நேஷனல் ஹெரால்டு வழக்கு | 4-வது சுற்று விசாரணை; ராகுல் இன்று மீண்டும் ஆஜர்

புதுடெல்லி: நேஷனல் ஹெரால்டு வழக்கில் அமலாக்கத் துறை விசாரணைக்காக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி இன்று (ஜூன் 20) மீண்டும் ஆஜராகிறர். நேஷனல் ஹெரால்டு பத்திரிகையின் பங்குகள் யங் இந்தியா நிறுவனத்துக்கு கைமாறியதில் முறைகேடு நடந்ததாக 2012-ம் ஆண்டு பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியசாமி வழக்குத் தொடர்ந்தார். இந்த விவகாரத்தில் சட்ட விரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக விசாரணை நடத்திவரும் அமலாக்கத்துறை, காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி மற்றும் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி ஆகியோருக்கு சம்மன் … Read more

தமிழகத்தில் 4 நாட்களுக்கு மிதமான மழை

சென்னை: தமிழகப் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக ஜூன் 20, 21-ம் தேதிகளில் (இன்றும், நாளையும்) தமிழகம், புதுச்சேரியில் சில இடங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 22, 23-ம் தேதிகளில் வட தமிழகம், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தேனி, திண்டுக்கல் மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். … Read more

மக்கள் யோகா பயிற்சி செய்ய வேண்டும்: ட்விட்டரில் வீடியோ வெளியிட்டு பிரதமர் மோடி வலியுறுத்தல்

புதுடெல்லி: நோய்கள் மற்றும் வாழ்க்கை முறை தொடர்பான உடல்நல பாதிப்புகள் அதிகரித்து வருவதால், இன்றைய காலகட்டத்தில் மக்கள் யோகா பயிற்சி செய்வது மிக முக்கியம் என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். சர்வதேச யோகா தினம் நாளை கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு மைசூர் அரண்மனை மைதானத்தில் நடைபெறும் யோகா நிகழ்ச்சிக்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமை தாங்குகிறார் என ஆயுஷ் அமைச்சர் சர்வானந்த சோனோவால் கூறியுள்ளார். பிரதமருடன் கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை, எம்.பி.க் கள், கர்நாடகா … Read more

முதல்வர் ஸ்டாலினுக்கு காய்ச்சல்: 2 நாட்களுக்கு நிகழ்ச்சிகள் தள்ளிவைப்பு

சென்னை: முதல்வர் ஸ்டாலினுக்கு லேசான காய்ச்சல் இருப்பதால், 2 நாட்களுக்கு அவர் பங்கேற்க இருந்தஅரசு நிகழ்ச்சிகள் தள்ளிவைக்கப்பட்டுள்ளன. சென்னையிலும், வெளியூர்களிலும் அரசு மற்றும் திமுக சார்பில் நடக்கும் பல்வேறு நிகழ்ச்சிகளிலும் முதல்வர் ஸ்டாலின் தொடர்ந்து பங்கேற்று வருகிறார். முன்னாள் தலைமை வழக்கறிஞர் மறைந்த வி.பி.ராமன் வாழ்க்கை வரலாற்று நூல் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடந்தது. இது உள்ளிட்ட சில நிகழ்ச்சிகளிலும் முதல்வர் பங்கேற்க இருந்தார். இந்நிலையில், நேற்று காலை அவருக்கு காய்ச்சல் அறிகுறி தென்பட்டது. இதையடுத்து, … Read more

பணி நிமித்தமாக விமானத்தில் பயணிக்க குறைவான கட்டணத்தை தேர்ந்தெடுங்கள்: மத்திய அரசு ஊழியர்களுக்கு நிதியமைச்சகம் உத்தரவு

புதுடெல்லி: மத்திய அரசு ஊழியர்கள் பணி நிமித்தமாக விமானத்தில் பயணிக்க வேண்டுமானால், குறைவான கட்டணத்தை தேர்ந்தெடுக்க வேண்டும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வலியுறுத்தி உள்ளார். அரசு அதிகாரிகள் அரசுமுறை பயணமாக விமானத்தில் பயணிக்க வேண்டுமானால், பால்மர் லாரிஅன்ட் கோ, அசோக் டிராவல் அன்ட் டூர்ஸ் மற்றும் ஐஆர்சிடிசி ஆகிய 3 பயண ஏற்பாட்டாளர்கள் மூலம் மட்டுமே டிக்கெட் வாங்க வேண்டும். இதற்கான தொகையை சம்பந்தப்பட்ட துறைகள் செலுத்தும். இது தொடர்பான விதிமுறையில் மத்திய நிதியமைச்சகத்தின் செலவின … Read more

பிரதமர் மோடியின் வீட்டில் வளர்ந்த அப்பாஸ் ஆஸ்திரேலியாவில் உள்ளார்

புதுடெல்லி: பிரதமர் மோடியின் வீட்டில் வளர்ந்தஅவரது குழந்தை பருவ நண்பர்அப்பாஸ், தற்போது ஆஸ்திரேலியாவில் இருப்பது தெரியவந் துள்ளது. தனது தாயின் நூறாவது பிறந்ததினத்தை முன்னிட்டு, வலைப்பதிவுஒன்றில் தனது குழந்தை பருவ நினைவுகளை பிரதமர் மோடி பகிர்ந்தார். அதில் குஜராத்தின் வத்நகரில் மண்ணால் கட்டப்பட்டசிறிய ஓட்டு வீட்டில் மிக ஏழ்மையான நிலையில் வாழ்ந்ததாக தெரிவித்திருந்தார். அந்த சூழ்நிலையிலும், அருகில் உள்ள கிராமத்தில்வசித்த தனது தந்தையின் நண்பர்அகால மரணம் அடைந்தபோது, அவரது மகன் அப்பாஸ் என்பவரைதனது வீட்டுக்கு அழைத்து வந்துபடிக்க … Read more

பொறியியல் சேர்க்கை கலந்தாய்வுக்கு மாணவர்கள் இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

சென்னை: இளநிலை பொறியியல் படிப்புகளில் மாணவர் சேர்க்கை கலந்தாய்வுக்கான விண்ணப்ப பதிவுஇன்று (ஜூன் 20) முதல் தொடங்குகிறது. தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் 470-க்கும்மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் இளநிலை படிப்புகளில் உள்ள சுமார் 1.50 லட்சம் இடங்கள் ஆண்டுதோறும் பொது கலந்தாய்வு மூலம் ஒற்றைச்சாளர முறையில் நிரப்பப்படுகின்றன. இந்த ஆண்டு பொறியியல் கலந்தாய்வு தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் மூலம் ஆக.16 முதல்அக்.14-ம் தேதி வரை நடத்தப்பட உள்ளது. இதற்கான விண்ணப்ப பதிவுஇன்று (ஜூன் … Read more

மத்திய அரசின் நல்ல திட்டங்களை அரசியலாக்குவது துரதிஷ்டவசமானது: பிரதமர் மோடி கருத்து

புது டெல்லி: மத்திய அரசின் நல்ல திட்டங்களை அரசியலாக்குவது துரதிஷ்டவசமானது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். முப்படைகளில் புதிதாக அறிமுகம் செய்யப்பட்டிருக்கும் அக்னி பாதை திட்டத்துக்கு எதிராகபல்வேறு மாநிலங்களில் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த போராட்டங்களின் பின்னணியில் அரசியல் கட்சிகள் இருப்பதாக பாஜக குற்றம்சாட்டி வருகிறது. இந்நிலையில், மத்திய அரசு சார்பில் டெல்லியில் ரூ.920 கோடியில் அமைக்கப்பட்டுள்ள பிரகதி மைதான ஒருங்கிணைந்த போக்குவரத்து வழித்தடத்தை பிரதமர் நரேந்திர மோடி நேற்று தொடங்கி வைத்தார். அப்போது அக்னி … Read more

‘மகுடம் மறுத்த மன்னன்’ வழக்கறிஞர் வி.பி.ராமன் வாழ்க்கை வரலாற்று நூல் வெளியீடு: உச்ச நீதிமன்ற நீதிபதி ராமசுப்பிரமணியன், அமைச்சர் துரைமுருகன் வெளியிட்டனர்

சென்னை: தமிழக அரசின் முன்னாள் தலைமை வழக்கறிஞர் மறைந்த வி.பி.ராமனின் வாழ்க்கை வரலாற்று நூல் ‘மகுடம் மறுத்த மன்னன்’ நேற்று வெளியிடப்பட்டது. தமிழக முன்னாள் தலைமை வழக்கறிஞர் மறைந்த வி.பி.ராமனின் வாழ்க்கை வரலாறு குறித்து,‘மகுடம் மறுத்த மன்னன்’ என்ற தலைப்பில், அவரது இளைய மகன் பி.எஸ்.ராமன் எழுதிய நூல், தமிழ், ஆங்கிலத்தில் நேற்றுவெளியிடப்பட்டது. சென்னை மியூசிக் அகாடமியில் நடைபெற்றநூல் வெளியீட்டு விழாவில், சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்த முதல்வர் மு.க.ஸ்டாலின் உடல்நலக் குறைவு காரணமாக பங்கேற்கவில்லை. அவருக்கு பதிலாக, … Read more

போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு ராணுவத்தில் இடமில்லை | அக்னி பாதை திட்டத்தை வாபஸ் பெறமாட்டோம்: மத்திய அரசு

புதுடெல்லி: ‘அக்னி பாதை’ திட்டத்துக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு ராணுவத்தில் இடமில்லை என்றும், திட்டத்தை வாபஸ் பெறமாட்டோம் என்றும் மத்திய பாதுகாப்புத்துறை அறிவித்துள்ளது. ராணுவத்தின் முப்படைகளில் 4 ஆண்டு சேவையாற்றும் ‘அக்னிபாதை’ திட்டத்தை மத்திய அரசுஅறிவித்துள்ளது. இந்த திட்டத்துக்குஎதிராக நாடு முழுவதும் போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது. திட்டத்தைக் கைவிடக் கோரி பிஹார் உட்பட பல்வேறு மாநிலங்களில் இளைஞர்கள் போராட்டம் நடத்திவருகின்றனர். ரயில்கள் எரிப்பு உள்ளிட்ட வன்முறைச் சம்பவங்களும் நடந்துள்ளன. இந்நிலையில், ராணுவ விவகாரங்கள் துறை கூடுதல் செயலாளர் … Read more