வானிலை முன்னறிவிப்பு: தமிழகத்தில் 17 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு 

சென்னை: தமிழகத்தில் 17 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகப் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், கரூர், திருச்சி, பெரம்பலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், வேலூர் ஆகிய 17 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 20 மற்றும் 21ம் … Read more

கடத்தப்பட்ட தெய்வ விக்கிரகங்களை மீட்க உலக சிவனடியார்கள் அமைப்பு பாடுபடும்: பொன் மாணிக்கவேல் பேச்சு

தருமபுரி: கடத்தப்பட்ட தெய்வ விக்கிரகங்களை மீட்பதற்கு உலக சிவனடியார்கள் அமைப்பு தொடர்ந்து பாடுபடும் என தமிழக காவல்துறையின் சிலை கடத்தல் கடுப்பு பிரிவு முன்னாள் தலைவரும் உலக சிவனடியார்கள் அமைப்பின் தலைமை ஆலோசகருமான பொன் மாணிக்கவேல் தருமபுரியில் பேசினார். தருமபுரியில் உலக சிவனடியார்கள் அமைப்பு சார்பில் முப்பெரும் விழா இன்று (ஞாயிறு) நடந்தது. இந்த விழாவில் தலைமை ஏற்று பேசிய பொன் மாணிக்கவேல், ”உலகத்தில் உள்ள அனைத்து சிவனடியார்களையும் ஒரு குடையின் கீழ் கொண்டு வர வேண்டும், … Read more

ராணுவத்தில் ஒப்பந்த அடிப்படையில் வீரர்கள் நியமிக்கும் முடிவு நாட்டிற்கே ஆபத்து: வேல்முருகன் 

சென்னை: ராணுவத்தில் ஒப்பந்த அடிப்படையில் வீரர்கள் நியமிக்கும் முடிவு நாட்டிற்கே ஆபத்து என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் பண்ருட்டி தி. வேல்முருகன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது: ”நான்காண்டு ஒப்பந்த அடிப்படையில் ராணுவத்திற்கு ஆளெடுக்கும் அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக இந்திய இளைஞர்களின் போராட்டம் நாளுக்குநாள் கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருக்கிறது. பீகாரில் தொடங்கிய போராட்டம், அரியானா, பஞ்சாப், தெலுங்கானா, உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், இமாசல பிரதேசம், ராஜஸ்தான், மேற்குவங்கம், ஜம்மு – … Read more

'ஹெல்த் மிக்ஸ்' குறித்து தவறான தகவல்; நானும் ரவுடி, நானும் ரவுடி என அண்ணாமலை காட்டி வருகிறார்: பால்வளத்துறை அமைச்சர் நாசர்

ஹெல்த் மிக்ஸ் தொடர்பாக தவறான குற்றாட்டுகளை முன்வைத்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மீது வழக்கு தொடரப்படும் என பால்வளத்துறை அமைச்சர் மு.நாசர் தெரிவித்தார். கோவையில் மலுமிச்சம்பட்டி, மதுக்கரை ஆகிய இடங்களில் உள்ள பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்களில் பால் கொள்முதல் குறித்து அமைச்சர் நாசர் நேற்று ஆய்வு நடத்தினார். தொடர்ந்து, கோவை ஆர்.எஸ்.புரத்தில் உயர்தர ஆவின் பாலகத்தை திறந்துவைத்த பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: கடந்த ஆட்சியின்போது ஆவின் நிறுவன காலிப்பணியிடங்களை முறைகேடாக நிரப்ப முயற்சி … Read more

பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க கடுமையான நடவடிக்கை தேவை: அன்புமணி வலியுறுத்தல்

சென்னை: பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க கடுமையான நடவடிக்கை தேவை என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் கடந்த ஆண்டின் முதல் நான்கு மாதங்களுடன் ஒப்பிடும் போது, நடப்பாண்டின் முதல் நான்கு மாதங்களில் அதிகரித்திருப்பதாக காவல்துறை புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. பெண்களின் பாதுகாப்பு குறித்த குரல்கள் தொடர்ந்து வலுத்து வரும் நிலையில், பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாவதும், குற்றங்கள் பெருகுவதும் கவலையளிக்கிறது. தமிழக … Read more

மேகதாது அணை விவகாரம் | தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் ஜூன் 22-ல் கண்டன ஆர்ப்பாட்டம்

சென்னை: மேகதாது அணை கட்டப்படுவதற்கு எதிராக காவிரி டெல்டா விவசாயிகள் ஜூன் 22 அன்று கருப்புக் கொடி கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் அழைப்பு விடுத்துள்ளது. இதுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் பெ.சண்முகம், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் (பாலன் இல்லம்) பி.எஸ்.மாசிலாமணி, தமிழ்மாநில விவசாயத் தொழிலாளர்கள் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் (பாலன் இல்லம்) என்.பெரியசாமி, அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் வி.அமிர்தலிங்கம் ஆகியோர் விடுத்துள்ள கூட்டறிக்கையில் … Read more

அக்னிபாதை திட்டம் திரும்பப் பெறப்படாது: பாதுகாப்பு அமைச்சகம் திட்டவட்டம்

புதுடெல்லி: அக்னிபாதை திட்டம் திரும்பப் பெறப்பட மாட்டாது என்று பாதுகாப்பு அமைச்சகம் தெளிவுபடுத்தியுள்ளது. அக்னிபாதை திட்டத்தை எதிர்த்து வடமாநிலங்களில் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்தசூழலில், மத்திய உள்துறை அமைச்சகம் ட்விட்டரில் நேற்று வெளியிட்ட பதிவுகளில், “அக்னி பாதை திட்டத்தில் முப்படைகளில் 4 ஆண்டுகள் பணியாற்றிய வீரர்களுக்கு மத்திய ஆயுத காவல் படை (சிஏபிஎப்), அசாம் ரைபிள்ஸ் படைகளில் சேர 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படும். மேலும், இந்த படைகளில் சேருவதற்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள வயது வரம்பில், அக்னி பாதை … Read more

சைக்கிளிலிருந்து தவறி விழுந்த ஜோ பைடன்

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் சைக்கிளிலிருந்து தடுமாறி விழுந்த வீடியோ வெளியாகி உள்ளது. இதில் ஜோ பைடனுக்கு எந்தக் காயமும் ஏற்படவில்லை. இருகுறித்து அமெரிக்க ஊடகங்கள், ”அமெரிக்க அதிபர் ஜோ பைடன் சனிக்கிழமை காலை டெலாவேர் மாகாணத்திலுள்ள உள்ள தனது கடற்கரை வீட்டிற்கு சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது தடுமாறி கீழே விழுந்தார். எனினும் உடனடியாக நான் நலமாக இருக்கிறேன் என்று அவர் எழுந்து கொண்டார். இதில் ஜோ பைடனுக்கு எந்தக் காயமும் ஏற்படவில்லை. ” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. … Read more

மேயர் Vs துணை மேயர் – கும்பகோணம் மாநகராட்சியில் வெடித்தது அதிகார மோதல்

கும்பகோணம் மாநகராட்சியில் மேயர், துணை மேயர் இடையே அதிகார மோதல் வெடித்துள்ளது. என்னை சீண்டிப் பார்க்கிறார்கள் என மேயரும், மேயரைப் பற்றி என்னாலும் பல விஷயங்களை பேச முடியும் என துணை மேயரும் தெரிவித்துள்ளனர். கும்பகோணம் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட பிறகு, நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் கடந்த பிப்ரவரியில் நடைபெற்றது. இதில், கும்பகோணம் மாநகராட்சியில் மொத்தமுள்ள 48 வார்டுகளில், திமுக கூட்டணியில் உள்ள திமுக- 38, காங்கிரஸ்- 2, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்- 1, இந்திய யூனியன் … Read more

வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண் இணைப்பு – அறிவிப்பு வெளியிடப்பட்டதாக மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜூ தகவல்

புதுடெல்லி: வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாக மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜூ தெரிவித்துள்ளார். தேர்தல் விதிமுறைகள் திருத்த சட்டம் 2021, நாடாளுமன்றத்தில் கடந்தாண்டு நிறைவேற்றப்பட்டது. அதன்படி, வாக்காளர் பட்டியலை ஆதார் எண்ணுடன் இணைப்பது, பாதுகாப்பு படையினருக்கான தேர்தல் சட்டத்தை பாலின சமத்துவமாக மாற்றுவது, 18 வயது பூர்த்தியடைந்தோர், ஆண்டுக்கு 4 முறை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பது போன்றவற்றை அனுமதிக்கும் விதிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக, தேர்தல் ஆணையத்துடன் … Read more