‘‘அக்னிபாதை வீரர்களுக்கு ஆதரவு; வேலை தர தயார்’’ – வரிசை கட்டும் தொழிலதிபர்கள்

புதுடெல்லி: அக்னிபாதை திட்டத்தில் 4 ஆண்டு பயிற்சி முடித்த வீரர்களுக்கு வேலை தருவதாக ஆனந்த் மகேந்திரா கூறியதைபோலவே பல தொழிலதிபர்களும் உறுதியளித்துள்ளனர். மகிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மகிந்திரா, ஆர்பிஜி எண்டர்பிரைசஸ் தலைவர் ஹர்ஷ் கோயங்கா மற்றும் பயோகான் லிமிடெட் தலைவர் கிரண் மஜும்தார் ஷா உள்ளிட்ட தொழில்துறையினர் அக்னிபாதை திட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தனர். ராணுவத்துக்கு புதிதாக இளைஞர்களை சேர்க்கும் அக்னிபாதை திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பிஹார் உள்ளிட்ட வடமாநிலங்களிலும் தெலங்கானாவிலும் இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ரயில்களுக்கு … Read more

கலை, அறிவியல் கல்லூரிகளுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க மாணவ, மாணவிகள் ஆர்வம்

மதுரை: பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று வெளியான நிலையில், மதுரை உள்ளிட்ட தென் மண்டலத்திலுள்ள கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர மாணவ, மாணவிகள் ஆன்லைன் மூலம் விண்ணபிக்க ஆர்வம் காட்டியுள்ளனர். மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்கள் அடங்கிய கல்லூரி கல்விக்கான தென்மண்டலத்தில் 26 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளும், 40 அரசு உதவி பெறும் கலை அறிவியல் கல்லூரிகள், மதுரை காமராசர் பல்கலைக்கழக கல்லூரி ஒன்றும் மற்றும் 50க்கும் மேற்பட்ட தனியார் … Read more

‘‘அக்னிபாதை பயிற்சி பெற்ற இளைஞர்களுக்கு மகேந்திரா நிறுவனத்தில் வேலைவாய்ப்பு’’- ஆனந்த் மகேந்திரா உறுதி

புதுடெல்லி: அக்னிபாதை பயிற்சி பெற்ற, திறமையான இளைஞர்களை பணியில் சேர்ப்பதற்கான வாய்ப்பை மகேந்திரா குழுமம் வரவேற்கிறது என அந்நிறுவனத்தின் தலைவரும், பிரபல தொழிலதிபதிபருமான ஆனந்த் மகேந்திரா கூறியுள்ளார். ராணுவத்துக்கு புதிதாக இளைஞர்களை சேர்க்கும் அக்னிபாதை திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பிஹார் உள்ளிட்ட வடமாநிலங்களிலும் தெலங்கானாவிலும் இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ரயில்களுக்கு தீ வைக்கப்பட்டது. மாணவர்களை போராட தூண்டியதாக பிஹார், ஆந்திரா, தெலங்கானா ஆகிய 3 மாநிலங்களில் ராணுவத்தில் சேர விரும்பும் இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்கும் நிறுவனங்கள் மீது … Read more

பிலிப்பைன்ஸ் துணை அதிபராக சாரா டுட்ரேட் பதவியேற்பு… யார் இவர்?

தாவோ: பிலிப்பைன்ஸ் நாட்டின் துணை அதிபராக ரோட்ரிகோ டுட்ரேட் மகள் சாரா டுட்ரேட் பதவி ஏற்றுக் கொண்டார். பிலிப்பைன்ஸ் நாட்டின் அதிபர் ரோட்ரிகோ டுட்ரேட் சர்ச்சைகளின் நாயகர். இவர் பிலிப்பைன்சில் யாரேனும் போதைப் பொருட்களைப் பயன்படுத்தினாலும், விற்றாலும் அவர்களை சுட்டுக் கொல்ல ஆணை பிறப்பித்தவர். சட்டம் என்ன சொல்கிறது என்பதைப் பற்றி டுட்ரேட் அச்சம் கொண்டது இல்லை. இதன் காரணமாக உலகம் முழுவதிலுள்ள மனித உரிமை அமைப்புகள் இவருக்கு வலுவான் கண்டனங்கள் தெரிவித்து வந்தன. மனித உரிமை … Read more

புதுச்சேரியில் பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் உயர் கல்வி வாய்ப்பு: முதல்வர் ரங்கசாமி உறுதி

புதுச்சேரி: “பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் உயர் கல்வி பயில வாய்ப்புகளை அரசு உருவாக்கும். இடங்கள் அதிகரிக்கப்படும்” என்று முதல்வர் ரங்கசாமி தெரிவித்தார். புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது: ”பிளஸ்2 தேர்ச்சி பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் வாழ்த்துகள். மாணவர்கள் தேர்ச்சிக்கு காரணமாக இருந்த கல்வித்துறை அதிகாரிகள், ஆசிரியர்களுக்கு வாழ்த்துகள். அரசு மற்றும் தனியார் பள்ளிகள் இணைந்து பிள்ளைகளுக்கு நல்ல கல்வியை கொடுத்து வருகிறது. பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற அனைத்து மாணவர்களும் உயர் … Read more

குடியரசுத் தலைவர் தேர்தல்: எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளராக போட்டியிட கோபால கிருஷ்ண காந்தியும் மறுப்பு

புதுடெல்லி: குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளராக போட்டியிட வேண்டும் என்ற எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை சரத்பவார், பரூக் அப்துல்லாவை தொடர்ந்து கோபால கிருஷ்ண காந்தி இன்று நிராகரித்துள்ளார். குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் சார்பில் பொது வேட்பாளரை நிறுத்துவது குறித்து, மேற்கு வங்க முதல்வர் மம்தா தலைமையில், 17 எதிர்க்கட்சிகள் டெல்லியில் கடந்த 15-ம் தேதி ஆலோசனை நடத்தின. அப்போது தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத் பவாரை வேட்பாளராக நிறுத்த திட்டமிடப்பட்டது. ஆனால் அவர் தனக்கு … Read more

இந்திய சந்தையில் அறிமுகமானது ரியல்மி C30 ஸ்மார்ட்போன் | விலை and சிறப்பு அம்சங்கள்

புது டெல்லி: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் ரியல்மி C30 ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. இந்த போன் குறித்து சிறப்பு அம்சங்கள் மற்றும் விலை குறித்த விவரத்தை விரிவாக பார்ப்போம். ஆண்ட்ராய்டு போன்களை உற்பத்தி செய்து வரும் சீன நிறுவனமான ரியல்மி நிறுவனம் அவ்வப்போது தங்கள் நிறுவன பயனர்களுக்காக புதிய அப்டேட்களுடன் கூடிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்யும். அந்த வகையில் இப்போது C30 ஸ்மார்ட்போனை அந்நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. வரும் 27-ஆம் தேதி முதல் ஆன்லைன் மூலமாக இந்த … Read more

‘நம்மைக் காக்கும் 48’ திட்டத்தில் இதுவரை 80,000 பேருக்கு சிகிச்சை: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

சென்னை: ‘இன்னுயிர் காப்போம் – நம்மைக் காக்கும் 48’ திட்டத்தில் இதுவரை 80 ஆயிரம் பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் இன்னுயிர் காப்போம் – நம்மை காக்கும் 48 திட்டத்தின்கீழ் சிகிச்சைப் பெற்றுவரும் 80 ஆயிரமாவது பயனாளியை இன்று சந்தித்த மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தார். இதன்பிறகு அமைச்சர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “கரோனா காலத்தல் முதலமைச்சர் பல்வேறு மருத்துவத் … Read more

மகாராஷ்டிரா மாநிலத்தில் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் தந்தை தேர்ச்சி, மகன் தோல்வி

புனே: மகாராஷ்டிர மாநிலத்தில் சமீபத்தில் நடந்து முடிந்த 10-ம் வகுப்பு தேர்வில், 43 வயது தந்தை தேர்ச்சி பெற்றார். மகன் 2 பாடங்களில் தோல்வி அடைந்தார். மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள புனேவில் வசிப்பவர் பாஸ்கர் வாக்மரே (43). இவர் குடும்ப சூழல் காரணமாக 7-ம் வகுப்புக்குப்பின், வேலைக்கு சென்று விட்டார். இவரது மகன்சாகில் சமீபத்தில் 10-ம் வகுப்புபொதுத்தேர்வு எழுதினான். தொடர்ந்து படிக்க வேண்டும் என விரும்பிய பாஸ்கர், 30 ஆண்டுகளுக்குப்பின், தனது மகனுடன் சேர்ந்து 10-ம் வகுப்பு … Read more

அதிமுக பொதுக்குழு கூட்டம் திட்டமிட்டபடி நடக்கும்: கே.பி.முனுசாமி உறுதி

சென்னை: “கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் உறுதியாக பொதுக்குழுவில் கலந்துகொள்வார். கருத்துகளைச் சொல்வார். பொதுக்குழு என்ன முடிவு எடுக்கிறதோ, ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர், இங்கு இருக்கின்ற அனைவரும் ஏற்றுக்கொள்வோம்” என்று அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி கூறியுள்ளார். அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: “வரும் 23.6.2022 அன்று அதிமுகவின் பொதுக்குழுக் கூட்டப்பட வேண்டும் என்று கட்சியின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் மற்றும் கட்சியின் தலைமைக்கழக நிர்வாகிகள் ஆகியோரின் ஆலோசனையின் பேரில் … Read more