10 கேள்விகள் + 10 கருத்துகள் | கே.எஸ்.அழகிரி – சீமான் ‘உத்தி’ முதல் அண்ணாமலையின் ‘நகர்வு’ வரை

“இன்றைக்கு காங்கிரஸ் அதிகாரத்தில் இல்லாத காரணத்தினால்தான் ஆர்எஸ்எஸ்-சின் சித்தாந்தத்தை மக்கள் பார்க்கின்றனர்; விடுதலைப் புலிகள் ஆதரவாளர்கள் ஒரு காலத்திலும் தமிழகத்தில் வெற்றி பெற்றதே கிடையாது; இங்கு வழிகிடைக்கும் என்று பார்க்கிறார் அண்ணாமலை…” – இவ்வாறாக பல கருத்துகளை அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி. இந்து தமிழ் திசை-க்கு அவர் அளித்த வீடியோ நேர்காணலில் இருந்து 10 ‘நறுக்’ பகுதிகள்… விலகிய கபில் சிபல் குறித்து… “யார் தலைவர்கள், யார் மாட்சிமை மிக்கவர்கள், பேராண்மை … Read more

‘அம்மா சொன்னது கதை அல்ல…’ – உக்ரைனின் மாற்றுத்திறனாளி ரசிகரை நேரில் சந்தித்த WWE நட்சத்திரம் ஜான் சீனா!

உக்ரைன் – ரஷ்யா போரினால் பாதிக்கப்பட்டு உடமைகளை இழந்த தனது 19 வயது மாற்றுத்திறனாளி ரசிகரை நேரில் சந்தித்து ஊக்கம் கொடுத்துள்ளார் WWE நட்சத்திரம் ஜான் சீனா. இந்த உருக்கமான சந்திப்பு குறித்து பதிவு ஒன்றை சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளது WWE. WWE நட்சத்திர வீரரும், நடிகருமான ஜான் சீனாவுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். அவரது ஆட்ட முறை மற்றும் அவரது துடிப்பான செயல்பாட்டை பார்க்கவே அமர்க்களமாக இருக்கும். சீனா ரிங்கிற்குள் என்ட்ரி கொடுக்கும்போது … Read more

புதுக்கோட்டை – கறம்பக்குடி அரசு மருத்துவமனையில் காலிப் பணியிடங்களை நிரப்பக் கோரி மறியல்: தமுமுக-வினர் 20 பேர் கைது

புதுக்கோட்டை: கறம்பக்குடியில் அரசு மருத்துவமனையில் காலிப் பணியிடங்களை நிரப்பக் கோரி மறியல் செய்த 20 பேர் கைது செய்யப்பட்டனர். இதனால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியில் சாலை மறியிலில் ஈடுபட்ட தமுமுகவைச் சேர்ந்த 20 பேரை போலீஸார் இன்று (ஜூன் 9) கைது செய்தனர். ‘கறம்பக்குடி அரசு மருத்துவமனையில் மருத்துவம் மற்றும் மருத்துவரல்லா பணியாளர்களின் காலிப் பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும். பயன்பாடின்றி கிடக்கும் மருத்துவ உபகரணங்களை செயல்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும். … Read more

திருச்சி பெரியகடை வீதி பகுதியில் மூச்சுமுட்டும் போக்குவரத்து நெரிசல்: நடவடிக்கை எப்போது?

திருச்சி: திருச்சி பெரியகடைவீதியில் ஒருவழிப்பாதையில் போக்குவரத்து விதிமுறைகளை மீறி இருபுறமும் வாகனங்கள் செல்வதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதற்கு காவல் துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருச்சியின் மிகப்பெரிய வர்த்தகப்பகுதியான பெரிய கடை வீதியில், காந்தி மார்க்கெட் முதல் மலைக்கோட்டை வரைஆயிரத்துக்கும் மேற்பட்ட கடைகள் மற்றும்வணிக நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இதனால் இச்சாலையில் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் வந்து செல்கின்றன. மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிஎன்பதால் … Read more

வேளாண் விளைபொருளுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை உயர்வு

புதுடெல்லி: பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்துக்குப் பிறகு மத்திய அமைச்சர் அனுராக் தாக்குர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஆண்டுதோறும் காரிப் பருவத்துக்கான விதைப்புப் பணி தொடங்கும்போது, விளைபொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை உயர்வு குறித்த அறிவிப்பை வெளியிடுவது விவசாயிகளுக்கு ஊக்கமளிப்பதாக இருக்கும். இதன்மூலம் விவசாயிகளின் விளைபொருட்களுக்கு நல்ல விலை கிடைக்கும். அந்த வகையில், நடப்பு 2022-23 காரிப் பருவகாலத்தில் பயிரிடப்படும் 14 வகை வேளாண் விளைபொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு … Read more

உலக அளவில் கரோனா குறைந்து வருகிறது: உலக சுகாதார நிறுவனம்

ஜெனீவா: உலக அளவில் கரோனா பாதிப்பு குறைந்து வருவதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து உலக சுகாதார நிறுவனம் தரப்பில் வெளியிட்ட தகவலில், “மே மாதம் இறுதி வாரத்தில் உலக அளவில் சுமார் 30 லட்சம் பேருக்கு கரோனா உறுதிப்படுத்தப்பட்டது. இத்துடன் ஒப்பிடுகையில் இந்த வாரம் கரோனா பாதிப்பு 12% குறைந்துள்ளது. உலக அளவில் கரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. கரோனாவினால் ஏற்படும் உயிரிழப்பும் குறைந்து வருகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக அளவில் கடந்த 24 … Read more

புதுச்சேரி சுற்றுலாத் தலங்களில் தவிர்க்க வேண்டிய 15 வகை பிளாஸ்டிக் பொருட்கள்: அரசு பட்டியல்

புதுச்சேரி: புதுச்சேரியில் சுற்றுலாத் தலங்கள், கடற்கரைப் பகுதிகளில் 15 வகையான பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டுமென பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு மாநில அரசு அறிவுறுத்தியுள்ளது. இது குறித்து புதுச்சேரி பொதுப் பணி மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சர் லட்சுமி நாராயணன் இன்று வெளியிட்ட செய்திக் குறிப்பு: “புதுச்சேரியில் உள்ள சுற்றுலாத் தலங்கள், கடற்கரைப் பகுதிகள், தங்கும் விடுதிகளுக்கு செல்லும் சுற்றுலாப் பயணிகள், பொதுமக்கள் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை அதிகளவில் பயன்படுத்துவதால் சுற்றுச்சூழலுக்கு … Read more

2 மாத சம்பளத்தில் பழைய பேருந்தை நூலகமாக மாற்றிய மேகாலயா பேராசிரியர்கள்!

வகுப்புக்கு வந்தோமா, பாடம் நடத்தினோமா, கடமை முடிந்தது என்று இல்லாமல், மாணவர்களுக்காக பேராசிரியர்கள் சிலர் சிந்தித்தன் விளைவாக பழைய பேருந்து ஒன்று பயன் தரும் நூலகமாக மாறியுள்ளது. மேகாலயா மாநில துரா அரசுக் கல்லூரியின் ஆங்கிலத் துறை பேராசிரியர்கள்தான் இதனை செய்துள்ளனர். இந்த பேருந்து மினி நூலகமாக இருப்பதோடு ஏழை, எளிய மாணவர்கள் தங்களுக்கான புத்தகங்கள், ஆடைகள், எழுது பொருட்கள் ஏன் சில நேரங்களில் உணவுகளை கூட இங்கிருந்து பெற முடிகிறது. இது குறித்து அந்தக் கல்லூரியின் … Read more

கூகுள் மேப்ஸ் மூலம் உங்கள் பகுதியின் காற்றின் தரத்தை அறிந்துகொள்வது எப்படி? – ஒரு விரைவு வழிகாட்டுதல்

கூகுள் மேப்ஸ் துணை கொண்டு ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோன் பயனர்கள் தாங்கள் வசித்து வரும் பகுதியில் இருக்கும் காற்றின் தரத்தை அறிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அது எப்படி என்பதை சற்றே விரிவாக பார்ப்போம். இன்றைய டிஜிட்டல் உலகில் பரவலான மக்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது கூகுள் நிறுவனங்களின் பல்வேறு அப்ளிகேஷன்கள். ஜி பே, குரோம், கூகுள் பிரவுசர், கூகுள் டிரைவ், கூகுள் மேப்ஸ் என பல அப்ளிகேஷன்கள் உள்ளன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையிலான பயன்பாட்டுக்காக பயனர்களால் பயன்படுத்தப்பட்டு … Read more

கீழணை வற்றியதால் வீராணம் ஏரியில் இருந்து சென்னைக்கு குடிநீர் அனுப்புவதில் சிக்கல்

கடலூர்: கீழணை வற்றியதால் வீராணம் ஏரியில் இருந்து சென்னைக்கு குடிநீர் அனுப்புவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. கடலூர் மாவட்டத்தின் மிகப்பெரிய நீர் ஆதாரம் வீராணம் ஏரி. இதன் முழு கொள்ளளவு 47.50 அடியாகும். இந்த ஏரி மூலம் கடலூர் மாவட்டத்தின் காவிரி டெல்டா பகுதிகளான காட்டுமன்னார்கோவில், சிதம்பரம், புவனகிரி வட்டப்பகுதிகளில் 48 ஆயிரத்து 850 ஏக்கர் பாசனம் பெறுகிறது. இதனால் இப்பகுதி விவசாயிகள், விவசாயத் தொழிளார்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டமும் நல்ல நிலையில் உயர்ந்துள்ளது. … Read more