தாய்நாட்டிற்கு துரோகம் இழைத்து ரஷ்ய படைகளுடன் இணைந்த உக்ரைன் மேயர்!

உக்ரைனின் மேயர் ஒருவர் ரஷ்ய படைகளுடன் இணைந்து பணியாற்றி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. Balakliia மேயர் Ivan Stolbovyi ரஷ்ய படைகளுடன் ஒத்துழைக்கிறார் என கார்கிவ் ஆளுநர் Oleh Synehubov தெரிவித்துள்ளார். மேயர் Ivan Stolbovyi உக்ரைனுக்கு துரோகம் செய்துவிட்டார். ரஷ்யர்களுடன் இணைந்து மனிதாபிமான உதவி மையங்கள் அமைக்கப்பட்டதாக Ivan Stolbovyi அறிவிக்கும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளதாக Oleh Synehubov தெரிவித்துள்ளார். ஊனமுற்ற நபரை கட்டையால் சரமாரியாக தாக்கிய ஜோடி! கமெராவில் சிக்கிய காட்சி  உக்ரைன் மீது … Read more

என்னை யாரு அம்மான்னு கூப்பிடுவாங்க! பள்ளி வாகனம் மோதி பலியான 7 வயது சிறுவனின் தாய் கதறல்

சென்னையில் பள்ளி வளாகத்திலேயே வாகனம் மோதி 7 வயது சிறுவன் பலியான சோக சம்பவம் நடந்துள்ளது. சென்னை விருகம்பாக்கம் இளங்கோ நகரைசேர்ந்தவர் வெற்றிவேல். இவரது மனைவி ஜெனிபர். இருவரும் ஐ.டி ஊழியர்கள். இவர்களது 7 வயது மகன் தீக்சித். இந்தச் சிறுவன் வளசரவாக்கம் அருகே ஆழ்வார்திருநகரில் உள்ள தனியார் மேல்நிலைப் பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வந்தான்.   எதிர்பாராத விபத்து நேற்று காலை 8.40 மணி அளவில் வழக்கம் போல, மாணவன் தீக்சித் பள்ளி வேனில் பள்ளிக்கு … Read more

100க்கும் மேற்பட்ட தெருநாய்கள் விஷம் வைத்து கொன்று குவிப்பு! பதபததைக்க வைக்கும் வீடியோ

 இந்தியாவில் 100க்கும் மேற்பட்ட தெருநாய்கள் விஷ ஊசி போட்டு கொல்லப்பட்ட சம்பவம் வெளிச்சத்திற்கு வந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானாவில் உள்ள சித்திபேட்டை மாவட்டத்திலே இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது. உள்ளூர் நிர்வாகம் மற்றும் கிராம செயலாளர், நாய் பிடிப்பவர்களை வேலைக்கு அமர்த்தியதாகவும், தெருநாய்களை விஷ ஊசி போட்டு கொன்றதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் மூலம் நாய்கள் கொல்லப்பட்ட சம்பவம் வெளிச்சத்திற்கு வந்ததுள்ளது. கிராமவாசி ஒருவர், மார்ச் 27 அன்று தங்களுடைய செல்லப்பிராணி இறந்தைப் … Read more

6 நாடுகளின் தலைநகரங்களில் ரஷ்ய படைகள்: விளாடிமிர் புடினின் நடுங்க வைக்கும் எச்சரிக்கை

இரண்டு நாட்களுக்குள் 6 அண்டை நாடுகளின் தலைநகரங்களில் ரஷ்ய படைகளை தம்மால் களமிறக்க முடியும் என ஜனாதிபதி விளாடிமிர் புடின் எச்சரிக்கை விடுத்ததாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு 35 நாட்களை கடந்துள்ள நிலையில், ரஷ்யா கொஞ்சம் கொஞ்சமாக தமது இறுக்கத்தை குறைத்து வருவதாகவே கூறப்படுகிறது. இரு தரப்பும் கடுமையான சேதங்களை எதிர்கொண்டுள்ளன. உக்ரைன் தரப்பில் அப்பாவி மக்கள் ஆயிரக்கணக்கில் கொல்லப்பட்டுள்ளதுடன், கட்டுமானங்கள் மொத்தமும் ரஷ்ய குண்டுவீச்சில் கடுமையாக சேதப்பட்டுள்ளது. இந்த நிலையில், … Read more

வேகமாக வந்துகொண்டிருந்த ரயில் முன் குதித்த இளைஞர்: பொலிசார் ஒருவர் செய்த துணிச்சலான செயல்

இந்தியாவில், வேகமாக வந்துகொண்டிருந்த ரயில் முன் திடீரென இளைஞர் ஒருவர் குதிக்க, பொலிசார் ஒருவர் துணிந்து தண்டவாளத்தில் குதித்து அந்த இளைஞரைக் காப்பாற்றுவதைக் காட்டும் திகில் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. மஹாராஷ்ட்ராவிலுள்ள ரயில் நிலையம் ஒன்றில், ஒரு இளைஞர் பிளாட்பாரத்தின் ஓரமாக நிற்பதைக் கவனித்த பொலிசார் ஒருவர், அவரை விலகி நிற்குமாறு அறிவுறுத்தியுள்ளார். ஆனாலும் அந்த இளைஞர் பிளாட்பாரத்தின் ஓரத்திலேயே நிற்க, மீண்டும் அவரை விலகி வருமாறு அறிவுறுத்தியுள்ளார் அந்த பொலிசார். ஆனால், வேகமாக ரயில் வரும் … Read more

வடகொரியா, தென்கொரியா போல உக்ரைனை இரண்டாக உடைத்து… ரஷ்யா அதிரடி முடிவு

உக்ரைனை இரண்டாக உடைக்கும் முயற்சியின் எதிரொலியாக கிழக்கு உக்ரைனை முழுமையாக கைப்பற்ற ரஷ்ய ராணுவம் முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவதை விரும்பாத ரஷ்யா, கடந்த மாதம் 24ம் திகதி அந்நாட்டின் மீது போர் தொடுத்தது. 33 நாட்களாக போர் தொடர்ந்து நடந்து வருகிறது. வடகொரியா, தென் கொரியா போல கெர்சன் நகரை ரஷ்யா கைப்பற்றிய நிலையில், மரியுபோல் உள்ளிட்ட பெரும்பாலான நகரங்களை சர்வ நாசம் செய்துள்ளது. கீவ், கார்கிவ் போன்ற முக்கிய … Read more

இறங்கி வந்துள்ள ரஷ்யா… முக்கிய நிபந்தனைகளை விலக்கிக்கொள்ளப்போவதாக தகவல்

இன்று உக்ரைனும் ரஷ்யாவும் துருக்கியில் நேருக்கு நேராக பேச்சுவார்த்தைகளில் ஈடுபடப்போகும் நிலையில், சில நல்ல தகவல்கள் வந்துள்ளன. அதாவது, போரின் துவக்கத்தில் ரஷ்யா உக்ரைனுக்கு சில நிபந்தனைகளை விதித்திருந்தது. தற்போது அந்த நிபந்தனைகளில் மூன்று முக்கிய நிபந்தனைகளை ரஷ்யா விலக்கிக்கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, உக்ரைன் அதிபர் தொடர்ந்து பதவியில் நீடிக்க அனுமதிப்பது, உக்ரைனை இராணுவ மயமாக்கக்ககூடாது என்னும் நிபந்தனை மற்றும் ரஷ்ய மொழிக்கு சட்டப்பூர்வ பாதுகாப்பு அளிக்கவேண்டும் என்னும் நிபந்தனை, ஆகிய நிபந்தனைகளை விலக்கிக்கொள்ள … Read more

தம்பி ஹர்திக் பாண்டியா விக்கெட்டை காலி செய்தவுடன் அண்ணன் குர்னல் தந்த ரியாக்‌ஷன்! வைரலாகும் வீடியோ

ஐபிஎல் போட்டியில் ஹர்திக் பாண்டியாவை தனது பந்துவீச்சில் அவுட்டாக்கிய அவர் சகோதரர் குர்னல் பாண்டியா கொடுத்த ரியாக்‌ஷனின் வீடியோ வைரலாகியுள்ளது. ஐபிஎல் 15வது சீசனில் 4வது லீக் ஆட்டத்தில் புதிய அணிகளான குஜராத் மற்றும் லக்னோ அணிகள் மோதின. இப்போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி வெற்றி பெற்றது. போட்டியின் போது ஒரு கட்டத்தில் குஜராத் கேப்டன் ஹர்திக் பாண்டியா பேட்டிங் ஆடி கொண்டிருந்தார். Brother vs BrotherIPL 2022: Hardik Out On Krunal Pandya Ball#krunal … Read more

உக்ரைனுக்கு ஆதரவாக பேசிய ரஷ்ய கோடீஸ்வரருக்கு பாய்சன் அட்டாக்! உரிந்த உடல் தோல்கள்… பரபர தகவல்

உக்ரைன் – ரஷ்யா போரை நிறுத்த அமைதி பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட குழு உறுப்பினர்களுக்கு விஷம் வைத்து பாய்சன் அட்டாக் நடத்தப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது. கடந்த பிப்ரவரி 24ஆம் திகதி தொடங்கிய உக்ரைன் போர், ஒரு மாதத்திற்கும் மேலாகத் தொடர்கிறது. விளாடிமிர் புடினின் இந்தச் செயலை கண்டித்துள்ள உலக நாடுகள், ரஷ்யா மீது கடுமையான பொருளாதாரத் தடைகளை அறிவித்து வருகிறது. தொழிலதிபர் ரோமன் அப்ரமோவிக் இருந்த போதிலும், போர் முடிவுக்கு வருவதாகத் தெரியவில்லை. ஒரு புறம் போர் … Read more

ஜேர்மனியில் 'Z' சின்னம் பயன்படுத்தினால்.., உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை!

உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்புக்கு ஆதரவு தெரிவிப்பதை குறிக்கும் வகையில் ஜேர்மனியில் “Z” என்ற எழுத்தைக் பயன்படுத்தும் நபர்கள் மீது கிரிமினல் வழக்குத் தொடரப்படும் என்று உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. பெர்லின் மாநிலத்தின் உள்துறை மந்திரி, ரஷ்யாவின் போருக்கு ஆதரவு அளிக்க Z சின்னம் பயன்படுத்தும் நபர்கள் மீது நகர அதிகாரிகள் வழக்குபதிவு செய்வார்கள் என்று கூறினார். முன்னதாக, பவேரியா மற்றும் லோயர் சாக்சோனி ஆகிய மாநிலங்களும், அத்தகைய செயல்களில் ஈடுபடும் நபர்கள் தண்டிக்கப்படுவார்கள் என அறிவிப்புகளைத் … Read more