3 நாள் பயணமாக ஜெர்மனி, அமீரகம் செல்லும் பிரதமர் மோடி

புதுடெல்லி: ஜி-7 உச்சி மாநாடு ஜெர்மனி தலைமையில், அங்குள்ள ஷ்லாஸ் எல்மா நகரில் வரும் 26 மற்றும் 27-ம் தேதிகளில் நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்ள வரும்படி பிரதமர் நரேந்திர மோடிக்கு, ஜெர்மன் பிரதமர் ஓலப் ஸ்கால்ஷ் அழைப்பு விடுத்துள்ளார். இதை ஏற்று பிரதமர் மோடி வரும் 26-ம் தேதி ஜெர்மனி செல்கிறார். அங்கு 2 நாட்கள் தங்கும் பிரதமர் மோடி, நாடு திரும்பும் வழியில் 28-ம் தேதி அன்று ஐக்கிய அரபு அமீரகம் செல்கிறார். அந்நாட்டின் … Read more

மண்டபத்தில் எழுப்பப்பட்ட 'எடப்பாடியார் வாழ்க' கோஷம்: அமைதிப்படுத்திய முன்னாள் அமைச்சர்கள்

சென்னை: அதிமுக பொதுக்குழுவில் கலந்துகொள்ள கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வந்தபோது, கூட்டத்தில் கலந்துகொள்ள வந்திருந்த பொதுக்குழு உறுப்பினர்கள், எடப்பாடியார் வாழ்க என்று தொடர்ந்து கோஷங்களை எழுப்பினர். இதைத்தொடர்ந்து, அங்கிருந்து முன்னாள் அமைச்சர்கள் பொதுக்குழு உறுப்பினர்களை அமைதிகாக்கும்படி கேட்டுக்கொண்டனர். இபிஎஸ் வாழ்க கோஷம்: பொதுக்குழுவில் கலந்துகொள்ள வந்திருந்த பொதுக்குழு உறுப்பினர்கள், மண்டபத்திற்கு ஓ.பன்னீர்செல்வம் எழுந்து நின்று எடப்பாடியார் வாழ்க என்று கோஷங்களை எழுப்பினர். இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவியது. அமைதிப்படுத்திய அதிமுக முன்னாள் அமைச்சர்கள்: அப்போது அதிமுக … Read more

நேஷனல் ஹெரால்டு வழக்கு: சோனியா காந்தியின் கோரிக்கைக்கு செவிசாய்த்த அமலாக்கத் துறை

புதுடெல்லி: நேஷனல் ஹெரால்டு பத்திரிகை பங்கு விற்பனை விவகாரம் தொடர்பான வழக்கை அமலாக்கத்துறை விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் காங்கிரஸ் மூத்த தலைவரும், வயநாடு தொகுதி எம்.பி.யுமான ராகுல் காந்தியை அமலாக்கத் துறை அதிகாரிகள் 5 நாட்கள் விசாரித்தனர். இந்த வழக்கில் கடந்த ஜூன் 2-ம் தேதி ஆஜராகுமாறு காங்கிரஸ் தலைவர் சோனியாவுக்கும் சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால் அவர் கரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் இருந்ததால் ஆஜராக முடியவில்லை. இதையடுத்து அவரை ஜூன் 23-ம்தேதி (இன்று) ஆஜராகுமாறு புதிய … Read more

மோசடி வழக்கில் தேடப்பட்டு வருபவருக்கு பாஜகவில் முக்கிய பொறுப்பு

சென்னை: சென்னையை தலைமையிடமாகக் கொண்டு பல்வேறு பகுதிகளில் செயல்படும் ஆருத்ரா கோல்டு நிறுவனம் நிதி மற்றும் தங்கம் சார்ந்த வணிகத்தை மேற்கொண்டுள்ளது. இந்நிலையில், இந்நிறுவனம் பெயரில்சமூக வலைதளங்களில் விளம்பரம் வெளியானது. அதில், ரூ.1லட்சம் முதலீடு செய்தால் மாதம் ரூ.32ஆயிரம் வட்டியாக வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டிருந்தது.இந்த விளம்பரம் பணம் மீதான ஆசையைத் தூண்டி,மோசடி செய்யும் திட்டம் என புகார் எழுந்தது. இதுகுறித்து பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். இந்நிறுவனத்தின் நிர்வாகிகள் மீது வழக்குப் பதியப்பட்ட நிலையில், இயக்குநர்கள் … Read more

போட்டித் தேர்வுக்கு தயாராக செய்தித்தாள் படியுங்கள் – மாணவர்களுக்கு உ.பி. முதல்வர் அறிவுரை

லக்னோ: போட்டித் தேர்வுகளுக்கு தயாராக செய்தித்தாள்கள் படிப்பதை வழக்கமாக்கி கொள்ள வேண்டும் என மாணவர்களுக்கு உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவுரை வழங்கியுள்ளார். பிளஸ் 2 தேர்வில் முதல் 10 இடங்களில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளை உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தனது இல்லத்தில் நேற்று சந்தித்தார். அவர்களுடன் கலந்துரையாடிய யோகி ஆதித்யநாத், தேர்வுக்கு அவர்கள் எப்படி தயாராயினர் என்பதை கேட்டறிந்தார். பொதுத் தேர்வுக்கு மாணவர்களை தயார்படுத்திய விதம் குறித்து பள்ளி முதல்வர்களிடமும் கேட்டறிந்தார். … Read more

அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்குப் புறப்பட்டார் ஈபிஎஸ்: எதிர்ப்பு கோஷங்கள் எழுப்பிய ஓபிஎஸ் ஆதரவாளர்கள்

அதிமுக பொதுக்குழு கூட்டம் இன்னும் சற்று நேரத்தில் தொடங்கவுள்ளா நிலையில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி வீட்டிலிருந்து புறப்பட்டார். முன்னதாக காலையில் அவரை முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், செல்லூர் ராஜூ ஆகியோர் சந்தித்தனர். இந்த சந்திப்புக்குப் பின்னர் ஈபிஎஸ் ஆதரவாளர்களின் வாழ்த்துகளோடு அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறும் மண்டபத்துக்கு புறப்பட்டார். இதனிடையே, ஓபிஎஸ் தனது இல்லத்தில் இன்று காலை கோமாதா பூஜையில் ஈடுபட்டார். அதனைத் தொடர்ந்து அவர் தனது ஆதரவு மாவட்டச் செயலாளருடன் பொதுக்குழு கூட்டத்திற்குப் … Read more

அக்னிபாதை திட்டத்தை வாபஸ் பெற வேண்டும் – பிரதமருக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்

புதுடெல்லி: நேஷனல் ஹெரால்டு வழக்கில் 5 நாட்கள் விசாரணையை முடித்த ராகுல் காந்திக்கு தங்கள் ஆதரவை தெரிவிப்பதற்காக டெல்லி காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் கட்சி எம்.பி.க்கள் மற்றும் எம்எல்ஏக்கள் நேற்று கூடினர். அவர்கள் மத்தியில் ராகுல் பேசியதாவது: அமலாக்கத்துறை விசாரணையின்போது எனக்கு ஆதரவாக இருந்த கட்சித் தொண்டர்களுக்கு நன்றி. வேலை வாய்ப்பின்மையே நாட்டின் மிகப்பெரிய பிரச்சினையாக உள்ளது. தற்போது வேலைவாய்ப்புக்கு கடைசி இடமாக இருந்த ராணுவத்தின் கதவும் மூடப்பட்டுவிட்டது. ஒரே பதவி, ஒரே ஓய்வூதியம் என்று பேசியவர்கள் … Read more

பணப் பற்றாக்குறை: சீனாவிடமிருந்து 2.3 பில்லியன் டாலர் கடன் வாங்கியது பாகிஸ்தான்

கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள பாகிஸ்தான் சீனாவிடமிருந்து 2.3 பில்லியன் டாலர் கடன் ஒப்பந்த பத்திரம் மூலம் கடன் பெற்றது. இலங்கை, பாகிஸ்தான் போன்ற நாடுகளில் ஏற்பட்டுள்ள பொருளாதார சிக்கல் அந்நாடுகளை அரசியல் நெருக்கடியை நோக்கி கொண்டு செல்லும் நிலையில் இதன் பின்னணியில் சீனாவின் பெல்ட் அண்ட் ரோடு திட்டமும், அதன் மூலம் கொடுக்கப்பட்ட கடன்களும் மிக முக்கிய காரணமாக கூறப்படுகிறது. இந்நிலையில், பாகிஸ்தான் தற்போது மீண்டும் சீனாவிடம் 2.3 பில்லியன் டாலர் அளவுக்கு கடன் வாங்கியுள்ளது. … Read more

தீபாவளிக்கு சொந்த ஊர் செல்ல ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று தொடக்கம்

சென்னை: தீபாவளி பண்டிகைக்கு சொந்த ஊர் செல்வோருக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்குகிறது. இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை அக்டோபர் 24-ம் தேதி கொண்டாடப்படுகிறது. சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இருந்து பொதுமக்கள், தங்கள் சொந்த ஊருக்கு சென்று தீபாவளியைக் கொண்டாடுவது வழக்கம். இதற்காக, ரயில்களில் செல்வோர் 120 நாட்களுக்கு முன்பு டிக்கெட் முன்பதிவு செய்ய முடியும். அதன்படி, ரயில்வே டிக்கெட் கவுன்ட்டர்கள் மற்றும் ஐஆர்சிடிசி இணைய தளம் மூலம் டிக்கெட் … Read more

அசாம் வெள்ளத்தில் 89 பேர் உயிரிழப்பு – 55 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு

குவாஹாட்டி: அசாமில் தொடர் மழை காரணமாக கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் பிரம்மபுத்ரா மற்றும் பராக் நதியில் நீர்வரத்து மேலும் உயர்ந்ததால் புதிய இடங்களையும் மூழ்கடித்துள்ளது. இதனால் 32 மாவட்டங்களை சேர்ந்த 55 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி இதுவரை 89 பேர் உயிரிழந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். அசாமின் நாகோன் மாவட்டம் வெள்ளத்தால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. இங்கு 4.57 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இம்மாவட்டத்தில் 147 நிவாரண … Read more