விமான நிலையங்களிலும் விமானத்திலும் முகக்கவசம் அணிவது கட்டாயம் – விமான போக்குவரத்து இயக்குநரகம் உத்தரவு

புதுடெல்லி: விமான நிலையங்களிலும், விமானத்தின் உள்ளேயும் பயணிகள் முகக்கவசம் அணிவது மீண்டும் கட்டாயம் என்ற உத்தரவு நேற்று பிறப்பிக்கப்பட்டுள்ளது. நாட்டில் கடந்த சில நாட்களாக கரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இதனால் பல மாநிலங்களில் கரோனாவைக் கட்டுப்படுத்த பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் விமான நிலையத்திலும், விமானத்தில் பயணம் மேற்கொள்ளும் பயணிகள் அனைவரும் முகக்கவசம் கட்டாயம் அணிந்திருக்க வேண்டும் என்றும் விமான பயணத்தின் முழுநேரமும் முகக்கவசத்துடன் இருக்க வேண்டும் எனவும் சிவில் விமான போக்குவரத்து … Read more

நியாய விலைக்கடை ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வை உடனே வழங்கிடுக: ஓபிஎஸ்

சென்னை: “நியாய விலைக் கடைகளில் பணியாற்றும் ஊழியர்கள்மீது மளிகைப் பொருட்கள் திணிக்கப்படுவதைத் தடுத்து நிறுத்தவும், அவர்களுக்கு வழங்க வேண்டிய அகவிலைப்படி உயர்வை உடனே வழங்கவும், இதர கோரிக்கைகள் குறித்து அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று” அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் ” திமுக அரசு பொறுப்பேற்று ஓராண்டு முடிந்துள்ள நிலையில், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், சத்துணவுப் பணியாளர்கள், நியாய விலைக் கடை ஊழியர்கள், … Read more

எத்தகைய சவால்களையும் எதிர்கொள்ளும் வகையில் வலுவான பொருளாதார அடித்தளம் உள்ளது – நிர்மலா சீதாராமன் பேச்சு

புதுடெல்லி: ‘கரோனா காரணமாக உலகளவில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. ரஷ்யா – உக்ரைன் போர் காரணமாக உலகளவில் பணவீக்கம் அதிகரித்துள்ளது. இந்தியா வலுவான பொருளாதார அடித்தளங்களைக் கொண்டிருப்பதால் இந்த சவால்கள் அனைத்தையும் எதிர்கொண்டு பயணிக்கிறது’ என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலாசீதாராமன் தெரிவித்துள்ளார். 2014-ம் ஆண்டுக்குப் பிறகு பொருளாதாரக் கொள்கையில் கொண்டுவரப்பட்ட சீர்திருத்தங்கள் காரணமாகவே இந்தியா பொருளாதார ரீதியாக எத்தகைய சவால்களையும் எதிர்கொள்ளக் கூடியதாக இருக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டார். மத்திய நிதித் துறை மற்றும் … Read more

காவிரி மேலாண்மை ஆணையத் தலைவரின் வரம்பு மீறிய செயலுக்கு கண்டனம்: முத்தரசன்

சென்னை: நதிநீர் பங்கீட்டினை விட்டுவிட்டு மேகேதாட்டு தொடர்பாக விவாதிக்கப்படும் என காவிரி மேலாண்மை ஆணையத் தலைவர் கூறியிருப்பதை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாகக் கண்டிக்கிறது என்று அக்கட்சி மாநில செயலாளர் முத்தரசன் கூறியுள்ளார் இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: “கர்நாடக மாநில அரசு காவிரி நதிநீர் பகிர்வு தொடர்பாக நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு மற்றும் உச்சநீதி மன்றத்தின் இறுதித் தீர்ப்புக்கும் எதிராக மேகேதாட்டு அணை கட்டுவதில் தொடர்ந்து பிடிவாதம் … Read more

’தேவாலயங்களில் சிவலிங்கத்தை தேடும் காலமும் தொலைவில் இல்லை’ – வெறுப்பு அரசியல் குறித்து நசிருதீன் ஷா கருத்து

’தேவாலயங்களில் சிவலிங்கத்தை தேடும் காலமும் தொலைவில் இல்லை’ என்று பாலிவுட் நடிகர் நசிருதீன் ஷா கருத்து தெரிவித்துள்ளார். பாஜக முன்னாள் செய்தித் தொடர்பாளர் நூபுர் சர்மாவின் சர்ச்சைப் பேச்சால் உலகரங்கில் இந்தியா பதில் சொல்லும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. பாஜகவில் இருந்து அவர் நீக்கப்பட்டிருந்தாலும் கூட அவரது பேச்சு ஏற்படுத்திய அதிர்வலைகள் இன்னும் தீரவில்லை. இந்நிலையில், பாலிவுட் நடிகர் நசிருதீன் ஷா இந்தியாவில் வெறுப்பு அரசியல் மேலோங்கி வருவதாக தனது கருத்துகளைத் முன்வைத்துள்ளார். அவருடைய பேச்சிலிருந்து.. பிரதமர் நரேந்திர … Read more

தமிழகத்தில் கடைகள், வணிக நிறுவனங்கள் 24 மணி நேரமும் இயங்க அனுமதி – அரசு உத்தரவின் முழுவிவரம்

சென்னை: தமிழகத்தில் கடைகள் மற்றும் பல்வேறு நிறுவனங்களை 24 மணி நேரமும் திறந்து வைத்திருக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இந்த அனுமதி 3 ஆண்டுகளுக்கு அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் மாநிலங்கள், மாவட்டங்கள் வாரியாக கடைகள், நிறுவனங்களை திறந்து வைப்பதில் அந்தந்த பகுதியின் சூழலுக்கேற்ப நேரம் நிர்ணயிக்கப்பட்டு பின்பற்றப்பட்டு வருகிறது. கடந்த 2016-ம் ஆண்டில் மத்திய அரசின், கடைகள் மற்றும் நிறுவனங்கள் (பணி ஒழுங்குமுறை மற்றும் சேவைக்கான நிபந்தனைகள்) சட்டம் இறுதி செய்யப்பட்டு … Read more

'முகமது நபி அவமதிப்பால் எதிர்மறையான சூழல்' – இந்தியா வந்துள்ள ஈரான் வெளியுறவு அமைச்சர் கருத்து

புதுடெல்லி: ஈரான் வெளியுறவு அமைச்சர் அமீர் அப்தோலியான் நேற்று (புதன்கிழமை) இந்தியா வந்தார். பாஜக முன்னாள் செய்தித் தொடர்பாளர் நூபுர் சர்மாவின் சர்ச்சைப் பேச்சால் இந்தியாவுக்கு இஸ்லாமிய நாடுகள் பலவும் கண்டனம் தெரிவித்துள்ள சூழலில் அமீர் அப்தோலியானின் இந்திய வருகை முக்கியத்துவம் பெற்றுள்ளது. முன்னதாக அவருக்கு இந்திய அரசு சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்த அமீர் அப்தோலியான், இருநாட்டு வர்த்தக உறவு குறித்து ஆலோசித்தார். வர்த்தக தொடர்பை மேம்படுத்துவது, தீவிரவாத தடுப்பு … Read more

தமிழகம் முழுவதும் ‘ஆபரேஷன் கந்துவட்டி’ – காவல் துறை அதிகாரிகளுக்கு டிஜிபி உத்தரவின் முழுவிவரம்

சென்னை: தமிழகம் முழுவதும் கந்துவட்டிக் கொடுமைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ‘ஆபரேஷன் கந்துவட்டி’ என்ற பெயரில் தீவிர நடவடிக்கை மேற்கொள்ளுமாறு காவல் ஆணையர்கள், மாவட்ட எஸ்.பி.க்களுக்கு டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார். கந்துவட்டிக் கொடுமை தொடர்பான புகார்களை விசாரிக்க, காவல் துறையில் கந்துவட்டி தடுப்புப் பிரிவு என தனிப் பிரிவு உள்ளது. எனினும், கந்துவட்டி தொடர்பான குற்றங்கள் ஆங்காங்கே நிகழ்ந்து வருகின்றன. இந்நிலையில், கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஆயுதப்படை காவலர் செல்வகுமார்(27) கந்துவட்டி தொடர்பான பிரச்சினையில் விஷம் … Read more

5 வாரங்களில் 2-வது முறையாக வட்டி விகிதங்களை உயர்த்தியது ஆர்பிஐ – கார், வீட்டு கடன் சுலப தவணை அதிகரிக்கிறது

புதுடெல்லி: பணவீக்கத்தை கட்டுப்படுத்தவும், டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு சரிவதைக் கட்டுப்படுத்தவும் ரிசர்வ் வங்கி வட்டி விகத்தை 50 புள்ளிகள் வரை உயர்த்தியுள்ளது. 5 வாரங்களில் 2-வது முறையாக வட்டி உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் வீட்டுக் கடன், வாகனக் கடன் மற்றும் பிற இனங்களில் கடன் பெற்றவர்களுக்கு சுமை அதிகரித்துள்ளது. ரிசர்வ் வங்கியின் வட்டி விகிதத்தை நிர்ணயிக்கும் 6 பேர் அடங்கிய குழு வட்டி உயர்வுக்கு ஒரு மனதாக ஒப்புதல் அளித்தது. இதனால் வட்டி விகிதம் தற்போது 4.90 … Read more

அங்கன்வாடி மையங்களுக்கு மழலையர் வகுப்பு மாற்றப்பட்டது ஏன்? – பள்ளிக்கல்வித் துறை விளக்கம்

சென்னை: ஆசிரியர் பற்றாக்குறை, ‘எண்ணும் எழுத்தும்’ திட்டம் அமலாக்கம் உள்ளிட்ட காரணங்களால் மழலையர் வகுப்புகள் அங்கன்வாடி மையங்கள் வசம் ஒப்படைக்கப்படுவதாக பள்ளிக்கல்வித் துறை விளக்கம் அளித்துள்ளது. இதுகுறித்து பள்ளிக்கல்வி இயக்குநரகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: அரசு நடுநிலைப்பள்ளி வளாகங்களில் உள்ள 2,381 அங்கன்வாடிகளில் மழலையர் வகுப்புகள் 2019-ம் ஆண்டு சோதனை முறையில் தொடங்கப்பட்டன. இந்த மழலையர் வகுப்புகளைக் கையாள தொடக்கப்பள்ளி இடைநிலை ஆசிரியர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். இந்த ஆசிரியர்கள் அனுபவம் வாய்ந்தவர்களாக இருந்தாலும், அவர்களுக்கு … Read more