சுவிட்சர்லாந்தில் மார்ச் 15 முதல் இந்த உணவுகளுக்கு தடை!

சுவிட்சர்லாந்தில் டைட்டானியம் டை ஆக்சைடு உணவுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. சுவிஸ் அரசாங்கம் உணவில் டைட்டானியம் டை ஆக்சைடுக்கு (Titanium dioxide) தடை விதிப்பதாக இந்த வாரம் அறிவித்தது. இந்த தடை வரும் மார்ச் 15 செவ்வாய்க்கிழமை முத்தால் படிப்படியாக தொடங்கி, வரும் செப்டம்பர் 15, 2022 முழுமையாக அமுலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. டைட்டானியம் டை ஆக்சைடு முக்கியமாக மிட்டாய் மற்றும் உணவுப் பொருட்களில் பயன்படுத்தப்படும் ஒரு சேர்க்கையாகும். இது உணவுக்கு வெள்ளை நிறத்தை அளிக்கிறது. இது … Read more

சனி பகவானின் ஆதிக்கம் உள்ள ராசியினர் நீங்களா? நாளைய ராசிபலன்கள்

சனி பகவானின் இரண்டாவது பெரிய நட்சத்திரம் அனுஷம். மகாலட்சுமி பிறந்த நட்சத்திரமான இதை, போர்க் கிரகமான செவ்வாயும் அமைதிக் கிரகமான சனியும் ஆள்கின்றன. விருச்சிக ராசியைச் சேர்ந்த அனுஷம் மகா நட்சத்திரமாகும். இதில் பிறப்பவர்களுக்கு முதலில் சனி தசை நடக்கும். இதன் காலம் 19 வருடம் ஆகும். அத்துடன், புதனின் இரண்டாவது நட்சத்திரமாகத் திகழ்வது கேட்டை ஆகும்.  நாளை அனுஷ நட்சத்திரமும் , கேட்டை நட்சத்திரமும் சத்திராட்சம நட்சத்திரங்களாக உள்ளன. இவ்விரு நட்சத்திரங்களிலும் பிறந்தவர்கள் அவதானமாகவும், நிதானத்துடன் … Read more

கனடாவில் நாடு கடத்தப்படவுள்ள இந்தியர்! எதற்காக?

கனடாவில், இந்திய சாரதி ஒருவரால் நிகழ்ந்த விபத்து, 16 பேரின் உயிரை பலிவாங்கியதுடன், 13 பேர் படுகாயமடைய காரணமாக அமைந்தது. 2018ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதம் 6ஆம் திகதி, Jaskirat Singh Sidhu என்ற இந்தியர் ஓட்டிய ட்ரக், பேருந்து ஒன்றின் மீது மோதியது. அந்த பேருந்தில் Broncos ஜூனியர் ஹாக்கி அணியைச் சேர்ந்த இளைஞர்கள் பயணித்தனர். அந்த கோர விபத்தில் 16 பேர் கொல்லப்பட்டதுடன், 13 பேர் படுகாயமடைந்தனர். ஆகவே, Sidhuவுக்கு எட்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை … Read more

உக்ரைனில் கைது செய்யப்பட்ட ரஷ்ய வீரர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட அந்த பொருள்: அச்சத்தை உருவாக்கியுள்ள ஒரு செய்தி

உக்ரைனில் கைது செய்யப்பட்டுள்ள ரஷ்ய படை வீரர்களிடமிருந்து நச்சு வாயு முகமூடிகள் (gas masks) கைப்பற்றப்பட்டுள்ள விடயம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உக்ரைன் பாதுகாப்புத்துறை வெளியிட்ட புகைப்படங்களில், ரஷ்ய வீரர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட பொருட்களில் நச்சு வாயு முகமூடிகள், நச்சு வாயுவிலிருந்து பாதுகாக்கப் பயன்படுத்தப்படும் இரண்டாம் உலகப்போர்க்கால தலைக்கவசங்கள் முதலானவை அடங்கியிருப்பதைக் காணலாம். ஏற்கனவே மேற்கத்திய நாடுகளின் தலைவர்களும், உக்ரைன் ஜனாதிபதியும் புடின் ரசாயன ஆயுதங்களைக் பயன்படுத்தக்கூடும் என எச்சரித்துள்ள நிலையில், தற்போது ரஷ்ய வீரர்களிடமிருந்து நச்சு வாயு முகமூடிகள் … Read more

அகதிகளாக பிரித்தானியா வரும் உக்ரைனியர்கள்: பொதுமக்களுக்கு அரசு விடுக்கும் வேண்டுகோள்

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ள நிலையில், உக்ரைனிலிருந்து அகதிகளாக பிரித்தானியா வருவோரை தங்கள் வீடுகளில் தங்கவைக்கவும், அவர்களுக்கு வேலை கொடுக்கவும் பிரித்தானிய அரசு தன் குடிமக்களை அரசு கேட்டுக்கொள்ள இருக்கிறது. உக்ரைனியர்களை பிரித்தானியாவுக்கு வரவேற்கும் விடயத்தை பிரித்தானிய உள்துறை அலுவலகம் கையாண்ட விதம் சரியில்லை என விமர்சனம் எழுந்துள்ளது. பிரித்தானியாவுக்கு வருவதற்காக பல்லாயிரக்கணக்கான உக்ரைனியர்கள் விசா கோரி விண்ணப்பித்த நிலையில், அவர்களில் 760 பேருக்கு மட்டுமே உள்துறை அலுவலகம் விசா வழங்க, ஏராளமானோர் கலாயிஸ் நகரிலேயே … Read more

ரஷ்யாவை 'பயங்கரவாத நாடு' முத்திரை குத்திய ஜெலென்ஸ்கி., புதிதாக 3 உக்ரைன் நகரங்களில் தாக்குதல்..

உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமர் ஜெலென்ஸ்கி ரஷ்யாவை “பயங்கரவாத” நாடு என்று முத்திரை குத்திய பிறகு, ரஷ்யா முதல் முறையாக மூன்று புதிய நகரங்களை குறிவைத்து உக்ரைன் மீதான தாக்குதலை விரிவுபடுத்தியுள்ளது. உக்ரைன்-ரஷ்யா போரின் 16-ஆம் நாளான இன்று, அதிகாலையில் தென்கிழக்கில் டினிப்ரோ (Dnipro) மற்றும் மேற்கில் லுட்ஸ்க் (Lutsk) மற்றும் இவானோ-ஃபிராங்கிவ்ஸ்க் (Ivano-Frankivsk) ஆகிய 3 நகரங்களில் புடின் படையினர் தாக்குதல் நடத்தினர். ரஷ்ய துருப்புக்கள் லுட்ஸ்க் மற்றும் இவானோ-ஃபிராங்கிவ்ஸ்கில் உள்ள இரண்டு இராணுவ விமானநிலையங்கள் மீது … Read more

நீண்ட நாள் காதலியை கரம் பிடித்த இந்திய கிரிக்கெட் அணி நட்சத்திர வீரர்! வெளியான திருமண புகைப்படங்கள்

இந்திய கிரிக்கெட் அணியின் முக்கிய வீரரான ராகுல் சாஹாருக்கும், இஷானி என்ற பெண்ணிற்கும் திருமணம் நடந்துள்ள நிலையில் அது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. சுழற்பந்து வீச்சாளர் ராகுல் சாஹர் தனது நீண்ட நாள் காதலியான இஷானி ஜோஹரை மார்ச் 9 அன்று கோவாவில் திருமணம் செய்து கொண்டார். அவர்களின் திருமண விழாவின் படங்களும் வீடியோக்களும் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன. மேலும் அவர்களின் திருமண ஆடைகள் நிகழ்ச்சியையே வைரலாக்கி வருகின்றன. இந்தியாவின் முன்னணி கிரிக்கெட் வீரரான தீபக் … Read more

12,000 ரஷ்யர்களை வீழ்த்திய உக்ரைன்: இழப்பு மதிப்பீடு வெளியீடு

உக்ரைனில் இதுவரை குறைந்தது 12,000 ரஷ்ய வீரர்களை வீழ்த்தியுள்ளதாக உக்ரைன் இராணுவ படை தெரிவித்துள்ளது. உக்ரைனிய ஆயுதப் படைகள் தெரிவித்ததாக தி கீவ் இண்டிபெண்டண்ட் செய்தி நிறுவனம் ரஷ்ய இராணுவத்தின் இழப்புகள் குறித்த தகவல்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, மார்ச் 10-ஆம் திகதி வரை தோராயமாக 12,000 ரஷ்ய துருப்புகள் வீழ்த்தப்பட்டனர். மேலும் ரஷ்யாவின் 49 போர் விமானங்கள், 81 ஹெலிகாப்டர்கள், 3,35 டாங்கிகளை உக்ரைனிய இராணுவம் வீழ்த்தியுள்ளது. மேலும், 123 பீரங்கிகள், வீரர்களை ஏற்றிச்செல்லக்கூடிய 1,105 இராணுவ … Read more

உக்ரைன் போர்! ரஷ்யாவிற்கு எதிராக கனடா, பிரித்தானியா பொங்கிய நிலையில் இந்தியா நடுநிலை வகித்தது ஏன்?

ரஷ்யா – உக்ரைன் விவகாரத்தில் இந்தியா நடுநிலை வகித்தது ஏன் என்பது குறித்து இந்திய பிரதமர் நரேந்திர மோடி விளக்கமளித்துள்ளார். உக்ரைன் – ரஷ்யா போர் சண்டை தொடரும் நிலையில் உக்ரைனுக்கு ஆதரவாகவும், ரஷ்யாவுக்கு எதிராக கண்டனம் தெரிவிப்பதாகவும் கனடா, பிரித்தானியா, பிரானா, இத்தாலி போன்ற நாடுகள் ஐ.நா தீர்மானத்தில் தெரிவித்தன. ஆனால் இந்த விவகாரத்தில் இரு நாட்டுக்கும் ஆதரவு மற்றும் எதிர்ப்பை தெரிவிக்காத இந்தியா நடுநிலை வகித்தது. இது தொடர்பாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி … Read more

சுவிஸ் வான்வெளியில் மின்னல் வேகத்தில் பறந்த போர் விமானங்கள்: திடுக்கிட்ட சுவிஸ் மாகாண மக்கள்

ஏற்கனவே ஒரு நாட்டில் போர் நடந்துகொண்டிருக்கும் நிலையில், திடீரென நம் நாட்டின் மீது போர் விமானங்கள் பறந்தால் நமக்கு எப்படி இருக்கும்? அதேபோலத்தான் நேற்று சுவிஸ் மாகாணம் ஒன்றின் மக்கள் திடுக்கிட்டுள்ளார்கள். ஆம், நேற்று மதியம் திடீரென ஜெனீவா வான் வெளியில் போர் விமானங்கள் இரண்டு வேகமாகப் பறந்து சென்றுள்ளன. குழப்பமடைந்த மக்கள் என்ன நடக்கிறது என்று பார்த்துக்கொண்டிருக்கும்போதே, தேடும் விளக்குகளை (searchlights) எரியவிட்டபடி இரண்டு ஹெலிகொப்டர்கள் பறந்துள்ளன. அடுத்து, இராணுவ டாங்க் ஒன்றின் பின்னால் வரிசையாக … Read more