பாகிஸ்தானில் இருந்து பறந்து வந்த ட்ரோனை சுட்டு வீழ்த்தியது பிஎஸ்எப்

சண்டிகர்: இந்தியாவுக்கு எதிரான தீவிரவாத நடவடிக்கைகளில் பாகிஸ்தான் தொடர்ந்து பல்வேறு வழிகளில் ஈடுபட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஆளில்லா விமானமான ட்ரோன்கள் மூலம், இந்திய எல்லைப் பகுதிக்குள் ஆயுதங்களை அனுப்பி தீவிரவாதிகளுக்கு சப்ளை செய்வது, ட்ரோன்களில் போதைப் பொருளை அனுப்புவது, இந்திய எல்லைப் பகுதிகளை உளவு பார்ப்பது போன்ற செயல்களை செய்து வருகிறது. ஆனால், எல்லை பாதுகாப்புப் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு பாகிஸ்தானில் இருந்து பறந்து வரும் ட்ரோன்களை சுட்டு வீழ்த்தி வருகின்றனர். இந்நிலையில், … Read more

சட்டப்பேரவை நிகழ்ச்சிகள் முழுவதையும் நேரடியாக ஒளிபரப்பு செய்ய பழனிசாமி கோரிக்கை

சென்னை: சட்டப்பேரவையில் நேற்று காவல் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில், எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி பேசியதாவது: அதிமுக ஆட்சியில் காவல்துறை சுதந்திரமாக செயல்பட்டு,சட்டம்- ஒழுங்கு பாதுகாக்கப்பட்டதுடன், தமிழகம் அமைதிப் பூங்காவாகத் திகழ்ந்தது. மதம், சாதிச் சண்டைகள், கட்டாயப் பஞ்சாயத்துஇல்லை. ஆளும் கட்சியின் தலையீடு அறவே கிடையாது. 2013-ல் காவல் துறைக்கு ஆன்லைனில் புகார் அளிக்கும்முறையை அறிமுகப்படுத்தினோம். ஆனால், கடந்த சில மாதங்களாக ஆன்லைன் புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. தமிழகத்தில் மக்கள்தொகைக்கு ஏற்ப காவலர் எண்ணிக்கையை … Read more

தெலங்கானாவில் லாரி மீது வேன் மோதி 9 பேர் உயிரிழப்பு: பிரதமர் ரூ.2 லட்சம் நிதியுதவி

ஹைதராபாத்: தெலங்கானா மாநிலம், காமாரெட்டி மாவட்டம், சில்லாரி கிராமத்தை சேர்ந்த சாதர்வல்லி மாணிக்கம் என்பவர் 10 நாட்களுக்கு முன்னர் உயிரிழந்தார். பத்தாவது நாள் சடங்கில் பங்கேற்க இதே மாவட்டத்தை சேர்ந்த எல்லாரெட்டி கிராமத்தினர் சுமார் 25 பேர் வேனில் ஞாயிற்றுக்கிழமை மாலை புறப்பட்னர். அப்போது, வேன் வேகமாக சென்ற போது ஹுசைன் நகர் ரயில்வே கேட் பகுதியில் எதிரே வந்த லாரி மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் லாரி ஓட்டுநர் உட்பட 9 பேர் உயிரிழந்தனர். … Read more

சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு கனமழை தொடரும்: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்துக்கு கனமழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று நள்ளிரவு முதலே பரவலாக மழை பெய்து வருகிறது. பல நாட்களாக கோடை வெயிலின் தாக்கத்தால் அவதிப்பட்டு வந்த சென்னை நகர மக்கள் திடீர் மழையால் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இந்நிலையில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி … Read more

2022-க்கான் புலிட்சர் விருதுகள் அறிவிப்பு: டேனிஷ் சித்திக்கி உள்ளிட்ட 4 இந்தியர்களுக்கு விருது

2022-க்கான் புலிட்சர் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதழியல், புத்தகம், நாடகம், இசைத்துறை சாதனையாளர்களுக்கு ஆண்டுதோறும் புலிட்சர் விருது வழங்கப்படுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான விருது நேற்றிரவு அறிவிக்கப்பட்டது. இந்தப்பட்டியலில் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் இந்தியாவைச் சேர்ந்த புகைப்படக்காரர்களான அட்னன் அபிதி, காஷ்மீர் பெண் புகைப்படக்காரரான சன்னா இர்ஷாத் மாட்டூ, அமித் தேவ், ஆப்கானிஸ்தானில் கொல்லப்பட்ட டேனிஷ் சித்திக்கி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இதில் மறைந்த டேனிஷ் சித்திக்கி இரண்டாவது முறையாக இப்பரிசினை வெல்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. கரோனா காலத்தின் கோர … Read more

எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்துக்கு துணைவேந்தரை நியமிக்க அரசுக்கு அதிகாரம்: சட்டப்பேரவையில் மசோதா அறிமுகம்

சென்னை: தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களை நியமிக்கும்போது, மாநில அரசின்பரிந்துரைப்படி, பல்கலைக்கழகங்களின் வேந்தரான ஆளுநர் நியமிக்கும் நடைமுறை இருந்தது. இந்நிலையில், சமீபகாலமாக ஆளுநரே நேரடியாக துணைவேந்தர்களை நியமிக்கும் நடைமுறை உள்ளது. இதற்கு மாநில அரசு சார்பில் கடும் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டு வருகிறது. அண்டை மாநிலங்களான கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா மற்றும் குஜராத்தில் துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் மாநில அரசிடமே உள்ளது. இதைக் கருத்தில் கொண்டு தமிழகத்திலும் பல்கலைக்கழக துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை அரசுக்கு வழங்கும் வகையில், பல்கலைக்கழக … Read more

காங்கிரஸ் புத்துயிர் பெற ஒத்துழைப்பு அவசியம்: செயற்குழு கூட்டத்தில் மூத்த தலைவர்களுக்கு சோனியா வேண்டுகோள்

புதுடெல்லி: காங்கிரஸ் கட்சி புத்துயிர்பெற மூத்த தலைவர்கள் முழு ஒத்துழைப்பு தர வேண்டும் என கட்சியின் தலைவர் சோனியா காந்தி வேண்டுகோள் விடுத்துள்ளார். சமீபத்தில் நடந்து முடிந்த 5 மாநில தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்தது. இந்நிலையில், இந்த ஆண்டு இறுதியில் குஜராத், இமாச்சல் பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. அடுத்த ஆண்டு சில மாநிலங்களில் பேரவைத் தேர்தலும் 2024-ல் மக்களவை பொதுத் தேர்தலும் நடைபெற உள்ளன. இந்நிலையில், வரும் ஆகஸ்ட் 21 முதல் செப்டம்பர் 20 … Read more

கொழும்பு மாளிகையிலிருந்து வெளியேறினார் மகிந்த ராஜபக்ச: வெளிநாடு தப்பிச் செல்ல திட்டமா?

இலங்கையில் வன்முறை தீவிரமடைந்துவரும் நிலையில் பிரதமர் பதவியை ராஜினாமா செய்த மகிந்த ராஜபக்ச, தலைநகர் கொழும்புவில் உள்ள பிரதமர் மாளிகையிலிருந்து ராணுவப் பாதுகாப்புடன் வெளியேறினார். இந்நிலையில், மருத்துவ சிகிச்சை என்ற பெயரில் அவர் வெளிநாடு தப்பிச் செல்லவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னதாக நேற்று காலையிலேயே மகிந்த ராஜபக்சவின் மகன்களில் ஒருவரான யோஷித ராஜபக்ச இலங்கை பண்டாரநாயகே சர்வதேச விமான நிலையத்திலிருந்து வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றுள்ளார். ஆனால் அவர் எந்த நாட்டுக்குச் சென்றார் என்ற விவரம் ஏதுமில்லை. போராட்டமும் … Read more

ஜிப்மரில் இந்தி கட்டாயம்: தமிழை புறக்கணித்து இந்தியை திணிக்கவில்லை – ஆளுநர் தமிழிசை விளக்கம்

புதுச்சேரி: புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இந்தி திணிக்கப்படவில்லை. நிர்வாக ரீதியாக வெளியான சுற்றறிக்கை தவறாக திரிக்கப்பட்டுள்ளது. நோயாளிகளுக்கு கொடுக்கப்படும் அறிக்கை, மருத்துவச் சேவை, குறிப்பு தமிழில்தான் வழங்கப்படும். இதற்கான போராட்டங்கள் தேவையற்றது என்று துணைநிலை ஆளுநர் தமிழிசை தெரிவித்துள்ளார். மத்திய சுகாதாரத் துறை நிதியளிப்பில், தன்னாட்சி அந்தஸ்து பெற்று இயங்கி வருகிறது புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிலையம். இங்குள்ள மருத்துவமனையை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள தமிழ் பேசும் பெரும்பான்மையானோர் … Read more

ரஷ்யா-உக்ரைன் போர் எதிரொலி: சுகோய்-30 போர் விமானங்களை மேம்படுத்தும் முடிவு தள்ளிவைப்பு

புதுடெல்லி: இந்திய விமானப் படையில் சுகோய்-30 எம்கேஐ போர் விமானங்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இந்த சுகோய்-30 ரக விமானங்களை ரஷ்யா தயாரித்து வழங்கி வருகிறது. தற்போது இந்திய விமானப் படையில் 272 சுகோய்-30 எம்கேஐ ரக விமானங்கள் உள்ளன. இந்த விமானங்களின் பாகங்கள் ரஷ்யாவில் இருந்து கொண்டு வரப்பட்டு பெங்களூருவில் உள்ள பொதுத் துறை நிறுவனமான இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்தில் (எச்ஏஎல்) பொருத்தப்பட்டு விமானம் இயக்கப்படுகிறது. மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள எச்ஏஎல் நாசிக் மையத்திலும் சுகோய் … Read more