கேரள தங்கக் கடத்தல் | முதல்வர் பினராயி, குடும்பத்தினருக்கு தொடர்பு – பதவி விலக எதிர்க்கட்சிகள் வலியுறுத்தல்

கொச்சி: தங்கக் கடத்தல் விவகாரத்தில் கேரள முதல்வர் பினராயி விஜயன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு தொடர்பு இருப்பதாக, இவ்வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள ஸ்வப்னா சுரேஷ் புகார் தெரிவித்துள்ளார். கடந்த 2020-ம் ஆண்டு ஜூலை 5-ம் தேதி திருவனந்தபுரம் விமான நிலையத்துக்கு வந்த ஒரு பார்சலை சுங்கத் துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அதில் இருந்த 30 கிலோ தங்கத்தை பறிமுதல் செய்து விசாரித்தனர். அந்த பார்சலில் திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரக (யுஏஇ) துணைத் தூதரக முகவரிகுறிப்பிடப்பட்டிருந்தது. … Read more

முழுமையாக குணமடைந்த பிறகும் கீழ்ப்பாக்கம் மன நல மருத்துவமனையில் இருப்பதை தடுக்க கோரிய வழக்கு தள்ளுபடி

சென்னை: மனநல பாதிப்பிலிருந்து முழுமையாக குணமடைந்த பிறகும், கீழ்ப்பாக்கம் மன நல மருத்துவமனையில் இருப்பதை தடுப்பது குறித்து தமிழ்நாடு மாநில மனநல ஆணையத்திற்கு அளித்த மனு மீது நடவடிக்கை எடுக்கக கோரிய வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜெபமணி ஜனதா கட்சியின் பொதுச் செயலாளரான ஜெ. மோகன்ராஜ் என்பவர் தாக்கல் செய்த மனுவில், “சென்னை கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவமனையின் வருந்தத்தக்க நிலை குறித்து சமூக ஊடகங்களில் வெளியான செய்தியில், … Read more

கரூர் | ஆம்னி பேருந்து மோதி பைக்கில் சென்ற இருவர் உயிரிழப்பு

கரூர்: கரூர் மாவட்டம் குளித்தலையில் ஆம்னி பேருந்து மோதி இரு சக்கர வாகனத்தில் சென்ற இருவர் உயிரிழந்தனர். இதுகுறித்து குளித்தலை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கரூர் மாவட்டம் குளித்தலை மணத்தட்டை வள்ளுவர் நகரைச் சேர்ந்தவர் கந்தன் (55), மரம் அறுக்கும் தொழிலாளி. உள்மணத்தட்டையைச் சேர்ந்த மணிவேல் (29) பேக்கரி மாஸ்டர். இவர்கள் இருவரும் வளையப்பட்டியில் நடந்த கோயில் திருவிழா கலை நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு இரு சக்கர வாகனத்தில் வீடு திரும்பியுள்ளனர். கந்தன் … Read more

'அதிமுகவை மீட்பதற்காக சசிகலா வேறு பாதையில் பயணிக்கிறார்' – டிடிவி தினகரன்

ஈரோடு: அதிமுகவை மீட்டெடுக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு நாங்களும், சசிகலாவும் வெவ்வேறு பாதைகளில் பயணிக்கிறோம் என்று டிடிவி தினகரன் தெரிவித்தார். ஈரோட்டில் நடந்த அமமுக நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பங்கேற்றார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது: “தமிழகத்தில் ஓராண்டு திமுக ஆட்சி ஏமாற்றமளிக்கிறது. வாக்குறுதிகளை நிறைவேற்றாமல், திராவிடர்கள் தலைகுனியும் வகையில், மக்களை ஏமாற்றும் ஆட்சியாக உள்ளது. திமுக ஆட்சியில் காவல்துறையில் தலையீடு அதிகம் இருக்கிறது. ரவுடிகள் நடமாட்டம் அதிகரித்து, சட்டம் … Read more

ஒரு தூதன், ஓர் ஓவியன், ஒரு வீதிக் கலைஞன்… – ஓர் ஆய்வாளரின் உக்ரைன் டைரிக் குறிப்புகள்

உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் தாக்குதல் 100 நாட்களை கடந்து விட்டது. இந்தத் தாக்குதல்கள் இன்னும் நிறுத்தப்படவில்லை, மக்கள் அகதிகளாக வெளியேற்றப்படுவதும் நிற்கவில்லை. போரின் தொடக்க நாட்களில் பதிவு செய்யப்பட்ட பாதிப்புகளும், அதன் தாக்கங்களும் ஏறக்குறைய குறைந்துவிட்டன. உக்ரைன் பாதிப்புகளைப் பேசிய உலக நாடுகள் தற்போது போரால் தங்களுக்கு என்ன பாதிப்பு என்று கவலைப்படத் தொடங்கிவிட்டன. ஒரு கமர்ஷியல் சினிமா வெளியான ஆரம்ப நாட்களின் பரபரப்பு போலவே விவாதங்களும் கவனமும் குவிந்து பின்னர் மறக்கப்பட்டுவிட்டன.இந்த நிலையில், இனவரைவியலாளர் … Read more

'டிஜிபிக்கு தைரியம் இருந்தால் நடவடிக்கை எடுக்கட்டும்' – நாமக்கல்லில் அண்ணாமலை பேச்சு

நாமக்கல்: மத்திய பாஜக அரசின் 8 ஆண்டுகால சாதனை விளக்கப் பொதுக்கூட்டத்திற்கு வரும் கூட்டத்தைப் பார்த்து திமுகவின் சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேசியுள்ளார். நாமக்கல்லில் மத்திய பாஜகவின் 8 ஆண்டுகால ஆட்சியின் சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் நடந்தது. இக்கூட்டத்துக்கு நாமக்கல் மாவட்ட பாஜக தலைவர் என்.பி. சத்தியமூர்த்தி தலைமை வகித்தார். மாநில துணைத் தலைவர்கள் வி. பி. துரைசாமி, கே.பி. ராமலிங்கம் உள்பட பலர் கலந்து … Read more

சர்ச்சை பேச்சு எதிரொலி | ஒரு வாரத்துக்குப் பின் சட்ட நடவடிக்கை – நூபுர் சர்மாமீது எப்ஐஆர் பதிவு

புதுடெல்லி: சர்ச்சை பேச்சுக்களை வெளிப்படுத்தியதால் பாஜகவில் இருந்து தற்காலிக நீக்கம் செய்யப்பட்ட நூபுர் சர்மாமீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த வாரம் கியான்வாபி மசூதி சர்ச்சை தொடர்பாக தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார் பாஜக செய்தித் தொடர்பாளர் நூபுர் சர்மா. அப்போது அவர், நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். தொடர்ந்து தொழிலதிபரும் பாஜக பிரமுகருமான நவீன் ஜிண்டால் ட்விட்டரில் சர்ச்சைகுரிய ட்வீட்டை பதிவிட்டார். பின்னர் அந்த கருத்தை நீக்கினார். இதனைக் கண்டித்து கான்பூரில் … Read more

பாகிஸ்தானில் இரவு 10 மணிக்கு மேல் திருமண நிகழ்ச்சிக்கு தடை: மின் பற்றாக்குறையை சமாளிக்க புதிய நடவடிக்கை

இஸ்லாமாபாத்: பொருளாதார நெருக்கடியில் தவித்து வரும் பாகிஸ்தான் நிலவும் மின்பற்றாக்குறையை சமாளிக்க, இரவு 10 மணிக்கு மேல் திருமண நிகழ்ச்சிகள் நடத்த தடைவிதித்துள்ளது. அண்டை நாடான பாகிஸ்தான் கடுமையான மின்பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ளது. மின்பற்றாக்குறை நாட்டின் பொருளாதாரத்தை பாதித்துள்ள நிலையில் மின்சாரத்தை சேமிக்கவும், மின் பயன்பாட்டை குறைக்கவும், சனிக்கிழமையும் அரசு அலுவலகங்களுக்கு விடுமுறையளிக்க வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் அதிகப்படியான மின்சார பயன்பாட்டை குறைக்கும் வகையில், தலைநகர் இஸ்லாமாபாத்தில் இரவு 10 மணிக்கு மேல் திருமணநிகழ்ச்சிகள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. … Read more

'குடும்பத்துடன் வாழ பொதுமன்னிப்பு வழங்க வேண்டும்' – தமிழக ஆளுநருக்கு சாந்தன் கடிதம்

வேலூர்: கடந்த 30 ஆண்டுகளாக ஆசை பாசங்களை இழந்து உள்ளோம். என பொது மன்னிப்பு வழங்கி தன்னை விடுவிக்க கோரி சிறைத்துறை மூலம் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சாந்தன் ஆளுநருக்கு கடிதம் அனுப்பியுள்ளார். முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்து வருபவர் சாந்தன். இந்நிலையில், வேலூர் மத்திய சிறைத்துறை மூலம் இவர் நேற்று தனது விடுதலை தொடர்பாக தமிழக ஆளுநருக்கு கடிதம் … Read more

இந்தியா – எமிரேட்ஸ் இடையே தொழில்நுட்பத் துறை புரிந்துணர்வு ஒப்பந்தம் – மத்திய அமைச்சரவை ஒப்புதல்

புதுடெல்லி: இந்தியா – ஐக்கிய அரபு எமிரேட்ஸ் இடையே தொழில்துறை மற்றும் மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பத் துறைகளில் ஒத்துழைப்பிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. முதலீடுகள், தொழில்நுட்ப பரிமாற்றம், தொழில் நிறுவனங்களில் முக்கிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துதல் ஆகியவற்றின் மூலம் இரு நாடுகளின் தொழில்துறைகளை வலுப்படுத்தி மேம்படுத்துவது இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் நோக்கமாகும். இது வேலைவாய்ப்பை அதிகரிக்கவும் உதவும். இந்த ஒப்பந்தம் அமலாகும் போது, பரஸ்பர ஒத்துழைப்புள்ள … Read more