தமிழ்நாட்டில் 1.3 கோடி பட்டதாரிகள் வேலைக்கு காத்திருக்க 6000 பேருக்கு மட்டுமே அரசு வேலை வழங்கியுள்ளது திமுக அரசு! அன்புமணி

சென்னை: தமிழ்நாட்டில் 1.3 கோடி பட்டதாரிகள் அரசுக்கு வேலைக்கு காத்திருக்க 6000 பேருக்கு மட்டுமே வேலை வழங்கியுள்ளது திமுக அரசு  என பாமக தலைவர்  அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். டிஎன்பிஎஸ்சி 2026 ஆண்டுக்கான உத்தேச தேர்வு அட்டவணை வெளியிட்டுள்ள நிலையில், அதை சுட்டிக்காட்டி, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் விமர்சனம் செய்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, தமிழக அரசுத் துறைகளுக்கு பணியாளர்களை தேர்ந்தெடுப்பதற்காக 2026-ஆம் நடத்தப்படும் போட்டித் தேர்வுகளுக்கான … Read more

திரைப்பட தயாரிப்பாளர் ஏவிஎம் சரவணன் மறைவு: முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி – இரங்கல்!

சென்னை: தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் ஏவிஎம் சரவணன் காலமானார். அவரது உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார்.  அவருடன் அமைச்சர் மா.சுப்பிரமணியன் உள்பட பலர் அஞ்சலி செலுத்தினர். ஏவிஎம் நிறுவனத்தின் உரிமையாளர் – திரைப்பட தயாரிப்பாளர் ஏவிஎம் சரவணன் (வயது 86) வயது மூப்பு காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை  காலமானார்.  அவரது உடல் ஏவிஎம் ஸ்டியோ வளாகத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அவரது உடலுக்கு தமிழ்நாடு முதல்-அமைச்சர் … Read more

கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: குற்றவாளிகள் மூவருக்கு நீதிமன்றக் காவல் – புகைப்படம் வெளியீடு…

கோவை: நள்ளிரவில் காதலுடன் காரில் தனியாக  இருந்த  மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு தொடர்பாக  குற்றவாளிகள் என கருதப்படும்  மூவருக்கு நீதிமன்றக் காவல் நீட்டிப்பு செய்து மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. இதைத்தொடர்ந்து காவல்துறை, குற்றவாளிகள் என கருதப்படும் குணா, சதீஷ், காளி ஆகியோர் படத்தை வெளியிட்டு உள்ளனர். கடந்த நவம்பா் 2-ஆம் தேதி அன்று  கோவை விமான நிலையம் அருகே குடியிருப்புகள் இல்லாத பகுதியில் தனது ஆண் நண்பருடன் காரில் அமா்ந்து பேசிக் கொண்டிருந்த … Read more

தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்தினால் மட்டுமே PM SHRI நிதி விடுவிக்கப்படும்! நாடாளுமன்றத்தில் மத்தியஅமைச்சர் அறிவிப்பு

டெல்லி: தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்தினால் மட்டுமே PM SHRI நிதி விடுவிக்கப்படும் என கேரள எம்.பி.யின் கேள்விக்கு  நாடாளுமன்றத்தில் மத்தியஅமைச்சர் தர்மேந்திர பிரதான் பதில் அளித்தார். நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. கேள்வி நேரத்தின்போது,  பிஎம்ஸ்ரீ நிதி விடுவிப்பு தொடர்பாக கேரள எம்.பி ஜான் பிரிட்டாஸ்    கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான், “மத்திய அரசின் கல்வி நிதியைப் பெற சமக்ர சிக்ஷா திட்டத்தின் கீழ் விதிக்கப்பட்டுள்ள … Read more

டெல்லியில் அதிகரிக்கும் காற்று மாசு: நாடாளுமன்றத்தில் முகக்கவசம் அணிந்து எதிர்க்கட்சி எம்பிக்கள் ஆர்ப்பாட்டம்

டெல்லி: டெல்லியில் அதிகரித்து வரும் காற்று மாசை தடுக்க வலியுறுத்தி நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி எம்பிக்கள் முகக்கவசம் அணிந்து  ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் காங்கிரஸ் தலைவர் கார்கே, சோனியா உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர். நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தொடர் தொடங்கியதுமுதலே எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தினசரி ஒவ்வொரு புகார்களை கூறி, நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இநத நிலையில்,  நாடாளுமன்ற வளாகத்தில்  முகக்கவசம் அணிந்து எம்பிக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். தலைநகர் டெல்லியில் அதிகரித்து காற்று மாசுபாட்டை … Read more

மாம்பழம் முடக்கப்படும் – தேர்தல் ஆணையம்! சிவில் நீதிமன்றத்தை நாட ராமதாசுக்கு டெல்லி நீதிமன்றம் உத்தரவு

டெல்லி: பாமக யாருடையது என்பது குறித்து விசாரிக்க சிவில் நீதிமன்றத்தை நாட  டெல்லி உயர் நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது. விசாரணையின்போது, மாம்பழம் சின்னம் முடக்கப்படும் வாய்ப்பு உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்தது. பாமக தலைவராக அன்புமணியை அங்கீகரித்த விவகாரத்தில் தேர்தல் ஆணையத்துக்கு எதிராக பாமக நிறுவனர் ராமதாஸ் தொடர்ந்த வழக்கு விசாரணையை டெல்லி உயர் நீதிமன்றம் இன்று விசாரணை நடத்தியது. டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி மினி புஷ்கர்னா முன்பு விசாரணை நடைபெற்றது. அன்புமணி தரப்பில் ஆஜரான … Read more

இரண்டுநாள் அரசுமுறைப் பயணமாக இன்று மாலை இந்தியா வருகிறார் ரஷ்ய அதிபர் புதின்!

டெல்லி: ரஷ்ய அதிபர் புதின்  அரசுமுறைப் பயணமாக இன்று  மாலை இந்தியா வருகிறார்.  அவரது பயணம்இரு நாட்கள் என திட்டமிடப்பட்டஉள்ளது. ஜனாதிபதி புடின் இன்று மாலை  தலைநகர் டெல்லிக்கு வர உள்ளார். அவர் வந்த சில மணி நேரங்களுக்குள், பிரதமர் மோடி அவருக்கு ஒரு தனிப்பட்ட இரவு விருந்தை வழங்குவார், ஜூலை 2024 இல் பிரதமர் மோடியின் மாஸ்கோ பயணத்தின் போது ரஷ்யத் தலைவர் செய்த அதே போன்ற செயலுக்கு ஈடாக. இந்த இரவு உணவு முறைசாராதாக … Read more

தொடர் மழையால் முழு கொள்ளளவை எட்டும் ஏரிகள்! செம்பரம்பாக்கம், பூண்டி, புழலில் இருந்து வெளியேற்றப்படும் உபரிநீர் அதிகரிப்பு

சென்னை: சென்னை மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்களில் பெய்து வரும் தொடர் மழையால், சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகள் உள்பட பல ஏரிகள் முழு கொள்ளளவை எட்டும் நிலையில், ஏரிகளில் இருந்து உபரி நீர் திறந்து விடப்படுவது அதிகரிக்கப்பட்டு உள்ளது. அதன்படி, செம்பரம்பாக்கம், பூண்டி,  புழல் ஏரியில் இருந்து வெளியேற்றப்படும் உபரிநீர் அதிகரிப்பு அதிகரித்துள்ளதால், ஆற்றின் கரையோர மக்கள் பாதுகாப்பாக இரக்கும்படி அடிவுறுத்தப்பட்டு உள்ளது.  இந்​திய வானிலை ஆய்வு மையம், சென்னை  திரு​வள்​ளூர், காஞ்சிபுரம்  மாவட்​டத்​துக்கு கனமழைக்​கான எச்​சரிக்​கையை … Read more

மாலை 5மணி விசாரணையின்போது, அறநிலையத்துறை சார்பில் யாரும் ஆஜராகவில்லையே ஏன்? திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி சரமாரி கேள்வி

மதுரை: திருப்பரங்குன்றம் தீப விவகாரம்  தொடர்பான  நீதிமன்ற அவமதிப்பு வழக்குக்கு எதிரான தமிழ்நாடு அரசின் மேல்முறையீட்டு மனுவில் இன்றே தீர்ப்பு  வழங்கப்படும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை அறிவித்து உள்ளது. ஒரு தரப்பினர் தங்கள் மதச் செயல்பாட்டைச் செய்வதைத் தடுப்பதன் மூலம் சமூக நல்லிணக்கத்தை அடைய முடியாது. சகவாழ்வால் மட்டுமே அதை அடைய முடியும். வருடத்திற்கு ஒரு முறை, யாரையும் பாதிக்காமல் விளக்கேற்றினால், அவர்களை அனுமதிப்பதில் ஏதேனும் சிரமம் உள்ளதா?  என  விசாரணையின்போத நீதிபதி ஜெயச்சந்திரன் கேள்வி … Read more

சாத்தான்குளம் அருகே பயங்கரம்: பெண் போலீஸ் ஆய்வாளர் கணவர் வெட்டிப்படுகொலை!

திருச்செந்தூர்: தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே சிறப்பு உதவி காவல் ஆய்வாளரின் கணவர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே சிறப்பு உதவி காவல் ஆய்வாளரின் கணவர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புத்தன் தருவை பகுதியைச் சேர்ந்தவர் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் மெட்டில்டா. இவரது கணவர் ஜேம்ஸை அதே பகுதியில் வைத்து மர்ம நபர்கள் வெட்டி படுகொலை செய்தனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் நிலத்தகராறு … Read more