500 கிலோ ரஷ்ய வெடிகுண்டு… உக்ரைன் அமைச்சர் வெளியிட்ட அதிர்ச்சி புகைப்படம்

உக்ரைனில் குடியிருப்பு வளாகத்தில் விழுந்து வெடிக்காத ரஷ்ய வெடிகுண்டு ஒன்றின் புகைப்படத்தை வெளிவிவகார அமைச்சர் டிமிட்ரோ குலேபா பகிர்ந்துள்ளார். உக்ரைனில் ரஷ்ய துருப்புகள் நாளுக்கு நாள் கடுமையான சேதங்களை திட்டமிட்டே ஏற்படுத்தி வருகிறது. மொத்த நாட்டையும் சின்னாபின்னமாக்கும் முயற்சியாகவே இதைப் பார்க்க வேண்டும் என போர் தொடர்பில் ஆய்வு முன்னெடுக்கும் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். மட்டுமின்றி, ரஷ்ய துருப்புகளின் கண்மூடித்தனமான வான் தாக்குதல்கள் காரணமாக அப்பாவி மக்கள் கொல்லப்படுவதும் அதிகரித்து வருகிறது. இந்த நிலையிலேயே உக்ரேனிய வான்வெளியை விமானங்கள் … Read more

இது படுகொலை… ரஷ்யாவின் அடுத்த திட்டம் தொடர்பில் கொந்தளித்த ஜெலென்ஸ்கி

உக்ரைனில் ரஷ்ய துருப்புகளின் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து கசிந்த தகவல்கள் தொடர்பில் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். உக்ரைனின் இராணுவ தளவாடங்கள் தொழிற்சாலைகள் மற்றும் நிறுவனங்கள் அமைந்துள்ள பகுதியில் ரஷ்ய துருப்புகள் குண்டுவீச்சுக்கு திட்டமிடுவதாக ஜனாதிபதி ஜெலென்ஸ்கி குற்றஞ்சாட்டியுள்ளார். பொதுமக்கள் அதிகம் குடியிருந்துவரும் இப்பகுதியில் ரஷ்யா குண்டுவீச்சுக்கு திட்டமிடுவது படுகொலைக்கு ஒப்பானது என குறிப்பிட்டுள்ள ஜனாதிபதி ஜெலென்ஸ்கி, இந்த விவகாரம் தொடர்பில் எந்த உலகத் தலைவர்களும் இதுவரை கருத்து தெரிவிக்கைவில்லை என சுட்டிக்காட்டியுள்ளார். மேற்கத்திய நாடுகளின் … Read more

ரஷ்யாவின் 56 நகரங்களில் வெடித்த போராட்டம்: கொடூரமாக எதிர்கொண்ட பொலிசார்

உக்ரைனில் ரஷ்ய துருப்புகள் கடும் சேதங்களை விளைவித்து முன்னேற, ரஷ்யாவில் 56 நகரங்களில் போருக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. உக்ரைன் மீது ரஷ்ய படையெடுப்பு எதிராக வீதிகளில் இறங்கி ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்ட ரஷ்ய மக்கள் சுமார் 5,000 பேர் இதுவரை கைதாகியுள்ளனர் என தெரியவந்துள்ளது. தலைநகர் மாஸ்கோவில் 1,700 பேர், செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் 750 பேர் மற்றும் பிற நகரங்களில் 1,061 பேர் கைது செய்யப்பட்டதாக ரஷ்யாவின் உள்விவகார அமைச்சகம் தெரிவித்துள்ளது. … Read more

எங்களைச் சோதிக்க வேண்டாம்… ரஷ்யாவுக்கு பிரித்தானியா கடும் எச்சரிக்கை

மேற்கத்திய நாடுகளை குறைத்து மதிப்பிட வேண்டாம் என்று பிரித்தானியப் பாதுகாப்பு செயலாளர் பென் வாலஸ் ரஷ்யாவுக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும், பொறுமை காக்கும் எங்களை வீணாக சோதிக்க வேண்டாம் என்றும் அவர் ரஷ்ய ஜனாதிபதி புடினை குறிப்பிட்டுள்ளார். பிரித்தானிய நட்பு நாடுகள் விளாடிமிர் புடின் தொடர்பில் அச்சம் கொள்ள தேவை இல்லை என குறிப்பிட்டுள்ள பென் வாலஸ், இந்த இக்கட்டான சூழலில் உக்ரைனுக்கு அதிக உதவிகளை பிரித்தானியா முன்னெடுக்க வேண்டும் எனவும், ரஷ்யாவின் டாங்கிகள் மற்றும் விமானங்களை … Read more

ரஷ்யாவின் கொடூர தளபதி என பெயெரெடுத்தவர்… பழி தீர்த்த உக்ரைன் இராணுவம்

உக்ரைன் மக்களுக்கு எதிராக கொடூர நடவடிக்கைகள் முன்னெடுத்து வந்த ரஷ்ய ஆதரவு முக்கிய படை தளபதி ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு துவங்கிய பின்னர் புடின் இராணுவம் இழக்கும் மூன்றாவது முக்கிய தளபதி இவர். உக்ரைனின் கிழக்கு நகரமான வோல்னோவாகாவில் சனிக்கிழமை நடந்த போரின் போது விளாடிமிர் ஜோகா கொல்லப்பட்டார் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைனில் வீராவேச நடவடிக்கைகில் ஈடுபட்டு ரஷ்யாவின் முக்கிய தளபதிகள் தங்கள் உயிரை பறிக்கொடுப்பதாக இராணுவ வட்டாரத்தில் இருந்து … Read more

ஏவுகணைகளால் உக்ரைன் விமான நிலையத்தை சரமாரியாக தாக்கி அழித்த ரஷ்யா! வெளியான பரபரப்பு வீடியோக்கள்

 உக்ரைனில் உள்ள சர்வதேச விமான நிலையத்தை, ரஷ்யா படைகள் சரமாரி ஏவுகணை தாக்குதல் நடத்தி அழித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உக்ரைனின் Vinnytsia நகரில் உள்ள சர்வதேச விமான நிலையமே சரமாரி தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது. Vinnytsia, உக்ரைனின் மேற்கு-மத்திய உக்ரைனில் அமைந்துள்ள ஒரு நகரமாகும், மேலும் இது உக்ரேனிய தலைநகரான கீவில் இருந்து தென்மேற்கே 160 மைல் தொலைவில் இது அமைந்துள்ளது. இந்நிலையில் இன்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி வெளியிட்ட வீடியோவில், ரஷ்ய ராக்கெட்டுகள் ஒட்டுமொத்தமாக Vinnytsia … Read more

விசா, மாஸ்டர்கார்டு சேவை நிறுத்தம்: உடனடியாக சீனாவுடன் கூட்டணி வைத்த ரஷ்யா

ரஷ்யாவில் விசா மற்றும் மாஸ்டர்கார்டு செயல்பாடுகளை நிறுத்துவதாக கூறியதை அடுத்து, சற்றும் யோசிக்காமல் சீன நிறுவனத்துடன் ரஷ்யா கூட்டணி வைத்துள்ளது. விளாடிமிர் புடினின் பொருளாதாரத்திற்கு ஒரு புதிய அடியாக ரஷ்யாவில் விசா (Visa) மற்றும் மாஸ்டர்கார்டு (MasterCard) தங்கள் செயல்பாடுகளை இடைநிறுத்துவதாக அறிவித்தன. “உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாத நிகழ்வுகளை நாங்கள் கண்டதைத் தொடர்ந்து செயல்பட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்” என்று விசா தலைமை நிர்வாக அதிகாரி அல் கெல்லி கூறினார். அதன்படி, … Read more

'புடினுக்கு வியர்த்துவிடும்' பிரித்தானியாவில் தரையிறங்கியுள்ள 'பீஸ்ட் மோட்' போர் விமானங்கள்

100 மில்லியன் பவுண்டுகள் மதிப்புள்ள ‘பீஸ்ட் மோட்’ அல்ட்ரா ஃபியூச்சரிஸ்டிக் போர் விமானங்கள் பிரித்தானியாவில் தரையிறங்கியுள்ளன. சர்வதேச இராணுவ பதட்டங்கள் உயர்ந்து வரும் நிலையில், 300 மில்லியன் பவுண்டுகள் மதிப்புள்ள சூப்பர்சோனிக் F-35B மின்னல் விமானங்கள் ஒன்றன் பின் ஒன்றாக Norfolk-ல் உள்ள RAF Marham-ல் தரையிறங்குகின்றன. டெக்சாஸிலிருந்து பறந்துவரும் இந்த அச்சுறுத்தும் விமானங்கள், எட்டு பேவ்வே லேசர்-வழிகாட்டப்பட்ட குண்டுகள் உட்பட 22,000 பவுண்ட் ஃபயர்பவரை எடுத்துச் செல்லக்கூடியவை மற்றும் பயங்கரமான “beast mode” கொண்டவை. F-35B … Read more

புடின் பைத்தியம் பிடித்தவர்! வெளியான கருத்துக்கணிப்பு

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், பிரித்தானியா மீது அணு ஆயுதத் தாக்குதல் நடத்த உத்தரவிடும் அளவுக்கு பைத்தியம் பிடித்தவர் என்று ஐந்தில் மூன்று பேர் அஞ்சுவதாக கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது. பிரித்தானியாவில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின்படி, ரஷ்யா மீது இதுவரை விதிக்கப்பட்ட பொருளாதாரத் தடைகள் ஆட்சியைத் தண்டிக்கும் அளவுக்குப் போகவில்லை என்று பெரும்பான்மையானவர்கள் கூறுகின்றனர். மேலும் பிரித்தானியாவில் வசிக்கும் கிரெம்ளின் மற்றும் ரஷ்ய தன்னலக்குழுக்கள் மீது மிகவும் வலுவான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டும் என்று பாதிக்கும் மேற்பட் பிரித்தானியர்கள் … Read more

உக்ரைனில் இருந்து வரும் எவரையும் பாகுபாடு இல்லாமல் ஏற்றுக்கொள்வோம்! ஜேர்மனி உறுதி

உக்ரைனில் நடக்கும் போரில் இருந்து தப்பி வரும் அகதிகளை எந்த நாட்டவராக இருந்தாலும் ஜேர்மனி அழைத்துச் செல்லும் என்று ஜேர்மன் உள்துறை அமைச்சர் நான்சி ஃபேசர் கூறியுள்ளார். ரஷ்ய படையெடுப்பு காரணமாக லட்சக்கணக்கான மக்கள் உக்ரைனில் இருந்து அண்டை ஐரோப்பிய நாடுகளுக்கு தப்பிச் செல்கின்றனர். இந்நிலையில், உக்ரைனில் இருந்து தப்பிச் செல்லும் எந்தவொரு அகதிகளையும் தங்க வைக்கும் ஜேர்மனியின் முடிவில் ‘தேசியம்’ ஒரு பங்கை வகிக்காது என்று உள்துறை அமைச்சர் நான்சி ஃபேசர் கூறியுள்ளார். “நாங்கள் உயிரைக் … Read more