நில மோசடி வழக்கு: மகாராஷ்டிர அமைச்சர் வீடுகளில் திடீர் சோதனை

மும்பை: நில மோசடி வழக்கு தொடர்பாக மகாராஷ்டிரா போக்குவரத்து அமைச்சருக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறையினர் நேற்று சோதனை நடத்தினர். மகாராஷ்டிரா மாநில கூட்டணி அரசில் சிவசேனா கட்சியைச் சேர்ந்த அனில் பராப் போக்குவரத்துத்துறை அமைச்சராக உள்ளார். 2017-ம் ஆண்டு அனில் பராப் ரத்தினகிரி மாவட்டத்தை அடுத்த டபோலி பகுதியில் நிலம் ஒன்றை வாங்கி இருக்கிறார். இந்த நிலத்தின் மதிப்பு ரூ. 1 கோடியே 10 லட்சம் ஆகும். எனினும், இந்த நிலத்தை 2019-ம் ஆண்டில்தான் அவர் பதிவு … Read more

தமிழகத்தில் கரோனா பரவல் அதிகரிக்கும் அபாயம்: கண்காணிப்பை தீவிரப்படுத்த உத்தரவு 

சென்னை: தமிழகத்தில் கரோனா தொற்றினை கட்டுப்படுத்த தீவிர கண்காணிப்புப் பணிகளை மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர்களுக்கு மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலர் ராதாகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார். மும்பை, மகாராஷ்டிரா, டெல்லி, கேரளா மாநிலங்களில் கரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால் தமிழகத்தில் கரோனா தொற்றின் தாக்கம் அதிகரிக்க வாய்ப்புள்ளதால், மாவட்டங்களில் தேவையான முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என்று அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் சென்னை மாநகராட்சி ஆணையர்களுக்கு மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலர் ராதாகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார். இது … Read more

பாலியல் தொழிலாளரை துன்புறுத்த கூடாது – போலீஸுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: பாலியல் தொழிலாளர்களை போலீஸார் துன்புறுத்தக்கூடாது. அவர்களை கண்ணியத்துடன் நடத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கரோனா பெருந்தொற்று காலத்தில் பாலியல் தொழிலாளர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர். அவர்களுக்கு ரேஷனில் உணவுப் பொருள்கள், நிதியுதவி வழங்க வேண்டும் என்று கோரி தன்னார்வ தொண்டு நிறுவனம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை நீதிபதிகள் நாகேஸ்வர ராவ், பி.ஆர்.கவாய், ஏ.எஸ்.போபண்ணா அமர்வு விசாரித்து வருகிறது. இவ்வழக்கு அண்மையில் விசாரணைக்கு வந்தது. அப்போது தொண்டு … Read more

தொடரும் சோகம் | அமெரிக்க துப்பாக்கிச் சூட்டில் பலியான ஆசிரியையின் கணவர் மாரடைப்பால் மரணம்

டெக்சாஸ்: அமெரிக்க துப்பாக்கிச் சூட்டில் பலியான ஆசிரியையின் கணவர் மாரடைப்பால் மறைந்தார். அண்மையில் அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள தொடக்கப் பள்ளியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 19 சிறுவர்கள் உட்பட 21 பேர் உயிரிழந்தனர். இந்த கொடூரச் செயலில் ஈடுபட்ட 18 வயதான இளைஞரை போலீஸார் சுட்டுத் தள்ளினர். பள்ளிச் சிறுவர்களை பாதுகாக்கப் போராடிய ஆசிரியை இம்ரா கார்சியாவும் கொல்லப்பட்டார். அவர் 4ஆம் வகுப்பு ஆசிரியராக இருந்து வந்தார். இந்நிலையில் துப்பாக்கிச் சூட்டில் பலியான ஆசிரியை இர்மா … Read more

தமிழகத்தில் குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்களுக்கு மேலும் ஓர் ஆண்டு தடை

சென்னை: குட்கா, பான் மசாலா முதலான போதைப் பொருட்களுக்கான தடையை மேலும் ஓராண்டு நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. குட்கா, பான் மசாலா போன்ற போதைப் பொருட்களை பயன்படுத்துவது காரணமாக புற்று நோய் உள்ளிட்ட பல நோய்கள் ஏற்படுகின்றன. குட்கா, பான் மசாலா, புகையிலை உள்ளிட்ட போதைப் பொருட்களுக்கு இளைஞர்கள் அடிமையாவதை தடுக்கவும், நோய் பாதிப்பைக் குறைக்கவும் இந்தப் பொருட்களின் விற்பனைக்கு கடந்த 2010-ம் ஆண்டு தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டது. இதையும் மீறி இந்தப் … Read more

பேரவையில் அநாகரீகமாக பேச கூடாது – அகிலேஷ் யாதவுக்கு ஆதித்யநாத் அறிவுரை

லக்னோ: உத்தரபிரதேச சட்டப்பேரவையில், முதல்வர் யோகி ஆதித்யநாத் அரசின் 2-வது ஆட்சி காலத்தின் முதல் நிதிநிலை அறிக்கை நேற்று தாக்கல் செய்யப்பட்டது. ரூ.6.15 லட்சம் கோடி மதிப்பிலான நிதிநிலை அறிக்கையை உ.பி நிதியமைச்சர் சுரேஷ் குமார் கண்ணா தாக்கல் செய்தார். பின்னர் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் நேற்று தொடங்கியது. அப்போது பேசிய துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியா, ‘‘அகிலேஷ் யாதவ், தான் முதல்வராக இருந்தபோது மேற்கொள்ளப்பட்ட பணிகளை புகழ்ந்து கொண்டிருக்கிறார். … Read more

1 லட்சம் கோடி ரூபாய் அச்சடிக்கிறது இலங்கை: கடன் கொடுக்க முடியாது என கைவிரித்தது உலக வங்கி

கொழும்பு: கடும் பொருளாதார நெருக்கடிக்கு ஆளாகியுள்ள இலங்கைக்கு கடன் கொடுக்க முடியாது என உலக வங்கி கை விரித்துள்ள நிலையில் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்கக்கூட பணமில்லாமல் அந்நாட்டு அரசு தவிக்கிறது. இதனையடுத்து ஒரு லட்சம் கோடி ரூபாய் பணத்தை அச்சடிக்க இலங்கை அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. கரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு இலங்கை பெரிய அளவில் பொருளாதார பாதிப்பை சந்தித்து வருகிறது. இலங்கைக்கு வந்து கொண்டிருந்த அந்நியச் செலாவணி வரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் நாணயம் … Read more

தாய்மொழிக்கு தனியார் பள்ளிகள் ஊக்கமளிக்க வேண்டும்: முதல்வர் ஸ்டாலின்

சென்னை: தாய்மொழிக்கு ஊக்கமளிக்கக்கூடிய பள்ளிகளாக தனியார் பள்ளிகள் செயல்பட வேண்டும். தாய்மொழிப் பற்றும், தாய்நாட்டு பற்றும் ஒவ்வொரு மனிதருக்கும் மிகமிக முக்கியம் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். சென்னை பள்ளிக்கரணையில் DAV பள்ளிக்குழுமத்தின் சார்பில் புதிய பள்ளியை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (மே 27) திறந்துவைத்தார். பின்னர் முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், “தங்கள் பள்ளி மட்டும் வளர்ந்தால் போதும் என்று நினைக்காமல், அரசுப் பள்ளிகளும் உயர வேண்டும் என்ற எண்ணத்தோடு உதவிக்கரம் நீட்டக்கூடிய இந்த … Read more

சிபிஐ அதிகாரிகள் முன்பு ஆஜரானார் – கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய தடை

புதுடெல்லி: சீனர்களுக்கு விசா கொடுக்க லஞ்சம் பெற்ற வழக்கில் கார்த்தி சிதம்பரத்தைக் கைது செய்ய டெல்லி சிபிஐ நீதிமன்றம் வரும் 30-ம் தேதி வரை தடை விதித்து உத்தரவிட்டது. முன்னதாக, நேற்று காலை சிபிஐ அலுவலகத்தில் ஆஜரான கார்த்தி சிதம்பரத்திடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். காங்கிரஸ் மூத்த தலைவரான ப.சிதம்பரம் கடந்த 2011-ல் மத்திய உள்துறை அமைச்சராக இருந்தபோது, அவரது மகன் கார்த்தி சிதம்பரம், தனது செல்வாக்கைப் பயன்படுத்தி 263 சீனர்களுக்கு சட்டவிரோதமாக விசா வழங்கினார் என்றும் … Read more

மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்ட 2 அடி மட்டுமே இருப்பதால் அவசர கால குழு அமைத்து கண்காணிப்பு: 16 கண் மதகு வழியாக உபரி நீரை வெளியேற்ற வாய்ப்பு

சேலம்: மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்ட இன்னும் 2 அடிமட்டுமே இருப்பதால், பொதுப்பணித்துறை சார்பில் அவசர காலகுழு அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. நீர்வரத்து அதிகரித்தால் 16 கண் மதகு வழியாக உபரி நீரை வெளியேற்றுவதற்கு பொதுப்பணித் துறையினர் தயார் நிலையில் உள்ளனர். நடப்பாண்டு மே மாதத்தில், காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் கோடை மழை சீரான இடைவெளியில் தொடர்ந்து பெய்தது. மேட்டூர் அணையில் ஏற்கெனவே 100 அடிக்கு மேல் நீர் தேங்கியிருந்த நிலையில், கோடை மழையால் நீர்மட்டம் … Read more