இராமசாமி படையாட்சியார் 108ஆவது பிறந்தநாள்! சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை!!

சென்னை:  சுதந்திர போராட்ட வீரர் இராமசாமி படையாட்சியார் 108ஆவது பிறந்தநாளையொட்டி அவரது திருவுருவ சிலைக்கு  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். சுதந்திர போராட்ட வீரரும், முன்னாள் அமைச்சருமான இராமசாமி படையாட்சியாரின் 108ஆவது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதை யொட்டி அவரது உருவச்சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.  சென்னை கிண்டி, ஹால்டா சந்திப்பில் அமைந்துள்ள அவரது திருவுருவச்சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார். அவரது சிலைக்கு கீழ் அலங்கரித்து … Read more

கிராண்ட் சுவிஸ் செஸ் தொடர்: சாம்பியன் பட்டம் வென்ற தமிழக வீராங்கனை வைஷாலிக்கு பிரதமர், முதலமைச்சர் வாழ்த்து!

டெல்லி: கிராண்ட் சுவிஸ் செஸ் தொடரின் மகளிர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த வைஷாலிக்கு பிரதமர் மோடி. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்,  உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளார். உஸ்பெகிஸ்தானில் நடைபெற்ற கிராண்ட் ஸ்விஸ் செஸ் தொடரில் தமிழ்நாட்டைச் சேர்ந்த இளம் செஸ் வீராங்கனை  வைஷாலி சாம்பியன் பட்டம் வென்று 2026 உலக சாம்பியன்ஷிப் செஸ் கேண்டிடேட் தொடருக்கு தகுதி பெற்றார். அவரது வெற்றிக்கு பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின் உள்பட பல … Read more

7 சிறந்த கைவினை கலைஞர்களுக்கு “வாழும் கைவினைப் பொக்கிஷம்” விருது வழங்கினார் முதல்வர் ஸ்டாலின்.-.

சென்னை : 65 வயதுக்கு மேற்பட்ட 7 சிறந்த கைவினை கலைஞர்களுக்கு வாழும் கைவினைப் பொக்கிஷம் விருதுகளை முதல்வர் மு.க.ஸ்டாலின வழங்கினார். திமுக 2021ல் ஆட்சிக்கு வந்ததும்,  “பூம்புகார்”  என்று அழைக்கப்பட்டு வந்த கைவினைஞர்களுக்கான நிறுவனத்தின் பெயர் தமிழ் நாடு கைத்திறத் தொழில்கள் வளர்ச்சிக் கழகம் என மாற்றப்பட்டது.  இந்த நிறுவனம் மூலம் அழிந்து வரும் கைவினை கலைகள் பாதுகாக்கப்பட்டு வருகிறது.  இதுவரை 19052 கைவினைஞர்களின் விவரங்களை இணையதளத்தில்  பதிவேற்றம் செய்துள்ளது.  இதன் மூலம் வாடிக்கையாளர்கள், கைவினைஞர்கள் … Read more

தமிழ்நாட்டில் ரூ.100 கோடியில் செமிகண்டக்டர் மையம்! டெண்டர் கோரியது தமிழ்நாடு அரசு

சென்னை : தமிழ்நாட்டில் ரூ.100 கோடியில் செமிகண்டக்டர் வடிவமைப்பு மற்றும் சோதனை மையத்தை அமைக்க தமிழ்நாடு அரசு டெண்டர் கோரி உள்ளது. தமிழ்நாட்டில் தொழில் வளர்ச்சியில் முதலிடத்துக்கு எடுத்துச்செல்லும் நோக்குடன் செயல்பட்டு வரும் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பல்வேறு தொழில்நிறுவனங்களை அமைப்பதில் தீவிர ஆர்வம் காட்டி வருகிறது. இதனால், தமிழ்நாடு தொழில் வளர்ச்சியில் முன்னணியில் உள்ளதுடன், பல லட்சம் பேரக்கு வேலைவாய்ப்புகளையும் வழங்கி வருகிறது. இந்த நிலையில், தமிழ்நாடு அரசுசார்பில் ரூ.100 கோடியில் அமைய … Read more

சென்னையில் இதுவரை 46,122 தெருநாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி! சென்னை மாநகராட்சி தகவல்

சென்னை: சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில், இதுவரை  46,122 தெரு நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி போடப்பட்டு உள்ளதாக  சென்னை மாநகராட்சி தகவல் வெளியிட்டு உள்ளது. சென்னையில் தெருநாய் தொல்லைகள் பெரும் சமூக பிரச்சினையாக மாறி வருகிறது. இதனால், தெருநாய்களை கட்டுப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். இதையடுத்து சென்னை மாநகராட்சி தெருநாய்களை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, தெரு நாய்களுக்கு மெகா ரேபிஸ் தடுப்பூசி போடும் திட்டத்தை சென்னை மாநகராட்சி ஆகஸ்ட் 9ஆம் … Read more

மதுரை ஆதீனத்தின் மீது அரசியல் நோக்கத்துடன் காவல்துறை வழக்குப்பதிவு! உயர்நீதிமன்றம் விமர்சனம்…

சென்னை; மதுரை ஆதீனத்தின் மீது அரசியல் நோக்கத்துடன் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது”  என சென்னை  உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழ்நாட்டில், திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, ஆட்சியை குறை குற்றம் சொல்லும் எதிர்க்கட்சியினர், சமூக ஆர்வலர்கள் மீது அவதூறு வழக்கு பதிவு செய்வதுடன், அவர்களை நள்ளிரவே சென்று காவல்துறையினர் மூலம்அதிரடியாக கைது செய்து வருவதும் வாடிக்கையாக உள்ளது. அதுபோல அரசின் முறைகேடுகளை வெளிச்சத்துக்கு கொண்டுவந்த சிலர் மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்ட சம்பவங்களும் … Read more

கூவத்தூரில் நடந்தது என்ன? போட்டுடைத்த டிடிவி தினகரன்…

சென்னை: கூவத்தூரில் நடந்தது என்ன தெரியுமா? என்று கூறிய டிடிவி தினகரன், அங்கு நடந்த சம்பவத்தை செய்தியாளர்களிடையே தெரிவித்தார். எடப்பாடி சொல்வது பொய் என்று கூறியதுடன், அப்போது அதிமுக ஆட்சியை காப்பாற்றியது பாஜக அல்ல, அதிமுகவின் 112 எம்எல்ஏக்கள்தான் என்றார். அதிமுகவில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு எட்டப்பட்டு அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என முன்னாள் அமைச்சரும் அதிமுக மூத்த தலைவருமான செங்கோட்டையன், அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமிக்கு கெடு விதித்திருந்தார்.  ஆனால், எடப்பாடி பழனிச்சாமி அதை … Read more

நாளை தி.மு.க சார்பில் கரூரில் முப்பெரும் விழா; மு.க.ஸ்டாலின் திருச்சி பயணம்

திருச்சி: திமுக முப்பெரும் விழா நாளை கரூரில் சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. இதில் கலந்துகொள்ள முதல்வர் ஸ்டாலின் நாளை காலை விமானம் மூலம் திருச்சி சென்று, அங்கிருந்து கரூர் செல்கிறார். திமுக தொடங்கப்பட்ட தினம், அண்ணா பிறந்தநாள் விழா, பெரியார் ஈ.வே.ரா பிறந்தநாள் விழா என திமுக சார்பில் முப்பெரும் விழா கரூரில் வரும் 17-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த விழாவை முன்னிட்டு பொதுக்கூட்டமும் நடைபெறுகிறது. இந்த நிகழ்வில் பங்கேற்பதற்காக, தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின், சென்னையிலிருந்து … Read more

தமிழ்நாட்டில் நாய்கடியால் 3லட்சத்து 60ஆயிரம் பேர் பாதிப்பு – 22 பேர் பலி!

சென்னை: தமிழ்நாட்டில் நாய்கடியால் 3லட்சத்து 60ஆயிரம் பேர் பாதிப்பு – 22 பேர் பலியாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நாடு முழுவதும் அதிகரித்து வரும் தெருநாய்களால், ஏராளமானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் தெருநாய்கள் வளர்ப்பு தொடர்பாக உச்சநீதிமன்றம் கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. ஆனால், அதை அதிகாரிகள் செயல்படுத்துவதில் மெத்தனம் காட்டி வருகின்றனர். இதனால் தெருநாய்களின் கடித்து ஆளாகி வருவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சுகாதார ஆய்வு நிறுவனம்,   WHO 2030ம் ஆண்டுக்குள் ரேபிஸ் உயிரிழப்பு … Read more

இந்தூர் விபத்து: குடிபோதையில் இருந்த ஓட்டுநர் லாரியை கூட்டத்தினர் மீது மோதியதில் 3 பேர் பலி

மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள கலானி நகரில், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி ஒன்று மக்கள் மீது மோதியதில் குறைந்தது மூன்று பேர் உயிரிழந்தனர். குடிபோதையில் வாகனம் ஓட்டியதால் இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாகவும், பலி எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் காவல் துணை ஆணையர் கிருஷ்ணா லால்சந்தானி தெரிவித்தார். ‘இந்தச் சம்பவம் திங்கள்கிழமை இரவு நடந்தது. குடிபோதையில் இருந்த லாரி ஓட்டுநர் ராமச்சந்திரா நகர் அருகே முதலில் இரண்டு பைக்குகளை மோதினார். பின்னர் படா கணபதி பகுதியில் … Read more