"நான் 2 குழந்தைகளுக்கு தந்தை" ரஷ்யா குற்றச்சாட்டை மறுத்த உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி

உக்ரைனில் இரசாயன ஆயுதங்கள் அல்லது பேரழிவு ஆயுதங்கள் எதுவும் உருவாக்கப்படவில்லை என்று அந்நாட்டின் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி இன்று கூறியுள்ளார். மேலும், உயிரியல் ஆயுதங்களை தனது நாட்டிற்கு எதிராக பயன்படுத்தினால் “மிகக் கடுமையான பொருளாதாரத் தடைகள்” விதிக்கப்படும் என்று ரஷ்யாவை எச்சரித்துள்ளார் ஜெலென்ஸ்கி. அமெரிக்காவின் உதவியுடன் உக்ரைனில் உயிரியல் ஆயுதங்களை உருவாக்குவது குறித்து ஆராய்ச்சி நடந்துவருவதாக ரஷ்யா குற்றம் சாட்டியது. அதனை தெளிவுபடுத்தும் விதமாக ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி பேசியுள்ளார். தான் ஒரு வளமான நாட்டின் ஜனாதிபதி, … Read more

புடினைக் கைவிட்ட நட்பு நாடு: ரஷ்யாவுக்கு மீண்டும் ஒரு பின்னடைவு

உக்ரைன் மீது போர் தொடுத்துள்ளதால் உலகம் முழுவதிலும் பகையை சம்பாதித்துக்கொண்டுள்ள ரஷ்யா, நட்பு நாடுகளின் ஆதரவையும் இழந்துவருவதாகத் தோன்றுகிறது. எதிரிக்கு எதிரி நண்பன் என்ற வகையில், அமெரிக்கா மீதான பகை முதலான காரணங்களால் நட்பு நாடுகளான சீனா ரஷ்யா நட்புக்கு, தற்போது உக்ரைன் போரால் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஆம், ரஷ்யாவுக்கு விமான உதிரி பாகங்களை வழங்க சீனா மறுத்துள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. தங்கள் விமானத்துறை, மேற்கத்திய நாடுகளின் தடைகள் காரணமாக பாதிக்கபட்டுள்ளதை மாஸ்கோ அலுவலர் ஒருவர் … Read more

தலைநகரை நெருங்கிய ரஷ்ய படையினரை துவம்சம் செய்த உக்ரைன் இராணுவம்: தலை தெறிக்க தப்பியோடிய ரஷ்ய வீரர்கள்

உக்ரைன் தலைநகரைக் கைப்பற்றும் ரஷ்யாவின் முயற்சியில் மீண்டும் ஒரு பின்னடைவு ஏற்பட்டது. உக்ரைன் தலைநகரான Kyivஐக் கைப்பற்றும் முயற்சியில் ரஷ்யா ஈடுபட்டுள்ளது. அதற்காக, நேற்று இரவு, சுமார் 30 டாங்குகளுடன் ரஷ்ய வீரர்கள் Kyivஐ நோக்கி முன்னேறிக் கொண்டிருந்தார்கள். ஆனால், அவர்கள் எதிர்பாராதவிதமாக, திடீரென உக்ரைன் வீரர்கள் அவர்கள் மீது பயங்கர தாக்குதல் நடத்தினார்கள். கனரக ஆயுதங்கள் மூலம் முன்னும் பின்னும் தாக்குதல் நடந்த, மிரண்டுபோன ரஷ்ய வீரர்களில் உயிர் தப்பியவர்கள் தலை தெறிக்க ஓட்டம் பிடித்துள்ளார்கள். … Read more

போரில் தோற்றதாக ரஷ்யாவிடம் சரணடைகிறதா உக்ரைன்? வெளியான முக்கிய தகவல்

நான்காவது முறையாக போர் தொடர்பில் உக்ரைன் வெளியுறவுத்துறை அமைச்சர் டிமிட்ரோ குலேபா மற்றும் ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் லாவ்ரோவ் ஆகியோர் துருக்கியில் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். கடந்த மாதம் 24-ம் திகதி ரஷ்ய ஜனாதிபதி புடின் உத்தரவின் பேரில் உக்ரைனில் ரஷ்யப் படையினர் தொடங்கிய போர் 15-வது நாளாக தொடர்கிறது. பல்வேறு நாடுகள் ரஷ்யாவுக்கு கண்டனம் தெரிவித்து பல்வேறு பொருளாதார தடைகளை விதித்தாலும் ரஷ்யா அடங்க மறுக்கிறது. போர் நிறுத்துவது தொடர்பாக பெலாரஸில் மூன்று முறை உக்ரைனும், ரஷ்யாவும் … Read more

உலகளவில் அதிகம் விற்பனையாகும் Smartphone இதுதான்! வெளியான ஆச்சரிய பட்டியல்

கடந்த ஆண்டு உலகம் முழுவதும் அதிகம் விற்கப்பட்ட ஸ்மார்ட்போன்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. இது தொடர்பான பட்டியலை கவுண்டர்பாயிண்ட் குளோபல் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதில் ஆப்பிள் ஐபோன்12 போன் முதலிடத்தை பெற்றுள்ளது. இதை தொடர்ந்து 2-வது இடத்தில் ஐபோன் 12 ப்ரோ மேக்ஸ் இருக்கிறது. 3-வது இடத்தில் ஐபோன் 13, 4-வது இடத்தில் ஐபோன் 12 ப்ரோ, 5-வது இடத்தில் ஐபோன் 11 அதிகம் விற்கப்பட்ட போன்களாக இருக்கிறது. டாப் 10 போன்கள் பட்டியல் கீழே, Source link

உக்ரைன் போர்… 8 தளபதிகள் மீது புடின் கடுங்கோபம்: பாய்ந்த நடவடிக்கை

உக்ரைன் விவகாரத்தில் ரஷ்ய துருப்புகள் பின்னடைவை எதிர்கொண்டுவரும் நிலையில் முதன்மை தளபதிகள் 8 பேர்கள் மீது புடின் கடுங்கோபத்தில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தோல்வியில் முடிந்த உளவுப்பிரிவு நடவடிக்கை, மோசமான திட்டமிடல் என உக்ரேனில் போரின் தொடக்க நாட்களில் ரஷ்ய துருப்புக்கள் தொடர்ச்சியான தோல்விகளை எதிர்கொண்டுள்ளன. குறிப்பிட்ட நாட்களுக்குள் போரை முடிவுக்கு கொண்டுவாரததும், சூழலுக்கு ஏற்றவாறு திட்டத்தை வகுக்காததும் பின்னடைவுக்கு காரணம் என கண்டறிந்த விளாடிமிர் புடின் தற்போது 8 தளபதிகளை பொறுப்பில் இருந்து நீக்கியதாக தகவல் … Read more

உக்ரைன் தலைநகரை மிருகத்தனமாக நெருங்கும் ரஷ்ய துருப்புகள்

உக்ரைன் தலைநகரை கைப்பற்றும் முனைப்புடன் ரஷ்ய துருப்புகள் மிகவும் நெருங்கி வந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. நகர எல்லையில் இருந்து வெறும் 3 மைல்கள் தொலைவில் தற்போது ரஷ்ய துருப்புகள் நிலை கொண்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. உக்ரைன் தலைநகரை இலக்காக கொண்டு ரஷ்யாவின் 40 மைல்கள் நீண்ட டாங்கிகளின் அணிவகுப்பு தற்போது நகரத் தொடங்கியுள்ளதாக அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகள் தரப்பு சுட்டிக்காட்டியுள்ளது. மட்டுமின்றி, உக்ரைன் தரப்பில் எதிர் தாக்குதலும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே, மேற்கு நகரமான … Read more

1500 மைல்கள் பயணம்… பிரித்தானிய அரசால் உக்ரேனிய தாயாருக்கும் மகளுக்கும் எற்பட்ட ஏமாற்றம்

உக்ரைனில் போர் நெருக்கடியில் இருந்து தப்பி வந்த தாயார் மற்றும் அவரது மகள் ஆகிய இருவரையும் பிரித்தானியா நிர்வாகம் நாட்டுக்குள் அனுமதிக்க மறுத்துள்ளது. உக்ரேனிய தாயாரான Tetyana Tsybanyuk மற்றும் அவரது மகள் Alena Semenova ஆகிய இருவரும் சுமார் 1,500 மைல்கள் பயணம் செய்து பிரித்தானிய எல்லையான கலேஸ் பகுதியில் வந்து சேர்ந்துள்ளனர். வேல்ஸ் பகுதியில் குடியிருந்துவரும் தங்கள் நண்பர்களை சந்திக்க வேண்டும் என்ற கோரிக்கையை அவர்கள் முன்வைத்துள்ளனர். ஆனால் விசா இல்லாமல் இருவரையும் நாட்டுக்குள் … Read more

மனித உள்ளுறுப்புகளை சிதைக்கும் ஆபத்தான வெடிகுண்டை வீசினோம்: ஒப்புக்கொண்ட ரஷ்யா

உக்ரைனில் மனித உள்ளுறுப்புகளை சிதைக்கும் தெர்மோபரிக் வெடிகுண்டை வீசியதாக ரஷ்ய முதன்முறையாக ஒப்புக்கொண்டுள்ளது. குறித்த ஆபத்தான வெடிகுண்டை உக்ரைனில் ரஷ்யா பயன்படுத்தியுள்ளதை செவ்வாய்க்கிழமை பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சகமும் கூறியிருந்தது. மட்டுமின்றி உக்ரேனிய உள்ளூர் பத்திரிகை ஒன்று வெளியிட்ட செய்தியில், ரஷ்ய தளபதி ஒருவர், குறித்த ஆயுதத்தை பயன்படுத்தியதை ஒப்புக்கொண்டதாக சுட்டிக்காட்டியுள்ளது. குறித்த தகவலை ரஷ்ய செய்தி ஊடகம் ஒன்றும் வெளியிட்டுளது. அதில் மார்ச் 4ம் திகதி உக்ரைனின் செர்னிஹிவ் பகுதியில் தெர்மோபரிக் வெடிகுண்டை வீசியதாக ரஷ்ய தளபதி … Read more

சிரியாவில் நடந்தது போல்… ரஷ்யா தொடர்பில் கடும் அச்சத்தை வெளிப்படுத்திய போரிஸ் ஜோன்சன்

ரஷ்ய துருப்புகள் உக்ரைனில் கடும் மோதலை முன்னெடுத்துவர, முதன்முறையாக பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜோன்சன் தமது அச்சத்தை வெளிப்படுத்தியுள்ளார். உக்ரைனில் ரஷ்ய துருப்புகள் கண்மூடித்தனமான தாக்குதலை முன்னெடுத்து வருகிறது. சிரியாவில் கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக ஆசத் படைகளுடன் இணைந்து ரஷ்ய துருப்புகள் மேற்கொண்ட அதே நடவடிக்கையை உக்ரைனிலும் முன்னெடுப்பதாக அச்சம் எழுந்துள்ளது. இதுவரை ரஷ்ய துருப்புகள் 60கும் மேற்பட்ட மருத்துவமனைகள் மீது தாக்குதல் நடத்தியுள்ளது. சமீபத்தில் மகப்பேறு மருத்துவமனை ஒன்றில் ரஷ்ய துருப்புகளால் நடத்தப்பட்ட தாக்குதல் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. … Read more