புதுச்சேரி மின்வாரிய ஊழியர்களின் போராட்டத்திற்கு நாம் தமிழர் கட்சி துணைநிற்கும்: சீமான்

சென்னை: “மத்திய பாஜக அரசு, தற்போது பொதுப்பட்டியலில் உள்ள மின்துறையையும் யூனியன் பிரதேச அரசுகளின் அனுமதியின்றித் தனியாருக்குத் தாரைவார்க்க முயல்வது, மாநில அரசுகளின் இறையாண்மையை பறிக்கும் எதேச்சதிகார போக்கின் உச்சமாகும்” என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: “புதுச்சேரி உள்ளிட்ட மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள யூனியன் பிரதேசங்களின் மின்துறையைத் தனியார் மயமாக்கும் மத்திய அரசின் முடிவு கடும் அதிர்ச்சியளிக்கிறது. கோடிக்கணக்கான மக்களின் வரிப்பணத்தில் சேவை … Read more

வெள்ளத்தில் தவிக்கும் அசாம்: இதுவரை 73 பேர் உயிரிழப்பு; 43 லட்சம் பேர் பாதிப்பு

கவுகாத்தி: அசாம் மாநிலத்தில் மொத்தம் உள்ள 35 மாவட்டங்களில் 33 மாவட்டங்கள் வெள்ளத்தில் தத்தளித்து வருகின்றன. திங்கள்கிழமை நிலவரப்படி சுமார் 43 லட்சம் மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். அந்த மாநிலத்தின் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா ஷர்மா, பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தேவையான உணவு மற்றும் நிவாரண பொருட்களை வழங்க உத்தரவு பிறப்பித்துள்ளார். வெள்ள நீர் அதிகம் சூழ்ந்துள்ள பகுதிகளில் சிக்கியுள்ள மக்களுக்கு தேவையான உணவு மற்றும் நிவாரணத்தை ஆகாய மார்க்கமாக வழங்குமாறு அவர் தெரிவித்துள்ளார். மாநில அமைச்சர்கள் மற்றும் … Read more

சென்னை மாநகராட்சி பள்ளிகள் பிளஸ் 2-வில் 86.53% தேர்ச்சி; 10-ம் வகுப்பில் 75.84% தேர்ச்சி 

சென்னை: சென்னை மாநகராட்சி பள்ளிகளில் 12ம் வகுப்பில் 86.53 சதவீதமும், 10-ம் வகுப்பில் வகுப்பில் 75.84 சதவீத தேர்ச்சியும் பெற்றுள்ளன. சென்னை மாநகராட்சி கல்வித் துறையின்கீழ் 32 மேல்நிலைப் பள்ளிகளும், 38 உயர்நிலைப் பள்ளிகளும் செயல்பட்டு வருகிறது. இதில் 12ம் வகுப்பு பொதுத் தேர்வை 2478 மாணவர்கள், 3164 மாணவியர்கள் என மொத்தம் 5642 பேர் எழுதினார்கள். இதில் 1,975 மாணவர்கள், 2,907 மாணவியர்கள் என மொத்தம் 4882 பேர் தேர்ச்சிப் பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவீதம் 86.53 … Read more

லஞ்சம் கொடுத்து பெறுவது அல்ல அரசு பணி: சென்னை உயர் நீதிமன்றம் கருத்து

சென்னை: அரசுப் பணி நியமனம் என்பது தேர்வு நடைமுறைகளின் மூலம் பெற வேண்டுமே தவிர, லஞ்சம் கொடுத்து பெற முடியாது என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. அரசுத் துறைகளில் உயர் பதவிகளில் நியமனம் பெற்றுத் தருவதாக கூறி பலரிடம் பணம் பெற்று மோசடி செய்ததாக ஜெகன்நாதன், இந்துமதி உள்ளிட்டோருக்கு எதிராக மத்திய குற்றப்பிரிவு வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கு விசாரணையின்போது, குற்றம்சாட்டப்பட்டவர்களிடம் இருந்து பணத்தை பறிமுதல் செய்ததுடன், அவர்களின் … Read more

‘மண் காப்போம்’ வெற்றியால் பிறக்கப் போகும் குழந்தைகளுக்கும் நன்மை: கர்நாடகா முதல்வர் சிலாகிப்பு

கோவை: “மண் வளத்தை பாதுகாக்க சத்குரு ஜக்கி வாசுதேவ் மேற்கொண்டுள்ள பயணம் தாய் பூமியைக் காப்பாற்றிய வரலாற்றில் எழுதப்படும்” என்று கர்நாடகா முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார். இந்தியாவின் 8-வது மாநிலமாக கர்நாடகா அரசு தனது மாநிலத்தில் மண் வளத்தை மீட்டெடுப்பதற்காக ‘மண் காப்போம்’ இயக்கத்துடன் ஞாயிற்றுக்கிழமை புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டது. இதற்காக பெங்களூருவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற கர்நாடகா முதல்வர் பசவராஜ் பொம்மை பேசுகையில், “சத்குருவின் பயணத்தைப் பொறுத்தவரை, இது தாய் பூமியைக் காப்பாற்றிய வரலாற்றில் … Read more

சிறுவாணி அணையில் இருந்து எடுக்கப்படும் நீரின் அளவு அதிகரிப்பு

கோவை: சிறுவாணி அணையில் இருந்து கோவையின் குடிநீர் விநியோகத்துக்காக எடுக்கப்படும் நீரின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது. கோவையின் முக்கிய நீராதாரங்களில் ஒன்றான சிறுவாணி அணை, கேரள மாநிலம், பாலக்காட்டில் உள்ள மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது. சிறுவாணி அணையிலிருந்து பெறப்படும் குடிநீர் மாநகராட்சியின் 30-க்கும் மேற்பட்ட வார்டுகள், வழியோர கிராமங்கள் உள்ளிட்ட பகுதிகளுக்கு விநியோகிக்கப்படுகிறது. சிறுவாணி அணையில் 49.50 அடி (878.50 மீட்டர்) அளவுக்கு நீரைத் தேக்கலாம். ஆனால், அணையின் பாதுகாப்பு காரணமாக 45 அடி உயரம் வரைக்கு … Read more

சரக்கு ரயிலின் 2 பெட்டிகள் தடம் புரண்டதால் மதுரையைக் கடந்து சென்ற ரயில்கள் தாமதம்

மதுரை: மதுரை ரயில் நிலையத்தில் சரக்கு ரயிலின் 2 பெட்டிகள் திடீரென தடம் புரண்டதால் மதுரையைக் கடந்து செல்லும் ரயில்கள் சற்று தாமதமாக சென்றன. மதுரை ரயில் நிலையத்தில் இருந்து அசாம், கர்நாடகா, மேற்கு வங்கம் உள்ளிட்ட பல்வேறு வெளி மாநிலங்களுக்கு சரக்கு ரயில்கள் மூலம் டிராக்டர்கள் உள்ளிட்ட பொருட்கள் ஏற்றிச் செல்லப்படுகின்றன. இதன்படி, மதுரை வாடிப்பட்டி பகுதியில் இருந்து வடமாநிலத்திற்கு டிராக்டர்களை ஏற்றிச் செல்ல தயாராக 24 பெட்டிகளுடன் கூடிய சரக்கு ரயில் ஒன்று கூடல்நகர் … Read more

“நூபுர் ஷர்மா கருத்து சரியா என நண்பர் அப்பாஸிடம் பிரதமர் மோடி கேட்க வேண்டும்” – ஒவைசி

ஹைதராபாத்: முகம்மது நபிகள் குறித்து நுபுர் சர்மா சொன்ன கருத்து சரியா என பிரதமர் நரேந்திர மோடி தனது நண்பர் அப்பாஸிடம் கேட்க வேண்டும் என்று அசாதுதீன் ஒவைசி குறிப்பிட்டுள்ளார். கடந்த சில வாரங்களுக்கு முன்னர் முகம்மது நபிகள் குறித்து பாஜகவின் முன்னாள் செய்தி தொடர்பாளர் நுபுர் சர்மா சர்ச்சை அளிக்கும் வகையிலான கருத்தை தெரிவித்திருந்தார். தற்போது அவர் கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். அவரது கருத்தை தொடர்ந்து உள்நாடு மற்றும் வெளிநாடு என இஸ்லாமிய மக்கள் எதிர்ப்பு … Read more

இந்தியா உள்ளிட்ட 4 நாடுகளுக்கு செல்வதற்கான கரோனா கட்டுப்பாடுகளை நீக்கியது சவுதி அரேபியா

ரியாத்: இந்தியா, எத்தியோபியா, துருக்கி, வியட்நாம் ஆகிய நாடுகளுக்குச் செல்லும் குடிமக்களுக்கான கரோனா கட்டுப்பாடுகளை சவுதி அரேபியா நீக்கியுள்ளது. மேலும், முகக்கவசம் அணிதல் போன்ற கரோனா கட்டுப்பாடுகளையும் சவுதி நீக்கியுள்ளது. ஆனால், மெக்கா போன்ற புனித தளங்களில் முகக்கவசம் அணிய வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. வெளிநாடு செல்ல விரும்பும் சவுதி அரேபியாவின் குடிமக்களுக்கான தடுப்பூசி காலமும் நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும், பூஸ்டர் டோஸ் போடுவதற்கான காலத்தை 8 மாதங்களாகவும் சவுதி நீடித்துள்ளது. உலகளவில் ஐரோப்பா, சீனா, அமெரிக்கா நாடுகளில் … Read more

தனியார் மருத்துவமனைகளில் ‘சிஎஸ்ஆர்’ மூலம் இலவசமாக பூஸ்டர் தடுப்பூசிக்கு ஏற்பாடு: மா.சுப்பிரமணியன் சிறப்புப் பேட்டி

சென்னை: “இரண்டாவது தவணைத் தடுப்பூசி செலுத்தப்பட்டு ஒரு வருடம் கடந்துவிட்ட நிலையில், தமிழகத்தில் கரோனா நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து வருவாதாகவும், பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக்கொள்வது அவசியமாவதாகவும் மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் ‘இந்து தமிழ் திசை’க்கு அளித்த சிறப்புப் பேட்டியிலிருந்து… “கரோனா பாதிப்பு குறைந்து வந்த நிலையில் உலக அளவிலும், இந்திய அளவிலும் சமீப நாட்களாக பாதிப்புகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் … Read more