மதுரை அருகே 3 ஏக்கரில் ஆக்ஸிஜன் பூங்கா: 1,500 மரங்களுடன் வேளாண் கல்லூரி உருவாக்கியதன் பின்புலம்

மதுரை: மதுரை அருகே தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் சார்பில் 3 ஏக்கரில் பிரமாண்டமான ‘ஆக்ஸிஜன் பூங்கா’ (Oxygen bio fuel park) அமைக்கப்பட்டுள்ளது. சராசரியாக ஒரு மனிதனுக்கு ஆண்டுக்கு 300 கிலோ ஆக்ஸிஜன் தேவைப்படுகிறது. ஆக்ஸிஜன் முக்கியத்துவத்தை பொதுமக்கள் கரோனா தொற்று பரவல் நேரத்தில்தான் உணரத் தொடங்கினர். நாடு முழுவதும் மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு ஆக்ஸிஜன் தட்டுப்பாடில்லாமல் கிடைக்க ஆக்ஸிஜன் சேமிப்பு கொள்கலன்கள் அமைக்கப்பட்டுள்ளது. அதனால், மக்கள், இளைஞர்கள் தற்போது ஆக்ஸிஜன் … Read more

ஆபரேஷன் கந்துவட்டி: தமிழகம் முழுவதும் ஒரு வாரத்தில் 124 புகார் மனுக்கள், 89 எஃப்ஐஆர், 32 பேர் கைது

சென்னை: ‘ஆபரேஷன் கந்துவட்டி’ சிறப்பு ஆய்வின் மூலம் ஒரு வாரத்தில் தமிழகம் முழுவதும் 32 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக டிஜிபி சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார். கடலூர், புவனகிரி அருகே கந்துவட்டி கொடுமையால் ஆயுதப்படைக் காவலர் செல்வக்குமார் தற்கொலை செய்துகொண்டார். இதனைத் தொடர்ந்து கந்துவட்டி தொடர்பான அனைத்து வழக்குகளையும் விசாரிக்க ‘ஆபரேஷன் கந்துவட்டி’ என்ற பெயரில் சிறப்பு ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும் என்று டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவிட்டார். ‘கந்து வட்டி தொடர்பான அனைத்து வழக்குகளையும் உடனடியாக விசாரிக்க … Read more

இந்தியாவில் விற்பனைக்கு வந்தது ‘டிஸோ வாட்ச் D’ – விலை and அம்சங்கள்

புது டெல்லி: இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகமாகியுள்ளது ‘டிஸோ வாட்ச் D’. நேற்று பகல் 12 மணி முதல் இந்த ஸ்மார்ட்வாட்ச் ஆன்லைன் மூலமாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த வாட்ச்சின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாகப் பார்ப்போம். ரியல்மி டெக் லைஃப் பிராண்டான டிஸோ, கீபோர்டு போன்கள், ஸ்மார்ட்வாட்ச், ஹேர் டிரையர், ட்ரிம்மர் போன்ற பொருட்கள் மற்றும் ஆடியோ ஹெட் போன்களை விற்பனை செய்து வருகிறது. இந்நிலையில், வாட்ச் D என்ற புதிய … Read more

புதுச்சேரி காங். அலுவலக தர்ணாவில் வாக்குவாதம்: முன்னாள் அமைச்சர் வெளியேறி சாலையில் அமர்ந்து போராட்டம்

புதுச்சேரி: புதுச்சேரி காங்கிரஸ் அலுவலக வளாகத்தில் நடந்த தர்ணாவில் வாக்குவாதம், கருத்து மோதல் ஏற்பட்டு முன்னாள் அமைச்சர் தனது ஆதரவாளர்களுடன் வெளிநடப்பு செய்து சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தினார். நேஷனல் ஹெரால்டு வழக்கில் அமலாக்கத்துறை தொடர்ந்து 3-வது நாளாக இன்று ராகுல்காந்தியை விசாரணைக்கு அழைத்துள்ளது. சோனியா காந்தி, ராகுல் காந்தி மீது பொய்வழக்கு தொடர்ந்துள்ளதாக கூறி மத்திய பாஜக அரசை கண்டித்து புதுவை காங்கிரசார் நேற்று முன்தினம் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இன்று அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி … Read more

நேஷனல் ஹெரால்டு பத்திரிகை வழக்கு – ராகுலிடம் அமலாக்கப்பிரிவினர் 2-வது நாளாக 10 மணிநேரம் விசாரணை

புதுடெல்லி: நேஷனல் ஹெரால்டு பத்திரிகை பங்கு விற்பனை விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவரும், வயநாடு தொகுதி எம்.பி.யுமான ராகுல் காந்தியிடம் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் 2-வது நாளாக நேற்றும் 10 மணிநேரம் விசாரணை நடத்தினர். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும், ராகுல் காந்தியும் இயக்குநர்களாக உள்ள “யங் இந்தியா” நிறுவனம், அசோசியேட்டட் ஜர்னல்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான நேஷனல் ஹெரால்டு பத்திரிகையை கடந்த 2010-ல் விலைக்கு வாங்கியது. இதில் மிகப்பெரிய அளவில் பண மோசடி நடைபெற்றுள்ளதாக பாஜக … Read more

பாமாயில் இறக்குமதிக்கு மானியம்; விளைச்சல் அதிகரிப்பால் தேங்காய் விலை கடும் வீழ்ச்சி: அரசு உரிய நடவடிக்கை எடுக்க விவசாயிகள் வலியுறுத்தல்

புதுக்கோட்டை: தேங்காய் விலை கடும் வீழ்ச்சியடைந்துள்ளதால், விவசாயிகள் பெரும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். எனவே, இதற்கு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழகத்தில் 10.5 லட்சம் ஏக்கரில் தென்னை சாகுபடி செய்யப்படுகிறது. தேங்காயை வீடுகளில்நேரடியாக பயன்படுத்துவதுடன், எண்ணெய், பவுடர், பால் என பல்வேறு மதிப்புக் கூட்டப்பட்டபொருட்களாகவும் மாற்றி விற்பனை செய்யப்படுகிறது. தென்னை மரங்கள் விவசாயிகளுக்கு நிரந்தர வாழ்வாதாரமாக இருந்து வருவதால், மத்திய, மாநில அரசுகள் பல்வேறு உதவிகளை வழங்கி வருகின்றன. இந்தநிலையில், … Read more

6 மணி நேரத்தில் 24 முட்டைகள் இட்ட 'சின்னு' எனும் கோழி – கேரள கிராம மக்கள் வியப்பு

ஆலப்புழா: கேரளா மாநிலம் ஆலப்புழாவில் ‘சின்னு’ எனும் கோழி, ஆறு மணி நேரத்தில் 24 முட்டைகளை இட்டுள்ளது. இந்தச் செய்தியை அறிந்து உள்ளூர் மக்கள், கால்நடை மருத்துவர்கள், ஆராய்ச்சியாளர்கள் என பலரும் அந்தக் கோழியை பார்வையிட்டு சென்றுள்ளனர். ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள புன்னப்புரா தெற்கு பஞ்சாயத்தை சேர்ந்தவர் சி.என்.பிஜு குமார். கடந்த எட்டு மாதங்களுக்கு முன்னர் வங்கியில் கடன் வாங்கி கோழிப் பண்ணை அமைக்கும் நோக்கில் 23 BV380 ஹைபிரிட் ரக கோழிகளை வாங்கி வந்துள்ளார். அதில் … Read more

இலங்கைக்கு உதவ ஒருநாள் ஊதியத்தை தர விருப்பமில்லை: 6 காரணங்களுடன் ஐகோர்ட் தலைமைக் காவலர் கடிதம்

சென்னை: இலங்கைக்கு உதவ, தனது ஒருநாள் ஊதியத்தை விட்டுக்கொடுக்க விருப்பமில்லை என்றும், அதற்கான காரணங்களை விளக்கியும் துணை ஆணையருக்கு உயர் நீதிமன்ற பாதுகாப்பு பிரிவு தலைமைக் காவலர் ஜனார்த்தனன் கடிதம் எழுதியுள்ளார். இதுதொடர்பாக உயர் நீதிமன்ற பாதுகாப்பு பிரிவு காவல் துணை ஆணையருக்கு எழுதியுள்ள கடிதம்: “நான் தமிழ்நாடு காவல் துறையில் பணியில் சேர்ந்து 18 வருடம் பூர்த்தி செய்து 19-வது வருடம் நடந்து வருகின்றது. தமிழ்நாடு அரசு சார்பாக, அரசு அலுவலர்கள் ஒரு நாள் ஊதியத்தை … Read more

எதிர்கட்சிகள் கூட்டத்திற்கு முன்பாகவே பிளவு: குடியரசுத் தலைவர் தேர்தலில் பொது வேட்பாளர் ஆலோசனைக்கு 3 கட்சிகள் வர மறுப்பு

புதுடெல்லி: குடியரசுத் தலைவர் தேர்தலில் பொதுவேட்பாளர் ஆலோசனைக்கு மூன்று கட்சிகள் வர மறுத்துள்ளனர். மம்தா பானர்ஜியின் இக்கூட்டம் தொடங்குவதற்கு முன்பாகவே எதிர்கட்சிகள் இடையே பிளவு ஏற்பட்டுள்ளது. அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி, நவீன் பட்நாயக்கின் பிஜு ஜனதா தளம் ஆகியவற்றுடன் சந்திரசேகர ராவின் தெலங்கானா ராஷ்டிரிய சமிதியும் இக்கூட்டத்தில் பங்கேற்கவில்லை. ஜூலை 16-இல் புதிய குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடைபெறுகிறது. இதில், எதிர்கட்சிகளின் வேட்பாளருக்கு வெற்றி பெறும் வாய்ப்புகள் மிகவும் குறைவாக உள்ளன. பாஜக தலைமையில் … Read more

‘ஒற்றையடி பாதையில் சிதறி ஓடிய பாஜகவினர்’ – கரூரில் தடையை மீறி இருசக்கர வாகன பேரணி நடத்திய 72 பேர் கைது

கரூர்: கரூரில் தடையை மீறி இருசக்கர வாகன பேரணியில் ஈடுபட்ட மாநில, மாவட்ட பாஜக நிர்வாகிகள் உள்ளிட்ட 72 பேர் கைது செய்யப்பட்டனர். மாநிலத் தலைவரின் உறவுப் பெண் வாகனத்தை விட்டு வரமறுத்தது சலசலப்பை ஏற்படுத்தியது. கரூரில் தடையை மீறி பாஜக இருசக்கர வாகன பேரணியாக சென்றனர். இதையடுத்து மாநில, மாவட்ட நிர்வாகிகள் உள்ளிட்ட 72 பேர் கைது நடவடிக்கைக்கு ஒத்துழைக்க மறுத்தனர். கரூர் பேருந்து நிலைய ரவுண்டானாவில் பாஜவினரை போலீஸார் கைது செய்த நிலையில், வாகனத்தைவிட்டு … Read more