உறுதிமொழி ஏற்பு விவகாரம்: மருத்துவ கல்லூரி விழாவில் நடந்தது என்ன? – மதுரையில் மாணவர்கள் பேரவை நிர்வாகிகள் விளக்கம்

மதுரை: சமஸ்கிருதம் உறுதிமொழியை மொழிபெயர்த்து படித்த விவகாரத்தில் என்ன நடந்தது என்கிற விவரத்தை மதுரை மருத்துவக் கல்லூரி மாணவர் பேரவைத் தலைவர் ஜோதிஷ்குமாரவேல், பொதுச்செயலாளர் வேணுகோபால், துணைத் தலைவர் தீபிகா விஸ்வநாதன் ஆகியோர் கூட்டாகத் தெரிவித்தனர். இது குறித்து அவர்கள் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: மதுரை மருத்துவக் கல்லூரியில் கடந்த 30-ம் தேதி முதலாம் ஆண்டுமாணவர்கள் வரவேற்பு விழா நடந்தது. இதில் நாங்கள் சமஸ்கிருதத்தில் உறுதிமொழி எடுத்தோம் என்று தகவல் பரப்பப்படுகிறது. அது தவறானது. நாங்கள் சமஸ்கிருதத்தில் … Read more

மசூதிகளில் ஒலிபெருக்கிகளை அகற்ற வேண்டும்: மகாராஷ்டிர அரசுக்கு ராஜ் தாக்கரே மீண்டும் எச்சரிக்கை

மும்பை: மகாராஷ்டிராவில் மே 3-ம் தேதிக்குள் மசூதிகளில் ஒலிபெருக்கிகளை அகற்ற வேண்டும். இல்லையெனில் அதற்கான பின்விளைவுகளுக்கு நாங்கள் பொறுப்பல்ல என்று மகாராஷ்டிர நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரே மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளார். கடந்த 2-ம் தேதி மகாராஷ்டிராவில் புத்தாண்டு கொண்டாட்டப்பட்டது. அப்போது மும்பையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய ராஜ் தாக்கரே,‘‘மகாராஷ்டிரா முழுவதும் மசூதிகளில் பொருத்தப்பட்டிருக்கும் ஒலிபெருக்கிகளை அகற்ற வேண்டும்’’ என்று முதன்முறையாக எச்சரிக்கை விடுத்தார். இந்த சூழலில் மே 1-ம்தேதி தொழிலாளர் தினத்தில்மகாராஷ்டிராவின் அவுரங்காபாத் தில் … Read more

உணவு, ரசாயனம் உட்பட பல பொருட்களை இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்வதற்கு ரஷ்யா முடிவு : ஒப்பந்தம் மேற்கொள்ள ஏற்றுமதியாளர் குழு உடனடி பயணம்

புதுடெல்லி: ரஷ்யா-உக்ரைன் போர் காரணமாக ரஷ்யா மீது உலக நாடுகள்பொருளாதார தடை விதித்துள்ளநிலையில் இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு புதிய வாய்ப்பு உருவாகியுள்ளது. ரஷ்யாவுக்கு உணவுப்பொருள்கள், செராமிக் மற்றும் ரசாயனப் பொருள்களை ஏற்றுமதி செய்யும் வாய்ப்பு அதிகரித்துள்ளது. இம்மாத இறுதியில் இந்திய ஏற்றுமதியாளர்கள் குழு செல்ல உள்ளது. ரஷ்யா மீது அமெரிக்கா, இங்கிலாந்து, ஐரோப்பிய யூனியன் மற்றும் இதர நாடுகள் பொருளாதார தடை விதித்துள்ள நிலையில் இந்தியாவுக்கு கச்சா எண்ணெய்யை ரஷ்யா சலுகை விலையில் அளித்து வருகிறது. இந்நிலையில் இந்தியாவிலிருந்து … Read more

15 இடங்களில் 100 டிகிரிக்கு மேல் வெயில்: வேலூரில் 107 டிகிரி பாரன்ஹீட்

சென்னை: தமிழகத்தில் 15 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கு மேலும், வேலூரில் 107 டிகிரி ஃபாரன்ஹீட்டும் வெயில் பதிவாகியுள்ளது. அடுத்த 2 நாட்களுக்கு ஓரிருஇடங்களில் வழக்கத்தை விட 5 டிகிரி ஃபாரன்ஹீட் வரை வெயில் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக் கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை வழக்கத்தைவிட 5 டிகிரி ஃபாரன்ஹீட் அளவுவரை அதிகரிக்க வாய்ப்புள்ளது. நேற்று மாலை 5.30 … Read more

வைர வியாபாரி மெகுல் சோக்சி மீது சிபிஐ புதிய வழக்கு பதிவு

புதுடெல்லி: வைர வர்த்தகர் மெகுல் சோக்ஸி மீது மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) புதிய வழக்கை பதிவு செய்துள்ளது. பொதுத்துறை நிறுவனமான ஐஎப்சிஐ லிமிடெட் நிறுவனத்திடம் ரூ. 22.6 கோடி மோசடி செய்ததாக வழக்குப் பதிவு செய்துள்ளது. இந்த மோசடி 2014-ம் ஆண்டு முதல் 2018-ம் ஆண்டு வரையான காலத்தில் நிகழ்த்தப்பட்டுள்ளதாக முதல் தகவல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. நீண்ட கால முதலீட்டுத் தேவைக்காக ஐஎப்சிஐ லிமிடெட் நிறுவனத்திடம் 2016-ம் ஆண்டு மார்ச் மாதம் ரூ. 25 கோடி … Read more

ரம்ஜான் பண்டிகை இன்று கொண்டாட்டம்: ஆளுநர், முதல்வர், அரசியல் கட்சிகளின் தலைவர்கள் வாழ்த்து

சென்னை: ரம்ஜான் பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும்அரசியல் கட்சித் தலைவர்கள், இஸ்லாமியமக்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்திகள்: ஆளுநர் ஆர்.என்.ரவி: சமுதாய மற்றும் வளமான இந்தியாவின் சகோதரத்துவத்தை மேம்படுத்தவும், நன்மை மற்றும் நல்வாழ்வுக்கான அன்பைப் பரப்பவும், போதிக்கப்படும் தியாகம், அகிம்சை, பொறுமை மற்றும் ஒற்றுமை ஆகியவற்றின் தார்மீகப் பாதையை கடைபிடிக்கவும் இந்த நன்னாளில் உறுதி எடுத்துக் கொள்வோம். முதல்வர் மு.க.ஸ்டாலின்: இஸ்லாமியர்களுடன் என்றும் தோளோடு தோள் … Read more

3 நாட்கள் ஐரோப்பிய சுற்றுப்பணம், ஜெர்மனியில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு: காணொலி மூலம் கனடாவில் படேல் சிலையை திறந்து வைத்தார்

புதுடெல்லி: இந்தியர்கள் உலகில் எங்கும் எத்தனை தலைமுறையாக வேண்டுமானாலும் வாழலாம் ஆனால் அவர்கள் தாய்நாட்டின் மீதான விசுவாசம் குறையாது என்று பிரதமர் மோடி பெருமிதத்துடன் தெரிவித்தார். நடப்பு 2022-ம் ஆண்டில் பிரதமர் மோடி முதல் வெளிநாட்டு பயணமாக ஐரோப்பிய நாடுகளுக்கு சென்றுள்ளார். இதற்காக ஞாயிற்றுக்கிழமை அவர் டெல்லியில் இருந்து விமானம் மூலம் ஜெர்மனி நாட்டிற்கு புறப்பட்டுச் சென்றார். ஜெர்மனி பயணத்தை தொடர்ந்து டென்மார்க், பிரான்ஸ்நாடுகளுக்கும் அவர் செல்கிறார்.3 நாடுகளுக்குச் செல்லும் பிரதமர்மோடி, அந்நாடுகளின் தலைவர்களுடனான சந்திப்பு, கலந்துரையாடல் … Read more

இலங்கைக்கு உதவிப் பொருட்கள் அனுப்ப அனுமதி – மத்திய அமைச்சருக்கு முதல்வர் நன்றி

சென்னை: இலங்கை மக்களுக்கு உதவ வேண்டும் என்ற தமிழகத்தின் கோரிக்கையை ஏற்றுக் கொண்டதற்காக மத்திய அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார். பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கை மக்களுக்கு அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை அனுப்ப மத்திய அரசிடம் தமிழக அரசு அனுமதி கோரியது. நேரடியாக பிரதமரை சந்தித்தும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அனுமதி கோரினார். ஆனால், சாதகமான பதில் வராத சூழலில், அனுமதி அளிக்க மத்திய அரசை வலியறுத்தி சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அந்த … Read more

பெட்ரோலியத் துறை முன்னாள் செயலர் தருண் கபூர் பிரதமர் ஆலோசகராக நியமனம்

புதுடெல்லி: மத்திய பெட்ரோலியத் துறை முன்னாள் செயலாளர் தருண் கபூர் பிரதமர் நரேந்திர மோடியின் ஆலோசகராக நேற்று நியமனம் செய்யப்பட்டார். இவர் பொறுப்பேற்கும் நாள் முதல் 2 ஆண்டுகள் பதவியில் இருப்பார். கடந்த 1987-ம் ஆண்டு இமாச்சல பிரதேச பிரிவிலிருந்து ஐஏஎஸ் அதிகாரியாக தேர்வானவர் தருண் கபூர். பல்வேறு பதவிகளை வகித்த இவர் கடைசியாக மத்திய பெட்ரோலியத் துறை செயலாளர் பணியிலிருந்து கடந்த ஆண்டு நவம்பர் 30-ம் தேதி ஓய்வு பெற்றார். இந்நிலையில், பிரதமர் அலுவலகத்தில் பிரதமர் … Read more

தூய்மையான மருத்துவமனைகள் | தமிழகத்தின் 20 மருத்துவமனைகளுக்கு 'காயகல்ப்' விருது

சென்னை: தமிழகத்தில் உள்ள 20 மருத்துவமனைகள் தூய்மை மருத்துவமனைக்கான காயகல்ப் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளன. நாட்டில் உள்ள தூய்மையான மருத்துவமனைக்கு ஆண்டுதோறும் ‘காயகல்ப்’ விருது வழங்கப்படுகிறது. இதன்படி தமிழகம் முழுவதும் உள்ள மாவட்ட தலைமை மருத்துவமனை மற்றும் வட்டார மருத்துவமனையில் தேசிய சுகாதாரத் திட்ட குழு நேரில் ஆய்வு மேற்கொண்டது. இதில் கட்டிடங்கள் பராமரிப்பு, தூய்மை பராமரிப்பு, மருத்துவக் கழிவுகளை அப்புறப்படுத்துதல் நோய்ப்பரவலைக் கட்டுப்படுத்துதல், சுகாதாரக்கல்வி உள்ளிட்ட 8 பிரிவுகளின் கீழ் ஆய்வு மேற்கொண்டு மதிப்பெண் வழங்கப்பட்டது. … Read more