தங்கைக்காக நீதி கேட்டு ஆந்திராவில் இருந்து மாட்டு வண்டியில் டெல்லிக்கு புறப்பட்ட அண்ணன் – உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர முடிவு

விஜயவாடா: தங்கைக்கு புகுந்த வீட்டில் பிரச்சினை ஏற்பட்டதாலும், மாப்பிள்ளை வீட்டாருக்கு ஆந்திராவில் ஆளும் கட்சியினரின் ஆதரவு இருப்பதாலும், தக்க நீதி கிடைக்காது என முடிவு செய்து, தாய் மற்றும் தங்கையுடன் அவரது அண்ணன் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர மாட்டு வண்டியில் புறப்பட்டு சென்றுள்ளார். தேசிய சகோதரர் தினம் நேற்று முன்தினம் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. இதில் பல சகோதர, சகோதரிகள் தங்களது அன்பை நேரிலும், சமூக வலைத்தளங்களிலும் பரிமாறிக் கொண்டனர். ஆனால், உடன்பிறந்த ஒரு அண்ணன், … Read more

இளைஞர்களுக்கு வழிகாட்டியாக தமிழக அரசு செயல்படும் – இளைஞர் திறன் திருவிழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி

சென்னை: தமிழக இளைஞர்கள் மிகவும் திறமையானவர்கள். அவர்களுக்கு வழிகாட்டியாக அரசு நிச்சயமாக செயல்படும் என்று இளைஞர் திறன் திருவிழா தொடக்க நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதியுடன் தெரிவித்தார். சட்டப்பேரவையில் 2022-23 நிதியாண்டுக்கான ஊரக வளர்ச்சித் துறை மானிய கோரிக்கையின்போது, இளைஞர்களின் திறனை மேம்படுத்த திறன் பயிற்சி அளிக்கும் அரசு மற்றும் தனியார் துறைகளை ஒருங்கிணைத்து 388 ஒன்றியங்களில் இளைஞர் திறன் திருவிழாக்கள் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பை செயல்படுத்தும் விதமாக, முதல் இளைஞர் திறன் திருவிழா … Read more

காஷ்மீரில் தொலைக்காட்சி ஊழியர் தீவிரவாதிகளால் சுட்டுக்கொலை

ஸ்ரீநகர்: காஷ்மீரில் தொலைக்காட்சி கலைஞர் அம்ரீன் பட் என்பவர் தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். மத்திய காஷ்மீரின் புட்காம் மாவட்டத்தில் உள்ள சதூரா பகுதியில் உள்ள அம்ரீன் பட் வீட்டில் நுழைந்த தீவிரவாதிகள் அவரை சரமாரியாக சுட்டனர். அந்த சமயத்தில் அவருடன் அவர் வீட்டில் இருந்த 10 வயது சிறுவனும் துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப்பட்டார். இருவரும் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். எனினும், அம்ரீன் ஏற்கனவே இறந்துவிட்டதை மருத்துவர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். 10 வயது சிறுவனுக்கு கையில் குண்டடிபட்டதால் அவர் உயிர் … Read more

ரேஷன் அரிசி கடத்தினால் கடும் நடவடிக்கை: குற்ற புலனாய்வுத் துறை டிஜிபி எச்சரிக்கை

சென்னை: ரேஷன் அரிசியை சட்ட விரோதமாகக் கடத்துபவர்கள், பதுக்கி வைப்பவர்கள் மீது கடும் நட வடிக்கை எடுக்கப்படும் என குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறை டிஜிபி அபாஷ்குமார் எச்சரித்துள்ளார். தமிழக அரசால் பொது மக்களுக்கு வழங்கப்படும் ரேஷன் அரிசி கடத்தலைத் தடுக்க தமிழக காவல்துறையின் குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறை டிஜிபி அபாஷ்குமார் பல்வேறு தொடர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். கண்காணிப்பு தீவிரம் குறிப்பாக, தமிழகத்திலிருந்து ஆந்திரா, கர்நாடகா, கேரளா உட்பட … Read more

மாவட்டத்திற்கு அம்பேத்கர் பெயர் சூட்ட கடும் எதிர்ப்பு – ஆந்திராவில் அமைச்சர், எம்எல்ஏ வீடுகளுக்கு தீ வைப்பு

அமலாபுரம்: ஆந்திராவில் கோனசீமா மாவட்டத்துக்கு அம்பேத்கர் பெயர் சூட்ட எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அமைச்சர், எம்எல்ஏக்களின் வீடுகளுக்கு தீ வைத்தனர். ஆந்திராவில் 13 மாவட்டங்கள் இருந்த நிலையில், கடந்த 2 மாதங்களுக்கு முன்பு மக்களவை தொகுதிகளின் அடிப்படையில் 26 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டது. இதன் ஒரு பகுதியாக கோனசீமா என்ற பெயரில் புதிய மாவட்டம் உருவானது. இதற்கு அமலாபுரம் மாவட்ட தலைநகராக அறிவிக்கப்பட்டது. 2 மாதங்கள் கழித்து இந்த மாவட்டத்துக்கு டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் கோனசீமா மாவட்டம் … Read more

பள்ளி சான்றிதழ்களை ஆன்லைனில் பெறும் வசதி – அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார்

சென்னை: தமிழ்வழிச் சான்று உள்ளிட்ட 25 வகையான பள்ளி ஆவணங்களை ஆன்லைனில் பெறுவதற்கான வசதியை அமைச்சர் அன்பில் மகேஸ் தொடங்கி வைத்தார். தமிழக பள்ளிக்கல்வியில், வரும் கல்வியாண்டுக்கான (2022-23) நாட்காட்டி வெளியீடு மற்றும் ஆன்லைன் சேவைகள் தொடக்க விழா சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கலந்து கொண்டு திட்டங்களைத் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் அமைச்சர் பேசியதாவது: தமிழ்வழியில் படித்தமைக்கான சான்று, கல்வி … Read more

காஷ்மீர் பாரமுல்லாவில் என்கவுன்ட்டர்: பாக். ஆதரவு 3 தீவிரவாதிகள் உயிரிழப்பு

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டம் கிரீரி பகுதியில் நஜிபாத் என்ற இடத்தில் நேற்று காலை ராணுவத்தினரும் போலீஸாரும் கூட்டாக தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது, ஓரிடத்தில் பதுங்கியிருந்த தீவிரவாதிகள், பாதுகாப்புப் படையினர் மீது துப்பாக்கியால் சுட்டனர். பதிலுக்கு பாதுகாப்பு படையினரும் திருப்பி சுட்டனர். நீண்ட நேரம் நடந்த துப்பாக்கிச் சண்டையில் பாகிஸ்தானைச் சேர்ந்த 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த சண்டையில் போலீஸ்காரர் ஒருவரும் உயிரிழந்தார். இதனிடையே, ஸ்ரீநகரில் அஞ்சர் சவுரா பகுதியில் தனது வீட்டு … Read more

இனி டிஜிலாக்கர் சேவையை வாட்ஸ் அப்பிலும் பெறலாம்

புதுடெல்லி: ஆவணங்களை சேமித்து வைக்கும் டிஜிலாக்கர் சேவை இனி வாட்ஸ்அப் மூலமும் பெறலாம். கடந்த 2020 மார்ச் மாதம் வாட்ஸ் அப்பில் MyGov Helpdesk உருவாக்கப்பட்டது. கரோனா தடுப்பூசிக்கான முன்பதிவு, தடுப்பூசி சான்றிதழ் உள்ளிட்டவற்றை பெறுவதற்கான வசதியை அது வழங்கியது. இந்நிலையில் தற்போது டிஜிலாக்கர் வசதியையும் MyGov ஹெல்ப் டெஸ்க் வழங்குகிறது. 9013151515 என்ற எண்ணுக்கு வாட்ஸப் மூலமாக Hi அல்லது Namaste அல்லது Digilocker என்று அனுப்ப வேண்டும். இதையடுத்து டிஜிலாக்கர் தளத்தைப் பயன்படுத்துவதற்கான இணைப்பு … Read more

தமிழ்நாடு முதல்வரின் சிறப்பு புத்தாக்க திட்டம் – இளம் வல்லுநர் பதவிக்கு விண்ணப்பிக்க தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: தமிழ்நாடு முதல்வரின் சிறப்பு புத்தாக்கத் திட்டத்தில் இளம் வல்லுநராகப் பணியாற்ற விரும்பும் தகுதியான இளைஞர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசின் சிறப்புத் திட்ட செயலாக்கத் துறையின் முதன்மைச் செயலர் வெளியிட்ட அறிவிப்பு: 30 இளைஞர்கள் தேர்வு திறன் மிகுந்த இளைஞர்களின் திறமைகளைப் பயன்படுத்தி, நிர்வாக செயல்முறைகள் மற்றும் சேவை வழங்கலின் செயல்திறனை மேம்படுத்தும் வகையில் ‘தமிழ்நாடு முதல்வரின் புத்தாக்கத் திட்டம்’ என்ற சிறப்புத் திட்டத்தை தமிழக அரசு 2022 … Read more

தேடப்படும் குற்றவாளிக்கு நிவாரணம் வழங்க உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மறுப்பு

புதுடெல்லி: மகாராஷ்டிராவில் பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்ட 6 பேர் மீது, மகாராஷ்டிரா திட்டமிட்ட குற்றத் தடுப்புச் சட்டத்தின் (1992) (எம்சிஓசிஏ) 23(2)வது பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்ய மாநில ஏடிஜிபி மற்றும் புனே மாநகர காவல் ஆணையர் உத்தரவிட்டனர். இந்த சட்டத்தின் கீழ் குற்றம்சாட்டப்பட்டவர்கள் ஜாமீன் கோர முடியாது. இதை எதிர்த்து குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவர் மனுவை மும்பை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்ததையடுத்து, உச்ச நீதிமன்றத்தை அணுகினார். கடுமையான எம்சிஓசிஏ சட்டத்தின் கீழ் … Read more