'பட்டினப்பிரவேசம் நடத்த முதல்வர் ஸ்டாலின் அனுமதி' – தருமபுரம் ஆதீனம் தகவல்

மயிலாடுதுறை: பட்டினப்பிரவேசம் விழாவை வழக்கம்போல் நடத்த்திக் கொள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அனுமதி அளித்திருக்கிறார் என்று தருமபுரம் ஆதீனம் கூறியுள்ளார். இது தொடர்பாக தருமபுரம் ஆதீனம் தம்பிரான் சுவாமிகள், மயிலாடுதுறையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், “பட்டினப்பிரவேசம் விழாவை நடத்தலாம் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அனுமதி அளித்திருக்கிறார். அவருக்கு நமது நல் ஆசிகள். இந்த விழாவை எப்படியும் தொடர்ந்து நடத்த வேண்டும் என்று நாம் கோரிக்கை வைத்தோம். அதற்காக அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு … Read more

'இந்து மத கலாச்சாரம், பண்பாட்டிற்கு எதிராக தமிழக அரசு செயல்படுகிறது' – மத்திய அமைச்சர் எல்.முருகன் 

தூத்துக்குடி: இந்து மதத்தின் கலாச்சாரத்துக்கும், இந்து பண்பாட்டுக்கும் எதிராக தமிழக அரசாங்கம் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. தமிழக அரசு அனைவருக்கும் சமமான அரசாக இருக்க வேண்டும் என்று மத்திய இணையமைச்சர் எல்.முருகன் கூறியுள்ளார். மத்திய தகவல் ஒளிபரப்புத்துறை இணையமைச்சர் எல்.முருகன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: ” திமுக தேர்தல் வாக்குறுதிகளில் என்ன சொன்னார்களோ, அதனை செய்வதற்கு தவறியிருக்கிறார்கள். சில பொய்யான தேர்தல் அறிக்கைகளைக் கூறி மக்களிடத்தில் வாக்குகளைப் பெற்றுவிட்டு, ஒருவருடம் ஆன பின்னரும்கூட தேர்தல் வாக்குறுதிகள் … Read more

'பதிவேடு தொடங்கி கணக்குகள் வரை எல்லாமே இந்தியில் தான் இருக்க வேண்டும்' – ஜிப்மர் இயக்குநர் உத்தரவு

புதுச்சேரி: ஜிப்மரில் அனைத்து பதிவுகளிலும் இந்தி கட்டாயம் என்று அதன் இயக்குநர் ராகேஷ் அகர்வால் உத்தரவிட்டுள்ளார். அதன் குறிப்பாணையை அனைத்து துறைகளுக்கும் அனுப்பியுள்ளார். புதுச்சேரியில் மத்திய அரசு மருத்துவமனையான ஜிப்மர் உள்ளது. இங்கு புதுச்சேரி மட்டுமில்லாமல் தமிழகத்தின் பல மாவட்டங்களில் இருந்தும் மக்கள் சிகிச்சைக்காக வருகின்றனர். இச்சூழலில் புதுச்சேரி ஜிப்மர் இயக்குநர் ராகேஷ் அகர்வால் பிறப்பித்துள்ள உத்தரவு அலுவல் மொழி விதி 1976-ன்படி மத்திய அரசு அலுவலகங்களில் பயன்படுத்தப்படும் கோப்புகள், பதிவேடுகள், தலைப்புகள் ஆகியவற்றில் இந்தி, ஆங்கிலம் … Read more

பழைய ஓய்வூதியத் திட்டம்; அரசு பொறுப்பை தட்டிக்கழிக்க கூடாது: ராமதாஸ்

சென்னை: பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துவதில் அரசு பொறுப்பை தட்டிக்கழிக்க கூடாது, செயல்படுத்த வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துவதற்கு அதிக செலவு ஆகும் என்பதால், அதை செயல்படுத்துவது சாத்தியமல்ல என்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியிருக்கிறார். அமைச்சரின் இந்த அறிவிப்பு அரசு ஊழியர்களை அதிர்ச்சியடையச் செய்திருக்கிறது. தமிழக சட்டப்பேரவையில் மனிதவள மேலாண்மைத் துறை மானியக் கோரிக்கை மீதான … Read more

ஜிப்மரில் இந்தி கட்டாயம் | இயக்குநர் உத்தரவை எதிர்த்து திமுக நாளை ஆர்ப்பாட்டம்

புதுச்சேரி: ஜிப்மரில் இந்தி கட்டாயம் என்ற இயக்குநர் உத்தரவை எதிர்த்து திமுக நாளை ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக அறிவித்துள்ளது. இதுகுறித்து புதுச்சேரி மாநில திமுக அமைப்பாளரும், எதிர்க்கட்சித் தலைவர் சிவா வெளியிட்டுள்ள அறிக்கையில் ”புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை தொடர்ந்து மாநில உரிமைகளைப் பறித்து வருகின்றது. புதுச்சேரி நிலப்பரப்பில் உள்ள ஜிப்மர் மருத்துவமனையில் புதுச்சேரி இளைஞர்கள் வேலை வாய்ப்பில் புறக்கணிக்கப்பட்டு வருகின்றனர். மருத்துவர், செவிலியர், அலுவலக அதிகாரிகள் பணியிடங்கள் முற்றிலும் வெளிமாநிலத்தவர்களுக்கு நிரந்தர அடிப்படையில் வழங்கப்பட்டு வருகிறது. துப்புரவுப் … Read more

பாஜகவில் இணைந்தார் திருச்சி சிவா எம்.பி மகன் சூர்யா

சென்னை: திமுக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவாவின் மகன் சூர்யா சிவா, பாஜகவில் இணைந்துள்ளார். மாற்றுக் கட்சியில் இணைய தனது தந்தை மறுத்த நிலையில் அதனை தான் மீறியுள்ளதாக தெரிவித்துள்ளார் அவர். நாடாளுமன்றத்தில் திமுக மாநிலங்களவை குழுத் தலைவராகவும், திமுக கொள்கை பரப்புச் செயலாளராகவும் இருப்பவர் திருச்சி சிவா. இவரது மகன் சூர்யா சிவா. இவர், திமுகவிலிருந்து விலகி பாஜகவில் இணைந்துள்ளார். அவர் பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை முன்னிலையில் அந்த கட்சியில் இணைந்தார். அப்போது அக்கட்சியின் … Read more

தக்காளி காய்ச்சலுக்கும் தக்காளிக்கும் சம்பந்தமில்லை: சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்

சேலம்: 5 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு முகத்தில் தடிப்புகள் வருவதை ஒப்பிட்டு தக்காளி காய்ச்சல் என பெயர் சூட்டப்பட்டுள்ளது. தக்காளிக்கும் இந்த காய்ச்சலுக்கு எந்தவொரு சம்பந்தமும் இல்லை. எனவே மக்கள் தேவையற்ற பீதியடைய வேண்டாம் என்று சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். தமிழகத்தில் இன்று 1 லட்சம் மையங்களில் 29-வது சிறப்பு மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. சேலம் மாவட்டத்துக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற மெகா தடுப்பூசி முகாம்களில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை மா.சுப்பிரமணியன், சுகாதாரச் … Read more

கம்பம் வழங்குதல் நிகழ்வுடன் தொடங்கியது கரூர் மாரியம்மன் கோயில் வைகாசி உற்சவம்

கரூர்: கரூர் மாரியம்மன் கோயில் வைகாசி உற்சவம் பாரம்பரிய கம்பம் வழங்குதல் நிகழ்வுடன் இன்று (மே 8) தொடங்கியது. கரூர் மாரியம்மன் கோயில் வைகாசி உற்சவம் சித்திரை கடைசி ஞாயிற்றுக் கிழமையான இன்று (மே 8ம் தேதி) தொடங்கி, வரும் ஜூன் 5ம் தேதி வரை 29 நாட்கள் நடைபெறுகிறது. இதனையொட்டி கரூர் பாலம்பாள்புரத்தில் கம்பம் வழங்கும் நிகழ்வு இன்று (மே 8ம் தேதி) நடைபெற்றது. 3 கொப்புகள் கொண்ட வேப்ப மரம் பரம்பரை மூப்பன்களால் வெட்டி … Read more

ராமநாதபுரம் | பைக் மீது கார் மோதி விபத்து: நடைப்பயிற்சி சென்றவர் உட்பட 4 பேர் பலி

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பகுதியில் இருசக்கர வாகனம் மற்றும் நடைப்பயிற்ச்சி சென்றவர் மீது கார் மோதியதில் நான்கு பேர் உயிரிழந்தனர். இதுகுறித்து டிஐஜி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் யாதவர் தெருவைச் சேர்ந்த வாசுதேவன் என்பரவது மகன் ஜெகன் என்ற முனீஸ்வரன் (37). இவரது உறவினர் கதிர்வேல் மகன் ஜெகதீஸ்வரன் (18). மண்டபம் மறவர் தெருவைச் சேர்ந்த வம்ச சேகரபாண்டியன் மகன் உமாமகேஸ்வரன் (42). இதில் ஜெகதீஸ் மற்றும் … Read more

கோவிந்தசாமி நகர் மக்கள் வசிப்பிட உரிமையை பாதுகாக்க வேண்டும்: முத்தரசன் வலியுறுத்தல்

சென்னை: சென்னை மயிலாப்பூர் கோவிந்தசாமி நகர் மக்கள் வசிப்பிட உரிமையை முதல்வர் தலையிட்டு பாதுகாக்க வேண்டும் என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா. முத்தரசன் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னை பெருநகர், மயிலாப்பூர் பகுதி 173 வட்டத்தில் ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள கோவிந்தசாமி நகரில் அறுபது ஆண்டுகளுக்கு மேலாக ஏழை மக்கள் குடியிருந்து வரும் குடிசைகளையும், வீடுகளையும் வருவாய்த்துறை அதிகாரிகள் காவல் துறையின் பாதுகாப்போடு புல்டோசர் கொண்டு இடிந்து தகர்ந்து … Read more