அமர்நாத் பனிலிங்கத்தை தரிசிக்க இதுவரை 1.5 லட்சம் பேர் பதிவு

புதுடெல்லி: ஜம்மு-காஷ்மீரில் உள்ள அமர்நாத்குகைக் கோயிலில் இயற்கையாக உருவாகும் பனி லிங்கத்தை தரிசிக்க அமர்நாத் யாத்திரை ஆண்டுதோறும் நடைபெறும். எனினும், கரோனா தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக யாத்திரை நடை பெறவில்லை. இந்த ஆண்டுக்கான அமர்நாத் யாத்திரை ஜூன் 30-ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 11-ம் தேதி நிறைவடைகிறது. இந்நிலையில் யாத்திரைக்கான முன்பதிவு தொடங்கிவிட்டது. 13 வயதுக்கு மேற்பட்டோர், 75 வயதுக்கும் குறைவானவர்கள் மட்டுமே யாத்திரையில் கலந்து கொள்ள முடியும் என அறிவிக்கப் பட்டுள்ளது. தற்போது … Read more

இலங்கை நிவாரண நிதிக்காக காங்கிரஸ் கட்சி சார்பில் ரூ.10 லட்சம் நிதி: முதல்வரிடம் கே.எஸ்.அழகிரி வழங்கினார்

சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, முதல்வர் ஸ்டாலினை நேற்று சந்தித்து, காங்கிரஸ் கட்சி சார்பில் இலங்கை நிவாரண நிதியாக ரூ.10 லட்சம் வழங்கினார். பொருளாதார நெருக்கடியால் இலங்கையில் வாடும் மக்களின் நலன்காக்க, தமிழக அரசு சார்பில் ரூ.80 கோடி மதிப்பில் 40 ஆயிரம் டன் அரிசி, ரூ.28 கோடியில் 137 வகையான மருந்துப் பொருட்கள், ரூ.15 கோடியில் 500 டன் பால் பவுடர் என மொத்தம் ரூ.123 கோடி மதிப்பில் நிவாரணப் பொருட்களை அனுப்ப, தமிழக … Read more

என்கவுன்ட்டரில் 2 தீவிரவாதிகள் உயிரிழப்பு

ஸ்ரீநகர்: தெற்கு காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் சேயான் தேவ்சர் பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்தப் பகுதியை சுற்றி வளைத்து பாதுகாப்பு படையினர் நேற்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது ஓரிடத்தில்மறைந் திருந்த தீவிரவாதிகள், பாது காப்பு படையினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர்.அதற்கு பாதுகாப்புப் படையினர் பதிலடி கொடுத்தனர். நீண்ட நேரம்நடந்த துப்பாக்கிச் சண்டையில் 2 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். இறந்த பாகிஸ்தான் தீவிரவாதியின் பெயர் ஹைதர். வடக்கு காஷ்மீரில் 2 ஆண்டுக்கும் … Read more

இறைச்சி விற்கும் உணவகங்களுக்கு கட்டுப்பாடுகள்: உணவு பாதுகாப்புத் துறை முடிவு

சென்னை: கேரள மாநிலம் காசர்கோடு அருகேயுள்ள செருவத்தூரில், ஓர் உணவகத்தில் ஷவர்மா சாப்பிட்ட பள்ளி மாணவி தேவநந்தா உயிரிழந்தார். அவர் சாப்பிட்ட ஷவர்மாவில் ‘ஷிகெல்லா’ என்ற பாக்டீரியா இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, தமிழகம் முழுவதும் ஷவர்மா விற்பனை செய்யும் கடைகளில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இந்தநிலையில், தமிழகம் முழுவதும் ஷவர்மா உள்ளிட்ட இறைச்சி உணவுகளை விற்பனை செய்யும் உணவகங்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதிக்க உணவுப் பாதுகாப்புத் துறை முடிவு செய்துள்ளது. இது … Read more

முஸ்லிம் மதத்துக்கு எதிரான கொலை: ஒவைஸி கருத்து

ஹைதராபாத்: ஹைதராபாத் அடுத்துள்ள ரங்காரெட்டி மாவட்டம், மார் பல்லி கிராமத்தை சேர்ந்த நாக ராஜுவும், பக்கத்து கிராமமான கன்பூர் கிராமத்தை சேர்ந்த சையது அஷ்ரின் சுல்தானாவும் காதலித்தனர். இதற்கு சுல்தானா வீட்டில் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். கடும் எதிர்ப்பை மீறி கடந்த ஜன. 31-ல் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். கடந்த புதன்கிழமை இரவில், சூரூர்நகர் பகுதியில் நாகராஜுவும், அஷ்ரின் சுல்தானாவும் மோட்டார் சைக்கிளில் சென்றனர். அப்போது சுல்தானாவின் சகோதரர் சையத் மோபின் அகமது, அவரது நண்பர் … Read more

234 தொகுதிகளிலும் மே 22-ம் தேதி வரை திமுக அரசின் ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்

சென்னை: தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் வரும் 22-ம் தேதி வரை திமுக அரசின் ஓராண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டங்கள் நடைபெற உள்ளன. இது தொடர்பாக, திமுக தலைமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: திமுகஅரசின் ஓராண்டு கால சாதனைகளை விளக்கி 234 தொகுதிகளிலும், `ஓயாத உழைப்பின் ஓராண்டுசாதனை விளக்கப் பொதுக்கூட்டங்கள்’ மே 8-ம் தேதி முதல் (நேற்று) முதல் வரும் 22-ம் தேதி வரை நடைபெற உள்ளன. இந்தப் பொதுக்கூட்டங்களை சிறப்பாக நடத்தி, அதன் விவரங்களை தலைமைக் கழகத்துக்கு … Read more

குடியரசுத் தலைவர் தேர்தலில் எம்.பி.க்களின் வாக்கு மதிப்பு 708-ல் இருந்து 700-ஆக குறைகிறது

புதுடெல்லி: குடியரசுத் தலைவர் தேர்தலில் மக்களவை, மாநிலங்களவை எம்.பி.க்கள், மாநிலங்கள், டெல்லி, புதுச்சேரி மற்றும் ஜம்மு காஷ்மீர் உட்பட யூனியன் பிரதேசங்களின் சட்டப்பேரவை உறுப்பினர்கள் பங்கு பெறுபவர். எம்.பி., எம்எல்ஏ.க்களின் வாக்குகளுக்கு தனித்தனி மதிப்பு உண்டு. கடந்த 2019-ம் ஆண்டு ஆகஸ்ட்மாதம் ஜம்மு காஷ்மீர் இரண்டாக பிரிக்கப்படுவதற்கு முன்பாக, அங்கு 83 சட்டப்பேரவை தொகுதிகள் இருந்தன. ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு சட்டத்தின்படி, ஜம்முகாஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் சட்டப்பேரவை அமைக்கப்படும், லடாக் பகுதி மத்திய அரசால் நேரடியாக நிர்வகிக்கப்படும். … Read more

தக்காளி விலை ரூ.45 ஆனது

சென்னை: கோயம்பேடு சந்தையில் வரத்து குறைவு காரணமாக கடந்த ஒரு மாதமாக தக்காளி விலை உயர்ந்து வருகிறது. கடந்த சில தினங்களாக மொத்த விலையில் கிலோ ரூ.60 வரை விற்கப்பட்டு வந்தது. தற்போது வரத்து அதிகரித்துள்ள நிலையில் தக்காளி விலை கிலோ ரூ.45 ஆக குறைந்துள்ளது. மற்ற காய்கறிகளான பீன்ஸ் ரூ.40, பாகற்காய், கத்தரிக்காய், கேரட் தலா ரூ.20, உருளைக்கிழங்கு ரூ.19, பீட்ரூட், நூக்கல் ரூ.18, புடலங்காய் தலா ரூ.15, முட்டைக்கோஸ், முருங்கைக்காய், முள்ளங்கி தலா ரூ.10, … Read more

தெற்காசியாவின் வாகன அழிப்பு கேந்திரமாக இந்தியா உருவாகும்: மத்திய அமைச்சர் நிதின் கட்கரி நம்பிக்கை

புதுடெல்லி: கடந்த நிதி ஆண்டின் பட்ஜெட் அறிவிப்பின்போது, மத்திய அரசு வாகன அழிப்புக் கொள்கையை அறிவித்தது. 20 ஆண்டுகளுக்கு மேலாகப் பயன்பாட்டில் இருக்கும் தனிநபர் வாகனங்களும் 15 ஆண்டுகளுக்கு மேலான வர்த்தக வாகனங்களும் தகுதி சோதனைக்கு உட்படுத்தப்படும். தேர்ச்சியடையாத வாகனங்கள் அழிக்கப்படும் என்றும் மத்திய அரசு கூறியது. வாகன அழிப்புக் கொள்கை இவ்வாண்டு ஏப்ரல் 1 முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. இதுதொடர்பாக மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி கடந்த வெள்ளிக்கிழமை … Read more

பாதுகாப்பு துறை தகவலை திருடும் பாகிஸ்தான் உளவு அமைப்பு: தேசிய புலனாய்வு முகமை விசாரணை

புதுடெல்லி: பாதுகாப்புத் துறை அதிகாரிகளின் மின்னணு கருவிகளில் இருந்து ரகசிய தகவலை திருடுவதற்காக ஒரு முகநூல் பக்கத்தை பாகிஸ்தானின் உளவுத் துறை (ஐஎஸ்ஐ) உருவாக்கியுள்ளது குறித்து தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) விசாரணை நடத்துகிறது. இந்தியாவின் பாதுகாப்பு தொடர்பான ரகசிய தகவல்களை திருடுவதற்காக, பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ, முகநூலில் ஷாந்தி படேல் என்ற பெயரில் ஒரு பக்கத்தை தொடங்கி உள்ளதாக கூறப்படுகிறது. இதன் மூலம் ஐஎஸ்ஐ உளவாளிகள், பாதுகாப்புத் துறை மற்றும் அதன்அதிகாரிகளுடன் சமூக வலைதளங்கள் … Read more