அந்தமான் அருகே புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி: மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தல்

சென்னை: அந்தமான் அருகே நாளை புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளது. அதனால் அடுத்த 4 நாட்களுக்கு மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக் கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி 4-ம் தேதி உருவானது. இதன் காரணமாக, இப்பகுதிகளில் 6-ம் தேதி ஓர் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகக் கூடும். … Read more

கர்நாடக முதல்வராக பசவராஜ் பொம்மை தொடர்வார் – பாஜக மேலிடப் பொறுப்பாளர் தகவல்

பெங்களூரு: கர்நாடகாவில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும் நிலையில் முதல்வர் பசவராஜ் பொம்மை மீது பாஜக மூத்த தலைவர்கள் சிலர் அதிருப்தியை வெளிப்படுத்தினர். அவர் தலைமையில் தேர்தலை சந்தித்தால் பாஜக‌ தோல்வியை சந்திக்க நேரிடும் என கட்சி மேலிடத்துக்கு முறையிட்டனர். அண்மையில் பாஜக தேசிய அமைப்புச் செயலாளர் பி.எல். சந்தோஷ் கூறும்போது, “தேர்தலுக்கு முன்பாக குஜராத், டெல்லி போல கர்நாடகாவிலும் முக்கிய மாற்றங்கள் மேற்கொள்ளப்படும். புதுமையான நடவடிக்கைகளை எடுத்தால் மட்டுமே தேர்தலில் வெற்றி கிடைக்கும்” என்றார். … Read more

மே 17 முதல் இயக்க ஏற்பாடுகள் தீவிரம்: கோவை – ஷீரடி இடையே தனியார் ரயில் சேவை

சென்னை: கோவையில் இருந்து ஷீரடிக்கு முதல்முறையாக தனியார் ரயில் இயக்கப்பட உள்ளது. தமிழகத்தில் முதல்முறையாக தனியார் ரயில் சேவை தொடக்க உள்ளது. கோவையைச் சேர்ந்த எம் அண்ட் சி என்ற நிறுவனம், கோவையில் இருந்து ஷீரடிக்கு தனியார் ஆன்மிக சுற்றுலா ரயிலை வரும் 17-ம் தேதி முதல் இயக்க உள்ளது. கோவையில் இருந்து ஈரோடு, சேலம், பெங்களூரு, மந்த்ராலயம் வழியாக ஷீரடிக்கு செல்லும் இந்த பயணத்தில், ஒரே கட்டணத்தில் 4 நாட்களுக்கான உணவு மற்றும் ரயில் பயணத்துக்கு … Read more

நீட் விலக்கு மசோதாவை மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பினார் ஆளுநர்: சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் தகவல்

சென்னை: நீட் விலக்கு தொடர்பான சட்ட மசோதாவை குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெறுவதற்கு ஏதுவாக, மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு ஆளுநர் அனுப்பி வைத்துள்ளதாக சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார். சட்டப்பேரவையில் நேற்று, இந்துசமய அறநிலையத் துறை, தகவல் தொழில்நுட்பத் துறை மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடந்துகொண்டிருந்தது. அப்போது, நீட் தேர்வு தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தகவல் ஒன்றை அவைக்குத் தெரிவித்தார். அவர் கூறியதாவது: தமிழக மாணவர்களின் மருத்துவக் கனவை சிதைத்துவரும் நீட் தேர்வில் இருந்து விலக்கு … Read more

குடியரசுத் தலைவரும், ஆளுநரும் சட்டத்துக்கு உட்பட்டவர்கள்தான் – பேரறிவாளன் விடுதலை விவகாரத்தில் மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கெடு

புதுடெல்லி: குடியரசுத் தலைவரும், ஆளுநரும் சட்டத்துக்கு உட்பட்டவர்களே என கருத்து தெரிவித்துள்ள உச்ச நீதிமன்ற நீதிபதிகள், பேரறிவாளன் விவகாரத்தில் மத்திய அரசு உரிய முடிவை எடுக்காவிட்டால் அவரை விடுவிப்பது குறித்து நாங்கள் பரிசீலிப்போம் என தெரிவித்துள்ளனர். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறை தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன், தனது தண்டனையை நிறுத்தி வைக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை, நீதிபதிகள் எல்.நாகேஸ்வர ராவ், … Read more

இந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமான 720.83 ஏக்கர் நிலங்கள் மீட்பு, 6167 வழக்குகளில் தீர்வு: தமிழக அரசு தகவல் 

சென்னை: கடந்த 2021 மே முதல் 2022 மார்ச் வரை 133 திருக்கோயில்களுக்கு சொந்தமான 720.83 ஏக்கர் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக இந்து சமய அறநிலையத்துறை கொள்கை விளக்கக் குறிப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக சட்டப்பேரவையில் இன்று இந்து சமய அறநிலையத் துறை, தகவல் தொழில்நுட்பவியல் துறைகளின் மானியக் கோரிக்கை மீதான விவாதங்கள் நடைபெற்றது. இதற்கு துறையின் அமைச்சர்கள் சேகர்பாபு, மனோ தங்கராஜ் ஆகியோர் பதிலளித்து, புதிய அறிவிப்புகளை வெளியிட்டனர். முன்னதாக இன்று காலை பேரவை கேள்வி நேரத்துடன் … Read more

அரசின் கொள்கை முடிவு மீறப்பட்டால் கடும் நடவடிக்கை: மருத்துவக் கல்லூரி முதல்வர்களுக்கு அறிவுறுத்தல்

சென்னை: அரசின் கொள்கை முடிவு மீறப்பட்டால் சம்பந்தபட்ட மருத்துவக் கல்லூரி முதல்வர் மீது துறை ரீதியான கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆலோசனை கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழக சுகாதாரத்துறை சார்பில் அனைத்து அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர்கள் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் உடனான அவசர ஆலோசனை கூட்டம் சென்னை ஓமந்தூரார் பல்நோக்கு மருத்துவமனையில் இன்று நடைபெற்றது சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில் சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் , மருத்துவ கல்வி … Read more

மாமூல் தர மறுத்த வணிகர் அடித்துக்கொலை: மிரட்டிப் பணம் பறிக்கும் கும்பலை காவல்துறை கட்டுப்படுத்துமா? – ராமதாஸ் கேள்வி

சென்னை: மாமூல் தர மறுத்த வணிகர் அடித்துக்கொலை செய்யப்பட்டுள்ளநிலையில், மிரட்டிப் பணம் பறிக்கும் கும்பலை காவல்துறை கட்டுப்படுத்துமா? என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து ராமதாஸ் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: பெரம்பலூர் மாவட்டம் லாடபுரம் கிராமத்தில் மாமூல் தருவதற்கு மறுத்த மருந்தக உரிமையாளரை ஒரு கும்பல் கொடூரமாக படுகொலை செய்திருக்கிறது. பெரம்பலூர் மாவட்டத்தில் வணிகர்களை மிரட்டி பணம் பறிக்கும் செயலில் சில கும்பல்கள் தொடர்ந்து ஈடுபட்டு வரும் நிலையில், அத்தகைய கும்பல்களை கட்டுப்படுத்த … Read more

விலங்குகளுக்கு பழக் கூட்டு, மலைப்பாம்பு, நட்சத்திர ஆமைகளுக்கு குளிர்ந்த நீர்தெளிப்பு: கோடையை சமாளிக்க வனத்துறை ஏற்பாடு

புதுச்சேரி: கோடையை சமாளிக்க வனத்துறையிலுள்ள விலங்குகளுக்கு பழக் கூட்டு மன்றும் மலைப்பாம்பு, நட்சத்திர ஆமைகளுக்கு குளிர்ந்த நீர்தெளிக்க புதுச்சேரி வனத்துறை ஏற்பாடு செய்துள்ளது. கோடையில் வெப்பம் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்து மனிதர்கள் தவிக்கும் சூழலில் புதுச்சேரி வனத்துறை அலுவலகத்திலுள்ள விலங்குகள் தற்காத்துக் கொள்ளவும் நல்ல உடல் நிலையில் இருக்கவும், கோடை வெப்பத்தின் தாக்கத்தை சமாளிக்க தரப்படும் பழ, காய்கறி கூட்டை ருசித்து உண்கின்றன. மலைப்பாம்பு, நட்சத்திர ஆமைகளுக்கு குளிர்ந்த நீர் தெளிக்கப்படுகின்றன. புதுச்சேரி-கடலூர் சாலையில் … Read more

சரகர் உறுதிமொழியை எதிர்ப்பது ஏன்? – அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம் 

சென்னை: தேசிய மருத்துவ ஆணையம் வழங்கி உள்ள சரகர் உறுதி மொழியில் மருத்துவர்கள் யாருக்கு சிகிச்சை அளிக்க வேண்டும் என்பதில் தவறான கருத்துகள் உள்ளதால் எதிர்க்கிறோம் என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். சென்னை ஒமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனை வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், “மருத்துவ மாணவர்கள் உறுதிமொழி விவாகரத்தில் நாடாளுமன்றத்தில் ஒன்றிய துணை அமைச்சர் சர்கர் உறுதிமொழி எடுக்க வேண்டும் எனவும், உத்தரவு வழங்கவில்லை என கூறியுள்ளார். எனவே … Read more