'கூகுள் வாலெட் அப்ளிகேஷன்' – I/O டெவலப்பர் மாநாட்டில் அறிமுகம்

கலிபோர்னியா: ‘கூகுள் வாலெட் அப்ளிகேஷன்’ என்ற கைபேசி இன்புட்/அவுட்புட் (I/O) டெவலப்பர் மாநாட்டில் அறிமுகம் செய்துள்ளது கூகுள் நிறுவனம். தொழில்நுட்ப உலகின் சாம்ராட்டான கூகுள் நிறுவனம் ஆண்டுதோறும் இன்புட்/அவுட்புட் எனப்படும் I/O டெவலப்பர் மாநாட்டினை நடத்துவது வழக்கம். கடந்த சில ஆண்டுகளாக கரோனா தொற்று காரணமாக இணைய வழியில் இந்த மாநாடு நடைபெற்றது. இந்த ஆண்டு மீண்டும் நேரடியாக நடைபெற்றது. இருந்தாலும் இதில் குறைவான பார்வையாளர்கள் மட்டுமே கலந்து கொண்டதாக சொல்லப்படுகிறது. கடந்த 2008 முதல் இந்த … Read more

'இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி தமிழகத்திலும் ஏற்படும்' – அண்ணாமலை பேச்சு

திருவாரூர்: தமிழகத்தில் நடைபெறும் அறிவாலய குடும்ப ஆட்சி காரணமாக இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி தமிழகத்திலும் ஏற்படும் என, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். திருவாரூர் தெற்கு வீதிக்கு கலைஞர் சாலை என பெயர் மாற்றம் செய்து திருவாரூர் நகராட்சி கூட்டத்தில் கடந்த மாதம் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதைக் கண்டித்து பாஜக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. கண்டன ஆர்ப்பாட்டத்துக்கு பாஜக முன்னாள் திருவாரூர் மாவட்ட தலைவர் ராகவன் தலைமை வகித்தார். திருவாரூர் மாவட்ட பார்வையாளர் … Read more

உறுதி, உண்மை உணர்வுடன் அரசு பயனாளியை சென்றடையும் போது அர்த்தமுள்ள பலன் கிடைக்கிறது – பிரதமர் மோடி பெருமிதம்

குஜராத்: எனது கனவு மிகப்பெரியது. பயனாளிகளின் 100 சதவீத பயன்பாட்டை நோக்கி நாம் நகர்ந்து செல்ல வேண்டும். அரசு இயந்திரம் அதற்கேற்ப மக்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும். பயனாளிகளின் 100 சதவீத பயன்பாடு என்பது அனைவரும் இணைவோம் அனைவரும் உயர்வோம் என்ற முழக்கத்துடன் ஒவ்வொரு மதம், பிரிவிற்கும் அனைத்தையும் சமமாக வழங்குவதாகும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். குஜராத் மாநிலம் பரூச்-ல் நடந்த முன்னேற்றப் பெருவிழாவில் பிரதமர் நரேந்திர மோடி காணொளி வாயிலாக உரையாற்றினார். தேவையுள்ளவர்களுக்கு … Read more

தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்கக் கோரி  பிரதமர், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

சென்னை: நீதிபதிகள் நியமனத்தில் சமூக நீதி, உச்ச நீதிமன்ற கிளையை சென்னையில் அமைக்க வேண்டும், தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, பிரதமர் மற்றும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஆகியோருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றங்களில் நீதிபதிகளை நியமிப்பதில் சமூக நீதியைப் பின்பற்றிட வேண்டுமென்றும், உச்ச நீதிமன்றத்தின் நிரந்தரக் கிளைகளை புதுடெல்லி, சென்னை, கொல்கத்தா மற்றும் மும்பை ஆகிய இடங்களில் நிறுவிட வேண்டுமென்றும், … Read more

இலங்கைக்கு நிவாரண பொருட்கள்: 4 ஐஏஎஸ் அதிகாரிகள் கொண்ட குழு அமைப்பு

சென்னை: இலங்கைக்கு நிவாரண பொருட்களை அனுப்பும் பணிக்கு 4 ஐஏஎஸ் அதிகாரிகள் கொண்ட குழுவை அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கைக்கு தமிழக அரசு சார்பில் அத்தியாவசியப் பொருட்களை அனுப்பி வைக்க மத்திய அரசு அனுமதி வழங்கக் கோரி கடந்த சட்டப்பேரவை கூட்டத் தொடரில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து பொருட்கள் அனுப்ப மத்திய அரசு அனுமதி அளித்தது. இதன்படி, ரூ.80 கோடி மதிப்பிலான 40 ஆயிரம் டன் அரிசி, ரூ.28 கோடி … Read more

அம்மா உணவகங்களை முன்பு இருந்ததை விட மிகச் சிறப்பாக நடத்த முதல்வர் உத்தரவு: அமைச்சர் கே.என்.நேரு

சென்னை: அம்மா உணவகங்களை முன்பு இருந்ததை விட மிகச்சிறப்பாக நடத்த முதல்வர் உத்தரவிட்டுள்ளதாக அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார். சென்னை எம்.ஆர்.சி.நகரில் உள்ள நகராட்சி நிர்வாகத்துறை அலுவலகத்தில், 126 நபர்களுக்கு கருணை அடிப்படையிலான பணி நியமன ஆணை, கரோனாவால் உயிரிழந்த முன்கள பணியாளர்களின் வாரிசுதாரர்கள் 71 நபர்களுக்கு நிதியுதவி ஆகியவற்றை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு வழங்கினார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கே.என்.நேரு, “சில இடங்களில் சொத்து வரி கட்டாமல் உள்ளனர். அனைவருக்கும் ஒரே மாதிரியான … Read more

தாஜ்மகாலில் பூட்டப்பட்டிருக்கும் 22 அறைகளை திறந்து பார்க்க வழக்கு தொடர்ந்த பாஜக : நிராகரித்த அலகாபாத் நீதிமன்றம்

லக்னோ: தாஜ்மகாலில் பூட்டப்பட்டிருக்கும் 22 அறைகளை திறந்து பார்க்க உத்தரவிடக் கோரிய பாஜகவின் மனுவை அலகாபாத் உயர்நீதிமன்ற லக்னோ கிளை அமர்வு நிராகரித்துள்ளது. முகலாய அரசர்களில் ஒருவரான ஷாஜஹான் ஆறாம் நூற்றாண்டில், பளிங்குக்கற்களால் கட்டியது தாஜ்மகால். தற்போது பாஜக ஆளும் உத்தரப்பிரதேசத்தில் அமைந்துள்ள இதைக் கட்ட அங்கிருந்த தேஜோலாயா எனும் சிவன் கோயில் இடிக்கப்பட்டதாகப் புகார் உள்ளது. இக்கோயிலின் சிலைகள், தாஜ்மகாலில் திறக்கப்படாமல் பூட்டப்பட்டிருக்கும் 22 அறைகளில், இருப்பதாகவும் சந்தேகம் எழுப்பப்பட்டுள்ளது. என்ன நடந்தது? தாஜ்மகாலில் திறக்கப்படாமல் … Read more

கனமழை காரணமாக ஆம்பூர் பிரியாணி திருவிழா ஒத்திவைப்பு

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் நாளை (மே 13) தொடங்கவிருந்த பிரியாணி திருவிழா மழை காரணமாக ஒத்திவைக்கப்படுவதாக மாவட்ட ஆட்சித் தலைவர் அமர்குஷ்வாஹா அறிவித்துள்ளார். புவிசார் குறியீடு பெற: திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூரில் அசைவ உணவுகளில் பிரியாணி பிரசித்திப்பெற்றது. வெளியூர் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து ஆம்பூர் வழியாக செல்லும் ஏராளமானோர் ஆம்பூர் பிரியாணியை விரும்பி சாப்பிடுகின்றனர். சாமான்ய மக்கள் முதல் பிரபலங்கள் வரை ஆம்பூர் பிரியாணியை விரும்புகின்றனர்.இந்நிலையில், ஆம்பூர் பிரியாணிக்கு புவிசார் குறியீடு பெற மாவட்ட உணவு … Read more

குளிர்சாதன அறைக்கு ஜிஎஸ்டியுடன் கட்டணம் வசூல்: கோவை உணவகத்துக்கு ரூ.5,000 அபராதம்

கோவை: குளிர்சாதன அறைக்கு ஜிஎஸ்டியுடன் கட்டணம் வசூலித்த கோவை உணவகத்துக்கு ரூ.5,000 அபராதம் விதித்து மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. கோவை வெள்ளலூர் இடையர்பாளையத்தைச் சேர்ந்த நிவாஸ்ராஜ் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: “நானும் எனது நண்பரும் 2019 மே 2-ம் தேதி கோவை ராம்நகர் சரோஜினி தெருவில் உள்ள ஹோட்டலுக்கு உணவருந்த சென்றோம். அங்கு உணவருந்திய பிறகு, ஹோட்டல் பணியாளர் ரசீது அளித்தார். அதில் மொத்தம் ரூ.803 என … Read more

இந்தியாவில் அறிமுகமானது மோட்டோரோலா எட்ஜ் 30 ஸ்மார்ட்போன் | விலை and சிறப்பு அம்சங்கள்

புதுடெல்லி: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் அறிமுகமாகி உள்ளது மோட்டோரோலா நிறுவனத்தின் எட்ஜ் 30 ஸ்மார்ட்போன். இதன் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்த விவரங்களைப் பார்ப்போம். அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு இயங்கி வருகிறது மோட்டோரோலா நிறுவனம். அண்மைக் காலமாக வரிசையாக ஸ்மார்ட்போன்களை இந்நிறுவனம் அறிமுகம் செய்து வருகிறது. இந்நிலையில், எட்ஜ் 30 சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் வரிசையில் எட்ஜ் 30 அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. முன்னதாக எட்ஜ் 30 புரோ அறிமுகம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. உலகின் மெல்லிய (Thin) போன் … Read more