அதிகார மோதல்: ராமதாஸ் தலைமையில் நாளை பாமக புதிய மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம்

சென்னை: பாமகவில் தந்தை மகனுக்கு இடையே எழுந்துள்ள அதிகார மோதல் காரணமாக, பாமக நிறுவனர் ராமதாஸ் பல புதிய மாவட்டச் செயலாளர்களை நியமனம் செய்து அறிவித்துள்ள நிலையில், அவர்களுடன் நாளை ஆலோசனை மேற்கொள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. பாமகவில் எழுந்துள்ள மோதல் காரணமாக,  ராமதாஸ் இதுவரை  55 மாவட்ட செயலாளர்கள், 33 மாவட்ட தலைவர்கள் மாற்றியுள்ளார். அவர்களுடன் நாளை ஆலோசனை நடத்த உள்ளார்.  பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாசுக்கும், அவரது மகன் அன்புமணிக்கும் இடையே  ஏற்பட்டு வந்த  கருத்து … Read more

ஸ்பேஸ் ஆக்ஸ்- 4: ஜூன் 19ல் விண்வெளிக்கு பயணமாகிறார்கள் சுபான்ஷு சுக்லா உள்பட 4 விண்வெளி வீரர்கள்…

புளோரிடா: சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்கு இந்திய வீரர் சுபான்ஷு சுக்லா உள்பட 4 பேர்  வரும் 19ந்தேதி  பயணமாகிறார்கள் என நாசா அறிவித்துஉள்ளது. ஏற்கனவே ஸ்பேஸ் ஆக்ஸ்- 4 பயணம் 5 முறை தொழில்நுட்ப கோளாறுகளால் ஒத்திவைக்கப்பட்ட நிலையில், ஜூன் 19ல் விண்வெளிக்கு பயணமாகிறார்கள்  என அறிவிக்கப்பட்டு உள்ளது.  இதை இஸ்ரோவும் உறுதி செய்துள்ளது. அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான  நாசா மற்றும் ஆக்சியம் ஸ்பேஸ் நிறுவனங்களின் கூட்டு முயற்சியாக , சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு … Read more

ரூ397 கோடி டிரான்ஸ்பார்மர் ஊழல் வழக்கு: திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு புதிய நோட்டீஸ் அனுப்ப நீதிமன்றம் உத்தரவு

சென்னை; தமிழ்நாட்டில், மின்மாற்றி கொள்முதலில் (டிரான்ஸ்பார்மர்) முறைகேடு நடைபெற்றுள்ளதாக ‘அறப்போர் இயக்கம்’ சார்பில் தொடரப்பட்ட வழக்கில், திமுகவைச்சேர்ந்த முன்னாள் மின்சாரதுறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு  புதிய நோட்டீஸ் அனுப்ப சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழ்நாடு மின்சாரத்துறையில் மின்மாற்றி கொள்முதல் டெண்டர் தொடர்பான முறைகேடு வழக்கில் அந்த துறையின் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு புதிய நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தில் (TANGEDCO) மின்மாற்றிகள் கொள்முதல் செய்ததில் சுமார் ரூ397 … Read more

தமிழ்நாட்டில் மேலும், 25மாவட்ட மருத்துவமனைகள், 208 நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் விரைவில் திறப்பு! அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: தமிழ்நாட்டில்  உள்ள 19 மாவட்டங்களில் விரைவில் 208 நகர்ப்புற நலவாழ்வு மையங்கள்,  25 மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகள் திறக்கப்பட உள்ளது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னையில், மகப்பேறு மயக்கவியல் தர மேம்பாட்டிற்கான மருத்துவ பயிலரங்கத்தினை தொடங்கி வைத்து, மயக்கவியல் துறையில் சிறப்பாக பணியாற்றிய மருத்துவர்களுக்கு விருதுகள் வழங்கி உரையாற்றிய அமைச்சர் மா.சுப்பிரமணியன்  கூறியதாவது, மக்கள் நல்வாழ்வுத்துறையில் தொடர்ந்து மகப்பேறு காலங்களில் தாய்மார்கள் மரணங்களை குறைக்கும் நடவடிக்கைகள் தொடர்ச்சியாக எடுக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாடு முதலமைச்சர் … Read more

நாளை நடைபெறுகிறது டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு!

சென்னை: தமிழ்நாட்டில்  டிஎன்பிஎஸ்சி குரூப்1 தேர்வு நாளை நடைபெற உள்ளது. இந்த தேர்வை மாநிலம் முழுவதும் சுமார்  2.27 லட்சம் பேர் எழுதுகின்றனர். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) சார்பில் வருவாய் கோட்டாட்சியர் (துணை ஆட்சியர்), டிஎஸ்பி, கூட்டுறவு சங்கங்களின் துணை பதிவாளர், ஊரக வளர்ச்சி உதவி இயக்குநர், வணிகவரி உதவி ஆணையர், பதிவுத்துறை மாவட்ட பதிவாளர், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர், மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் அலுவலர் ஆகிய 8 விதமான உயர் பதவிகளை … Read more

டாஸ்மாக் விவகாரத்தில் ஆகாஷ் பாஸ்கர், விக்ரம் ரவீந்திரனிடம் ஏன் விசாரணை! இடி பதில் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு…

சென்னை: தமிழ்நாட்டில் பரபரப்பை ஏற்படுத்திய ரூ.1000 கோடி முறைகேடு தொடர்பான அமலாக்கத்துறை விசாரணையில்,  திரைப்பட தயாரிப்பாளர்  ஆகாஷ் பாஸ்கர்,  தொழிலதிபர் விக்ரம் ரவீந்திரனிடம் ஏன் விசாரணை என்பது குறித்து  இடி பதில் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. டாஸ்மாக்கில் நடத்தப்பட்ட ரெய்டு விவகாரத்தில்,   “எதன் அடிப்படையில் திரைப்பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன், தொழிலதிபர் விக்ரம் ரவீந்திரன் ஆகியோரிடம் விசாரிக்க முடிவு எடுக்கப்பட்டது?  என்பது குறித்தும்,  விக்ரமின் வீடு, அலுவலகத்திற்கு சீல் வைப்பதற்கு ED-க்கு என்ன அதிகாரம் இருக்கிறது … Read more

மருத்துவக் கழிவு கொட்டினால் ‘குண்டாஸ்’! தமிழ்நாடு அரசின் மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல்…

சென்னை: மருத்துவக் கழிவு கொட்டுபவர் மீது குண்டாஸ் போடும் சட்ட மசோதாவுக்கு ஆளுநர் ரவி ஒப்புதல் அளித்துள்ளார். இதன்முலம், அண்டை மாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டில் மருத்துவக் கழிவு கொட்டினால்  அவர்கள்மீது குண்டர் சட்டம் பாயும். தமிழ்நாடு சட்டப்பேரவையில்  கடந்த ஏப்ரல் மே மாதங்களில்  நடைபெற்ற  பட்ஜெட் கூட்டத்தொடரில் கொண்டு வரப்பட்டு, நிறைவேற்றப்பட்ட மசோதா, ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்ட நிலையில், அதற்கு ஆளுநர் ரவி ஒப்புதல் வழங்கி உள்ளார். முன்னதாக, தமிழ்நாடு பட்ஜெட் கூட்டர் நடைபெற்றுக்கொண்டிருந்தபோது,  ஏப்ரல் 26,  … Read more

அன்புமணிக்கு தலைவர் பதவி தர மறுக்கும் ரா,மதாஸ்

தைலாபுரம் தமது உயிருள்ளவரைஅன்புமணிக்கு தலைவர் பதவி தரமாட்டேன் என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். இன்று பாமக நிறுவனர் ராமதாஸ் செய்தியாளர்களிடம், ”2026 தேர்தலுக்கு பிறகு பாமக தலைவர் பதவியை அன்புமணிக்கு கொடுத்துவிடலாம் என நினைத்தேன். ஆனால் அவரின் செயல்பாடுகளை பார்க்கும்போது என் மூச்சுக்காற்று அடங்கும் வரை அந்த பதவியை அன்புமணிக்கு வழங்க மாட்டேன் குடும்பத்தை சேர்ந்தவர்கள் அரசியலுக்கு வரக்கூடாது எனக் கூறியதை காப்பாற்ற முடியவில்லை. பெற்றோர் உயிருடன் இருக்கும்போதே பிள்ளைகள் அவர்களை கொண்டாட வேண்டும். தந்தை, … Read more

பெண்களை இழிவாக பேசிய திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடி மீதான வழக்கு! காவல்துறை பதில் அளிக்க நீதிமன்றம் உத்தரவு

சென்னை: திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடி பெண்களை இழிவாக பேசியது தொடர்பான வழக்கில், தமிழ்நாடு காவல்துறை டிஜிபி, சென்னை  காவல்துறை அணையர்  பதில் அளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. முன்னாள் அமைச்சர் பொன்முடி சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசும்போது பெண்கள் குறித்தும் சைவ மற்றும் வைணவ மதங்கள் குறித்தும் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்திருந்தார். இது பெண்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பொன்முடி குடும்பத்தினர் மற்றும் அவர் தெய்வமாக மதிக்கும் முதல்வர் குடும்பத்திலும் அப்படித்தானா என … Read more

யாழ்ப்பாணம் மீனவ சங்க தலைவருக்கு பாமக கண்டனம்

சென்னை பாமக பொருளாளர் திலகபாமா யாழ்ப்பாணம் மீனவ சங்க தலைவர் அந்தோணிப்பிள்ளைக்கு கண்டனம் தெரிவித்துள்ளார் இன்று பாமக பொருளாளர், கவிஞர் திலகபாமா வெளியிட்டுள்ள அறிக்கையில் , “திரைகடல் ஓடியும் திரவியம் தேடு” என்றார் ஒளவையார். ஆனால் எம் மீனவர்களோ கடல் எல்லையைத் தாண்டி அல்ல, தங்களுக்கு உண்டான எல்லைக்குள் தான் தனக்கும், தன்னை நம்பியிருக்கும் குடும்பத்தினருக்கும் ஒருவேளை உணவிற்கான ஆதாரத்தை தேடுகின்றனர். நிலத்திலேயே எல்லைகளை வரையறுக்க இயலாத போது, பரந்து விரிந்து கிடக்கும் கடலில் எல்லையைக் கண்டறிவது … Read more