அக்னிபாதை: எதிர்ப்பு தெரிவித்து பாரத் பந்த்; 500 ரயில்கள் நிறுத்தம்- போராட்டம்

புதுடெல்லி: அக்னிபாதை திட்டத்துக்கு எதிராக நாடு தழுவிய பாரத் முழு அடைப்பு போராட்டம் காரணமாக சில மாநிலங்களில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சுமார் 500 ரயில்கள் இன்று நிறுத்தப்பட்டுள்ளன. வன்முறையை கட்டுப்படுத்த போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். ராணுவத்தின் முப்படைகளில் 4 ஆண்டு சேவையாற்றும் ‘அக்னிபாதை’ திட்டத்தை மத்திய அரசுஅறிவித்துள்ளது. இந்த திட்டத்துக்குஎதிராக நாடு முழுவதும் போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது. திட்டத்தைக் கைவிடக் கோரி பிஹார் உட்பட பல்வேறு மாநிலங்களில் இளைஞர்கள் போராட்டம் நடத்திவருகின்றனர். ரயில்கள் எரிப்பு உள்ளிட்ட வன்முறைச் சம்பவங்களும் … Read more

12-ம் வகுப்பு தேர்ச்சி விகிதம் | பெரம்பலூர் முதலிடம்; கடைசி இடத்தில் வேலூர்!

சென்னை: 12-ம் வகுப்பு தேர்வில் பெரம்பலூர் மாவட்டம் அதிக தேர்ச்சி சதவீதத்தை பெற்று முதலிடத்தை பிடித்துள்ளது. வேலூர் மாவட்டம் கடைசி இடம் பிடித்துள்ளது. தமிழகத்தில் 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. இதில் பெரம்பலூர் மாவட்டத்தில் 97.95 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதன் மூலம் பெரம்பலூர் மாவட்டம் முதல் இடத்தை பிடித்துள்ளது. 97.27 சதவீதத்துடன் விருதுநகர் 2-வது இடத்தையும், 97.02 சதவீதத்துடன் ராமநாதபுரம் 3வது இடத்தையும் பிடித்துள்ளது. 86.69 சதவீதத்துடன் வேலூர் மாவட்டம் கடைசி … Read more

போராட்டத்தை தூண்டியதாக புகார் – பிஹார் உள்ளிட்ட 3 மாநிலங்களின் பயிற்சி நிறுவனம் கண்காணிப்பு

அக்னிபாதை திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து இளைஞர்கள் நடத்திய போராட்டங்கள் தொடர்பாக பிஹார் உட்பட 3 மாநிலங்களில் உள்ள பயிற்சி நிறுவனங்களை போலீஸார் கண்காணிக்கின்றனர். ராணுவத்துக்கு புதிதாக இளைஞர்களை சேர்க்கும் அக்னிபாதை திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பிஹார் உள்ளிட்ட வடமாநிலங்களிலும் தெலங்கானாவிலும் இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ரயில்களுக்கு தீ வைக்கப்பட்டது. மாணவர்களை போராட தூண்டியதாக பிஹார், ஆந்திரா, தெலங்கானா ஆகிய 3 மாநிலங்களில் ராணுவத்தில் சேர விரும்பும் இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்கும் நிறுவனங்கள் மீது புகார் எழுந்துள்ளதால் பயிற்சி … Read more

அமேசான் காட்டில் கொல்லப்பட்ட டான் பிலிப், ப்ரூனோ – 8 பேர் மீது சந்தேகம்

அமேசான் பழங்குடி மக்களுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வந்த பத்திரிகையாளர் டான் பிலிப், பழங்குடியின நிபுணர் ப்ரூனோ ஃபிரிரா இருவரும் கொல்லப்பட்ட வழக்கில் 8 பேர் மீது பிரேசில் போலீஸார் சந்தேகிக்கின்றனர். இங்கிலாந்து நாட்டை சேர்ந்த பிரபல பத்திரிக்கையாளர் டான் பிலிப் (57). இவர் தொடர்ச்சியாக அமேசான் மழைக் காடுகளின் பாதுகாப்பு குறித்தும், அமேசான் பழங்குடிகள் குறித்தும் எழுதி வந்தார். இது தொடர்பாக புத்தகங்களையும் டான் பிலிப் எழுதியுள்ளார். அமேசான் காடுகளுக்கு எதிராக பிரேசில் அதிபர் ஜெய்ர் … Read more

‘கொதிப்பில் தொண்டர்கள்’ – அதிமுக பொதுக்குழு கூட்டத்தை தள்ளி வைக்குமாறு இபிஎஸ்ஸுக்கு ஓபிஎஸ், வைத்திலிங்கம் கடிதம்

சென்னை: “கட்சியின் நலன் கருதி 23.6.2022 அன்று நடைபெறவுள்ள செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டத்தினை தற்போதைக்கு தள்ளி வைக்கலாம்” என்று அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமிக்கு, கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் ஆகியோர் கடிதம் அனுப்பியுள்ளனர். அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: “ஒன்றிய பெருந்தலைவர்கள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், வாரியத் தலைவர்கள் உள்ளிட்டோர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்துக்கும், எனக்கும் ஒரு … Read more

அக்னி பாதை திட்ட எதிர்ப்பு போராட்டங்களால் ரயில்வே துறைக்கு ரூ.700 கோடி இழப்பு; பிஹாரில் இதுவரை 718 பேர் கைது

புதுடெல்லி: அக்னி பாதை திட்ட எதிர்ப்பு போராட்டங்களால் ரயில்வே துறைக்கு ரூ.700 கோடி இழப்பு ஏற்பட்டிருக்கிறது. பிஹாரில் இதுவரை 718 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். முப்படைகளில் அறிமுகம் செய்யப்பட்டிருக்கும் அக்னி பாதை திட்டத்துக்கு எதிராக வடமாநிலங்களில் தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. பிஹா ரில் ரயில் பெட்டிகள், ரயில் நிபோராட்டம்லையங்கள் சேதப்படுத்தப் பட்டுள்ளன. அந்த மாநிலத்தில் 60 ரயில் பெட்டிகள், 11 என்ஜின்கள் எரிக்கப்பட்டுள்ளன. ஏராளமான ரயில்வே நிலையங்கள் சூறையாடப்பட்டிருக்கிறது. ஒரு ரயில் பெட்டியை தயாரிக்க ரூ.80 … Read more

நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள்: பிரான்ஸ் அதிபர் மக்ரோனுக்கு பின்னடைவு

பாரீஸ்: பிரான்ஸ் நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள், அந்நாட்டு அதிபர் மக்ரோனுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. பிரான்ஸ் அதிபருக்கான தேர்தலில், கடந்த ஏப்ரல் மாதம் சுமார் 58.5% வாக்குகளைப் பெற்று மக்ரோன் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். எனினும், முந்தைய தேர்தல் முடிவுகளுடன் ஒப்பிடுகையில் மக்ரோனுக்கு வாக்கு சதவீதம் குறைந்திருந்தது. மேலும், தீவிர வலதுசாரிகளுக்கு வாக்கு எண்ணிக்கை அதிகரித்து இருந்தது. இந்த நிலையில், பெரும்பான்மையை நிர்ணயிக்கும் நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் மக்ரோனுக்கு இப்போது பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. பிரான்ஸ் நாடாளுமன்றத் தேர்தல் … Read more

அதிமுக பொதுக்குழுக் கூட்டத்திற்கு பாதுகாப்பு அளிக்க கோரி உயர் நீதிமன்றத்தில் மனு

சென்னை: அதிமுக பொதுக்குழுக் கூடத்திற்கு பாதுகாப்பு அளிக்க உத்தரவிடக் கோரி அதிமுக சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில், முன்னாள் அமைச்சரும் , திருவள்ளூர் மத்திய மாவட்ட அதிமுக செயலாளருமான பெஞ்சமின் தாக்கல் செய்துள்ள மனுவில், வரும் 23-ம் தேதி வானகரத்தில் அதிமுக பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தில் முன்னாள் முதல்வர்கள், எம்பி, எம்எல்ஏக்கள் கலந்து கொள்கின்றனர். மேலும், பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்களான 2,500 பேர் இதில் பங்கேற்கவுள்ளனர். எனவே, இந்தக் … Read more

போலி சீன நிறுவனங்களுக்கு உதவியதாக 400 கணக்கர்கள், செயலர்கள் மீது நடவடிக்கை

புதுடெல்லி: 2020-ம் ஆண்டு லடாக் பகுதியில் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையில் எல்லைப் பிரச்சினை தீவிரமடைந்தது. அப்போது ஏற்பட்ட மோதலில் 20 இந்திய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்நிகழ்வை அடுத்து இந்தியாவில் செயல்படும் சீன நிறுவனங்கள் மீதும் சீன தயாரிப்புகள் சார்ந்தும் மத்திய அரசு கடும் கட்டுப்பாடுகளைக் கொண்டுவந்தது. எனினும், சீனாவைச் சேர்ந்தவர்கள் இந்தியாவில் போலி நிறுவனங்கள் தொடங்கும் முயற்சியை மேற்கொண்டுவந்தனர். இவர்களுக்கு இந்தியாவைச் சேர்ந்த பட்டயக் கணக்கர்கள், நிறுவனச் செயலர்கள் உதவி வழங்கிவருவதாக மத்திய நிறுவன விவகாரத் … Read more

10-ம் வகுப்பு முடிவுகள் | தமிழகத்தில் 42,519 பேர் தேர்வு எழுதவில்லை; 2019-ஐ விட 22,000 அதிகம்

சென்னை: 2022-ம் ஆண்டு 10-ம் வகுப்பு தேர்வை 42,000 மாணவர்கள் எழுதுவில்லை என்றும், இது 2019-ம் ஆண்டை விட 22,000 அதிகம் என்றும் தமிழக பள்ளிக் கல்வித் துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன. இதில் தேர்வெழுதிய 9 லட்சத்து 12 ஆயிரத்து 62 பேரில், 8 லட்சத்து 21 ஆயிரத்து 994 பேர் தேர்ச்சி பெற்றனர். குறிப்பாக, 6,016 மாற்றுத் திறன் மாணவர்கள் தேர்வு எழுதினர். இதில், 5,424 பேர் … Read more