ஜப்பான் நிறுவனத்தில் மெகுல் சோக்சியின் ரூ.11 கோடி பங்குகள் மருமகள் வீடு முடக்கம்

புதுடெல்லி: பஞ்சாப் நேஷனல் வங்கியில் வைர வியாபாரியான நிரவ் மோடியும் அவரது உறவினர் மெகுல் சோக்சியும் ரூ.13,500 கோடி மோசடி செய்துவிட்டு 2018-ல் வெளிநாடு தப்பிச் சென்றனர். தற்போது நிரவ் மோடி லண்டன் சிறையிலும் மெகுல் சோக்சி டொமினிக்கா நாட்டு சிறையிலும் உள்ளனர். இம்மோசடி வழக்கை அமலாக்கத் துறை தீவிரமாக விசாரித்துவருகிறது. இந்நிலையில், இவ்வழக்குத் தொடர்பாக புதிய குற்றப்பத்திரிகையை அமலாக்கத் துறை தாக்கல் செய்துள்ளது. நியூயார்க் வீடு நியூயார்க்கில் உள்ள மெகுல் சோக்சியின் மருமகள் வீடு ஒன்றையும், … Read more

வறட்சி, வெள்ளத்தில் இருந்து சென்னையைக் காப்பாற்ற நீர் மேலாண்மை அவசியம் – எச்சரிக்கும் அண்ணா பல்கலை ஆய்வு

சென்னை: வறட்சி மற்றும் வெள்ளப் பெருக்கில் சிக்கித் தவிக்கும் சென்னையைக் காப்பாற்ற நீர் நிலைகளை முறையாகப் பராமரித்து, சிறப்பாக மேலாண்மை செய்வது அவசியம் என்று அண்ணா பல்கலைக்கழக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையின் மக்கள் தொகை 1981-ல் 40 லட்சமாக இருந்தது. தற்போது 1 கோடியே 15 லட்சமாக, ஏறக்குறைய 3 மடங்கு அதிகரித்துள்ளது. இது, 2035-ம்ஆண்டில் 1 கோடியே 50 லட்சமாக அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. ஒருபுறம் மக்கள் தொகை அதிகரிக்கிறது. மறுபுறம் காலநிலை மாற்றத்தால் ஆண்டுதோறும் … Read more

புலம்பெயர் வாக்காளர்களுக்கு தொலைதூர வாக்குப் பதிவு வசதி: சென்னை ஐஐடியுடன் ஆணையம் ஆலோசனை

புதுடெல்லி: புலம்பெயர் வாக்காளர்கள் நாடு முழுவதும் அதிகளவில் உள்ளனர். தேர்தல் நேரத்தில் இவர்கள் அனைவராலும் சொந்த ஊருக்கு சென்று வாக்களிக்க முடியாத சூழல் உள்ளது. இதுவும் வாக்குப்பதிவு சதவீதம் குறைய ஒரு காரணம். இவர்களுக்கு தொலைதூர வாக்குப்பதிவு வசதியை அறிமுகம் செய்வது குறித்து தேர்தல் ஆணையம் ஏற்கெனவே திட்டமிட்டது. இந்நிலையில் தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் சமீபத்தில் உத்தராகண்ட் மாநிலத்தின் தொலைதூர மலைக் கிராமங்களான துமக் மற்றும் கல்கோத் ஆகிய பகுதியில் உள்ள வாக்குச் சாவடிகளை … Read more

சிறையில் சசிகலா காய்கறி சாகுபடி செய்து எவ்வளவு சம்பாதித்தார்? – ஆர்டிஐயில் கேள்வி

பெங்களூரு: கர்நாடக மாநிலம் பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டிருந்த போது காய்கறிகளை சாகுபடி செய்ததன் மூலமாக சசிகலா எவ்வளவு சம்பாதித்தார் என்ற கேள்விக்கு சிறைத்துறை விளக்கம் அளித்துள்ளது. கடந்த 2018-ம் ஆண்டு பெங்களூருவை சேர்ந்த சமூக ஆர்வலர் நரசிம்ம மூர்த்தி, ‘சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்டு பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டிருந்த சசிகலா சிறையில் எவ்வளவு காய்கறிகளை சாகுபடி செய்தார்?’ என தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேள்வி எழுப்பி இருந்தார். இதற்கு பெங்களூரு மத்திய‌ சிறையின் தகவல் தொடர்புத்துறை … Read more

பிஹார் மாநிலத்தில் 191 கி.மீ. தூரம் ரயில் இன்ஜினுக்கு அடியில் பயணம் செய்த மனநோயாளி

பாட்னா: பிஹார் மாநிலத்தில் ஒருவர் ரயில் இன்ஜினுக்கு கீழே அமர்ந்து 191 கி.மீ பயணம் செய்துள்ளார். எனினும், அவர் பாதுகாப்பாக பயணம் செய்தது அனைவரையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது. பிஹார் மாநிலத்தின் ராஜ்கிர் நகரில் இருந்து வாரணாசிக்கு புத்தபூர்ணிமா சாரநாத் எக்ஸ்பிரஸ் ரயில் கடந்த திங்கட் கிழமை புறப்பட்டது. அந்த ரயில் பிஹார் மாநில தலைநகர் பாட்னா வழியாக அதிகாலை 4.10 மணியளவில் கயா வந்தடைந்தது. ரயிலை நிறுத்திவிட்டு அதன் இன்ஜின் ஓட்டுநர் சவுத்ரி கீழே இறங்கினார். … Read more

5,000 மெகாவாட் சூரிய மின்சாரம் உற்பத்தி: தேசிய அளவில் தமிழகம் 4-வது இடம்

சென்னை: சூரியசக்தி மின்சாரம் 5 ஆயிரம் மெகாவாட் உற்பத்தி செய்து, அகில இந்திய அளவில் தமிழகம் 4-வது இடத்தைப் பிடித்துள்ளது. தமிழகத்தில் ஆண்டொன்றுக்கு 300 நாட்களுக்கும் மேல் சூரியசக்தி மின்சாரம் உற்பத்தி செய்யும் வகையில், சாதகமான சூழ்நிலை நிலவுகிறது. மேலும், மத்திய அரசும் சூரியசக்தி மின்நிலையங்கள் அமைக்க மானியம் வழங்கி வருகிறது. இதனால் பெரிய நிறுவனங்கள் தங்களிடம் உள்ள நிலத்தில் ஒருமெகாவாட்டுக்கு மேலான திறன் உடைய சூரியசக்தி மின்நிலையத்தை அமைத்து அதில் உற்பத்தியாகும் மின்சாரத்தை, தமிழக மின்வாரியத்துக்கு … Read more

சங்கராச்சாரியார்களின் கோரிக்கையை ஏற்று வாரணாசியில் போராட்டத்தை முடித்த துறவி

புதுடெல்லி: உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள கியான்வாபி மசூதியில் சிவலிங்கம் இருப்பதாக இந்து அமைப்புகள் வழக்கு தொடுத்துள்ளன. இந்நிலையில் அந்த சிவலிங்கத்துக்கு அன்றாடம் பூஜை செய்ய அனுமதி கோரி அயோத்தி மடத்தின் அதிபதி சுவாமி அவிமுக்தேஷ் வரானந்த் உண்ணாவிரதம் தொடங்கினார். இதில் உணவு, நீர் அருந்தாமல் வாரணாசியின் கங்கை படித்துறையில் உள்ள வித்யாமடத்தில் அமர்ந்தார். இதனால், அவரது உடல்நிலை மோசமானது. இச்சூழலில் உண்ணாவிரதத்தை முடிக்கக் கோரி நேற்று ஜகத்குரு சங்கராச்சாரியார் சுவாமி சொரூபானந்த் சரஸ்வதி கடிதம் … Read more

தமிழகத்தில் 4 நாட்கள் லேசான மழைக்கு வாய்ப்பு

சென்னை: தமிழகத்தில் 4 நாட்களுக்கு ஒருசில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக் கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழகப் பகுதிகளின் மேல், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக 9-ம் தேதி தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 10, 11, 12-ம் தேதிகளில் மிதமான மழை பெய்யக் கூடும். சென்னையில் … Read more

78 மணி நேரத்தில் 25 கி.மீ. நெடுஞ்சாலை – புனே நிறுவனம் கின்னஸ் சாதனை

புதுடெல்லி: புனேயைச் சேர்ந்த கட்டுமான நிறுவனம் 25.56 கி.மீ. நீளத்திற்கு தார் சாலையை 78 மணி நேரத்தில் போட்டு புதிய உலக சாதனை படைத்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் தேசிய நெடுஞ்சாலையில் (என்ஹெச்-53) இந்த சாதனையை இந்நிறுவனம் புரிந்துள்ளது. கத்தார் நாட்டில் தோஹா எனுமிடத்தில் 25.27 கி.மீ. தூர தார் சாலை போட்டதே இதுவரை உலக சாதனையாக இருந்தது. அதை தற்போது இந்திய நிறுவனம் முறியடித்துள்ளது. ராஜ்பாத் இன்பிராகான் என்ற நிறுவனம் 800 பணியாளர்கள் மற்றும் 700 தொழிலாளர்கள் … Read more

'இது வாக்கு வங்கிக்காக இல்லை, சாதாரண மக்களுக்காக செயல்படும் அரசு' – முதல்வர் ஸ்டாலின் பேச்சு

புதுக்கோட்டை: வாக்கு வங்கி இல்லாதவர்களின் வாழ்க்கைக்கும், சேவைக்கும் உதவிகளைச் செய்யும் அரசு தான் திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய அரசு. இந்த அரசினுடைய நோக்கம் சிந்தனை, செயல் அனைத்தும் சாதாரண மக்களின், ஒடுக்கப்பட்ட மக்களின் நலன்தான் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார். புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று (புதன் கிழமை) நடந்த அரசு விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். அப்போது அவர், ரூ. 81 கோடியே 31 லட்சம் செலவில் நிறைவுற்றிருந்த 140 திட்டப்பணிகளை திறந்து வைத்தார். … Read more