பிரதமர் மோடியுடன் அன்புமணி சந்திப்பு: தமிழக நலன் சார்ந்த கோரிக்கைகளை முன்வைத்ததாக தகவல்

சென்னை: டெல்லியில் பிரதமர் மோடியை பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பின்போது, தமிழக மக்கள் நலன் சார்ந்த கோரிக்கைகளை அன்புமணி முன்வைத்ததாக தகவல் வெளியாகியுள்ளது. பாமக தலைவராக அன்புமணி அண்மையில் தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில், அன்புமணி திடீர் பயணமாக டெல்லி சென்றுள்ளார். அங்கு பிரதமர் மோடியின் இல்லத்தில் அவரை சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்பு சுமார் 20 நிமிடங்கள் நடைபெற்றது. இச்சந்திப்பு குறித்து பாமக தலைமை நிலையம் வெளியிட்ட அறிக்கை: இந்தச் சந்திப்பின்போது … Read more

சென்னையில் செப்டம்பருக்குள் மழைநீர் வடிகால் பணிகளை முடிக்க உத்தரவு

சென்னை: சென்னையில் செப்டம்பர் மாதத்திற்குள் மழைநீர் வடிகால் பணிகளை முடிக்க ஆணையர் உத்தரவிட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். சென்னை மாநகராட்சி, வளசரவாக்கம் மண்டலத்தில், மகாத்மா காந்தி மற்றும் ராஜீவ் காந்தி தெருக்களில் வெள்ள தடுப்பு சிறப்பு நிதியின் கீழ் ரூ.2.37 கோடி மதிப்பில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகளை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் “கடந்த 2011-ம் ஆண்டு சென்னை மாநகராட்சியுடன் புறநகர் பகுதிகளில் … Read more

மழைநீர் வடிகால் பணிகள் முறையாக நடைபெறாவிடில் பொறியாளர்கள்தான் பொறுப்பு: சென்னை மாநகராட்சி எச்சரிக்கை

சென்னை: மழைநீர் வடிகால் பணிகள் முறையாக நடைபெறவில்லை என்றால். சம்பந்தப்பட்ட பொறியாளர்களே பொறுப்பு ஏற்க வேண்டும் என சென்னை மாநகராட்சி ஆணையர் உத்தரவிட்டுள்ளார். சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பல்வேறு திட்டங்களின் கீழ் மழைநீர் வடிகால் நடைபெற்று வரக்கூடிய நிலையில் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் தொடர்பாக மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி அனைத்து மண்டல அலுவலர்களுக்கும் கண்காணிப்பு பொறியாளர்களுக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதன் விவரம்: > வேலைகளை தொடங்குவதற்கு முன் லெவல் (நிலைகள்) கட்டாயமாக எடுக்கப்பட்டு … Read more

கோவை | மேட்டு லட்சுமிநாயக்கன் பாளையம் அரசுப் பள்ளியில் சேரும் மாணவர்களுக்கு தலா ரூ.1,000 – தலைமையாசிரியர் ‘பரிசு‘ அறிவிப்பு

கோவை: கோவை மாவட்டம் சுல்தான்பேட்டை அருகே உள்ள தொடக்கப் பள்ளியில் நடப்பாண்டில் சேரும் மாணவர்களுக்கு சொந்த நிதியில் இருந்து தலா ரூ.1,000 பரிசாக வழங்கப்படும் என அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் அறிவித்துள்ளார். கோவை சுல்தான்பேட்டை ஒன்றியத்துக்கு உட்பட்ட மேட்டு லட்சுமிநாயக்கன் பாளையத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி உள்ளது. கடந்த 1950-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்தப் பள்ளியில் தற்போது ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை 15 மாணவ, மாணவிகள் மட்டுமே பயின்று வருகின்றனர். இப்பள்ளியில் … Read more

மக்கள் நல பணியாளர்களுக்கு மீண்டும் பணி: தகுதிகள் என்னென்ன?

சென்னை: மக்கள் நல பணியாளர்களுக்கு மீண்டும் பணி வழங்குவது தொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் ஊரக வளர்ச்சித் துறை சார்பில் கடிதம் எழுதப்பட்டுள்ளது. மக்கள் நலப் பணியாளர்களுக்கு மீண்டும் பணி வழங்கப்படும் என்று கடந்த சட்டப்பேரவை கூட்டத் தொடரில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இவர்கள் அனைவரும் ஊரக வேலைவாய்ப்பு திட்ட ஒருங்கிணைப்பாளராக பணியமர்த்தப்படுவர் என்றும், மதிப்பூதியம் ரூ.7,500 ஆக உயர்த்தி வழங்கப்படும் என்றும் முதல்வர் அறிவித்தார். இந்நிலையில் இதற்கான வழிகாட்டுதல்களை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக … Read more

வைகாசி விசாகத்தை ஒட்டி மதுரையில் இருந்து பழநி-க்கு சிறப்பு ரயில்: மதுரை கோட்ட ரயில்வே ஏற்பாடு

மதுரை: வைகாசி விசாகத்தை ஒட்டி வரும் 12-ம் தேதி, பயணிகளின் வசதிக்காக மதுரையில் இருந்து பழநிக்கு சிறப்பு முன்பதிவில்லா விரைவு ரயில் இயக்கப்படும் என்று மதுரை கோட்ட ரயில்வே தெரிவித்துள்ளது. இது குறித்து மதுரை கோட்ட ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பழநியில் ஜூன் 12-ம் தேதி வைகாசி விசாக திருவிழா நடைபெறுகிறது. இதையொட்டி பயணிகள் வசதிக்காக மதுரை – பழனி ரயில் நிலையங்களுக்கு இடையே சிறப்பு ரயில் ஒன்று இயக்க ரயில்வே நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. … Read more

எண்ணும் எழுத்தும் | ராமேசுவரத்தில் ஆசிரியர்களுக்கான பயிற்சி முகாம் – ஒரு பார்வை

ராமேசுவரம்: கரோனா காலத்தில் 1 முதல் 3-ம் வகுப்பு மாணவர்கள் கற்றலில் ஏற்பட்டுள்ள இடைவெளியை சீர்படுத்த ‘எண்ணும் எழுத்தும்’ எனும் திட்டத்தை நடப்பு கல்வியாண்டில் கல்வித்துறை அறிமுகப்படுத்தவுள்ளது. இதற்காக ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. கரோனா பரவல் காரணமாக கடந்த இரு ஆண்டுகளாக பள்ளி மாணவர்கள் பல்வேறு சிக்கலைச் சந்தித்தனர். ஆன்லைன் மூலமாகவே அதிக நாள்கள் கல்வி பயிலவேண்டிய சூழல் ஏற்பட்டது. எனவே போதிய அளவில் எழுத படிக்க பயிற்சி கிடைக்காத மாணவர்கள் நலன் கருதி தமிழகத்தில் … Read more

ஒமைக்ரான் உருமாற்றங்கள் வேகமாக பரவும் தன்மையுடையது: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: ஒமைக்ரான் உருமாற்றங்கள் வேகமாக பரவும் தன்மையுடையது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று எம்.ஜி.எம் மருத்துமனையில் முதியவர்கள் மத்தியில் அதிகம் காணப்படும் தவறி கீழே விழுவதினால் ஏற்படுகின்ற பாதிப்புகள் குறித்தும், கீழே விழுவதை தவிர்க்கும் வகையிலான விழிப்புணர்வு திட்டத்தை தொடங்கிவைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “கரோனா தொற்றின் எண்ணிக்கை தொடர்ந்து கூடிக் கொண்டிருக்கிறது. இந்தியா முழுமைக்கும் 6000-ஐ கடந்த நிலையில், மகாராஷ்டிராவில் மட்டுமே கடந்த 24 … Read more

கழிவுநீர்த் தொட்டிகளை சுத்தப்படுத்தும் ‘ஹோமோசெப்’: களப்பணிக்கு தயாராகும் ஐஐடி மெட்ராஸ்-ன் ரோபோ 

சென்னை: மனிதக் கழிவுகளை மனிதனே அகற்றும் முறையை ஒழிப்பதற்காகக ஐஐடி மெட்ராஸ்-ன் ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ள ரோபோவான ‘ஹோமோசெப்’(HomoSEP) களப்பணிக்கு தயாராக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மனிதகழிவுகளை மனிதன் அகற்றுவதற்கு பல தடைகள், சட்டங்கள் இருந்த போதிலும் மலக்குழி மரணங்கள் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. மனிதக்கழிவுகளை மனிதனே அகற்றும் முறையை ஒழிக்கும் வகையில் ரோபோ ஒன்றைத் தயாரிக்கும் பணியில் மெட்ராஸ் ஐஐடி ஆராய்ச்சியாளர்கள் குழு ஈடுபட்டிருந்தனர். பணிகள் முடிவுற்று களப்பணிக்கு தயாரக உள்ள அந்த ரோபோவிற்கு “ஹோமோசெப்” என்று பெயரிடப்பட்டுள்ளது. களப்பணிக்காக, … Read more

ரேஷன் கடை பணியாளர்களின் அகவிலைப்படி உயர்வு குறித்து ஒரு வாரத்துக்குள் முடிவு: தமிழக அரசு

சென்னை: நியாயவிலைக் கடைப் பணியாளர்களின் அகவிலைப்படி உயர்வு குறித்து ஒரு வார காலத்திற்குள் நல்ல முடிவு எடுக்கப்படும் என்று தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நியாய விலை கடை பணியாளர்கள், அகவிலைப்படி உயர்வு, நியாய விலைக் கடைகளுக்கு தனித்துறை, பொட்டல முறை என்பது உள்ளிட்ட ஏழு அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் வேலைநிறுத்தம் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், நியாய விலைக் கடைப் பணியாளர்களின் அகவிலைப்படி உயர்வு குறித்து ஒரு வார காலத்திற்குள் நல்ல முடிவு எடுக்கப்படும் … Read more