பேச்சுவார்த்தை தோல்வியுற்றால்.. 3வது உலகப் போர்! ஜெலன்ஸ்கி எச்சரிக்கை

 ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுடன் பேச்சுவார்த்தைக்கு தான் தயாராக இருப்பதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்த ஜெலன்ஸ்கி, புடினுடன் பேச்சுவார்த்தைக்கு நான் தயாராக இருக்கிறேன். கடந்த இரண்டு ஆண்டுகளாக நான் தயாராக இருக்கிறேன். பேச்சுவார்த்தைகள் இல்லாமல் இந்த போரை முடிவுக்கு கொண்டு வர முடியாது என்று நான் நினைக்கிறேன். புடினுடன் பேசுவதற்கு சாத்தியமான அனைத்து வாய்ப்பையும் பயன்படுத்த வேண்டும் என்று நான் நினைக்கிறேன். ஆனால், புடினுடனான பேச்சுவார்த்தை முயற்சிகள் தோல்வியுற்றால், இது மூன்றாம் … Read more

புகைவிட தொடங்கும் சீனா-தைவான் போர்: பீதியின் உச்சத்தில் ஜப்பான் மக்கள்!

உக்ரைன்-ரஷ்யா போரானது, தைவானை ஆக்கிரமிப்பதற்கான எண்ணங்களை சீனாவிற்கு தரலாம் என ஜப்பான் மக்களை கவலையடைய வைத்துள்ளது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் தாக்குதல் நான்கு வாரங்களாக நடைபெற்று வரும் நிலையில், ஜப்பானின் அண்டை நாடான தைவான் மீது சீனா போர் தொடுக்கும் அபாயம் அதிகரித்து இருப்பதாக ஜப்பான் மக்கள் பெரும்பாலானோர் அஞ்சுவதாக தகவல் வெளியாகியுள்ளது. கிழக்கு சீன கடலில் உள்ள தீவுகள் தொடர்பாக ஜப்பான் சீனா பிராந்திய தகராறு நீண்ட காலமாக நிலவி வருகிறது, அதிலும் குறிப்பாக … Read more

புடினை பதவியிலிருந்து தூக்கியெறிய ரஷ்யாவின் பலம்மிக்க குழு திட்டம்! உளவுத்துறை பரபரப்பு தகவல்

 புடினை அதிபர் பதவியிலிருந்து தூக்கியெறிய ரஷ்யாவின் பலம்மிக்க (Elites) குழு திட்டமிட்டுள்ளதாக உக்ரைனின் ராணுவ உளவுத்துறை தெரிவித்துள்ளது. உக்ரைன் மீது 25வது நாளாக போர் தொடுத்து வரும் ரஷ்யா, தலைநகர் கீவ் உட்பட முக்கிய நகரங்கள் மீது தீவிரமாக தாக்குதல் நடத்தி வருகிறது. உக்ரைன் மீது படையெடுத்து வரும் ரஷ்யா மீது மேற்கத்திய நாடுகள் கடுமையான பொருளாதார தடைகளை விதித்துள்ளன. இதனால், ரஷ்யாவின் ரூபிள் மதிப்பு, பங்குச் சந்தை மற்றும் பொருளாதாரம் கடும் சரிவை சந்தித்துள்ளது. மேற்கத்திய … Read more

ரஷ்யாவுக்கு செல்ல கட்டாயப்படுத்தப்படும் உக்ரைன் மக்கள்!

உக்ரைனியில் ஆயிரக்கணக்கான மரியுபோல் நகர குடியிருப்பாளர்கள் ரஷ்யாவிற்கு இடம்பெயர வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மரியுபோல் நகர கவுன்சில் வெளியிட்ட ஒரு அறிக்கையில், “ஆக்கிரமிப்பாளர்கள் உக்ரைனை விட்டு ரஷ்ய பிரதேசத்திற்கு செல்ல மக்களை கட்டாயப்படுத்துகிறார்கள். ஆக்கிரமிப்பாளர்கள் சட்டவிரோதமாக லெவோபெரெஸ்னி மாவட்டத்தில் இருந்து மக்களை வெளியே அழைத்துச் சென்றனர் மற்றும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் (பெரும்பாலும் ஒரு விளையாட்டு கிளப் கட்டிடத்தில் தங்குமிடம்) பெண்கள் மற்றும் குழந்தைகள்) தொடர்ச்சியான குண்டுவெடிப்பிலிருந்து தப்பிக்க மறைவாக இருக்கின்றனர்” என்று தெரிவித்துள்ளது. … Read more

பிரபல ஐரோப்பிய நாட்டிலிருந்து உக்ரைன் மீது தாக்குதல்.. ரஷ்யா வெளியிட்ட வீடியோவில் அம்பலம்

உக்ரைன் மீது தாக்குதல் நடத்த பிரபல ஐரோப்பிய நாடான பெலாரஸை பயன்படுத்தியதற்கான ஆதாரத்தை ரஷ்யாவே வெளியிட்டுள்ளது. உக்ரைன் மீது 25வது நாளாக போர் தொடுத்து வரும் ரஷ்யா, தலைநகர் கீவ் உட்பட முக்கிய நகரங்கள் மீது தீவிரமாக தாக்குதல் நடத்தி வருகிறது. இதனிடையே, பிரபல ஐரோப்பிய நாடும், புடினின் நட்பு நாடான பெலராஸிலிருந்து உக்ரைன் மீது ரஷ்ய தாக்குதல் நடத்தி வருவதாக உக்ரேனிய அதிகாரிகள் குற்றம்சாட்டினர். ஆனால், உக்ரைன் மீதான தாக்குதலுக்கு ரஷ்ய படைகள் தங்கள் நிலத்தை … Read more

உக்ரைன் மீது 2வது முறையாக ஹைப்பர்சோனிக் ஏவுகணை மூலம் ரஷ்யா தாக்குதல்!

 உக்ரைன் மீது ரஷ்யா 2வது முறையாக ஹைப்பர்சோனிக் ஏவுகணை மூலம் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த வார இறுதியில் கருங்கடல் மற்றும் காஸ்பியன் கடலில் உள்ள கப்பல்களில் இருந்து உக்ரைன் மீது ஏவுகணைகளை ஏவியதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. கிரிமியா வான்வெளியில் இருந்து ஒலியை விட ஐந்து மடங்கு வேகத்தில் செல்லும் ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளை ரஷ்யா ஏவியது என்று பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் Igor Konashenkov கூறினார். இந்த தாக்குதல்கள் உக்ரைனின் ராணுவ உள்கட்டமைப்பை குறிவைத்ததாக … Read more

இளம்பெண் மீது பாய்ந்த அமெரிக்காவின் பொருளாதார தடை: நியாயமற்றது என பெஸ்கோவ் கண்டனம்!

ரஷ்யா ஜனாதிபதி விளாடிமிர் புதினின் செய்தித்தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ்வின், எனது 24 வயது மகளின் மீது விதிக்கப்பட்டுள்ள பொருளாதார தடை நியாயமற்றது என தெரிவித்துள்ளார். உக்ரைன் மீதான ரஷ்ய போரை எதிர்த்து ரஷ்யா மீதும் அந்த நாட்டின் முக்கிய நபர்களின் மீதும் பல்வேறு பொருளாதார நடவடிக்கைகள் மற்றும் சொத்துக்கள் முடக்க தடைகளை  மேற்கத்திய நாடுகள் பலவும் அறிவித்து வருகின்றனர். அந்தவகையில் ரஷ்ய ஜனாதிபதி புதினின் செய்தி தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ், அவரது மனைவி, மற்றும் 24 வயதுடைய … Read more

மக்கள் தஞ்சமடைந்திருந்த பள்ளியை குண்டுவீசி அழித்த ரஷ்யா! நுற்றுக்கணக்கானோர் புதைந்த துயரம்

 உக்ரைனில் மக்கள் தஞ்சமடைந்திருந்த பள்ளி மீது ரஷ்ய படையினர் குண்டுவீச தாக்குதல் நடத்தியதாக உக்ரேனிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உக்ரைன் மீது 25வது நாளாக போர் தொடுத்து வரும் ரஷ்யா, தலைநகர் கீவ் உட்பட முக்கிய நகரங்கள் மீது தீவிரமாக தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில், சனிக்கிழமை சுமார் 400 பேர் தஞ்சமடைந்திருந்த பள்ளி மீது ரஷ்ய படைகள் குண்டுவீசி தாக்கியதாக மரியுபோல் நகர கவுன்சில் தெரிவித்துள்ளது. ரஷ்யா குண்டுவீசி தாக்குதல் நடத்தியதில் பள்ளி கட்டிடம் முற்றிலும் அழிந்துவிட்டது, … Read more

மிரளவைக்கும் உக்ரைனின் உணவு தானிய கையிருப்பு: பஞ்சத்திற்கு வாய்ப்பே இல்லை

உக்ரைன் மக்களுக்கு அளிப்பதற்கான கோதுமை மக்காச்சோளம் போன்ற உணவு தானியங்கள் வரும் 2023ம் ஆண்டு வரை கையிருப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. உக்ரைனில் ரஷ்யா தனது போர் தாக்குதலை தொடங்கி அந்த நாட்டின் முக்கிய நகரங்கள், தொழிற்சாலைகள், வணிக வளாகங்கள் என பலவற்றின் மீது கடுமையான தொடர் ஏவுகணை தாக்குதலை நடத்திவருகின்றனர். இதனிடையே, ரஷ்யாவின் போர்த்தாக்குதலை கருத்தில் கொண்டு உக்ரைன் மக்களின் உணவு தேவையை பூர்த்தி செய்யும் விதமாக நாட்டில் விளையும் கோதுமை, பார்லி போன்ற அனைத்து … Read more

ஐரோப்பாவின் மிகப்பெரிய எஃகு உற்பத்தி தொழிற்சாலையை அழித்துள்ள ரஷ்யா: தாக்குதல் வீடியோ காட்சிகள்!

 உக்ரைனின் செயல்பட்டு வரும் ஐரோப்பாவின் மிகப்பெரிய எஃகு உற்பத்தி தொழிற்சாலையான அசோவ்ஸ்டல்(Azovstal) ரஷ்ய ராணுவம் மரியுபோல் நகரில் நடத்திய ஏவுகணை தாக்குதலில் அழிக்கப்பட்டுள்ளது. உக்ரைன்-ரஷ்யா இடையே நடைபெற்று வரும் போர் தாக்குதலில் உக்ரைனின் பெரும்பாலான நகரங்கள், தொழிற்சாலைகள் என பலவும் ரஷ்யாவின் ஏவுகணை மற்றும் வான் தாக்குதலில் சீரழிந்து வருகிறது. அந்த வகையில், ஐரோப்பிய பிராந்தியத்தின் மிக முக்கிய இரும்பு மற்றும் எஃகு உற்பத்தி தொழிற்சாலையாக கருதப்படும் அசோவ்ஸ்டல்(Azovstal), ரஷ்ய ராணுவம் உக்ரைனின் மரியுபோல் நகரில் நடத்திய … Read more