உக்ரைனில் ரஷ்ய படைகளால் அமெரிக்கா பத்திரிக்கையாளர் சுட்டுக் கொலை!

உக்ரைனில் ரஷ்ய படைகளால் அமெரிக்க பத்திரிக்கையாளர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உக்ரைன் மீது தொடர்ந்து 18வது நாளாக படையெடுத்து வரும் ரஷ்யா, அந்நாட்டின் தலைநகர் கீவ் நோக்கி வேகமாக முன்னேறி வருகிறது. இந்நிலையில், கீவ் புறநகரில் உள்ள இர்பின் நகரில் Brent Renaud என்ற அமெரிக்க பத்திரிக்கையாளர் சுட்டுக் கொல்லப்பட்டதாக கீவ் நகர காவல்துறை தெரிவித்துள்ளது. Brent Renaud, ரஷ்ய வீரர்களால் குறிவைக்கப்பட்டதாகவும், மேலும் இரண்டு ஊடகவியலாளர்கள் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என கீவ் … Read more

குழந்தையை ஜன்னல் வழியாக வீசி, தானும் குதித்த தந்தை! வெளியான திகிலூட்டும் வீடியோ

தீயில் இருந்து தப்பிக்க ஒரு நபர் தனது 3 வயது மகனை ஜன்னல் வழியாக தூக்கி எறிந்துவிட்டு, கட்டிடத்தின் இரண்டாவது மாடியில் இருந்து குதிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாகாணத்தில் மிடில்செக்ஸ் கவுன்டியில் நிகழ்ந்த இந்த பரபரப்பான சம்பவத்தின் வீடியோ இணையத்தில் வைரலாகிவருகிறது. இதனை South Brunswick காவத்துறை அதிகாரிகள் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர். அந்தப் பதிவில், “அதிகாரிகளின் உடலில் அணிந்திருந்த கேமராவில் மீட்பு படம் பிடிக்கப்பட்டது. அப்பா குழந்தையை 2 வது … Read more

மகன் எம்.எல்.ஏ., தாய் அரசு பள்ளியில் துப்புரவு பணியாளர்! பஞ்சாபில் ஆச்சரிய சம்பவம்

இந்தியாவில் பஞ்சாப் மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சரை தோற்கடித்த ஆம் ஆத்மி எம்.எல்.ஏவின் தாயார் இன்னும் துப்புரவு பணியாளராக பணியாற்றுகிறார் என்பது ஆச்சரியத்தை அளிக்கிறது. ஆம் ஆத்மி கட்சியின் எம்.எல்.ஏ லப் சிங் உகோகேயின் (Labh Singh Ugoke) தாயார் பல்தேவ் கவுர் (Baldev Kaur), பஞ்சாபில் 2022 சட்டமன்றத் தேர்தலில் தனது மகன் வெற்றி பெற்ற பிறகும், சனிக்கிழமை அரசுப் பள்ளியில் துப்புரவுப் பணியைத் தொடர்ந்தார். பதவி விலகும் முன்னாள் முதலமைச்சர் சரண்ஜித் சிங் சன்னியை 37,550 … Read more

ராகு கேதுவின் இடமாற்றத்தால் திடீர் அதிர்ஷ்டம் இந்த ராசிக்காரர்களுக்கு தான் கிடைக்கப்போகுதாம்! நாளைய ராசிப்பலன்

 ராகு கேது பெயர்ச்சி வாக்கியப்பஞ்சாங்கப்படி மார்ச் 21ஆம் தேதி பங்குனி மாதம் 7ஆம் தேதி நிகழப்போகிறது. இந்த கிரகப்பெயர்ச்சியால் சிலருக்கு திடீர் அதிர்ஷ்டம் தேடி வரப்போகுதாம். அந்தவகையில் பங்குனி மாதம் பிறக்கவுள்ள நிலையில் நாளைய நாள் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கப்போகின்றது என்று பார்ப்போம்.  உங்களது ராசிப்பலனை தெரிந்து கொள்ள, எமது WhatsApp குழுவில் இணையுங்கள் JOIN NOW    மேஷம் ரிஷபம் மிதுனம் கடகம் சிம்மம் கன்னி துலாம் விருச்சிகம் தனுசு மகரம் கும்பம் மீனம் … Read more

மற்றொரு உக்ரைன் மேயரை கடத்திச் சென்ற ரஷ்யா!

உக்ரைனின் தெற்கு நகரமான Dniprorudne நகரின் மேயரை ரஷ்யப் படைகள் கடத்திச் சென்றதாக வெளியுறவுத்துறை அமைச்சர் Dmytro Kuleba தெரிவித்துள்ளார். உக்ரைன் மீது படையெடுத்துள்ள ரஷ்யா அந்நாட்டின் தலைநகர் கீவ் நோக்கி வேகமாக முன்னேறி வருகிறது. மெலிடோபோல் என்ற நகரைக் கைப்பற்றிய ரஷ்யா, நேற்று அந்நகரின் மேயர் இவா ஃபெடரோவை கடத்திச் சென்றது. இந்நிலையில் இன்று Dniprorudne நகரின் மேயர் Yevhen Matveyev-வை ரஷ்ய படைகள் கடத்திச் சென்றுள்ளனர். Yevhen Matveyev கடத்தப்பட்டதை உக்ரைன் வெளியுறவுத்துறை அமைச்சர் … Read more

பிரான்சில் நாளை முதல் கட்டுப்பாடுகள் தளர்வு: 4-வது டோஸ் தடுப்பூசி அறிவிப்பு

பிரான்சில் நாளை முதல் கோவிட்-19 கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் நிலையில், 4-வது டோஸ் தடுப்பூசி விநியோகம் தொடங்கப்படுகிறது. மூன்று மாதங்களுக்கு முன்பு கொரோனா வைரஸ் தடுப்பூசியின் இரண்டாவது பூஸ்டர் டோஸ் பெற்ற 80 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு நான்காவது டோஸை பிரான்ஸ் வழங்குகிறது என்று பிரதமர் ஜீன் காஸ்டெக்ஸ் தெரிவித்தார். பிரான்சில் கோவிட் -19 கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுகிறது, இருப்பினும் முகக்கவசம் அணிய பரிந்துரைக்கப்படுவதாக காஸ்டெக்ஸ் கூறினார். பிரான்சில் மார்ச் 14, திங்கட்கிழமை முதல் தடுப்பூசி பாஸ் (Vaccine Pass) கைவிடப்படுகிறது. இது … Read more

நேட்டோ பிரதேசத்திற்கு அருகிலுள்ள ராணுவ தளம் மீது ரஷ்ய சரமாரி ஏவுகணை தாக்குதல்! பரபரப்பு வீடியோ

நேட்டோ எல்லையில் இருந்து 15 மைல் தொலைவில் உள்ள ராணுவ தளத்தின் மீது ரஷ்யா பயங்கர வான்வழித் தாக்குதலை நடத்தியுள்ளது. போலந்து எல்லைக்கு அருகில் உள்ள உக்ரைனின் லிவிவ் என்ற இடத்தில் ரஷ்ய நடத்திய வான்வழித் தாக்குதலில் 9 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 57 பேர் காயமடைந்துள்ளனர். லிவிவ் நகரில் உள்ள Yavoriv ராணுவ தளம் மீது ரஷ்யா 30 ராக்கெட்டுகளை வீசியதாக உள்ளூர் கவர்னர் தெரிவித்துள்ளார். உக்ரேனியர்கள் மட்டுமின்றி, Yavoriv ராணுவ தளத்தில் வெளிநாட்டு ராணுவ … Read more

வாந்தி வருவதாக பள்ளிக்கூட வகுப்பறையில் வெளியேறி மாடியில் இருந்து கீழே குதித்த மாணவி!

தமிழகத்தில் பள்ளி கூடத்துக்கு உள்ளேயே மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்செங்கோடு பகுதியைச் சேர்ந்த தச்சு தொழில் செய்து வரும் சங்கர் – சந்தனமாரி தம்பதியின் இரண்டாவது மகளான அர்ச்சனா, அங்குள்ள அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்து வந்தார். உயிரை மாய்த்து கொண்டார் நேற்று வழக்கம்போல் பள்ளிக்கு சென்றிருந்த மாணவி, பிற்பகலில் திடீரென வாந்தி வருவதாக கூறிவிட்டு, வகுப்பறையை விட்டு வெளியேறியிருக்கிறார். வகுப்பறையை விட்டு வெளியே வந்த மாணவி, … Read more

உக்ரைன் அகதிகளுக்கு தங்க இடமளிக்கும் பிரித்தானியர்களுக்கு பணம் வழங்கப்படும்! அரசு அறிவிப்பு

 உக்ரைன் அகதிகளுக்கு தங்க இடமளிக்கும் பிரித்தானியர்களுக்கு மாதத்திற்கு பணம் வழங்கப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது. ‘Homes for Ukraine’ என்றழைக்கப்படும் புதிய திட்டத்தின் கீழ், குடும்ப உறவுகள் இல்லாவிட்டாலும், போரிலிருந்து வரும் அகதிகளை பிரித்தானியாவுக்கு வர அனுமதிக்கும் என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது. அகதிகளுக்கு குறைந்தபட்சம் ஆறு மாதங்களுக்கு தங்க அறை அல்லது வீட்டை வழங்கும் பிரித்தானியர்களுக்கு ஒரு மாதத்திற்கு 350 பவுண்டுகள் கொடுக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. புதிய திட்டத்தின் கீழ், பொதுமக்கள், தொண்டு நிறுவனங்கள், வணிகங்கள் … Read more

ரஷ்ய வீரர்களின் சடலங்களால் நிரம்பி வழியும் பெலாரஸ் பிணவறைகள்! வெளிச்சத்திற்கு வந்த உண்மை

ரஷ்ய வீரர்களின் சடலங்களால் பெலாரஸ் பிணவறைகள் நிரம்பியுள்ளதாக உள்ளூர்வாசிகள் கூறியுள்ளனர். உக்ரைன் மீது தொடர்ந்து 18வது நாளாக படையெடுத்து வரும் ரஷ்யா, கடும் இழப்பை சந்தித்துள்ளது. மார்ச் 12ம் திகதி நிலவரப்படி, உக்ரைன் மீதான படையெடுப்பில் 12,000-க்கும் மேற்பட்ட வீரர்களை ரஷ்யா இழந்துள்ளதாக உக்ரைன் அறிவித்துள்ளது. இந்நிலையில், புடினின் நட்பு நாடான பெலராஸில் உள்ள பிணவறைகள், ரஷ்ய ராணுவ வீரர்களின் சடலங்களால் நிரம்பியுள்ளதாக உள்ளூர்வாசிகள் கூறியுள்ளனர். உக்ரைனில் கொல்லப்பட்ட ரஷ்ய வீரர்களின் சடலங்கள் டிரக்குகள் மூலம் பெலராஸில் … Read more