கோவை | கல்விக்கடன் தொகையை அதிகப்படுத்த பி.ஆர்.நடராஜன் எம்.பி அறிவுறுத்தல்

கோவை: மாணவர்களுக்கான கல்விக்கடன் தொகையை வங்கிகள் அதிகப்படுத்த வேண்டும் என வளர்ச்சிக் கூட்டத்தில் குழுவின் தலைவரும், மக்களவை உறுப்பினருமான பி.ஆர்.நடராஜன் அறிவுறுத்தினார். கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுவின் கூட்டம் இன்று (ஜூன் 8) நடந்தது. இக்கூட்டத்துக்கு மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுவினர் தலைவரும், கோவை மக்களவை உறுப்பினருமான பி.ஆர்.நடராஜன் தலைமை வகித்தார். குழுவின் துணைத் தலைவரும், பொள்ளாச்சி மக்களவை உறுப்பினருமான கு.சண்முகசுந்தரம், மாவட்ட ஆட்சியர் … Read more

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றக் கோரி தொடர் போராட்டம்; ஆக.23-ல் கோட்டை நோக்கி பேரணி: தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம்

சென்னை: தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றக் கோரி தொடர் போராட்டங்கள் நடத்த உள்ளதாக தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் அறிவித்துள்ளது. தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநிலத் தலைவர் மு.அன்பரசு சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: “கடந்த ஆட்சிக் காலத்தில் பழைய ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பலகட்ட போராட்டங்களை நடத்தினோம். தற்போது திமுக அரசு ஆட்சிக்கு வந்து ஓராண்டை நிறைவு செய்துள்ள நிலையிலும் எங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை. எனவே, அவர்கள் அளித்த … Read more

'“யூடியூப் மீதும் நடவடிக்கை அவசியம்” – சாட்டை துரைமுருகன் வழக்கில் உயர் நீதிமன்ற உத்தரவு சொல்வது என்ன?

மதுரை: ”மனிதகுல மேம்பாட்டுக்கான அறிவியல் கண்டுபிடிப்புகளை அழிவுக்கு பயன்படுத்துகிறார்கள்” என உயர் நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது. முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி மற்றும் நடிகை குஷ்பு குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியதாக திருச்சியை சேர்ந்த யூடியூபர் சாட்டை துரைமுருகனை திருபனந்தாள் போலீஸார் கைது செய்தனர். இந்த வழக்கில் ஜாமீன் கேட்டபோது, இனிமேல் யாரையும் அவதூறாக பேச மாட்டேன் என சாட்டை துரைமுருகன் உறுதிமொழி கடிதம் வழங்கினார். இதையேற்று அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. அடுத்த சில நாட்களில் தமிழக … Read more

சேப்பாக்கம் தொகுதிக்குள் சென்றாலே 45 நிமிடம் இலவச இன்டர்நெட்! – 20 இடங்களில் வைஃபை

சென்னை: சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதிக்குள் சென்றாலே 45 நிமிடம் இலவச இணைய வசதி கிடைக்கும் வகையில் 22 இடங்களில் வைஃபை வசதி பயன்பாட்டுக்கு வந்துள்ளது. சென்னை மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் 49 இடங்களில் ஸ்மார்ட் கம்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த ஸ்மார்ட் கம்பங்கள் மூலம் பொதுமக்களுக்கு 30 நிமிடம் இலவச வைஃபை வழங்கப்படுகிறது. 15-வது மண்டலம் தவிர்த்து அனைத்து மண்டலங்களிலும் இந்த வசதி நடைமுறையில் உள்ளது. இந்நிலையில், சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதிக்கு உட்பட்ட … Read more

உ.பி. அதிர்ச்சி: பப்ஜி விளையாட தடை விதித்த தாயைச் சுட்டுக் கொன்ற 16 வயது சிறுவன் கைது

லக்னோ: ‘பப்ஜி‘ விளையாடுவதற்கு தடையாக இருந்த தனது தாயை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற வளரிளம் சிறுவன் ஒருவரை உத்தரப் பிரதேச போலீசார் கைது செய்தனர். உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள யமுனாபுரம் காலனியில் இந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. கொலை செய்யப்பட்ட பெண் தனது 16 வயது மகன் மற்றும் 9 வயது மகளுடன் யமுனாபுரத்தில் வசித்து வந்துள்ளார். ராணுவத்தில் இளநிலை அதிகாரியான அவரது கணவர் மேற்கு வங்கத்தில் பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில், பப்ஜி … Read more

மென்மேலும் அதிகரிப்பு  | தமிழகத்தில் புதிதாக 195  பேருக்கு கரோனா பாதிப்பு

சென்னை: தமிழகத்தில் இன்று ஆண்கள் 106, பெண்கள் 89 என மொத்தம் 195 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். அதிகபட்சமாக சென்னையில் 95 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை 34 லட்சத்து 56,512 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 34 லட்சத்து 17,466 பேர் குணமடைந்துள்ளனர். இன்று மட்டும் 101 பேர் குணமடைந்து வீடுகளுக்கு சென்றனர். தமிழகம் முழுவதும் 1,021 பேர் சிகிச்சையில் உள்ளனர். இன்று உயிரிழப்பு இல்லை. தமிழகத்தில் நேற்று கரோனா … Read more

மூஸ் வாலா கொலை வழக்கில் 8 பேர் கைது – குடும்பத்தினருக்கு ராகுல் நேரில் ஆறுதல்

சண்டிகர்: பிரபல பஞ்சாபி பாடகர் சித்து மூஸ் வாலா கொலை வழக்கு தொடர்பாக 8 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். பிரபல பஞ்சாபி பாடகரும் காங்கிரஸ் இளம் தலைவருமான சித்து மூஸ் வாலா கடந்த மே 29–ம் தேதி அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்தக் கொலைக்கு ஏற்பாடுகள் செய்து கொடுத்தது மற்றும் வேவு பார்த்தது தொடர்பாக பஞ்சாப் மற்றும் ஹரியாணாவை சேர்ந்த 8 பேரை பஞ்சாப் போலீஸார் கைது செய்துள்ளனர். மேலும் கொலையாளிகளாக அடையாளம் … Read more

நம்ம சென்னை செயலியில் புதிய வசதிகள் விரைவில் அறிமுகம்

சென்னை: சென்னை மாநகராட்சி செயல்படுத்தி வரும் நம்ம சென்னை செயலியில் விரைவில் கூடுதல் வசதிகள் அறிமுகப்படுத்தப்படவுள்ளன. சென்னை மாநகராட்சி பொதுமக்களின் குறைகளை தீர்வு காண, 1913 என்ற தொலைபேசி எண்ணை பயன்படுத்தி வருகிறது. இந்த எண்ணில் அளிக்கப்படும் புகார்களுக்கு உடனடி தீர்வு ஏற்படுத்தப்படுகிறது. அதைத் தொடர்ந்து, நம்ம சென்னை மொபைல் செயலியை அறிமுகப்படுத்தியது. இந்த செயலி வாயிலாக, பொதுமக்கள் தங்கள் குறைகளை புகைப்படம், வீடியோ எடுத்து அனுப்பும் வசதி ஏற்படுத்தப்பட்டது. இதனால், நம்ம சென்னை செயலி பயன்பாடு … Read more

ஆர்எஸ்எஸ் அலுவலகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் – புதுக்கோட்டை இளைஞர் கைதின் பின்னணி தகவல்கள்

புதுடெல்லி: உத்தரபிரதேசத்தின் சுல்தான்பூரின் கல்லூரியில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றுபவர் முனைவர் நீல்காந்த் மணி பூஜாரி. இவர், தலைநகரான லக்னோவில் வசிக்கிறார். மேலும் அங்கு அலிகன்ச் பகுதியில் உள்ள ஆர்எஸ்எஸ் அலுவலகத்தின் தீவிரத் தொண்டராக உள்ளார். இந்நிலையில் நீல்காந்தின் கைப்பேசி எண் வாட்ஸ்-அப்பிற்கு அறிமுகமற்ற ஒருவரிடம் இருந்து 2 தினங்களுக்கு முன் ஒரு குழும இணைப்பு அனுப்பப்பட்டுள்ளது. மேலும் அதில் சேரும்படியும் கேட்டுக்கொள்ளப்பட்டிருந்தது. நீல்காந்த் இதனை ஏற்று குழுமத்தில் இணைந்துள்ளார். இந்நிலையில் அதில் இந்தி, ஆங்கிலம் மற்றும் கன்னடத்தில் … Read more

“எச்.ராஜா, சு.சுவாமி மீது பாயாத சட்ட நடவடிக்கைகள், சாட்டை துரைமுருகன் மீது பாய்வது ஏன்?” – சீமான்

சென்னை: “முன் எப்போதும் இல்லாத அளவுக்கு மாற்றுக் கருத்து கொண்டோர், விமர்சிப்பவர்கள் மீது ஆளும் அரசு கொடும் வழக்குகள் தாக்கல் செய்து, சிறைப்படுத்தி வருவதென்பது கருத்துரிமைக்கெதிரான போர் மட்டுமல்ல; அக்கருத்துரிமையை நமக்கு வழங்கி வருகிற இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் மீதே நடத்தப்படுகிற கோரத் தாக்குதலுமாகும்” என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: “தமிழ்த் தேசிய ஊடகவியலாளரும், நாம் தமிழர் கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளருமான சாட்டை … Read more