எப்போதும் போருக்கு தயார்: வடக்கு கட்டளை பிரிவு கமாண்டர் உறுதி

உதம்பூர்: எப்போதும் போருக்கு தயார் நிலையில் இருக்கிறோம் என்று இந்திய ராணுவத்தின் வடக்கு கட்டளை பிரிவு கமாண்டர் உபேந்திர துவிவேதி தெரிவித்துள்ளார். இந்திய ராணுவத்தில் 7 கட்டளை பிரிவுகள் உள்ளன. இதில் வடக்கு கட்டளை பிரிவின் கீழ் லடாக், ஜம்மு-காஷ்மீர் பகுதிகள் உள்ளன. இந்த கட்டளை பிரிவின் சார்பில் காஷ்மீரின் உதம்பூர் பகுதியில் 2 நாள் தொழில்நுட்ப மாநாடு நேற்று தொடங்கியது. இதில் நவீன ஆயுதங்கள், தொழில்நுட்பங்களை பயன்படுத்துவது குறித்து விவாதிக்கப்படுகிறது. இந்த மாநாட்டில் வடக்கு கட்டளை … Read more

சென்னை விமானநிலைய முனையங்களுக்கு மீண்டும் காமராசர், அண்ணா பெயர்களை சூட்டுக: ராமதாஸ்

சென்னை: சென்னை விமானநிலைய வளாகத்தில் உள்ள கட்டிடங்களில் காமராசர், அண்ணா ஆகியோரின் பெயர்ப் பலகைகள் அமைக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து இன்று ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்: “சென்னை விமான நிலையத்தின் உள்நாட்டு மற்றும் பன்னாட்டு முனையங்களுக்கு சூட்டப்பட்டிருந்த பெருந்தலைவர் காமராசர், அறிஞர் அண்ணா ஆகியோர் பெயர்களும், பெயர் பலகைகளும் அகற்றப்பட்டு பத்தாண்டுகள் ஆகப்போகும் நிலையில், அவற்றை மீண்டும் அமைப்பதற்கு விமான நிலைய ஆணையம் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. தமிழகத்தின் உணர்வு … Read more

தாகூர் பிறந்தநாள்: தேசிய கீதம் தந்த பன்முகத்திறமையாளர்

இந்தியாவின் தேசிய கீதத்தை இயற்றியவரும் இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்ற கவிஞருமான ரவீந்திரநாத் தாகூர் பிறந்தநாள் இன்று (மே 7). அவரைப் பற்றி அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்களின் தொகுப்பு:- மகரிஷி தேவேந்திரநாத் தாகூர் – சரளாதேவி இணையரின் மகனாக கல்கத்தாவில் ஜோரசங்கோ மாளிகையில் 07.05.1861 அன்று ரவீந்திரநாத் தாகூர் பிறந்தார். அவருடைய தாத்தா துவாரகாநாத் புகழ்பெற்ற செல்வந்தர். சீர்திருத்தவாதி ராஜாராம் மோகன் ராயின் நண்பர் இவர். இயல்பாகவே மிகவும் முற்போக்கான, கலைக்குடும்பம் தாகூருடையது. தாகூரின் தந்தையான … Read more

போட்டித் தேர்வுகளுக்கு தயார்படுத்த ஆதிதிராவிடர், பழங்குடியினத்தை சேர்ந்த 10 ஆயிரம் பட்டதாரிகளுக்கு ரூ.10 கோடியில் சிறப்பு பயிற்சி: அமைச்சர் கயல்விழி செல்வராஜ் அறிவிப்பு

சென்னை: அரசு வேலைவாய்ப்புக்கான போட்டித் தேர்வுகளுக்கு தயார்படுத்த 10 ஆயிரம்ஆதிதிராவிடர், பழங்குடியின பட்டதாரிகளுக்கு ரூ.10 கோடி செலவில் சிறப்பு பயிற்சி அளிக்கப்படும் என்று அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ் அறிவித்தார். சட்டப்பேரவையில் நேற்று, ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலத் துறை மானியக்கோரிக்கை மீதான விவாதம் நடந்தது. இதில் உறுப்பினர்களின் பல்வேறு கோரிக்கைகள், கேள்விகளுக்கு துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் பதில் அளித்துப் பேசியதாவது: அரசு துறைகளில் ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கான 10,402 பின்னடைவு காலி பணியிடங்கள் (பேக்லாக் வேகன்சி) கண்டறியப்பட்டு அவற்றை … Read more

மத்தியப்பிரதேசத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து: 2 பெண்கள் உள்பட 7 பேர் பலி 

மத்தியப்பிரதேச மாநிலம் இந்தூரில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 2 பெண்கள் உள்பட 7 பேர் உடல் கருகி பலியாகினர். 5-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இவர்களில் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரம் தெரிவித்துள்ளது. இந்தூர் நகரின் ஸ்வர்ண பாக் காலனியில் இரண்டடுக்கு மாடி குடியிருப்பு ஒன்று உள்ளது. இதில் பல குடும்பங்கள் வசிக்கின்றன. இந்நிலையில் இன்று (மே 7) அதிகாலை 3.10 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டதாகத் தெரிகிறது. அதிகாலை நேரம் … Read more

தருமபுரம் ஆதீனம் பட்டின பிரவேசம் விஷயத்தில் அனைவரும் மனம் குளிரும் வகையில் முடிவு: அமைச்சர் சேகர்பாபு தகவல்

சென்னை: தருமபுரம் ஆதீனம் பட்டின பிரவேசம் நிகழ்ச்சி தொடர்பாக அனைத்து மனங்களும் குளிரும் வகையில் முதல்வர் ஸ்டாலின் விரைவில் நல்ல முடிவு எடுப்பார் என்று அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்துள்ளார். சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அறநிலையத் துறை ஆணையர் அலுவலகத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் துறை அதிகாரிகளுக்கு வாக்கி டாக்கிகளை வழங்கி அமைச்சர் சேகர்பாபு பேசியதாவது: நவீன மயமாகும் காலச் சூழ்நிலைக்கேற்ப பணிகளை விரைவாகவும் தொழில் நுட்ப ரீதியாகவும் மேற்கொள்ள வேண்டிய நிலையில் அதற்கேற்றவாறு நிர்வாக நடவடிக்கைகளை நவீனப்படுத்த … Read more

'கொலைகாரர்களுக்கு நாங்கள் துணைபோவதில்லை' – ஹைதராபாத் சம்பவத்தில் ஓவைசி கருத்து

மதம்மாறி திருமணம் செய்துகொண்ட தனது சகோதரியின் கணவரை இரும்புக் கம்பியால் அடித்துக் கொலை செய்த நபருக்கு ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவர் அசாதுதீன் ஒவைசி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். கொலைகாரர்களுக்கு தாங்கள் ஒருபோதும் துணைபோவதில்லை என்றும். அந்த நபரின் செயல் இஸ்லாமிய சட்டப்படி மிக மோசமான கிரிமனல் குற்றம் என்றும் அவர் தெரிவித்தார். ஓவைசி கண்டனம்: இந்நிலையில் இச்சம்பவம் குறித்து பேசிய ஓவைசி, “சூரூர்நகர் சம்பவத்தை வன்மையாகக் கண்டிக்கிறோம். அந்தப் பெண் விருப்பப்பட்டு நாகராஜுவை திருமணம் செய்து கொண்டுள்ளார். … Read more

சிங்கப்பூர் பவுத்த கோயிலில் செல்லப் பிராணிகளுக்காக சிறப்பு பிரார்த்தனை

சிங்கப்பூர்: புத்த பூர்ணிமாவை முன்னிட்டு சிங்கப்பூர் பவுத்த கோயிலில் செல்லப் பிராணிகளுக்காக சிறப்பு பிரார்த்தனை நடைபெறுகிறது. சிங்கப்பூரில் வசிக்கும் திபெத் வம்சாவழியினர் கடந்த 2001-ம் ஆண்டில் சிங்கப்பூரின் ஜாலான் புசார் பகுதியில் தெக்சன் சோலிங் என்ற பவுத்த கோயிலை நிர்மாணித்தனர். இந்த கோயிலில் பக்தர்கள் மட்டுமன்றி விலங்குகளுக்கும் அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. வரும் 16-ம் தேதி புத்த பூர்ணிமாவை (புத்தர் பிறந்த நாள்) விமரிசையாக கொண்டாட தெக்சன் சோலிங் பவுத்த கோயிலில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. … Read more

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசின் ஓராண்டு நிறைவு – பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு

சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பதவியேற்று ஓராண்டு நிறைவு பெற்றுள்ளதையடுத்து, பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு அரசு மற்றும் கட்சி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழக சட்டப்பேரவைக்கு கடந்த 2021-ம் ஆண்டு ஏப்ரலில் தேர்தல் நடந்தது. இதில் திமுக அறுதிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. இதையடுத்து, மே 7-ம் தேதி ஆளுநர் மாளிகையில் நடந்த விழாவில், தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவி ஏற்றார். துரைமுருகன் உள்ளிட்ட அமைச்சர்களும் பதவி ஏற்றனர். பின்னர், தலைமைச் செயலகத்துக்கு … Read more

வாரணாசி கியான்வாபி மசூதி வளாகத்தில் சிங்கார கவுரி அம்மனை தரிசிக்க கோரிய மனு – பலத்த பாதுகாப்புடன் நீதிமன்ற குழு களஆய்வு

புதுடெல்லி: உத்தர பிரதேசத்தில் காசி எனும் வாரணாசியில் காசி விஸ்வநாதர் கோயில் உள்ளது. இதை ஒட்டியுள்ள கியான்வாபி மசூதி வளாகத்தின் வெளிப்புறச் சுவரில் சிங்கார கவுரி அம்மன் சிலை அமைந்துள்ளது. இதை, காசிவிஸ்வநாதர் கோயில் வளாகத்திலுள்ள முக்தி மண்டபத்திலிருந்த படி தரிசிக்க வேண்டும். இந்த சுவர் மசூதி மற்றும் விஸ்வநாதர் கோயிலுக்கு இடையே அமைந்துள்ளது. பாபர் மசூதி இடிப்பு விவகாரத்தினால், 1991 முதல் வருடம் ஒருமுறை மட்டும் சிங்கார கவுரி அம்மனுக்கு பூஜைகள் செய்ய அனுமதிக்கப்படுகிறது. இந்நிலையில், … Read more