தமிழ்நாட்டில் சிறப்பு மருத்துவக் கலந்தாய்வுக்கான அவகாசம் இன்று மாலை வரை நீட்டிப்பு!

சென்னை: தமிழ்நாட்டில் சிறப்பு மருத்துவக் கலந்தாய்வுக்கான அவகாசம் இன்றுமாலை வரை நீட்டிப்பு செய்யப்பட்டு உள்ளது.  அகில இந்திய ஒதுக்கீட்டு கலந்தாய்வு முடிவுகள் வெளியாக தாமதமாவதால், தமிழகத்தில் சிறப்புக் கலந்தாய்வு தேதி மீண்டும் மாற்றப்பட்டுள்ளது. அதாவது,  தமிழக சிறப்புக் கலந்தாய்வு  மாணவர் சேர்க்கை நடைமுறை நவம்பர் 16-ஆம் தேதி இறுதி செய்யப்பட்டு, முடிவுகள் நவம்பர் 17-ஆம் தேதி வெளியிடப்படும். ஒதுக்கீட்டு ஆணையைப் பதிவிறக்கம் செய்து, நவம்பர் 20-ஆம் தேதிக்குள் கல்லூரிகளில் சேர வேண்டும். இந்த சிறப்பு கலந்தாய்வு, நீலகிரி … Read more

மேகதாது அணை விவகாரம்: உச்ச நீதிமன்ற அனுமதி குறித்து அமைச்சர் துரைமுருகன் விளக்கம்

சென்னை: மேகதாது அணை  கட்டுவதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க கர்நாடக மாநில அரசுக்கு உச்ச நீதிமன்ற அனுமதி  வழங்கி இருப்பது, தமிழக விவசாயி களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது., இதுகுறித்து தமிழ்நாடு நீர்வளத்துறை  அமைச்சர் துரைமுருகன் விளக்கம் அளித்துள்ளார். காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவதற்கு உச்ச நீதிமன்றம் ஒப்புதல் அளித்துவிட்டதாக வெளியான தகவல்களில் உண்மை இல்லை என்று தமிழக நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இது தொடர்பாக  அவர்  வெளியிட்டுள்ள … Read more

சென்னையின் 200 வார்டுகளிலும் தூய்மைப் பணியாளர்களுக்கு கழிப்பறைகளுடன் கூடிய ஓய்வறைகள்! முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: சென்னையின் 200 வார்டுகளிலும் தூய்மைப் பணியாளர்களுக்கு கழிப்பறைகளுடன் கூடிய ஓய்வறைகள் அமைக்கப்படும என தூய்மை பணியாளர்களுக்கு மூன்று வேளை உணவு வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்து பேசிய   முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டார். மேலும்,  தூய்மைப் பணியாளர்களுக்கு இலவச உணவு வழங்கும் திட்டம் டிசம்பர் 6 முதல் அனைத்து நகரங்களுக்கும் விரிவுபடுத்தப்படும் என்றும் கூறினார். மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கு இலவச உணவு வழங்கும் திட்டம் இன்று சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது. இதில் தூய்மை பணியாளர்களுக்கு … Read more

எஸ்ஐஆர் நடவடிக்கை: அதிமுக பூத் ஏஜெண்டுகளுக்கு எடப்பாடி பழனிச்சாமி அறிவுரை…

சென்னை:  தமிழ்நாடு முழுவதும் வாக்காளர் சிறப்பு திருத்தப் பணி (SIR) நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில்,   அதிமுக பூத் ஏஜெண்டுகளுகள் கவனமுடன் செயல்பட வேண்டும் என   அதிமுக பொதுச்செயலாளர்  எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தி உள்ளார். இதுகுறித்து தமிழ்நாடு சட்டப்பேரவை எதிர்கட்சி தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “போலி வாக்காளர்கள், இறந்தவர்கள், முகவரி மாறியவர்கள், இரட்டை வாக்குகள் போன்றவைகளை சரிபார்த்து உண்மையான வாக்காளர்கள் வாக்களிக்கும் நிலையை ஏற்படுத்த வேண்டும் … Read more

அரசு மருத்துவமனைகளில் கர்ப்பகால நீரிழிவு நோயை கண்டறிந்து தடுக்கும் திட்டம் விரைவில் தொடக்கம்! அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: அரசு மருத்துவமனைகளில் கர்ப்பகால நீரிழிவு நோயை கண்டறிந்து தடுக்கும் திட்டம் விரைவில் தொடங்க இருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை கலைவாணர் அரங்கில் உலக நீரிழிவு தினம் நேற்று கடைபிடிக்கப்பட்டது. இதில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்துகொண்டார். அப்போது, ‘நீரிழிவு நோய் வகை -1’ விழிப்புணர்வு காணொளி மற்றும் புத்தகத்தை வெளியிட்டார். தொடர்ந்து, கர்ப்பகால நீரிழிவு நோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து சிகிச்சை வழங்கும் மாதிரி திட்டத்தை தொடங்கி வைத்தார். … Read more

ஜம்மு-காஷ்மீா் காவல்நிலையத்தில் வெடிவிபத்து! 9 பேர் பலி, 32 பேர் காயம்

காஷ்மீா்: ஜம்மு-காஷ்மீா் காவல்நிலையத்தில்  வைக்கப்பட்டிருந்த வெடிபொருட்கள் எதிராமல்  வெடி சிதறியல் அங்கு பணியில் இருந்த போலீசார் உள்பட 9 பேர் பலியாகி உள்ளனர். மேலும் 32 பேர் காயம் காயமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. பயங்கரவாத சதித் செயல் தொடா்பாக காவல்துறையினர் நடத்திய வேட்டையின்போது  பயங்கரவாதிகளிடம் இருந்து பறிமுதல் செய்து வைக்கப்பட்டிருந்த வெடிபொருள்கள் எதிர்பாராதவிதமாக வெடித்ததில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.  ஜம்மு-காஷ்மீா், ஹரியாணா, உத்தர பிரதேசம் ஆகிய 3 மாநிலங்களில் காவல் துறையினா் மேற்கொண்ட நடவடிக்கையில் 2,900 … Read more

19ந்தேதி கோவை வருகிறார் பிரதமர் மோடி: பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகள் ஆலோசனை

சென்னை: வரும்  19ந்தேதி  பிரதமர் மோடி கோவை வர இருக்கிறார். இதையொட்டி,  பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர். தமிழ்நாட்டில் உள்ள விவசாயிகள் சங்கங்களால் கோவையில் நடத்தப்படும் 25வது தென்னிந்திய இயற்கை வேளாண்மை உச்சி மாநாட்டில் உரையாற்றுவதற்காக பிரதமர் நரேந்திர மோடி நவம்பர் 19 ஆம் தேதி கோவைக்கு வருகை தருகிறார். இது இயற்கை வேளாண் நிபுணர் மறைந்த ஜி. நம்மாழ்வார் பரப்பிய விவசாய முறைகளை முன்னெடுத்துச் செல்லும் என்று நம்பப்படுகிறது. கோவை கொடிசியாவில் … Read more

வங்கக்கடலில் காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவானது! இந்திய வானிலை ஆய்வு மையம்

டெல்லி: வங்கக்கடலில் காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி  உருவாகி உள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இலங்கையை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடலில் காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  இதன் காரணமாக வடகிழக்குப் பருவமழை ஓரிரு நாள்களில் தீவிரமடையும் என்றும் எச்சரித்துள்ளது. வங்கக்கடலில்  உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியானது அடுத்த 24 மணி நேரத்தில் மிக மெதுவாக மேற்கு-வடமேற்கு திசையில் நகரக்கூடும் எனத் தெரிவிக்கப் பட்டுள்ளது.  இதன் காரணமாக தமிழகத்தின் பல பகுதிகளில் … Read more

எஸ்ஐஆருக்கு எதிராக தவெக நாளை ஆர்ப்பாட்டம்!

சென்னை: தமிழ்நாட்டில் நடைபெற்று வரும் எஸ்ஐஆர் நடவடிக்கைக்கு எதிராக,   தமிழகம் முழுவதும் நாளை தமிழக வெற்றிக் கழகம் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கு திமுக, காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில்,   தமிழக வெற்றிக் கழகம் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. இந்த பணிகளை கண்டித்து த.வெ.க. தலைவர் விஜய் உத்தரவின் பேரில், பொதுச்செயலாளர் என்.ஆனந்த் வழிகாட்டுதலின் பேரில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) தமிழகம் … Read more

தூய்மை பணியாளர்கள் செய்வது வேலை இல்லை சேவை! மூன்றுவேளை உணவு வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்…

சென்னை:  தூய்மை பணியாளர்களுக்கு  மூன்றுவேளை உணவு வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்.  நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் அவர்கள்  செய்வது வேலை இல்லை சேவை என்று கூறினார். சென்னை கலைவாணர் அரங்கில் மாநகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு உணவுத் திட்டம், குடியிருப்பு வீடுகள் மற்றும் புதிய நலத்திட்டங்களை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். தொடர்ந்து . தூய்மைப் பணியாளர்களுக்கு உணவு கொண்டு செல்லும் வாகனங்களை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். சென்னை கலைவாணர் அரங்கில் மாநகராட்சி தூய்மை … Read more