பஞ்சு. நூல் விலை உயர்வு: மே 27-ல் தேமுதிக கண்டன ஆர்ப்பாட்டம்

சென்னை: பஞ்சு மற்றும் நூல் விலை உயர்வைக் கண்டித்து ஈரோட்டில் வரும் 27-ம் தேதி, தேமுதிக பொருளாளர் பிரேமலதா தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் தலைமைக் கழகம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக தேமுதிக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: “தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஆணைக்கிணங்க ஈரோடு மாவட்டத்தின் சார்பில், பஞ்சு மற்றும் நூல் விலை உயர்வைக் கண்டித்து வருகின்ற (மே 27) வெள்ளிக்கிழமை மாலை 4 மணியளவில் ஈரோடு வீரப்பன் சத்திரம் பேருந்து நிறுத்தம் … Read more

ஸ்டார்லிங்க் | மலேசியாவில் எலான் மஸ்கின் சாட்டிலைட் மூலம் இணைய சேவை வழங்க திட்டம்

கலிபோர்னியா: மலேசிய நாட்டில் ஸ்டார்லிங்க் புராஜக்டின் கீழ் சாட்டிலைட் மூலமாக இணைய சேவையை வழங்க எலான் மஸ்கின் ஸ்பேஸ்-X நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க நாட்டை தலைமையிடமாக கொண்டு இயங்கி வருகிறது ஸ்பேஸ்-X நிறுவனம். இந்நிறுவனத்தின் ஸ்டார்லிங்க் புராஜக்ட் வழியே சுமார் 32 நாடுகளில் சாட்டிலைட் மூலம் அதிவேக இணைய சேவையை வழங்கி வருகிறது. அதற்கான அங்கீகாரத்தையும் ஸ்பேஸ்-X பெற்றுள்ளது. உலகம் முழுவதும் இந்த சேவையை விரிவு செய்வதே அந்நிறுவனத்தின் நோக்கம். இப்போது ஸ்டார்லிங்க் இணைய சேவை … Read more

புதுச்சேரியில் திரைப்பட நகரம், ரூ.60 கோடியில் தாவரவியல் பூங்கா மேம்பாடு: ஆளுநர் தமிழிசை தகவல்

புதுச்சேரி: “புதுச்சேரியில் விரைவில் அனைத்து வசதிகளுடன் கூடிய திரைப்பட நகரம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. பூங்காக்களின் சொர்க்கமாக தாவரவியல் பூங்கா ரூ.60 கோடியில் மேம்படுத்தப்படும்” என்று துணைநிலை ஆளுநர் தமிழிசை தெரிவித்தார். புதுச்சேரியின் சுற்றுலா தலங்களில் ஒன்றான 200 ஆண்டு பழமை வாய்ந்த தாவரவியல் பூங்காவை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.60 கோடி செலவில் மேம்படுத்தப்படவுள்ளது. இந்தப் பூங்காவை புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் இன்று மாலை ஆய்வு செய்தார், மேலும், அமைய உள்ள … Read more

பள்ளி மாணவியருக்கு மாதவிடாய் குறித்த விழிப்புணர்வு: பெண் கவுன்சிலர்கள் முன்னின்று நடத்த மேயர் பிரியா வேண்டுகோள்

சென்னை: சென்னைப் பள்ளிகளில் படிக்கும் மாணவியருக்கு மாதவிடாய் மற்றும் நாப்கின் பயன்பாடு குறித்து வரும் 28-ம் தேதி விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என்றும், இதை பெண் கவுன்சிலர்கள் முன்னின்று நடத்த வேண்டும் என்று மாநகராட்சி மேயர் பிரியா கூறினார். சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகை வளாகத்தில், பெண் கவுன்சிலர்களுக்கான நகர்ப்புற சுகாதாரம் மற்றும் பாலினம் குறித்த கருத்தரங்கை மேயர் பிரியா துவக்கி வைத்து பேசிய மேயர் பிரியா, “சமூகத்தில் பெண்கள் பல இன்னல்களை தாண்டி தான் முன்னேற முடிகிறது. … Read more

“பெண்ணின் திருமண வயதை 21 ஆக உயர்த்தக் கூடாது. ஏனெனில்…” – நிலைக்குழுவிடம் பட்டியலிட்ட குழந்தை நல அமைப்பு

புதுடெல்லி: பெண்ணின் திருமண வயதை உயர்த்துவதற்கு மாற்றாக கல்வியின் தரத்தை மேம்படுத்தலாம் என நாடாளுமன்ற நிலைக்குழுவிடம் குழந்தை நல அமைப்புகள் வலியுறுத்தியுள்ளன. பெண்ணின் குறைந்தபட்ச திருமண வயதை 18-லிருந்து 21 ஆக உயர்த்துவதற்கு மத்திய அமைச்சரவை கடந்த டிசம்பர் மாதம் ஒப்புதல் அளித்தது. ஜெயா ஜேட்லி தலைமையிலான குழுவின் பரிந்துரையை ஏற்று, மத்திய அமைச்சரவை இந்த ஒப்புதலை அளித்துள்ளது. பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறையால் நியமிக்கப்பட்ட இந்தக் குழு, குழந்தைகள் இறப்பு விகிதம், பிரசவ இறப்பு … Read more

முழுமையாக குணமடைந்த பிறகும் கீழ்ப்பாக்கம் மன நல மருத்துவமனையில் இருப்பதை தடுக்க கோரி உயர் நீதிமன்றத்தில் மனு

சென்னை: மனநல பாதிப்பிலிருந்து முழுமையாக குணமடைந்த பிறகும், கீழ்ப்பாக்கம் மன நல மருத்துவமனையில் இருப்பதை தடுப்பது குறித்து தமிழ்நாடு மாநில மனநல ஆணையத்திற்கு அளித்த மனு மீது நடவடிக்கை எடுக்கக கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜெபமணி ஜனதா கட்சியின் பொதுச் செயலாளரான ஜெ. மோகன்ராஜ் என்பவர் தாக்கல் செய்த மனுவில், “சென்னை கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவமனையின் வருந்தத்தக்க நிலை குறித்து சமூக ஊடகங்களில் வெளியான செய்தியில், காமராஜரிடம் … Read more

ஓராண்டு தண்டனை பெற்ற நவ்ஜோத் சிங் சித்து சரணடைந்தார்

புதுடெல்லி: ஒராண்டு கடுங்காவல் தண்டனை வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்த நிலையில் நவ்ஜோத் சிங் சித்து இன்று சரணடைந்தார். கடந்த 1988 ஆம் ஆண்டு, நவ்ஜோத் சிங் சித்து மற்றும் அவரது நண்பர் ரூபீந்தர் சாந்து ஆகிய இருவரும் பாட்டியாலாவைச் சேர்ந்த குர்மான் சிங் (65) என்பவருடன் கார் பார்க்கிங் தொடர்பாக வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வாக்குவாதம் முற்றிய நிலையில் சித்து, குர்மான் சிங்கை காரிலிருந்து வெளியே இழுத்து தாக்கியுள்ளார். இதில் குர்மான் சிங் காயமடைந்தார். பின்னர் … Read more

காந்தி சிலையை மையப்படுத்தி பல நிகழ்ச்சிகள்: கடற்கரையிலேயே வேறு இடத்திற்கு சிலையை மாற்ற முடிவு

சென்னை: காந்தி சிலையை மையப்படுத்தி பல்வேறு நிகழ்ச்சிகள் நடப்பதால், கடற்கரையிலேயே வேறு இடத்திற்கு சிலையை மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை பூந்தமல்லி பைபாஸ் – கலங்கரை விளக்கம் இடையே புதிய மெட்ரோ ரயில் பாதை அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. கலங்கரை விளக்கம் மெட்ரோ நிலையம், காந்தி சிலை பின்புறம் சுரங்கத்தில் அமைக்கப்படுகிறது. இந்நிலையில், மெட்ரோ ரயில் பணிகளால், காந்தி சிலை சேதமடைவதைத் தடுக்க, தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க முடிவு செய்தது. அதன்படி, மெரினா … Read more

ஹிஜாப் தடையால் கர்நாடகாவில் சீருடை கட்டாய‌மானது

பெங்களூரு: கர்நாடகாவில் கடந்த பிப்ரவ‌ரியில் பள்ளி, கல்லூரிகளில் ஹிஜாப் (தலை முக்காடு) அணிய தடை விதிக்கப்பட்டது. இதனை உயர் நீதிமன்றம் ஏற்று கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிய தடை விதித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆயிரக்கணக்கான மாணவிகள் 10 மற்றும் பியூசி இறுதி தேர்வை புறக்கணித்தனர். இந்நிலையில் கர்நாடக கல்வித் துறை வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், “சமத்துவம், ஒற்றுமை, பொது ஒழுங்கை கடைபிடிக்கும் நோக்கில் 2022-23-ம் கல்வி ஆண்டு முதல் பியூசி மாணவ, மாணவிகள் கட்டாயம் சீருடை அணிய … Read more

அமராவதி ஆற்றில் சட்ட விரோதமாக தண்ணீர் எடுக்க தடை கோரி மனு: திருப்பூர் ஆட்சியர் பதிலளிக்க உத்தரவு

சென்னை: அமராவதி ஆற்றில் இருந்து சட்ட விரோதமாக தனி நபரால் தண்ணீர் எடுக்கப்படுவதற்கு தடை விதிக்கக் கோரிய வழக்கில், திருப்பூர் மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில், திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தைச் சேர்ந்த குமாரசாமி என்பவர் தாக்கல் செய்த மனுவில், “திருப்பூர் மாவட்டம் மன்னக்கடவு கிராமத்தில் ஓடும் அமராவதி ஆற்றில் இருந்து பழனிசாமி என்பவர் சட்ட விரோதமாக தண்ணீர் எடுப்பதோடு அந்தப் பகுதியில் ஆக்கிரமிப்பை மேற்கொண்டுள்ளார். சட்டவிரோதமாக தண்ணீர் எடுக்கப்படுவதால் … Read more