சிறுவாணி அணை நீர் சேமிப்பு: கேரளா முதல்வர் பினராயி விஜயனுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்

சென்னை: சிறுவாணி அணையின் நீர் சேமிப்பை அணையின் முழு கொள்ளவுக்கு உயர்த்தி பராமரிக்க வேண்டும் என்றும் கேரளா முதல்வர் பினராயி விஜயனுக்கு முதல்வர் கடிதம் எழுதியுள்ளார். சிறுவாணி குடிநீர்த் திட்டத்தின் மூலம் கோயம்புத்தூர் மாநகராட்சி மற்றும் இத்திட்டப் பயனாளிகளுக்கு தங்குதடையின்றி குடிநீர் வழங்கிட சிறுவாணி அணையின் நீர் சேமிப்பை அணையின் முழு கொள்ளவுக்கு உயர்த்தி பராமரிக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிடக் கோரி, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு ஏற்கனவே கடிதம் எழுதியிருந்தார். இந்நிலையில் … Read more

தெலங்கானா அக்னிபாதை கலவரம்: வாட்ஸ் குரூப் மூலம் கலவரத்தை தூண்டிய ராணுவ தேர்வு பயிற்சி அகடமி உரிமையாளர் கைது

ஹைதராபாத்: அக்னிபாதை ஆள்சேர்ப்பு திட்டம் தொடர்பாக செகந்திராபாத் ரயில் நிலையத்தில் நடந்த பெரும் வன்முறையில், வாட்ஸ் ஆப் குரூப் உருவாக்கி அதன் மூலம் தகவல்களை பரிமாறியதும் இதற்கு மூளையாக இருந்து செயல்பட்ட நபர் கைது செய்யப்பட்டுள்ளார். முன்னாள் ராணுவ வீரரான இவர் ராணுவ தேர்வுக்கு பயிற்சி தரும் அகடமி நடத்தி வருகிறார். ராணுவத்தில் 4 ஆண்டுகள் பணியாற்றும், மத்திய அரசின் அக்னி பாதை திட்டத்திற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. அக்னி பாதை திட்டத்துக்கு … Read more

அமெரிக்காவில் 6 மாத குழந்தைக்கு கரோனா தடுப்பூசி: ஜோ பைடன் அனுமதி

அமெரிக்காவில் 6 மாத குழந்தைக்கு கரோனா தடுப்பூசி செலுத்த அந்நாட்டு அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. ஃபைஸர், மாடர்னா கரோனா தடுப்பூசிகளை ஐந்து வயது, அதற்கு கீழுள்ள குழந்தைகளுக்கு செலுத்த ( 6 மாத குழந்தைக்கு செலுத்தலாம்) அமெரிக்க உணவு பாதுகாப்புத் துறை ஓப்புதழ் வழங்கியுள்ளது. அமெரிக்கா நோய் தடுப்புத் துறை தலைவர் ரோசெல் வாலென்ஸ்கி கூறும்போது, “லட்சக்கணக்கான பெற்றோர் தங்கள் குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்த ஆர்வமாக உள்ளது எங்களுக்கு தெரியும். அறிவிப்பு வெளியாகி உள்ளது. பெற்றோர்கள் அவர்களின் … Read more

ஆலைகளில் வெளியேறும் கார்பன் டை ஆக்சைடை வெப்பநிலை மாறாமல் உறிஞ்சும் தொழில்நுட்பம்: சிக்ரி விஞ்ஞானிகள் சாதனை

காரைக்குடி மத்திய மின்வேதியியல் ஆய்வக (சிக்ரி) இயக்குநர் கலைச்செல்வி தலைமையில் விஞ்ஞானிகள் ரவிபாபு, ஷ்ரவந்தி, வாசுதேவன் ஆகியோர் அடங்கிய குழுவினர் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கார்பன் டை ஆக்சைடை, அதே வெப்ப நிலை யில் உறிஞ்சும் தொழில்நுட்பத்தை கண்டுபிடித்துள்ளனர். இந்தத் தொழில்நுட்பம் கோவையைச் சேர்ந்த சுமிட்ஸ் ஹைக்ரானிக்ஸ் என்ற தனியார் நிறுவனத்திடம் வழங்கப்பட்டது. இதுகுறித்து சிக்ரி இயக்குநர் கலைச்செல்வி கூறியதாவது: சிக்ரி நிறுவனத்தின் 75-வது ஆண்டை முன்னிட்டு, 19 கண்டுபிடிப்புகளை தேர்வு செய்துள்ளோம். இதில் முதல் வெற்றியாக … Read more

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் புதுமண்டபத்தில் நூலகம் இருந்ததற்கான கல்வெட்டு கண்டெடுப்பு

தென்தமிழகத்தின் முதல் அருங் காட்சியகமும், முதல் புத்தகக் கடையும் உருவான இடம் மதுரை புதுமண்டபம்தான் என்பதற் கான கல்வெட்டு கண்டெடுக்கப் பட்டுள்ளதாக மதுரை எம்.பி சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: மதுரையில் கி.பி.1800-களின் பிற்பகுதியில் அருங்காட்சியகம் உருவாக்கப்பட்டது. இந்த அருங்காட்சியகத்தின் தொடக்க விழா நிகழ்வினை ‘காவல் கோட்டம்’ நாவலில் எழுதி உள்ளேன். பழங் காலத்தில் ஓலைகளில் தயாரான ஏடுகள் புத்தகங்களாக மாறி, அந்த புத்தகங்களை விற்க ‘புத்தகக் கடைகள்’ முதன்முதலில் உருவான இடம் மதுரை … Read more

பறவை மோதியதால் நடுவானில் தீ பிடித்த விமானம்: பயணிகள் பத்திரமாக மீட்பு

பாட்னா: பாட்னாவில் இருந்து டெல்லி சென்ற விமானத்தில் இன்ஜினில் கோளாறு ஏற்பட்டு நடுவானில் தீ பிடித்ததால் அவசரமாக தரையிறக்கப்பட்டது. விமானம் மீது பறவை மோதியதால் இந்த விபத்து ஏற்பட்டதாக தெரிய வந்துள்ளது. ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் ஒன்று, 185 பேருடன் பிஹார் தலைநகர் பாட்னாவில் இருந்து டெல்லிக்கு கிளம்பியது. சிறிது நேரத்தில் இடது பக்க இன்ஜினில் தீ பிடித்தது. இதனையடுத்து அந்த விமானம் அவசரமாக பாட்னாவில் தரையிறக்கப்பட்டது. பயணிகள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். இதன் மூலம் பெரும் … Read more

27 நாடுகள் பயணித்து ஜூன் 21-ல் தமிழகம் திரும்புகிறார் சத்குரு: கோவையில் வரவேற்பு

கோவை: 27 நாடுகளில் 27,200 கி.மீ பயணித்து ஜூன் 21-ல் தமிழகம் திரும்பும் சத்குருவுக்கு பலத்த வரவேற்பு விழாக்ககளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கோவை சூலூர் விமானப்படைத்தள நிகழ்ச்சியில் ராஜ்நாத் சிங் பங்கேற்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மண் வளப் பாதுகாப்பிற்காக தனது 65-வது வயதில் தனி ஆளாக 27 நாடுகளுக்கு சவாலான மோட்டார் சைக்கிள் பயணத்தை மேற்கொண்டுள்ள சத்குரு ஜூன் 21-ம் தேதி தாய் தமிழ்நாட்டிற்கு திரும்ப உள்ளார். இதுவரை சுமார் 27,200 கி.மீ பயணித்துள்ள அவர் … Read more

18 நாளில் ரூ.31,430 கோடி வெளியேறியது: கலக்கத்தில் பங்குச்சந்தை; அச்சத்தில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்

மும்பை: அமெரிக்க பெடரல் வங்கி வட்டி விகிதத்தை உயர்த்தியதன் எதிரொலியாக வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்திய பங்குச் சந்தையில் இருந்து பங்குகளை விற்பனை செய்து இந்த மாதத்தில் இதுவரை ரூ.31,430 கோடியை எடுத்துச் சென்றுள்ளனர். கரோனா பரவலால் ஏற்பட்ட பெரும் பாதிப்புக்குப் பிறகு பல்வேறு நாடுகளும் தொழில்துறைக்கு ஊக்கம் தரும் அறிவிப்புகளை வெளியிட்டு வந்தன. இதன் எதிரொலியாக இந்திய பங்கு சந்தைகளும் கடந்த 10 மாதங்களாக கடும் ஏற்றத்தில் இருந்தன. மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் ஒரு கட்டத்தில் 60 … Read more

முதல்வர் ஸ்டாலினுக்கு காய்ச்சல் : இரண்டு நாள் நிகழ்ச்சிகள் ஒத்திவைப்பு

சென்னை: காய்ச்சல் காரணமாக முதல்வரின் 2 நாள் நிகழ்ச்சிகள் ஒத்தி வைக்கப்படுவதாக தமிழக அரசு வெயியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. தமிழக முதல்வருக்கு லேசான காய்ச்சல் இருப்பால் முதல்வரின் 2 நாள் நிகழ்ச்சிகள் ஒத்தி வைக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்,” முதல்வர் நாளை (20ம் தேதி ) ராணிப்பேட்டை மாவட்ட அரசு நலத்திட்ட வழங்கும் விழாவிலும், நாளை மறு நாள் (21ம் தேதி ) வேலூர் மாவட்ட அரசு நலத்திட்ட … Read more

அக்னி பாதை திட்டத்துக்கு எதிராக அமைதியாக போராடுங்கள் – காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வேண்டுகோள்

புதுடெல்லி: அக்னி பாதை திட்டத்துக்கு எதிராக அமைதி வழியில் போராடுங்கள் என்று இளைஞர்களுக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வேண்டுகோள் விடுத்துள்ளார். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, கரோனாவுக்கு பிந்தைய உடல்நல பாதிப்புகளுக்காக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மத்திய அரசின் அக்னி பாதை திட்டத்துக்கு எதிராக நாட்டின் பல இடங்களில் தற்போது வன்முறை நிகழ்ந்து வரும் வேளையில் இளைஞர்களுக்கு கடிதம் ஒன்றை அவர் எழுதியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: ஆயுதப் படைகளுக்கு புதிய ஆட்சேர்ப்பு கொள்கையை … Read more