பரபரப்பு! இந்தியாவில் நிலநடுக்கம்!!

அண்டை நாடுகளான ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் ஏற்பட்ட நிலநடுக்கம் இந்தியாவின் காஷ்மீரிலும் உணரப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தான் மற்றும் தஜிகிஸ்தான் எல்லை பகுதியில், இன்று காலை 10.50 மணியளவில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 6.0 அளவில், 223 கி.மீ. ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக பாகிஸ்தான் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பாகிஸ்தானின் பல்வேறு மாவட்டங்களிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது. இதுதவிர, இஸ்லாமாபாத், ராவல்பிண்டி ஆகிய நகரங்களிலும் நிலநடுக்கம் உணரப்பட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் வெளியிட்ட செய்தியில், ஆப்கானிஸ்தானின் வடகிழக்கே, படாக்ஷன் மாகாணத்தில் ஜுர்ம் கிராமத்தில் இருந்து 35 கி.மீ. தென்கிழக்கில் ரிக்டரில் 5.2 அளவிலான நிலநடுக்கம் உணரப்பட்டது தெரியவந்துள்ளது.

ஆப்கானிஸ்தானின் பைசாபாத் நகரில் இன்று காலை 11.19 மணியளவில் ரிக்டரில் 5.2 அளவிலான நிலநடுக்கம் உணரப்பட்டது. இந்நிலையில் இந்தியாவில் காஷ்மீரிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது.

ஜம்மு மற்றும் காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்திலும், ஸ்ரீநகரிலும் இன்று காலை நிலநடுக்க அதிர்வுகள் உணரப்பட்டதாக தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் தெரிவித்து உள்ளது.

newstm.in

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.