தஞ்சை | கரும்புக்கான முழுத்தொகையை வழங்க வலியுறுத்தி வருவாய், வேளாண் அலுவலர்கள் சிறைப்பிடிப்பு

தஞ்சாவூர்: பாபநாசம் வட்டம், திருமண்டக்குடி தனியார் சர்க்கரை ஆலை முன்பு 199 நாட்களாக போராடி வரும் விவசாயிகளுக்கு எதிராக ஆதனூரில் கையெழுத்து வாங்கிய, வருவாய் மற்றும் வேளாண்மைத்துறை அலுவலர்களை விவசாயிகள் சிறைப் பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. திருமண்டங்குடி திருஆரூரான் தனியார் சர்க்கரை ஆலை முறைகேடாக விவசாயிகளின் பெயரில் வங்கிகளில் வாங்கிய கடன் ரூ.300 கோடி முழுவதையும் திரும்பச் செலுத்தி, விவசாயிகளை சிபில் ஸ்கோர் பிரச்சினையிலிருந்து விடுவிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும், கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் ஆலையைத் … Read more

ராஜஸ்தானை நோக்கி நகரும் பிப்பர்ஜாய் புயல் – 2 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்

அகமதாபாத்: குஜராத் மாநிலத்தைக் கடந்த சில நாட்களாக அச்சுறுத்திய பிப்பர்ஜாய் புயல் கரையைக் கடந்த நிலையில், அது ராஜஸ்தானை நோக்கி நகர்ந்து கொண்டிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பிப்பர்ஜாய் புயல் பாதிப்பு: அரபிக் கடலில் உருவான பிப்பர்ஜாய் புயல், குஜராத்தின் கட்ச் மாவட்டத்தில் உள்ள ஜாக்குவா போர்ட் அருகே நேற்று மாலை கரையைக் கடந்தது. புயல் கரையைக் கடந்தபோது மணிக்கு 115 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசியது. இந்த புயல் காரணமாக இருவர் உயிரிழந்துள்ளனர். … Read more

5 தூண்கள் கட்டியாச்சு… மேம்பாலம் எப்போ? – 10 ஆண்டுகளாக கிடப்பில் இருப்பதால் வேப்பம்பட்டு மக்கள் அவதி

சென்னை – அரக்கோணம் ரயில்வே மார்க்கத்தில் தினமும் 100-க்கும் மேற்பட்ட மின்சார ரயில்கள், ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கு செல்லும் விரைவு ரயில்கள், சரக்கு ரயில்கள் சென்று வருகின்றன. இதனால், திருவள்ளூர் அடுத்த வேப்பம்பட்டு ரயில் நிலையம் அருகே இருந்த ரயில்வே கடவுப் பாதை அடிக்கடி மூடப்பட்டு வந்தது. இதன் காரணமாக, வேப்பம்பட்டு, பெருமாள்பட்டு, கந்தன்கொல்லை, அயத்தூர், சிவன்வாயில் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள், வேலைக்கு செல்பவர்கள், மாணவர்கள் ஆகியோர் சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட பகுதிகளில் … Read more

மணிப்பூர் வன்முறை குறித்து நாடாளுமன்ற குழுவைக் கூட்டி விவாதிக்க வேண்டும்: திரிணமூல் காங்கிரஸ் கோரிக்கை

புதுடெல்லி: மணிப்பூர் வன்முறை குறித்து உடனடியாக உள்துறை விவகாரங்களுக்கான நாடாளுமன்ற நிலைக்குழுவைக் கூட்டி விவாதிக்க வேண்டும் என்றும், அது அங்கு நிலவும் களசூழல் குறித்து புரிந்து கொள்ள உதவும் என்றும் திரிணமூல் காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது. இதுகுறித்து திரிணமூல் காங்கிரஸ் மாநிலங்களவை எம்.பி. டெரெக் ஓ பிரையன், கமிட்டியின் தலைவர், பாஜக எம்.பி.,யும், முன்னால் காவல்துறை அதிகாரியுமான பிரிஜ் லாலுக்கு வியாழக்கிழமை (ஜூன் 15) கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில் ஓ பிரையன் கூறியிருப்பதாவது: மணிப்பூர் வன்முறை … Read more

நாடாளுமன்றத்தின் சக்தி வாய்ந்த நபரால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானேன்: ஆஸ்திரேலிய எம்.பி குற்றச்சாட்டு

கான்பரா: நாடாளுமன்றத்தின் சக்தி வாய்ந்த நபரால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாக ஆஸ்திரேலிய நாடாளுமன்ற எம்.பி .கூறியுள்ளது அந்நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆஸ்திரேலிய நாடாளுமன்ற எம்.பி .லிடியா தோர்ப். இவர், சக எம்.பி.யான டேவிட் வான் மீது பாலியல் குற்றச்சாட்டை நாடாளுமன்ற அவையில் முன்வைத்திருக்கிறார். நாடாளுமன்ற அவையில் கண்ணீர் மல்க லிடியா பேசும்போது, “ நான் இந்த நாடாளுமன்றத்தின் சக்தி வாய்ந்த நபரான டேவிட் வானால் நான் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளானேன். அவர் படிக்கட்டில் தள்ளி என்னை பாலியல் … Read more

செந்தில்பாலாஜி விவகாரத்தில் முதல்வர் ஸ்டாலின் பதற்றப்படக் காரணம் என்ன? – இபிஎஸ் கேள்வி

சென்னை: செந்தில்பாலாஜி விவகாரத்தில் முதல்வர் பதற்றப்பட காரணம் என்ன என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார். அமைச்சர் செந்தில்பாலாஜி கைது தொடர்பாக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், தனது சமூக வலைத்தளப் பக்கங்களில் காணொளிப் பதிவு ஒன்றை வெளியிட்டு இருந்தார். இதற்குப் பதில் அளிக்கும் விதமாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடிபழனிசாமி அதிமுகவின் சமூக வலைத்தளப் பக்கங்களில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில்,”அமைச்சர் செந்தில்பாலாஜி கைது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் பல்வேறு கருத்துகளை தெரிவித்து … Read more

ஐநா சபையில் நடைபெறும் சர்வதேச யோகா தின கொண்டாட்டங்களுக்கு தலைமை தாங்குகிறார் பிரதமர் மோடி

புதுடெல்லி: அமெரிக்கா மற்றும் எகிப்து ஆகிய நாடுகளுக்கு 6 நாள் பயணமாகச் செல்லும் பிரதமர் நரேந்திர மோடி, ஐநா தலைமையகத்தில் வரும் 21ம் தேதி நடைபெறும் சர்வதேச யோகா தின கொண்டாட்டங்களுக்கு தலைமை தாங்குகிறார். இது தொடர்பாக இந்திய வெளியுறவுத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், “அமெரிக்கா மற்றும் எகிப்து ஆகிய நாடுகளுக்கு அரசு முறைப் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி அடுத்த வாரம் செல்ல இருக்கிறார். வரும் 20ம் தேதி இந்தியாவில் இருந்து புறப்படும் பிரதமர், 21ம் … Read more

வங்கதேசத்தில் நிலநடுக்கம் – ரிக்டர் அளவுகோலில் 4.8 ஆக பதிவு

டாக்கா: வங்கதேசத்தில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 4.8 ஆக பதிவாகி உள்ளது. இது தொடர்பாக நில அதிர்வுக்கான தேசிய மையம் வெளியிட்டுள்ள தகவலில், “பங்களாதேஷின் கிழக்குப் பகுதியில் உள்ள கோபால்கஞ்ச் என்ற இடத்தில் இன்று காலை 10.16 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 4.8 ஆக பதிவாகி உள்ளது. 70 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் காரணமாக இந்தியாவின் அஸ்ஸாம், … Read more

தீவிர சிகிச்சைப் பிரிவில் அமைச்சர் செந்தில்பாலாஜி: காவேரி மருத்துவமனை அறிக்கை

சென்னை: அமைச்சர் செந்தில்பாலாஜி தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக காவேரி மருத்துவமனை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஓமந்தூரார் மருத்துவமனையில் இருந்த அமைச்சர் செந்தில்பாலாஜி காவேரி மருத்துவமனைக்கு நேற்றிரவு மாற்றப்பட்டார். இந்நிலையில் அவரது உடல் நிலை தொடர்பாக காவேரி மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில்,” அமைச்சர் செந்தில்பாலாஜி ஜூன் 15-ம் தேதி காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதய நோய் மூத்த மருத்துவர் ரகுராம் தலைமையிலான மருத்துவக் குழுவினர் அவரை சோதனை செய்தனர். இந்தச் சோதனையில் அவருக்கு பைபாஸ் அறுவை … Read more

காஷ்மீரில் 5 தீவிரவாதிகள் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொலை

ஸ்ரீநகர்: ஜம்மு – காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் இன்று (ஜூன் 16) காலை நடத்திய என்கவுன்ட்டரில் 5 வெளிநாட்டுத் தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஜாமகுண்ட் பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாகக் கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில் நடந்த தேடுதல் வேட்டையில் ஐந்து தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக முதல்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பாக போலீஸ் தரப்பில், “ஜம்மு – காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டின் அருகே அத்துமீறி இந்தியாவுக்குள் நுழைந்த ஐந்து தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். … Read more