சமரசத்தை ஏற்காத ஓபிஎஸ் | ஒற்றைத் தலைமையை விடாத இபிஎஸ்; 23-ம் தேதி அதிமுக பொதுக்குழு நடக்குமா?

சென்னை: அதிமுகவில் ஒற்றைத் தலைமையை கொண்டுவர வேண்டும் என்பதில் பழனிசாமி உறுதியாக உள்ளார். அதேநேரத்தில் மூத்த தலைவர்களின் சமரசத்தை ஏற்க ஓ,பன்னீர்செல்வம் மறுத்துவிட்டார். இந்நிலையில், திட்டமிட்டபடி வரும் 23-ம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டம் நடக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் 6-வதுநாளாக நேற்றும் ஓபிஎஸ், இபிஎஸ் ஆகியோர் தங்கள் ஆதரவாளர்களுடன் தனித்தனியே தீவிர ஆலோசனையில் ஈடுபட்டனர். கட்சியின் மூத்த தலைவர்களான தம்பிதுரை, கே.ஏ.செங்கோட்டையன், செல்லூர் ராஜூ … Read more

பிரகதி மைதான சுரங்கப் பாதை: குப்பையை அகற்றிய பிரதமர் மோடி

புது டெல்லி: பிரகதி மைதான சுரங்கப் பாதையை திறந்து வைத்த பிரதமர் நரேந்திர மோடி, அதில் நடந்து சென்று ஆய்வு செய்தார். சுரங்கப் பாதையின் ஓரத்தில், தண்ணீர் பாட்டில் கிடந்தது. பிரதமர் கீழே குனிந்து அந்த பாட்டிலை எடுத்தார். ஆங்காங்கே சில குப்பைகளும் கிடந்தன. அவற்றையும் கையில் அள்ளினார். பின்னர் அனைத்து குப்பைகளையும் அவரே குப்பைத் தொட்டியில் போட்டார். தூய்மை இந்தியா திட்டத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி முன்னுரிமை அளித்து வருகிறார். பல்வேறு நிகழ்ச்சிகளில் அவரே தூய்மைப் … Read more

கரோனா அறிகுறி உள்ளவர்களின் விவரங்களை அளிக்க வேண்டும்: தனியார் மையங்களுக்கு சென்னை மாநகராட்சி ஆணையர் உத்தரவு

சென்னை: சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள தனியார் மருத்துவமனைகள், சிகிச்சை மையங்கள் மற்றும் பொது மருத்துவம் செய்யும் மருத்துவர்கள் கரோனா தொற்று அறிகுறி உள்ள நபர்கள் குறித்த விவரங்களையும், வீடுகளில் தனிமைபடுத்திகொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ள நபர்கள் குறித்த விவரங்களையும் மாநகராட்சிக்கு தெரிவிக்க வேண்டும் என ஆணையர் கன்தீப் சிங் பேடி உத்தரவிட்டுள்ளார். சென்னையில் கடந்த ஒரு சில நாட்களாக கரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. குறிப்பாக கடந்த ஒரு வாரத்தில் 94 என்ற நிலையில் இருந்த கோவிட் … Read more

கடினமான நேரங்களில்தான் ஒருவரின் உண்மையான வலிமை தெரிய வரும்: ராகுலுக்கு முதல்வர் பிறந்த நாள் வாழ்த்து

சென்னை: கடினமான நேரங்களில்தான் ஒருவரின் உண்மையான வலிமையும் உறுதியும் தெரிய வரும் என்று முதல்வர் ஸ்டாலின், ராகுல் காந்திக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி இன்று தனது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அக்னி பாதை திட்டத்தை எதிர்த்து இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் தனது பிறந்த நாளை அமைதியாக கொண்டாடுமாறு காங்கிரஸாருக்கு ராகுல் வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்த நிலையில் பல்வேறு தலைவர்கள் ராகுல் காந்திக்கு பிற்ந்த நாள் வாழ்த்து தெரிவித்து … Read more

அக்னிபாத்| அரசுக்கு ஆதரவாக மாநில ஆளுநர் கருத்துத் தெரிவிப்பது ஏற்புடையதல்ல: ப.சிதம்பரம் கருத்து

சென்னை: அக்னிபாத் விவகாரத்தில் அரசுக்கு ஆதரவாக மாநில ஆளுநர் கருத்துத் தெரிவிப்பது ஏற்புடையதல் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார். அக்னிபாத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வட மாநிலங்கள் இளைஞர்கள் பெரிய அளவில் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி “இந்திய ராணுவத்தில் இளைஞர் சமுதாயத்திற்கு புரட்சிகரமான மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய அக்னிபாத் திட்டத்தை அறிமுகப்படுத்தியதற்காக தொலைநோக்கு பார்வையுடன் செயல்படும் தேசிய தலைமைக்கு நன்றி” என்று அக்னிபாத் திட்டத்தில் ஆதரவாக கருத்து தெரிவித்து … Read more

சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் மழை | சமூக வலைதளங்களில் படங்களை பகிர்ந்த நெட்டிசன்கள்

சென்னை: தமிழகத்தின் தலைநகர் சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் மழை பொழிந்து வருகிறது. அது குறித்த தகவலை ட்விட்டர் தளத்தில் பகிர்ந்து ட்ரெண்ட் செய்துள்ளனர் நெட்டிசன்கள். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக அடுத்து வரும் நாட்களுக்கு மழை பொழிவு இருக்கலாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இதன் காரணமாக 19-ஆம் தேதி தமிழகம் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான … Read more

அறிவு, ஆற்றல், அன்பு, பண்பு வளத்தைத் தந்ததால் அவர் தந்தையர்! முதல்வர் மு.க.ஸ்டாலின் 

சென்னை: “அறிவு, ஆற்றல், அன்பு, பண்பு வளத்தைத் தந்ததால் அவர் தந்தையர்” என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது தந்தையர் தின செய்தியில் கூறியுள்ளார். தந்தையர் தினம் இன்று கொண்டாடப்படுவதை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், “அப்பாக்களின் தினம் இன்று! உழைத்து, தன்னை உருக்கி மக்களை அவையத்து முந்தியிருக்கச் செய்து, அறிவை – ஆற்றலை -அன்பை – பண்பை – வளத்தைத் தந்ததால் அவர் தந்தையர்! தந்தையர் தினத்தில் எந்தையை நினைத்து வணங்குகிறேன்! எல்லார் தந்தையரையும் … Read more

மேகதாது விவகாரம்; காவேரி மேலாண்மை ஆணையத்‌ தலைவருக்கு அதிமுக கண்டனம்

சென்னை: மேகதாது குறித்து காவேரி மேலாண்மை ஆணையக்‌ குழுக்‌ கூட்டத்தில்‌ விவாதிக்கப்படும்‌ என்று காவேரி மேலாண்மை ஆணையத்‌ தலைவர்‌ கூறியதற்கு அதிமுக கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் கூறும்போது, “ 23-06-2022 அன்று நடைபெறவுள்ள காவேரி மேலாண்மை வாரியக்‌ கூட்டத்தில்‌ மேகதாது அணை கட்டுதல்‌ குறித்து விவாதிப்பதை தடுப்பதற்குத்‌ தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி 16-06-2022 அன்று நான்‌ வேண்டுகோள்‌ விடுத்த நிலையில்‌, ஒட்டுமொத்த தமிழகமே எதிர்ப்பு தெரிவித்து வருகின்ற நிலையில்‌, … Read more

தனியார் ஆலை நச்சுப் புகையால் விவசாயம் பாதிப்பு: கொண்டம்பட்டி மக்கள் குற்றச்சாட்டு

உடுமலை அருகே கொண்டம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட கிராமத்தில், கடந்தசில ஆண்டுகளாக தனியாருக்கு சொந்தமான அலுமினிய பொருட்கள்உற்பத்தி ஆலை இயங்கி வருகிறது.இந்த ஆலையை சுற்றிலும் நூற்றுக்கணக்கான ஏக்கர் வேளாண் நிலங்கள் உள்ளன. அதில் தக்காளி, மிளகாய்,வெங்காயம், அவரை, கொள்ளு உள்ளிட்ட காய்கறி பயிர்களும், தென்னை,மக்காச்சோளமும் சாகுபடி செய்யப்பட்டுள்ளன. தனியார் ஆலையில்இருந்து வெளியேறும் நச்சுப் புகையால், சுற்று வட்டாரத்திலுள்ள வேளாண் பயிர் விளைச்சல் பாதிக்கப்படுவதாக அப்பகுதி விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர். இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட விவசாயி பொன்னுசாமி கூறும்போது, “கேரளாவை பூர்வீகமாக கொண்ட தனியார் … Read more

ஒரே நாளில் இரு தேர்வுகள்; ஒத்திவைக்க ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: அண்ணாமலை பல்கலைக்கழகத் தேர்வுகளை ஒத்திவைக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தி, “ அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பட்டமேற்படிப்புக்கான பருவத் தேர்வுகள் வரும் 22 முதல் 25-ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தின் காவல் உதவி ஆய்வாளர் தேர்வு 25-ஆம் தேதி நடைபெறும் நிலையில், அதே தேதியில் பருவத் தேர்வுகளும் நடத்தப்படுகின்றன. பட்டமேற்படிப்பு பயிலும் பல பட்டதாரிகள் உதவி காவல் … Read more