"பொதுமக்களைக் காக்கும் சமூகப் பொறுப்பு" – 'லியோ' குறித்து விஜய்க்கு அன்புமணி கோரிக்கை

சென்னை: நடிகர் விஜய் புகைப்பிடிக்கும் காட்சிகளில் நடிப்பதை தவிர்க்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக வர வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் “லியோ திரைப்படத்தின் முதல் அறிவிப்பில் நடிகர் விஜய் புகைப்பிடிக்கும் காட்சி இடம் பெற்றிருப்பது வருத்தமளிக்கிறது. நடிகர் விஜய் நடிக்கும் திரைப்படங்களை குழந்தைகளும், மாணவர்களும் பார்க்கின்றனர். அவர் புகைப்பிடிக்கும் காட்சியில் நடிப்பதைப் பார்த்து அவர்களும் அப்பழக்கத்திற்கு ஆளாகிவிடக் கூடாது. புகைப்பழக்கத்திலிருந்து பொதுமக்களைக் காக்கும் சமூகப் பொறுப்பும் அவருக்கு உண்டு. சட்டமும் அதைத் … Read more

கர்நாடகா | பாஜக ஆட்சியில் அமல்படுத்தப்பட்ட‌ மதமாற்ற தடை சட்டத்தை ரத்து செய்ய முடிவு – பசவராஜ் பொம்மை கண்டனம்

பெங்களூரு: கர்நாடகாவில் கடந்த பாஜக ஆட்சியில் அமல்படுத்தப்பட்ட மதமாற்ற தடை சட்டத்தை ரத்து செய்ய காங்கிரஸ் முதல்வர் சித்தராமையா தலைமையிலான அமைச்சரவை முடிவெடுத்துள்ளது. இதற்கு பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்துள்ள‌னர். கர்நாடகாவில் கடந்த பாஜக ஆட்சியில் 2022-ம் ஆண்டு மதமாற்ற தடை சட்டம் அமல்படுத்தப்பட்டது. இதற்கு காங்கிரஸ் மற்றும் கிறிஸ்தவ அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இந்த சட்டத்தின்படி மதமாற்றம் செய்தால் 3 முதல் 10 ஆண்டுகள் சிறை தண்டனை, அதிகபட்சமாக ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்படும். திருமண … Read more

செந்தில்பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராகத் தொடர்வார் – தமிழக அரசு அதிகாரபூர்வ அறிவிப்பு

சென்னை: அமைச்சர் செந்தில்பாலாஜியின் துறைகளை அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, முத்துசாமி ஆகியோருக்கு கூடுதலாக ஒதுக்கும் பரிந்துரைக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ள நிலையில் இலாக்கா மாற்றம் தமிழக அரசால் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “அமைச்சர் செந்தில் பாலாஜி பொறுப்பில் இருந்த மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை ஆகியவை அவரது உடல் நிலையின் காரணமாக, நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசுக்கு மின்சாரத் துறையும், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புர … Read more

கல்வான் மோதல் நினைவு தினம் – உயிரிழந்த வீரர்களுக்கு ராஜ்நாத் சிங் மரியாதை

புதுடெல்லி: கல்வான் பள்ளத்தாக்கு மோதலில் வீரமரணமடைந்த வீரர்களுக்கு மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மரியாதை செலுத்தியுள்ளார். கிழக்கு லடாக் எல்லைப் பகுதிகளில் சீன ராணுவம் அடிக்கடி அத்துமீறல்களில் ஈடுபட்டு வருகிறது. இதன்காரணமாக கடந்த 2020-ம் ஆண்டில் லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய, சீன வீரர்களிடையே மிகப்பெரிய மோதல் ஏற்பட்டது. இதில் இந்திய தரப்பில் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். சீன தரப்பில் 38 பேர் உயிரிழந்தனர். ஆனால் 4 பேர் மட்டுமே உயிரிழந்ததாக சீன … Read more

சத்தியமங்கலம் புலிகள் வேட்டையின் பின்னணியில் இருப்போர் யார்? – ஐகோர்ட் கேள்வி

சென்னை: சத்தியமங்கலத்தில் 5 புலிகளை வேட்டையாடிய சம்பவத்தின் பின்னணியில் இருப்பது யார் என விசாரிக்கப்பட்டதா? என்று கேள்வி எழுப்பிய சென்னை உயர் நீதிமன்றம், இந்த வழக்கு தொடர்பான ஆவணங்களுடன் ஆஜராக, புலன் விசாரணை அதிகாரிக்கு உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு வனப்பாதுகாப்பு மற்றும் வனவிலங்குகள் வேட்டையாடுவதைத் தடுப்பது தொடர்பான வழக்குகள் நீதிபதிகள் என்.சதீஷ்குமார் மற்றும் டி.பரதசக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தன. அப்போது, மனுதாரர்கள் தரப்பில், வட இந்தியாவைச் சேர்ந்த பவாரியா கும்பலைச் சேர்ந்தவர்கள்தான் புலி வேட்டையில் … Read more

வெளியுறவுத் துறை இணை அமைச்சர் ஆர்.கே.ரஞ்சன் சிங் வீட்டுக்கு தீ வைப்பு: மணிப்பூரில் பதற்றம்

இம்பால்: மணிப்பூர் தலைநகர் இம்பாலில் உள்ள வெளியுறவுத் துறை இணை அமைச்சர் ராஜ்குமார் ரஞ்சன் சிங்கின் வீட்டுக்கு நேற்று (வியாழக்கிழமை) பின்னிரவு வன்முறையாளர்கள் தீ வைத்தனர். வன்முறையாளர்கள் அமைச்சர் இல்லத்துக்கு தீவைத்த சம்பவம் குறித்த தகவலை மணிப்பூர் அரசும் உறுதி செய்துள்ளது. இது குறித்து அமைச்சர் ரஞ்சன் சிங், “நான் இப்போது அலுவல் நிமித்தமாக கேரளாவில் உள்ளேன். நேற்றிரவு என் வீட்டுக்குள் சில விஷமிகள் பெட்ரோல் குண்டுகளுடன் நுழைந்து தரைத்தளம் மற்றும் முதல் தளத்தை சேதப்படுத்தியுள்ளனர். நல் … Read more

செந்தில்பாலாஜிக்கு எதிராக அவதூறு கருத்து: சவுக்கு சங்கருக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்தது ஐகோர்ட்

சென்னை: நீதிமன்ற உத்தரவை மீறி அமைச்சர் செந்தில்பாலாஜி குறித்து அவதூறு கருத்துகளை பதிவிட்ட யூடியூபர் சவுக்கு சங்கருக்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்த சென்னை உயர் நீதிமன்றம், எதிர்காலத்தில் கருத்துகளை பதிவிடும்போது எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் எனக் கூறி இடைக்கால தடையை நீக்கி உத்தரவிட்டுள்ளது. யூடியூபர் சவுக்கு சங்கர் தம்மை பற்றி தொடர்ச்சியாக சமூக வலைதளங்களில் அவதூறு கருத்துகளை தெரிவித்து வருவதாகவும், அதற்கு தடைவிதிக்க கோரியும், மான நஷ்ட ஈடாக 2 கோடி ரூபாய் வழங்கவும் … Read more

European Essay Prize | வாழ்நாள் சாதனை விருதுக்கு எழுத்தாளர் அருந்ததி ராய் தேர்வு

புதுடெல்லி: வாழ்நாள் சாதனைக்கான ஐரோப்பிய கட்டுரை விருதுக்கு எழுத்தாளர் அருந்ததி ராய் தேர்வு செய்யப்பட்டுள்ளார். தங்கள் எழுத்துக்கள் மூலம் சிந்தனை பரிணாமத்துக்கு பங்களிக்கும் எழுத்தாளர்களுக்கு ஸ்விட்சர்லாந்தில் உள்ள சார்லஸ் வெய்லன் அறக்கட்டளை, கடந்த 1975-ம் ஆண்டில் இருந்து ஆண்டுதோறும் விருது வழங்கி வருகிறது. புகழ்பெற்ற எழுத்தாளர்களான அலெக்சாண்டர் ஜினோவீவ், எட்கர் மோரின், வேட்டன் டொடோரோவ், அமின் மாலூஃப், சிரி ஹஸ்ட்வெத், பீட்டர் வோன் மட் உள்ளிட்டோர் இந்த விருதினை பெற்றுள்ளனர். இந்தப் பட்டியலில் இந்தியாவின் புகழ்பெற்ற எழுத்தாளரான … Read more

அரிசிக்கொம்பன் யானையை கேரள தேசிய பூங்காவில் விட கோரிக்கை – உயர் நீதிமன்றம் நிராகரிப்பு

சென்னை: அரிசிக்கொம்பன் யானையை கேரளாவின் மதிகெட்டான் சோலை தேசிய பூங்காவில் விடவேண்டும் என்ற கோரிக்கையை ஏற்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது. கேரளாவில் இருந்து தமிழகத்தின் கம்பம் பகுதிக்கு வந்த அரிசிக்கொம்பன் யானையைப் பிடித்த வனத்துறை, அதனை திருநெல்வேலி மாவட்டத்த்தில் உள்ள களக்காடு முண்டந்துறை புலிகள் சரணாலயத்தில் விட்டது.அங்கு போதுமான உணவு, தண்ணீர் இல்லை என்பதால், மதிகெட்டான் சோலை தேசிய பூங்காவில் அரிசிக்கொம்பனை விடக் கோரி கேரளாவைச் சேர்ந்த ரெபேக்கா ஜோசப் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் … Read more

‘அற்பத்தனமான பழிவாங்கும் செயல் ’ – நேரு நினைவு அருங்காட்சியக பெயர் மாற்றத்துக்கு காங்கிரஸ் கண்டனம்

புதுடெல்லி: நேரு நினைவு அருங்காட்சியகம் மற்றும் நூலகம் (என்எம்எம்எல்), பிரதம மந்திரி அருங்காட்சியகம் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட இருப்பதாக வெளியான செய்தி குறித்து பிரதமர் மோடியை காங்கிரஸ் கட்சியின் ஜெய்ராம் ரமேஷ் இன்று (ஜூன் 16) கடுமையாக விமர்சித்துள்ளார். அவர் “அற்பத்தனம் மற்றும் பழிவாங்கும் செயல் அதன் பெயர் மோடி” என்று கூறியுள்ளார். இதுகுறித்து காங்கிரஸ் எம்,பி.,யும், அக்கட்சியின் ஊடகப் பிரிவு பொதுச் செயலாளருமான ஜெய்ராம் ரமேஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெள்ளிக்கிழமை பதிவொன்றை வெளியிட்டுள்ளார். … Read more