சாரதா தேவி திருக்கோயில்,, ரேஸ் கோர்ஸ்,, கோயம்புத்தூர்.

சாரதா தேவி திருக்கோயில்,, ரேஸ் கோர்ஸ்,, கோயம்புத்தூர். தல சிறப்பு : சிருங்கேரி மடத்தில் உள்ள சாரதாம்பாள் கோயிலில் நடக்கும் பூஜை முறைகள் போன்றே இங்கும் நடைபெறுவது குறிப்பிடத்தக்க அம்சமாகும். பொது தகவல் : சாரதா தேவி கோயில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. அம்மன் சன்னதியின் தெற்குப் பக்கத்தில் பால கணபதி, வடக்குப் பக்கத்தில் பாலமுருகன் சன்னதி உள்ளன. விநாயகர் சன்னதியின் தெற்குப் பகுதியில் வடக்கு நோக்கி ஆதி சங்கரரின் சன்னதி அமைந்துள்ளது. தினசரி மூன்று கால பூஜைகள் நடைபெறுகிறது. … Read more

முப்படைத் தளபதிகளுடன் பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை!

டெல்லி: பஹல்காம்  பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து, இந்தியா பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவி வரும் நிலையில், இன்று டெல்லியில்,  முப்படைத் தளபதி களுடன் பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை மேற்கொண்டார். பிரதமர் மோடி தலைமையில் நாளை கேபினட் கூட்டம் நாளை நடைபெற உள்ள நிலையில், இன்று முப்படை தளபதிகளுடன் பிரதமர் ஆலோசனை மேற்கொண்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் 28 சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்ட நிலையில், இந்தியா பாகிஸ்தான் மீது பல்வேறு தடைகளை … Read more

கனடா தேர்தலில் தமிழகத்தை பூர்வீகமாகக் கொண்ட ஒருவர் உட்பட மூன்று தமிழர்கள் வெற்றி

2025 கனேடிய பொதுத் தேர்தலில் போட்டியிட்ட ஆறு தமிழ் வேட்பாளர்களில் இந்திய வம்சாவழியைச் சேர்ந்த அனிதா ஆனந்த் உள்ளிட்ட மூன்று தமிழர்கள் வெற்றிபெற்றுள்ளனர். இந்தத் தேர்தலில் விபரல் கட்சியின் சார்பில் மூவரும், கன்சர்வேடிவ் கட்சியின் சார்பில் இருவரும், பசுமை கட்சியின் சார்பில் ஒருவரும் என மொத்தம் ஆறு தமிழர்கள் வேட்பாளர்களாக போட்டியிட்டனர். இவர்களில் விபரல் கட்சியின் சார்பில் போட்டியிட்ட அனிதா ஆனந்த் Oakville கிழக்கு தொகுதியிலும், Scarborough-Guildwood-Rouge Park தொகுதியில் ஹரி ஆனந்தசங்கரி, Pickering–Brooklin தொகுதியில் ஜுனிதா … Read more

அமெரிக்கா உடனான உறவு முடிவுக்கு வந்துவிட்டது : கனடா பிரதமர் மார்க் கார்னி

அமெரிக்கா உடனான தங்கள் நாட்டின் உறவு முடிவுக்கு வந்துவிட்டதாக கனடா பிரதமர் மார்க் கார்னி தெரிவித்துள்ளார். கனடா தேர்தலில் நான்காவது முறையாக வெற்றிபெற்றுள்ள லிபரல் கட்சி சார்பில் புதிய பிரதமராக பதவியேற்றுள்ள மார்க் கார்னி அமெரிக்காவின் துரோகத்தினால் நாங்கள் அதிர்ச்சியடைந்துள்ளோம் என குறிப்பிட்டுள்ளார். கனடா தற்போது வரலாற்றின் மிக முக்கியமான தருணத்தில் உள்ளது, அமெரிக்காவுடான எங்களின் பழைய உறவு முடிவிற்கு வந்துவிட்டது, அமெரிக்கா எங்கள் வளங்களை நாட்டை தனதாக்கிக்கொள்ள முயல்கின்றது, இது மிகவும் வேதனையான நிகழ்வு என்றும் … Read more

எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க்-கிற்கு போட்டியாக இணைய செயற்கைக்கோள்களை ஏவியது அமேசான்

அமேசானின் முதல் தொகுதி இணைய செயற்கைக்கோள்கள் திங்களன்று சுற்றுப்பாதையில் ஏவப்பட்டன, இது தற்போது ஸ்பேஸ்எக்ஸின் ஆயிரக்கணக்கான ஸ்டார்லிங்க்களால் ஆதிக்கம் செலுத்தப்படும் மெகா விண்மீன் கூட்ட சந்தையில் சமீபத்திய நுழைவு என்பது குறிப்பிடத்தக்கது. 2019 முதல் எலோன் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் ஏற்கனவே 8,000 க்கும் மேற்பட்ட ஸ்டார்லிங்க்களை ஏவியுள்ளது. அவற்றில், 7,000 க்கும் மேற்பட்ட ஸ்டார்லிங்க் பூமியிலிருந்து சுமார் 300 மைல்கள் (550 கிலோமீட்டர்) தொலைவில் சுற்றுப்பாதையில் உள்ளது. இந்த நிலையில், அமேசானின் ப்ராஜெக்ட் குய்பர் சுமந்து … Read more

நாளை வெளியாகிறது ISCE ISC, ICSE தேர்வு முடிவுகள்…

டெல்லி:  ISCE ISC, ICSE  தேர்வு முடிவுகள் நாளை வெளியாவதாக CISCE தலைவர் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார். நாளை காலை 11மணிக்கு இணையதளத்தில் வெளியாவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. CISCE ISC, ICSE தேர்வு முடிவுகள் 2025 தேதி மற்றும் நேரம்  காலை 11 மணிக்கு முடிவுகள் அறிவிக்கப்படும் என தகவல்கள் வெளியாகி உள்ளது.  தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்திய பள்ளி சான்றிதழ் தேர்வுகளுக்கான கவுன்சில் (CISCE) ஏப்ரல் 30 அன்று ISC மற்றும் … Read more

பாதுகாப்பு அமைச்சர், முப்படைத் தலைவர்கள் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஆகியோருடன் பிரதமர் முக்கிய ஆலோசனை

பஹல்காம் தாக்குதல் சம்பவத்தை அடுத்து பாகிஸ்தான் மீது இந்தியா கடும் நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ள நிலையில் பிரதமர் மோடியின் இல்லத்தில் முக்கிய கூட்டம் ஆலோசனை நடைபெறுகிறது. எல்லையில் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து ஐந்தாவது நாளாக துப்பாக்கிச் சூடு நடத்தி வரும் நிலையில் கூடுதல் உத்திகளை வகுப்பதற்காக இந்த உயர்மட்டக் கூட்டம் நடைபெறுவதாகக் கூறப்படுகிறது. பிரதமர் மோடியின் இல்லத்தில் நடைபெற்றுவரும் இந்த முக்கிய ஆலோசனைக் கூட்டத்தில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் … Read more

காஷ்மீர் தாக்குதலில் இறந்த மராட்டியர் குடும்பத்தினருக்கு ரூ. 50 லட்சம்

மும்பை காஷ்மீர் தாக்குதலில் இறந்த மராட்டியர் குடும்பத்தினருக்கு ரூ 50 லடம் வழங்க உள்ளதாக முதல்வர் தேவேந்திர ஃபட்நாவிஸ் அறிவித்துள்ளார்/ கடந்த 22 ஆம் தேதி ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த 22ஆம் தேதி நடைபெற்ற தீவிரவாத தாக்குதலில் 26 பேர் பலியாகினர். இந்த தாக்குதல் இந்தியாவில் மட்டுமல்லாமல், உலக அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த தாக்குதல் தொடர்பாக பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. நாளை இதுதொடர்பாக பிரதமர் மோடி தலைமையிலான … Read more

தமிழக  சட்டசபை கூட்டத்தொடர் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு

சென்னை தமிழக சட்டப்பேரவை தேதி குரிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது/ தமிழ்நாடு சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த மார்ச் 14ம் தேதி தொடங்கிய இன்றுடன் நிறைவு பெறுகிறது. இதில் மார்ச் 14இல் நிதிநிலை அறிக்கை, மார்ச் 15 வேளாண் நிதிநிலை அறிக்கை பேரவையில் தாக்கலானது. இன்று காவல் மற்றும் தீயணைப்பு துறைகளுக்கான மானிய கோரிக்கையில் சட்டப்பேரவை உறுப்பினர்களின் கேள்விக்கு பதில் அளித்து பல்வேறு புதிய அறிவிப்புகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். கடனை வலுக்கட்டாயமாக வசூலித்தால் 3 ஆண்டுகள் சிறைதண்டனை … Read more

பஹல்காம் தாக்குதல் நடத்திய பயங்கரவாதி பாகிஸ்தான் ராணுவ கமாண்டோ! புகைப்படம் வெளியீடு…

ஸ்ரீநகர்: பஹல்காமில் சுற்றுலா பயணிகள்மீது பயங்கரவாத தாக்குதல் நடத்தி 28 பேரை சுற்றுக்கொன்றவர்களில் ஒருவரான பயங்கரவாதி ஹாஷிம் மூசா, பாகிஸ்தான் ராணுவ கமாண்டோ என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. மினி சுவிட்சர்லாந்து என்று அழைக்கப்படும்,  ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் சுற்றுலாத்தலத்தில் ஏராளமானோர் குழுமியிருந்து இயற்கையை ரசித்து வந்த நேரத்தில், அங்கு இந்திய ராணுவ உடையுடன் வந்த பாகிஸ்தான்  பயங்கரவாதிகள் கடந்த (ஏப்ரல்) 22-ம் தேதி சுற்றுலா பயணிகள், குறிப்பாக இந்து பயணிகளை சுட்டுக் கொன்றனர்.  இந்த நிகழ்வில் … Read more