தமிழகத்தில் ஒரே மாதத்தில் பி.ஏ.5 வகை தொற்று 21 சதவீதம் அதிகரிப்பு

சென்னை: தமிழகத்தில் ஒரே மாதத்தில் பி.ஏ.5 வகை தொற்று 21 சதவீதம் அதிகரித்து உள்ளதாக சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கரோனா தொற்று பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதை தடுக்க தமிழக அரசு பல முயற்சிகளை செய்து வருகிறது. குறிப்பாக சோதனைகளை அதிகரிப்பது, அனைவருக்கும் தடுப்பூசி செலுத்துவது உள்ளிட்ட பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. மேலும் கரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்கள் எந்த வகையால் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்பதை ஆய்வு செய்ய மரபனு பரிசோதனை … Read more

கட்சித் தொண்டர்கள் அமைதியான முறையில் இருந்து வருகின்றனர்: ஓபிஎஸ்-க்கு வளர்மதி பதில்

சென்னை: “ஒற்றைத் தலைமை வேண்டும். பொதுக்குழுவைக் கூட்ட வேண்டும், சிறப்பான முறையில் இந்த பொதுக்குழு நடக்க வேண்டும் என்று தங்களது ஆர்வத்தை கூறிவிட்டுச் செல்கின்றனர். இது எப்படி அராஜகமான முறையாகும் என்று எனக்கு தெரியவில்லை” என்று அதிமுக முன்னாள் அமைச்சர் வளர்மதி கூறியுள்ளார். அதிமுக முன்னாள் அமைச்சர் வளர்மதி இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: “பொதுக்குழுவிற்கு ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இருவரும் சேர்ந்துதான் அழைப்பு விடுத்துள்ளனர். கிட்டத்தட்ட 3 ஆயிரத்துக்குட்பட்ட பொதுக்குழு உறுப்பினர்கள், செயற்குழு … Read more

மருத்துவத் துறையில் காலியாக உள்ள 4 ஆயிரம் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

நாமக்கல்: மருத்துவத் துறையில் காலியாக உள்ள 1,021 மருத்துவர்கள் உள்பட 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்கள் வரும் செப்டம்பருக்குள் நிரப்பப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே போதைமலைக்கு உட்பட்ட மலைக் கிராமங்களில் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் மருந்துப் பெட்டகம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. கெடமலை கிராமத்தைச் சேர்ந்த 75-வது லட்சம் பயனாளி நல்லம்மாள் என்பவருக்கு, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மருந்து பெட்டகத்தை வழங்கினார். … Read more

அதிமுக மாவட்டச் செயலாளர்கள், நிர்வாகிகள் மத்தியில் பழனிசாமிக்கு பெருகும் ஆதரவு: சட்ட ரீதியாக பொதுக்குழு கூட்டத்தை தடுக்க ஓ.பன்னீர்செல்வம் தீவிர ஆலோசனை

சென்னை: அதிமுகவில் இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமிக்கு ஆதரவு பெருகி வரும் நிலையில், திட்டமிட்டபடி நாளை பொதுக்குழுவை நடத்தி ஒற்றைத் தலைமை தீர்மானத்தை நிறைவேற்றுவதற்கான முயற்சியில் அவரது தரப்பினர் இறங்கியுள்ளனர். கூட்டத்தை தடுத்து நிறுத்த ஓ.பன்னீர்செல்வம் தரப்பு சட்ட ரீதியிலான முயற்சியில் இறங்கியுள்ளது. அதிமுகவில் ஒற்றைத் தலைமை குறித்து கடந்த 14-ம் தேதி நடந்த மாவட்டச் செயலாளர்கள், நிர்வாகிகள் கூட்டத்தில் எழுந்த பேச்சு தொடர்பான சர்ச்சை, முடிவின்றி தொடர்கிறது. சென்னை வானகரம் வாரு வெங்கடாசலபதி பேலஸ் திருமண மண்டபத்தில் … Read more

தங்க கடத்தல் வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் – பிரதமர் மோடிக்கு ஸ்வப்னா சுரேஷ் கடிதம்

திருவனந்தபுரம்: கடந்த 2020-ம் ஆண்டு ஜூலையில் கேரள தலைநகர் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் 30 கிலோ தங்கத்தை சுங்கத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இந்த வழக்கில் ஐக்கிய அரபு அமீரக முன்னாள் ஊழியர் ஸ்வப்னா சுரேஷ், கேரள முதல்வர் பினராயி விஜயனின் அப்போதைய முதன்மை செயலாளர் சிவசங்கர் உள்ளிட்டோர் கைது செய்யப் பட்டனர். மத்திய புலனாய்வு அமைப்புகளான என்ஐஏ, அமலாக்கத் துறை மற்றும் சுங்கத் துறை வழக்கை விசாரித்து வருகிறது. ஸ்வப்னா சுரேஷ், சிவசங்கர் ஆகியோர் … Read more

ஒற்றைத் தலைமை சர்ச்சை | மீண்டும் தர்மம் வெல்லும்; ஓபிஎஸ் ட்வீட்

சென்னை: “தருமத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்; தருமம் மறுபடியும் வெல்லும்” என்பதை இங்கு சுட்டிக்காட்ட கடமைப்பட்டிருக்கிறேன் என்று ஓபிஎஸ் ட்விட்டரில் பதிவு செய்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டரில், “மாபெரும் மக்கள் இயக்கமாம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் தற்போது நிலவிவரும் சர்வாதிகார மற்றும் அராஜகப் போக்கிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், மகளிர் அணியினர் மாண்புமிகு அம்மா அவர்களின் நினைவிடத்திற்கு சென்றபோது தேனாம்பேட்டை, வரதராஜபுரம் பகுதியை சேர்ந்தவரும், தென்சென்னை வடக்கு (கிழக்கு) மாவட்ட கழக … Read more

நேஷனல் ஹெரால்டு வழக்கு: ராகுல் காந்தியிடம் 5-ம் நாளாக விசாரணை

புதுடெல்லி: அசோசியேட்டடு ஜர்னல்ஸ் நிறுவனத்தின் (ஏஜெஎல்) சார்பில் நேஷனல் ஹெரால்டு பத்திரிகை வெளியாகிறது. ஏஜெஎல் நிறுவன பங்குகளை யங் இண்டியன் நிறுவனத்துக்கு மாற்றியதில் சட்டவிரோதப் பணப் பரிவர்த்தனை நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து அமலாக்கத் துறைவழக்கு பதிவு செய்து விசாரித்துவருகிறது. காங்கிரஸ் தலைவர்கள் சோனியா, ராகுலுக்கு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியது. இதன்படி, டெல்லியில் உள்ள அமலாக்கத் துறை தலைமை அலுவலகத்தில் ராகுல் காந்தி கடந்த வாரம் தொடர்ச்சியாக 3 நாட்கள் ஆஜரானார். அவரிடம் 30 மணி … Read more

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு மாணவ, மாணவிகளுடன் ஆளுநர் யோகாசனம்: பள்ளி, கல்லூரிகள், மத்திய அரசு அலுவலகங்களிலும் ஏராளமானோர் பங்கேற்பு

சென்னை: சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு ஆளுநர் மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில் பள்ளி, கல்லூரிமாணவர்களுடன் இணைந்து ஆளுநர் ஆர்.என்.ரவி யோகாசனங்கள் செய்தார். பல்வேறு மத்திய அரசு அலுவலகங்களில் நடந்த யோகா நிகழ்ச்சிகளில் அதிகாரிகள், ஊழியர்கள் பங்கேற்றனர். தமிழகம் உட்பட நாடு முழுவதும் 8-வது சர்வதேச யோகா தினம் நேற்று கொண்டாடப்பட்டது. சென்னை ஆளுநர் மாளிகை வளாகத்தில் காலை 6.30 மணி அளவில் நடந்த யோகா நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்றார். பல்வேறு ஆசனங்கள் செய்ய யோகா ஆசிரியர்கள் … Read more

உத்தர பிரதேசத்தில் புல்டோசருடன் கொடி அணிவகுப்பு நடத்திய அலிகார் போலீஸார்

அலிகார்: உத்தர பிரதேசம் அலிகாரில் நடைபெற்ற போலீசாரின் கொடி அணிவகுப்பில் புல்டோசர்கள் இடம்பெற்றது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. உத்தர பிரதேசத்தில் சமூக விரோதிகள், கிரிமினல் குற்றவாளிகள், கலவரங்களில் ஈடுபடுவோர்கள் சட்டவிரோதமாக கட்டிய வீடுகள் புல்டோசர்கள் மூலம் இடித்துத் தள்ளப்படுகின்றன. இந்நிலையில், அக்னி பாதை திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அலிகாரில் கடந்த வாரம் நடந்த போராட்டத்தில் கலவரம் ஏற்பட்டது. இதில் போலீஸ் போஸ்ட் மற்றும் வாகனங்கள் எரிக்கப்பட்டன. மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்துவதற்கும் சமூக விரோதிகளுக்கு அச்சத்தை ஏற்படுத்துவதற்கும் பதற்றமான … Read more

வீட்டு வேலைகள் செய்வதற்காக ஆர்டர்லி வைத்துக் கொள்ளும் அதிகாரிகள் மீது வழக்கு பதிவு: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவுவீட்டு வேலைகள்

சென்னை: தமிழக காவல் துறையை சேர்ந்த மாணிக்கவேல் என்பவர், தன்னை காவலர் குடியிருப்பில் இருந்து வெளியேற்ற பிறப்பிக்கப்பட்ட நோட்டீஸைஎதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த 2014-ம் ஆண்டு வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், மாணிக்கவேல் மீதான நடவடிக்கை சரிதான் என உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், இதுதொடர்பான வழக்கு கடந்த 14-ம் தேதி நீதிபதிஎஸ்.எம்.சுப்ரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தபோது, சமீபத்தில்தான் அந்த குடியிருப்பை மாணிக்கவேல் காலி செய்ததாக தெரிவிக்கப்பட்டது. இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த நீதிபதி, … Read more