உலகை அச்சுறுத்தும் ரஷ்யாவின் exoskeleton உடை: அதிர்ச்சியில் உறைந்து போன உக்ரைன்!

ரஷ்யா உலகின் மிக பயங்கரமான “எக்ஸோஸ்கெலட்டன்”(exoskeleton) உடைகளை அந்த நாட்டு வீரர்களுக்கு வழங்க இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது. உக்ரைனில் ரஷ்யா தனது போர் தாக்குதலை மிகவும் தீவிரமான முறையில் நான்காவது வாரமாக தொடர்ந்து நடத்தி வருகிறது. இதனிடையே ரஷ்ய வீரர்களுக்கு மிகவும் கொடூரமான “எக்ஸோஸ்கெலட்டன்”(exoskeleton) உடைகளை வழங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுவரை நடைபெற்று வரும் உக்ரைன் போரில் இந்த உடைகள் பயன்படுத்தப்பட்டதாக எந்தவொரு அதிகாரப்பூர்வ தகவலும் வெளிவராத நிலையில், இந்த கவச உடையானது எதிராளிகளுக்கு மிகப்பெரிய … Read more

உக்ரைன் ஆயுதங்களை எடுத்து தன்னைத்தானே சுட்டுக்கொள்ளும் ரஷ்ய வீரர்கள்!

ரஷ்ய வீரர்கள் உக்ரைனில் சண்டையிடுவதைத் தவிர்ப்பதற்காக தங்களைத் தாங்களே காலில் சுட்டுக்கொள்கிறார்கள் என அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியாகியுள்ளது. அதற்காக, ரஷ்ய வீரர்கள் உக்ரேனிய வெடிமருந்துகளைத் தேடுகின்றனர். அதன்முலம் காயம் ஏற்பட்டால், அவர்கள் சுயமாக காயப்படுத்திக் கொண்டதைப்போல் இல்லாமல் உள்ளூர் மருத்துவமனைகளுக்குச் செல்ல முடியும் என்று உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. பெலாரஷ்ய ஊடகமான NEXTA, ரஷ்ய படையினரை இடைமறித்து அவர்களுடன் உரையாடியபோது, ரஷ்ய இராணுவ அதிகாரிகள் கூட சுயமாக தங்கள் காலில் சுட்டுக் கொண்டதாக ரஷ்ய சிப்பாய் ஒருவர் … Read more

ரஷ்ய மீண்டு வர பல தலைமுறைகள் தேவைப்படும்! புடினுக்கு ஜெலன்ஸ்கி பகிரங்க எச்சரிக்கை

உக்ரைன் மீதான படையெடுப்பினால் ஏற்படும் இழப்புகள், மீண்டு வர பல தலைமுறைகள் தேவைப்படும் அளவிற்கு இருக்கும் என ரஷ்யாவுக்கு ஜெலன்ஸ்கி எச்சரிக்கை விடுத்துள்ளார். ஜெலன்ஸ்கி வெளியிட்ட வீடியோவில், போர் நான்காவது வாரத்தை எட்டியுள்ள நிலையில், ரஷ்யா தாமதமின்றி மேலதிக பேச்சுவார்த்தையில் ஈடுபடுமாறு ஜெலன்ஸ்கி வலியுறுத்தியுள்ளார். ரஷ்யா தனது தவறுகளை சரி செய்வதற்கான ஒரே வழி இது தான் என அவர் குறிப்பிட்டுள்ளார். இது சந்திக்க வேண்டிய நேரம், பேச வேண்டிய நேரம், உக்ரைனுக்கான பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் … Read more

மருமகள், மகன் என மொத்த குடும்பத்தையும் வீட்டோடு எரித்து கொன்ற முதியவர்! அதிர்ச்சி காரணம்

இந்தியாவில் மகன், மருமகள் மற்றும் இரண்டு பேத்திகளை வீட்டோடு எரித்து கொன்ற முதியவரின் செயல் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலத்தில் உள்ள சீனிகுழி என்ற பகுதியில் தான் இந்த சம்பவம் இன்று அரங்கேறியுள்ளது. சொத்துத் தகராறில் இந்த சம்பவம் நடந்திருப்பதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. சம்பவத்தை நேரில் கண்டவர்கள் சொன்ன தகவல் அதன்படி ஹமீத் (79) என்ற முதியவர் மொஹம்மது ஃபைசல் (49), அவரது மனைவி ஷீபா (39), மகள்கள் மீரு (16), அஸ்னா (13) … Read more

அமேசான் காட்டில் தொலைந்துபோன 2 சிறுவர்கள்: ஒரே பழத்தை உண்டு 25 நாட்கள் பிழைத்திருந்த ஆச்சரியம்

அமேசான் காட்டில் தொலைந்துபோன பிரேசில் நாட்டைச் சேர்ந்த இரண்டு சிறுவர்கள் 25 நாட்கள் கழித்து உயிருடன் மீட்கப்பட்டனர். ஏழு மற்றும் ஒன்பது வயதுடைய இரண்டு பிரேசிலிய பழங்குடியின சிறுவர்கள் 25 நாட்கள் அமேசான் மழைக்காடுகளில் காணாமல் போயுள்ளனர், அங்கு அவர்கள் பழம் சாப்பிட்டு, மழைநீரைக் குடித்து உயிருடன் இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். மார்ச் 15 செவ்வாய்க்கிழமையன்று மீட்கப்பட்ட சகோதரர்களான 7 வயது Glauco மற்றும் 9 வயது Gleison, அவர்கள் காணாமல் போன இடத்திலிருந்து 35 கிலோமீட்டர் … Read more

புடின் பேசிக்கொண்டிருக்கும்போதே ஒளிபரப்பை நிறுத்திய ரஷ்ய அரசு தொலைக்காட்சி!

மாஸ்கோவின் பிரதான கால்பந்து மைதானத்தில் பல்லாயிரக்கணக்கான ஆதரவாளர்கள் மத்தியில் உரையாற்றிய ஜனாதிபதி விளாடிமிர் புடின் உரையை ரஷ்ய அரசு தொலைக்காட்சி நடுவே நிறுத்தியது. ரஷ்ய தலைவர் கூட்டத்தில் உரையாற்றுகையில், திடீரென அவரது உரையின் நேரலை துண்டிக்கப்பட்ட நிலையில், நிகழ்ச்சி தொடங்கும் முன் ஒளிபரப்பப்பட்ட தேசபக்தி இசையின் கிளிப்பை அரசு தொலைக்காட்சி ஒளிபரப்பியது. “நமது தலைசிறந்த ராணுவ வீரர்களில் ஒருவரின் பிறந்தநாளுடன் தற்செயலாக இந்த நடவடிக்கையின் ஆரம்பம் ஒத்துப் போனது…” என்று புடின் பேசிக்கொண்டிருந்த நேரத்தில் அவரது உரை … Read more

ரஷ்யாவை அவமானத்துக்குள்ளாக்கும் உக்ரைன்… பயந்து பதுங்கும் ரஷ்ய வீரர்கள்: வெளியாகியுள்ள வீடியோ ஆதாரம்

எட்டு ஆண்டுகளுக்கு முன் கிரீமியாவைப் பிடித்துக்கொண்டது போல, தெனாவட்டாக உக்ரைனுக்குள் நுழைந்து இப்போதும் எளிதாக அதைக் கைப்பற்றிவிடலாம் என கனவு கண்ட புடின் தப்புக்கணக்கு போட்டுவிட்டது போல் தெரிகிறது. அப்படியெல்லாம் எங்கள் நாட்டை எடுத்துக்கொள்ளமுடியாது, ஒரு அடி நிலம் கூட விட்டுத் தரமாட்டோம் என கெத்தாக எதிர்த்து நிற்கிறது உக்ரைன். போதாக்குறைக்கு கிடைத்த ரஷ்ய படையினரை எல்லாம் துவம்சம் செய்கிறார்கள் உக்ரைன் வீரர்கள். தன் பக்கம் இழப்பு இருப்பது உண்மைதான் என்றாலும், போர் விமானங்களை சுட்டு வீழ்த்துவதும், … Read more

உக்ரைனை கைப்பற்ற துடிக்கும் ரஷ்யாவுக்கு உதவ சீன படைகள் சென்றனவா? அதிரவைத்த புகைப்படம் குறித்து தெரியவந்த உண்மை

ரஷ்யாவுக்கு உதவுவதற்காக ஆயுதங்கள் ஏந்திய சீன ராணுவ வாகனங்கள் ரஷ்ய எல்லையில் செல்வதாக ஒரு புகைப்படம் வெளியாகி அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில் அதன் உண்மை தன்மை குறித்து தெரியவந்துள்ளது. உக்ரைனுக்குள் புகுந்த ரஷ்ய படையினர் கடந்த 24 நாட்களாக தொடர் தாக்குதல் நடத்தி வருகின்றன. பல உலக நாடுகளின் கண்டனம் மற்றும் எதிர்ப்பை மீறி புடினின் ரஷ்யா இத்தாக்குதலை நடத்தி வருகிறது. பரபரப்பை ஏற்படுத்திய புகைப்படம் இந்நிலையில் சீனாவின் கனரக ராணுவ வாகனங்கள் ஏவுகணைகள், ஆயுதங்களுடன் ரஷ்ய … Read more

இந்தியாவுக்கு மொயீன் அலி வருவதில் சிக்கல் – சென்னை அணிக்கு அடுத்த தலைவலி

ஐபிஎல் தொடருக்கு இன்னும் ஒருவார காலமே உள்ள நிலையில் சென்னை அணியில் முக்கிய வீரர் இணையாமல் இருப்பது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  ஐபிஎல் தொடரின் 15வது சீசன் வரும் மார்ச் 26 ஆம் தேதி முதல் கோலாகலமாக தொடங்கவுள்ள நிலையில் முதல் போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதுகின்றன. இதனிடையே நடப்பாண்டு தொடருக்காக சென்னை அணியில் தோனி, ருத்துராஜ் கெய்க்வாட், மொயீன் அலி, ஜடேஜா ஆகிய 4 வீரர்களும் … Read more

கனடாவில் அதிரடியாக தரையிறக்கப்பட்ட ரஷ்யாவின் மிகப் பெரிய விமானம்

மிகப் பெரிய ரஷ்ய விமானம் ஒன்று ரொறன்ரோ பியர்சன் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டுள்ளதுடன் வெளியேறவும் காலவரையின்றி தடை விதிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் விவகாரம் தொடர்பில் ரஷ்ய விமானங்களுக்கு கனடா அரசாங்கம் தடை விதித்தது. இந்த நிலையில், ரஷ்யாவின் Volga-Dnepr விமான சேவை நிறுவனத்திற்கு சொந்தமான சரக்கு விமானம் ஒன்று கடந்த பிப்ரவரி 27ம் திகதி ரொறன்ரோவில் அதிரடியாக தரையிறக்கப்பட்டது. ஏங்கரேஜ் மற்றும் ரஷ்யா வழியாக சீனாவில் இருந்து கனடா வந்த அந்த சரக்கு விமானமானது ரொறன்ரோவில் தரையிறங்கிய … Read more