆண்டுகளில் அனைத்துத் துறைகளிலும் பல்வேறு வகைகளில் விஞ்ஞானரீதியாக ஊழல்களைப் புரிந்து மக்கள் விரோத அரசாக இருந்து … Read more

மும்பையில் வீட்டை விற்று வந்த பணத்தை முதலீடு செய்தவரிடம் ரூ.1.3 கோடியை சுருட்டிய சைபர் மோசடி கும்பல்

மும்பை: மும்பையைச் சேர்ந்த ஒருவர் தனது வீட்டை ரூ.1.27 கோடிக்கு விற்று அதை சைபர் மோசடி கும்பலிடம் முதலீடு செய்து ஏமாந்துள்ளார். மும்பையைச் சேர்ந்த 53 வயது நபர் அடுக்குமாடி குடியிருப்பில் இருந்த தனது வீட்டை ரூ.1.27 கோடிக்கு விற்பனை செய்தார். அந்தப் பணத்தில் புதிய வீடு வாங்கலாம் என திட்டமிட்டிருந்தார். இந்நிலையில் அவருக்கு டெலிகிராம் செயலியில் பகுதி நேர வேலை பற்றி ஒரு தகவல் வந்தது. அதை அனுப்பிய பெண், திரைப்படங்கள் மற்றும் ஓட்டல்களின் சில … Read more

செந்தில் பாலாஜிக்கு சில நாட்களில் இதய அறுவை சிகிச்சை

சென்னை: சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் செந்தில் பாலாஜி அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து மருத்துவமனை செயல் இயக்குநர் அரவிந்தன் செல்வராஜ் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: செந்தில் பாலாஜிக்கு நெஞ்சக அறுவை சிகிச்சை நிபுணர் ஏ.ஆர்.ரகுராம் தலைமையிலான மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்துவருகின்றனர். அவருக்கு விரைந்து பைபாஸ் அறுவை சிகிச்சை மேற்கொள்ள பரிந்துரைத்துள்ளனர். அதற்கான உடற்தகுதி பரிசோதனை நடந்து வருகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. சுகாதாரத் துறை அமைச்சர்மா.சுப்பிரமணியன் கூறும்போது,‘ ‘மனைவி விருப்பப்படி, … Read more

மணிப்பூர் தலைநகர் இம்பாலில் கலவரம் நீடிப்பு – மத்திய இணை அமைச்சரின் வீட்டுக்கு தீ வைப்பு

இம்பால்: மணிப்பூர் தலைநகர் இம்பாலில் மத்திய வெளியுறவு இணை அமைச்சர் ராஜ்குமார் ரஞ்சன் சிங்கின் வீட்டுக்கு நேற்று முன்தினம் இரவு ஒரு கும்பல் தீவைத்தது. மணிப்பூரில் இடஒதுக்கீடு விவகாரத்தில் மைதேயி சமூகத்தினருக்கும் குகி சமூகத்தினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. கடந்த மே 3-ம் தேதி முதல் ஒருமாதத்துக்கும் மேலாக அம்மாநிலத்தில் வன்முறை, கலவரம் நீடிக்கிறது. இதில் இதுவரை 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் நேற்று முன்தினமும் தலைநகர் இம்பால் போர்க்களமாக மாறியது. நியூ செக்கான் பகுதியில் பாதுகாப்பு … Read more

'பயம் எங்க பயோ டேட்டாலேயே கிடையாது': செந்தில்பாலாஜி கைதால் மதுரையில் திமுக – பாஜக போஸ்டர் யுத்தம்

மதுரை: அமைச்சர் செந்தில்பாலாஜி கைது விவகாரத்தை மையமாக வைத்து மதுரையில் திமுக- பாஜகவினர் போஸ்டர் யுத்தத்தில் இறங்கியுள்ளனர். தமிழக அமைச்சர் செந்தில்பாலாஜி பண பரிவர்த்தனை மோசடி வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கைது நடவடிக்கையை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடுமையாக கண்டித்துள்ளார். திமுக கூட்டணி கட்சி தலைவர்களும் கண்டித்துள்ளனர். அதே நேரத்தில் அதிமுக மற்றும் பாஜக வரவேற்றுள்ளது. இந்நிலையில் செந்தில்பாலாஜி கைது விவகாரத்தில் பாஜக மற்றும் அதிமுகவை கடுமையாக விமர்சித்தும், பாஜகவை கடுமையாக எச்சரித்தும் தமிழக … Read more

மேற்கு வங்க உள்ளாட்சி தேர்தல் – வடக்கு தினாஜ்பூர் துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழப்பு, இருவர் கவலைக்கிடம்

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் செய்யச் செல்லும் வழியில் துப்பாக்கியால் சுடப்பட்டு ஒருவர் உயரிழந்தார். இருவர் கவலைக்கிடமாக உள்ளனர். மேற்கு வங்கத்தில் மூன்று அடுக்கு உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் ஜூலை 8-ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் நேற்றுடன் முடிவடைந்தது. இந்நிலையில் வடக்கு தினாஜ்பூர் மாவட்டத்தில் நேற்று வேட்புமனு தாக்கல் செய்யச் சென்ற 3 பேர் துப்பாக்கியால் சுடப்பட்டனர். இவர்கள் மூவரும் இடது முன்னணி மற்றும் காங்கிரஸ் ஆதரவாளர்கள் எனவும் … Read more

''பொதுத்தேர்தலில் தோல்வி உறுதியாகிவிட்டதை பாஜக உணர்ந்துவிட்டது''- முதல்வர் ஸ்டாலின் காட்டம்

சென்னை: “இந்தியா முழுவதும் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைவது பா.ஜ.க.வின் சவப்பெட்டியில் அறையப்படும் கடைசி ஆணியாக இருக்கும்” என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அமைச்சர் செந்தில் பாலாஜி வீடுகளில் அமலாக்கத்துறை ரெய்டு நடத்தியது மற்றும் அவர் கைது செய்யப்பட்டதை கண்டித்து மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் சார்பில் இன்று கோயம்புத்தூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திமுக பொருளாளர் டிஆர் பாலு, திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, ஆ.ராசா எம்பி, முத்தரசன், வேல்முருகன் உள்ளிட்ட திமுக … Read more

ஆந்திர ஆளும் கட்சி எம்.பி. மனைவி, மகன் கடத்தல்

விசாகப்பட்டினம்: ஆந்திராவில் ஆளும் கட்சி எம்பியின் மனைவி, மகன் உள்ளிட்ட 4 பேரை ஒரு கும்பல் காரில் கடத்தி சென்றது. ஆந்திராவின் விசாகப்பட்டினம் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி எம்பியாக சத்யநாராயணா உள்ளார். இவர் கடந்த 13-ம் தேதி பணி நிமித்தமாக வெளியூர் சென்றிருந்தார். அப்போது விசாகப்பட்டினம் அருகே உள்ள ஆனந்தபூரில் வசித்து வரும் எம்பியின் மகன் சந்துவை சந்திக்க, எம்பியின் மனைவி ஜோதி மற்றும் உறவினர்கள் காரில் சென்றனர். இதனை அறிந்த ஒரு கும்பல் சந்துவின் வீட்டருகே … Read more