'அரசு மருத்துவர்களின் ஊதிய உயர்வு கோரிக்கையை நடப்பு கூட்டத் தொடரிலேயே நிறைவேற்றுக' – வைகோ வேண்டுகோள்

சென்னை: நடப்பு கூட்டத் தொடரிலேயே ஊதிய உயர்வு அறிவிப்பை வெளியிட்டு அரசு மருத்துவர்களின் நியாயமான கோரிக்கையை நிறைவேற்றித் தர வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார். இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சுகாதாரத்துறையில் மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாகத் தமிழகம் திகழ்வதற்கு அரசு மருத்துவர்களின் பங்களிப்பு மிக முக்கிய காரணியாக இருக்கிறது. பல மாநிலங்களில் இன்னும் கிராமப்புறங்களில் மருத்துவர் இருப்பை உறுதி செய்வதே சவாலாக இருக்கும்போது, தமிழகத்தின் கிராமப்புற சுகாதாரக் கட்டமைப்பு இந்தியாவிலேயே முதல் … Read more

திருமலையில் மே மாத விசேஷங்கள்; மே 10 முதல் 12 வரை பத்மாவதி திருக்கல்யாணம்: திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இந்த மே மாதம் பல விசேஷ நாட்கள் உள்ளது. அதன்படி, வரும் 5-ம் தேதி பாஷ்யகாரர் (இராமானுஜர்) சாத்துமுறை நடைபெற உள்ளது. இதனை தொடர்ந்து மே 6-ம் தேதி கந்தகப்பொடி உற்சவமும், மேலும் மே மாதம் 6, 13,20,27 ஆகிய 4 நாட்களும் ஆண்டாள் மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பார். திருமலையில் பத்மாவதி திருக்கல்யாணத்தை முன்னிட்டு நாராயணகிரி பகுதியில் பிரம்மாண்டமான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.இதனை தொடர்ந்து மே … Read more

திருவண்ணாமலை விசாரணைக் கைதி மரணம் | சிபிசிஐடி அறிக்கையின்படி அரசு நடவடிக்கை; முதல்வர் ஸ்டாலின் உறுதி

சென்னை: திருவண்ணாமலை விசாரணைக் கைதி தங்கமணி மரணம் தொடர்பாக விசாரித்து வரும் சிபிசிஐடி புலன் விசாரணை அறிக்கையின்படி, அரசு தக்க நடவடிக்கை எடுக்கும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். 4 நாட்கள் விடுமுறைக்குப் பின்னர், தமிழக சட்டப்பேரவை இன்று (மே 4) மீண்டும் கூடியது. இந்துசமய அறநிலையத்துறை, தகவல் தொழில்நுட்பவியல் துறைகளின் மானியக் கோரிக்கை மீதான விவாதங்கள் நடைபெற்று வருகிறது. இதற்கு துறையின் அமைச்சர்கள் சேகர்பாபு, மனோ தங்கராஜ் ஆகியோர் பதிலளித்து, புதிய அறிவிப்புகளை வெளியிடவுள்ளனர். … Read more

பெண்கள் மீதான குற்றம் குறைந்துள்ளது: ஆந்திர அமைச்சர் ரோஜா தகவல்

திருப்பதி: ஆந்திர மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி நாளை திருப்பதியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு நலத்திட்டங்களை அமல்படுத்த உள்ளார். இதனையொட்டி திருப்பதியில் நடைபெற உள்ள பொதுக்கூட்டத்தில் அவர் பங்கேற்க உள்ளார். இதற்காக திருப்பதியில் பிரம்மாண்டமான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. இந்த ஏற்பாடுகளை நேற்று சுற்றுலாத்துறை அமைச்சர் ஆர்.கே. ரோஜா பார்வையிட்டார். அப்போது அமைச்சர் ரோஜா செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு ஆட்சியின் போதுதான் பெண்கள் மீது குற்றம் அதிகமாக நடந்தது. ஆனால், ஜெகன் முதல்வரான … Read more

'கேள்வி நேரத்தில் கதையெல்லாம் சொல்லக்கூடாது' – வகுப்பெடுத்த அமைச்சர் துரைமுருகன்

சென்னை: தமிழக சட்டப்பேரவையின் கேள்வி நேரத்தில் பேசிய அவை முன்னவர் துரைமுருகன், கேள்வி நேரம் எப்படி நீண்டு போகிறது என்பதைக்கூறி, கேள்வி நேரத்தில் உறுப்பினர்களின் கேள்வியும், அமைச்சர்களின் பதிலும் தான் இருக்க வேண்டும் என்று உறுப்பினர்களுக்கு விளக்கமாக எடுத்துரைத்தார். 4 நாட்கள் விடுமுறைக்குப் பின்னர், தமிழக சட்டப்பேரவை இன்று (மே 4) மீண்டும் கூடியது. இந்துசமய அறநிலையத்துறை, தகவல் தொழில்நுட்பவியல் துறைகளின் மானியக் கோரிக்கை மீதான விவாதங்கள் நடைபெறுகிறது. இதற்கு துறையின் அமைச்சர்கள் சேகர்பாபு, மனோ தங்கராஜ் … Read more

இந்த நிதியாண்டில் உர மானியம் ரூ.2.5 லட்சம் கோடியாக அதிகரிக்கும்: மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா தகவல்

புதுடெல்லி: நடப்பு 2022-23-ம் நிதியாண்டில் உர மானியம் ரூ.2.5 லட்சம் கோடியாக அதிகரிக்கும் என மத்திய ரசாயன மற்றும் உரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா கூறியுள்ளார். உரங்கள் நிலவரம் குறித்து, மாநில வேளாண் அமைச்சர்களுடன், மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர், ரசாயன மற்றும் உரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா ஆகியோர் காணொலி மூலம் ஆய்வு கூட்டம் நடத்தினர். அப்போது அமைச்சர் மன்சுக் மாண்டவியா கூறியதாவது: மத்திய அரசு மேற்கொண்ட செயல்திறன் மிக்க நடவடிக்கைகளால், இந்த … Read more

பச்சையப்பன் அறக்கட்டளை கல்லூரிகளை நிர்வகிக்க தனி அலுவலரை நியமிக்கவும்: ராமதாஸ்

சென்னை: தமிழ்நாடு தனியார் கல்லூரிகள் ஒழுங்குமுறை சட்டத்தின்படி பச்சையப்பன் அறக்கட்டளை கல்லூரிகளை நிர்வகிக்க தனி அலுவலர் ஒருவரை தமிழக அரசு நியமிக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தின் காங்கிரஸ் அல்லாத முதல் முதல்வர் பேரறிஞர் அண்ணா, மக்களவைத் தலைவர் அனந்தசயனம் அய்யங்கார், மத்திய, மாநில அமைச்சர்கள் மற்றும் பல்துறை வல்லுனர்களை வழங்கிய சென்னை பச்சையப்பன் கல்லூரி உள்ளிட்ட பச்சையப்பன் அறக்கட்டளைக்கு சொந்தமான கல்லூரிகள் மோசமான … Read more

5 ஆண்டுகளுக்குப் பின்னர் தாயை சந்தித்து ஆசி பெற்ற யோகி ஆதித்யநாத்

உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் 5 ஆண்டுகளுக்குப் பின்னர் அவரது தாயை சொந்த ஊரில் சந்தித்து ஆசி பெற்றார். உத்தரப் பிரதேச முதல்வராக இரண்டாவது முறையாகப் பதவியேற்றுள்ளார் யோகி ஆதித்யநாத். இந்நிலையில் நேற்று அவர் மூன்று நாள் பயணமாக உத்தராகண்ட் மாநிலத்திற்கு சென்றார். அங்கு அவருடைய சொந்த கிராமமான பாவ்ரி கார்வால் மாவட்டத்தில் உள்ள பஞ்சூருக்குச் சென்றார். அங்கே தனது தாயார் சாவித்ரி தேவியை சந்தித்தார். ஐந்து ஆண்டுகளுக்குப் பின்னர் அவர் தனது தாயை சந்தித்துள்ளார். … Read more

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் திருச்சியில் நாளை வணிகர் விடியல் மாநாடு: முதல்வர் ஸ்டாலின் பங்கேற்பு

திருச்சி: தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் 39-வது வணிகர்தினத்தையொட்டி, தமிழக வணிகர் விடியல் மாநாடு திருச்சி அடுத்த சமயபுரம் சுங்கச்சாவடி அருகே நாளை (மே 5) நடக்க உள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு வணிகர்சங்கங்களின் பேரமைப்பு மாநிலபொதுச் செயலாளர் வீ.கோவிந்தராஜூலு விடுத்துள்ள அறிக்கை: தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் 39-வது வணிகர்தினம் தமிழக வணிகர் விடியல் மாநாடாக திருச்சி சமயபுரம் சுங்கச்சாவடி அருகே உள்ள திடலில் நடக்க உள்ளது. பேரமைப்பின் மாநிலத் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா தலைமை … Read more

நேபாள ஓட்டலில் நடைபெற்ற இரவு விருந்தில் ராகுல் காந்தி: சமூக வலைதளங்களில் வேகமாக பரவும் வீடியோ

புதுடெல்லி: நேபாள தலைநகர் காத்மாண்டுவில் மதுபான விடுதியில் நடைபெற்ற இரவு விருந்தில் ராகுல் காந்தி பங்கேற்றுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. நேபாளத்தைச் சேர்ந்தவர் சும்னிமா உதாஸ். இவர் சிஎன்என் தொலைக்காட்சியின் டெல்லி செய்தியாளராக பணியாற்றி வருகிறார். கடந்த 2012-ம் ஆண்டில் நிர்பயா வழக்கு, கடந்த 2014-ம் ஆண்டில் மலேசிய விமானம் மாயமானது உட்பட பல்வேறு முக்கிய சம்பவங்கள் குறித்து செய்தி சேகரித்துள்ளார். பல்வேறு விருதுகளையும் வென்றுள்ளார். காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் … Read more