வைகை கரை சாலையில் சைக்கிள் டிராக்: மதுரை மாநகராட்சியின் சிறப்பு ஏற்பாடு

மதுரை: சைக்கிளிங் செல்வோர் வசதிக்காக வைகைக் கரை சாலையில் மதுரை மாநகராட்சி சார்பில் ‘சைக்கிள் டிராக்’ அமைக்க ஏற்பாடு செய்யப்படுகிறது பெட்ரோல் விலை உயர்வால் பொதுமக்களால் தற்போது கார், இருசக்கர வாகனங்களை முன்போல் தாராளமாக பயன்படுத்த முடியவில்லை. முன்போல் தற்போது ஒரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு வேலைக்கு செல்வதற்கு பொதுபோக்குவரத்தை பயன்படுத்த முடியவில்லை. ஆட்டோக்கள் கட்டணமும் பல மடங்கு உயர்ந்துவிட்டது. பொதுபோக்குவரத்து வாகனங்கள் சரியான நேரத்திற்கு வருவதில்லை. அதனால், வேலைக்கு செல்ல வேண்டிய இடங்களுக்கு சரியான நேரத்தில் … Read more

தெருக்களின் பெயர்களில் உள்ள சாதிப் பெயர்களை நீக்குகிறாதா சென்னை மாநகராட்சி?

சென்னை: தெருக்களின் பெயர்களில் உள்ள சாதிப் பெயர்களை நீக்கும் பணியை சென்னை மாநகராட்சி துவங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை மாநகராட்சியில் 10,000-க்கும் மேற்பட்ட தெருக்கள் உள்ளன. இந்த தெருக்களின் பெயர்ப் பலகைகளை சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் மாற்றியமைக்கும் பணியை சென்னை மாநகராட்சி செய்து வருகிறது. இதன்படி ரூ.8.43 கோடி செலவில் தெருக்களின் பெயர் பலகைகள் மாற்றியமைக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் இலச்சினை, தெருவின் பெயர், வார்டு, பகுதி, மண்டலம், அஞ்சல் … Read more

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸுக்கு கமல்ஹாசன் வாழ்த்து

சென்னை: “பாட்டாளி மக்கள் கட்சி தொடங்கிய காலத்தில் இருந்தே கட்சிப் பணிகளில் ஈடுபட்டு பாமகவின் தலைவராக உயர்ந்திருக்கும் அன்புமணி ராமதாஸுக்கு வாழ்த்து” என கமல்ஹாசன் குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “உடலைப் பேணும் விருப்பில் விளையாட்டுகளில் ஈடுபாடு கொண்டவர், ஆரோக்கியக் குறை ஏற்படுத்தும் பழக்கங்களின் மீது ஒவ்வாமை கொண்டவர். பாட்டாளி மக்கள் கட்சி தொடங்கிய காலத்தில் இருந்தே கட்சிப் பணிகளில் ஈடுபட்டு பாமகவின் தலைவராக உயர்ந்திருக்கும் டாக்டர் அன்புமணி … Read more

தட்சிணா மூர்த்தி நிலை இனி? – சிங்கப்பூரில் மரண தண்டனைக்கு எதிராக ஓங்கி ஒலிக்கும் இளம் குரல்கள்!

தன் மே க்யூயானும் அவரது நண்பர்களும் சமீபத்தில் சிங்கப்பூர் அதிபருக்கு கடிதம் ஓன்றை எழுதியிருந்தனர். அக்கடிதத்தில், ‘44 கிராம் ஹெராயின் (மூன்று டேபிள்ஸ்பூன் அளவு) கடத்திய குற்றத்திற்காக மரணத் தண்டனை விதிக்கப்பட்டு 7 ஆண்டுகள் சிறையில் உள்ள தட்சிணா மூர்த்தியின் மரண தண்டனை தடை செய்ய வேண்டும்’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது. சிங்கப்பூரில் மரணத் தண்டனைகளுக்கு எதிரான போராட்டங்கள் சமீப காலமாக அதிகரித்து வருகிறது. சிங்கப்பூர் தமிழரான நாகேந்திரன் தர்மலிங்கத்திற்கு போதை பொருட்கள் கடத்தல் குற்றத்திற்காக மரணத் தண்டனை … Read more

கார்பன் வாயிலாக வருவாய் ஈட்டும் சென்னை மாநகராட்சி… ஏன்? எதற்கு? எப்படி? 

காலநிலை மாற்றத்திற்கு முக்கியக் காரணியாக இருப்பது கிரீன் ஹவுஸ் கேஸ் என்று அழைக்கப்படும் பசுமை இல்ல வாயுக்கள் தான். இதில் முக்கிய காரணியாக உள்ள கார்பனின் உமிழ்வை குறைக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காலநிலை மாற்றத்திற்கான பன்னாட்டு அரசாங்கங்களின் குழு அறிக்கையில் (ஐபிசிசி) கூறப்பட்டுள்ளது. முடிந்தவரையில் விரைவாக கார்பன் உமிழ்வை பூஜ்ஜிய நிலைக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காலநிலை ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். இதன்படி, பல நாடுகள் 2050-ம் ஆண்டுக்குள் கார்பன் … Read more

தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சிகள் சட்டத் திருத்தம்: புதிய விதிகளை உருவாக்க குழுக்கள் அமைப்பு

சென்னை: தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சிகள் சட்டத் திருத்தம் தொடர்பாக புதிய விதிகளை உருவாக்க குழுக்களை அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் நிர்வாகம் தொடர்பாக ‘தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சிகள் சட்டம் 1998’ நடைமுறையில் உள்ளது. இந்தச் சட்டம் அமல்படுத்தப்பட்டு 20 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், இதைத் திருத்தம் செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதன்படி, ‘தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் திருத்தச் சட்டம் 2022’ விரைவில் அமல்படுத்தபடவுள்ளது. இந்நிலையில், இதற்கான … Read more

மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட லாலு பிரசாத் யாதவ் மகள் மிசா பாரதி மனுத் தாக்கல்

பாட்னா: மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட மனுத்தாக்கல் செய்யவந்த மகள் மிசா பாரதியுடன், ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சி தலைவர் லாலு பிரசாத் உடன்வந்தார். நீண்ட இடைவெளிக்குப் பின் வெளிவரும் அவரைப் பார்க்க தொண்டர்கள் கூட்டம் கூடியது. மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிட ராஷ்ட்ரிய ஜனதா தளம் சார்பில் லாலு மகள் மிசா பாரதி மற்றும் முன்னாள் எம்எல்ஏ பயஸ் அகமது, மறைந்த முன்னாள் எம்.பி மொகத் சகாபுதினின் மனைவி ஹினா சகாப் ஆகியோர் நேற்று மனுத் தாக்கல் செய்தனர். … Read more

“சமூக நீதிப் பாதையில் தொடர்ந்து பாடுபடுவீர்!” – பாமக தலைவர் அன்புமணிக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

சென்னை: பாமக தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள அன்புமணி ராமதாஸுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். பாமக சிறப்பு பொதுக் குழு கூட்டம் திருவேற்காட்டில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், பாமக தலைவராக அன்புமணி ராமதாஸ் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில், அன்புமணி ராமதாஸுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். பாட்டாளி மக்கள் கட்சியின் புதிய தலைவராகப் பொறுப்பேற்றுள்ள @draramadoss அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த வாழ்த்துகள்! சமூகநீதிப் பாதையில் பாட்டாளி மக்களின் முன்னேற்றத்திற்காகத் தொடர்ந்து பாடுபட வாழ்த்துகிறேன்! — M.K.Stalin … Read more

உத்தராகண்ட் முன்னாள் அமைச்சர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை – மருமகள் மீது போலீஸார் வழக்கு பதிவு

டேராடூன்: உத்தராகண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திர பகுகுணா (59). இவர் 2004-05-ம் ஆண்டில் என்.டி. திவாரி அமைச்சரவையில் அமைச்சராக பணியாற்றியுள்ளார். தற்போது இவர் ஹால்தானி பகுதியில் மகன் அஜய் பகுகுணா, மருமகள், பேத்தியுடன் வசித்தார். கடந்த வாரம் பேத்தியை மானபங்கம் செய்ய முயன்றதாக இவரது மருமகள் போலீஸில் புகார் கொடுத்தார். இதையடுத்து போலீஸார் ராஜேந்திர பகுகுணா மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். இந்நிலையில், கடந்த புதன்கிழமை போலீஸாருக்கு போன் செய்து விட்டு மாடியிலுள்ள … Read more

“கருணாநிதி சிலையைப் பார்த்தவுடன் நெஞ்சம் உருகிவிட்டது” – துரைமுருகன்

சென்னை: “கருணாநிதியின் சிலையைப் பார்த்த உடன் நெஞ்சம் உருகிவிட்டது” என்று அமைச்சர் துரைமுருகன் பேசினார். சென்னை – ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில், பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையின் முன்புறம் அண்ணா சாலை ஓரத்தில் 12 அடி உயர பீடத்தில், 16 அடி உயரத்தில் ரூ.1.7 கோடி மதிப்பில் நிறுவப்பட்டுள்ள மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் முழு உருவ வெண்கலச் சிலையை குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு இன்று திறந்து வைத்தார். இதனைத் தொடர்ந்து கலைவாணர் … Read more