14வது ஆடவர் ஹாக்கி ஜூனியர் உலகக் கோப்பை 2025: வெற்றிபெற்ற அணிக்கு வெற்றி கோப்பை வழங்கினார் துணைமுதல்வர்…

சென்னை: தமிழ்நாட்டில் நடைபெற்ற 14 வது ஆடவர் ஹாக்கி ஜூனியர் உலகக் கோப்பை 2025 போட்டியில் வெற்றிபெற்ற ஜெர்மனிஅணிக்கு  துணைமுதல்வர் உதயநிதி ஸ்டாலின் வெற்றி கோப்பை வழங்கி பாராட்டினார். தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 10.12.2025 அன்று சென்னை எழும்பூர் மேயர் இராதாகிருஷ்ணன் ஹாக்கி விளையாட்டரங்கத்தில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் ஹாக்கி இந்தியா இணைந்து நடத்திய 14-வது ஆடவர் ஹாக்கி ஜூனியர் உலகக் கோப்பை 2025 இறுதிப் போட்டியில் வெற்றி பெற்ற ஜெர்மனி … Read more

ரோஹிங்கியா அகதிகள் விவகாரம்: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கருத்தை விமர்சிப்பவர்களுக்கு 44 முன்னாள் நீதிபதிகள் கண்டனம்…

டெல்லி: ரோஹிங்கயா அகதிகள் வழக்கில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கருத்துக்கு எதிராக எதிர்க்கட்சியினர் உள்பட சிலர் பேசி வருவதை க முன்னாள் நீதிபதிகள் கடுமையாக கண்டித்துள்ளனர். ரோஹிங்கியா அகதிகள் குறித்து  உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தெரிவித்த கருத்தில் தவறில்லை என்றும், அவரது  கருத்துகள் தொடர்பாக தலைமை நீதிபதி சூர்யா காந்த் மீது ‘உந்துதல் பிரச்சாரம்’ நடத்தப்படுவதாக ஓய்வுபெற்ற 44 நீதிபதிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர். அதில், “ரோஹிங்கியா புலம்பெயர்ந்தோர் தொடர்பான வழக்கில் மாண்புமிகு இந்தியத் தலைமை நீதிபதி தெரிவித்த … Read more

கலாச்சாரம், தேசிய உணர்வுக்கு ஒளியூட்டியவர்: பாரதியாருக்கு பிரதமர் நரேந்திர மோடி புகழாரம்..ஸ

டெல்லி: மகாகவி பாரதியார் கலாச்சாரம் மற்றும் தேசிய உணர்வை ஒளிரச் செய்தவர் என்று  அவரது பிறந்தநாளையொட்டி,  பிரதமர் நரேந்திர மோடி  புகழாரம் சூட்டியுள்ளார். நாடு முழுவதும் மகாகவி பாரதியாரின் பிறந்த நாள் விழா இன்று கொண்டாடப்பட்டு வருகின்றது. இந்த நிலையில், பிரதமர் மோடி, பாரதியாரைப் புகழ்ந்து தமிழில் பகிர்ந்துள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது: மகாகவி சுப்ரமணிய பாரதியின் பிறந்தநாளில் அவருக்கு மரியாதை செலுத்துகிறேன் . அவரது கவிதைகள் துணிவைத் தூண்டின, அவரது சிந்தனைகள் எண்ணற்ற மக்களின் மனதில் நீடித்த … Read more

புதிய தொழிலாளர் சட்டங்களால் ஏற்கனவே செயல்படுத்தப்பட்டு வரும் தொழிலாளர் நலத்திட்டங்கள் ரத்து ஆகாது! மத்தியஅரசு விளக்கம்…

சென்னை: ‘புதிய தொழிலாளர் சட்டத் தொகுப்புகள் அமலாவதால் ஏற்கெனவே மத்திய, மாநில அரசுகளால் செயல் படுத்தப்படும் தொழிலாளர் நலத்திட்டங்கள் ரத்து செய்யப்படாது’ என மத்திய தொழிலாளர் துறை விளக்கம் அளித்துள்ளது. புதிய ‘தொழிலாளர் சட்டத் தொகுப்புகள்’ அமல்படுத்தப்படு வதால் ஏற்கெனவே அமலில் உள்ள தொழிலாளர் நல வாரியங்களும், நலத்திட்டங்களும் ரத்து செய்யப்படுமோ என்ற அச்சம் நிலவுகிறது.  இதையடுத்து, புதிய சட்டங்களுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் போர்கொடி தூக்கி உள்ளன. இதையடுத்து மத்தியஅரசு விளக்கம் அளித்துள்ளது. இதுருதொடர்பாக, மத்திய தொழிலாளர் … Read more

பொம்மை உற்பத்தி கொள்கை 2025 கொள்கையை வெளியிட்டது தமிழ்நாடு அரசு

சென்னை: தமிழ்நாடு அரசு, தமிழ்நாட்டில் பொம்மை உற்பத்தியை ஊக்குவிக்கும் வiகயில்,  பொம்மை உற்பத்தி கொள்கை 2025யை வெளியிட்டுள்ளது.  அதன்படி, இந்தியாவுக்குள், பொம்மை உற்பத்தியாளர்கள் கட்டாயம் இந்திய தர நிர்ணய அமைப்பின் தர அடையாளத்தையும் சான்றிதழையும் பெற வேண்டும் என அறிவுறுத்தி உள்ளது. பொம்மைகள் வடிவமைப்பு, மேம்பாடு மற்றும் உற்பத்தியில் தமிழ்நாட்டை ஒரு உலகளாவிய மையமாக நிலைநிறுத்தும் நோக்குடன், தமிழ்நாடு அரசு பொம்மை உற்பத்தி கொள்கை 2025 என்ற ஐந்து ஆண்டு திட்டத்தை தமிழ்நாடு அரசு  வெளியிட்டுள்ளது. இந்தக் … Read more

சட்டமன்ற தேர்தல்: டிச. 10-ம் தேதி முதல் காங்கிரஸ் கட்சியில் விருப்பமனு! செல்வப்பெருந்தகை தகவல்…

சென்னை: 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு,   தேர்தலில் போட்டியிட விரும்புவோருக்காக, காங்கிரஸ் கட்சி சார்பில்  விருப்பமனு டிச. 10-ம் தேதி முதல் வழங்கப்படும்  என மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர்  செல்வப்பெருந்தகை அறிவிப்பு வெளியிட்டு உள்ளார். இதுதொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கூறியதாவது, “2026 சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட விரும்புவோர், 234 தொகுதிகளுக்கும் தங்களது விருப்பமனுவை வரும் 10ம் தேதி முதல் டிச.15-ம் தேதி வரை பெற்றுக்கொள்ளலாம்” என்று அறிவித்துள்ளார். தமிழ்நாட்டில்  … Read more

பிரிந்து கிடக்கின்ற அதிமுக சக்திகள் ஒன்றிணைய வேண்டும் என்றே மக்கள் விரும்புகிறார்கள்! ஓபிஎஸ்

சென்னை: அதிமுக செயற்குழு, பொதுக்குழு இன்று நடைபெற்று வரும் நிலையில்,  பிரிந்து கிடக்கின்ற அதிமுக சக்திகள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்றுதான் மக்கள் விரும்புகிறார்கள் என முன்னாள் அதிமுக பொருளாளரும், முன்னாள் முதல்வருமான   கூறியுள்ளார். இன்று செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ,  தமிழ்நாடு நன்றாக இருக்க வேண்டும் என்று விரும்புபவர்கள் அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்று விரும்புகிறார்கள் என்று  கூறினார். முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அதிமுகவில்  இருந்து நீக்கப்பட்ட நிலையில், தனது ஆதரவாளர்களுடன் தனி … Read more

சாலையோர ஆக்கிரமிப்பு விவகாரம்: நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தாத அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க உத்தரவு

சென்னை: சென்னை பாரிமுனை ஜார்ஜ் டவுன் பகு​தி​யில் உள்ள சாலை​யோர ஆக்​கிரமிப்​பு​களை  அகற்ற நீதிமன்றம் உத்தரவிட்டும், அதன்மீது  நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. தமிழ்நாட்டில் அரசு அதிகாரிகள் நீதிமன்ற உத்தரவினை மதிக்காத போக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுதொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் பல முறை அரசுக்கு சுட்டிக்காட்டி உள்ளது. இருந்தாலும், நீதியை அவமதிக்கும்போக்கு அதிகரித்து வருகிறது. அரசு அதிகாரிகள் நீதிமன்ற தீர்ப்பினை செயல்படுத்துவதில் … Read more

‘என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி’ பரப்புரையை தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்…

சென்னை:  வாக்குச்சாவடிகளை பலப்படுத்தும் என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி பரப்புரையை முதல்வர் மு.க.ஸ்டாலின்  இன்று சென்னையில் தொடங்கி வைத்தார். 2026ம் ஆண்டு நடைபெற உள்ள தமிழ்க சட்டமன்ற தேர்தலில் ஆட்சியை தக்க வைத்துகெள்ள திமுக தலைமை  கடந்த ஓராண்டாக தேர்தல் பணிகளை முடுக்கி விட்டுள்ளது. அதன்தொடர்சசியாக வாக்குச்சாவடிகளை பலப்படுத்தும் என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி  என்ற திட்டதின்படி மக்களை சந்திக்க திட்டமிட்டு உள்ளது. இந்த திட்டத்தின்படி, திமுகவினர், பூத் கமிட்டி அளவில் திமுக தொண்டர்கள் உற்சாகத்துடன் பணியாற்றும் … Read more

திருப்பரங்குன்றம் தீபம் விவகாரம்: நீதிமன்ற உத்தரவை மதிக்காத தலைமைச்செயலாளர், ஏ.டி.ஜி.பி ஆஜராக உயர்நீதிமன்றம் உத்தரவு

மதுரை:  திருப்பரங்குன்றம் தீபம் விவகாரத்தில் நீதிமன்றம் உத்தரவிட்டும், அதை மதிக்காத அதிகாரிகள் மீது,  தொடரபபட்ட  நீதிமன்ற அவமதிப்பு வழக்கில்  தமிழ்நாடு தலைமைச் செயலாளர் முருகானந்தம், , ஏ.டி.ஜி.பி-க்கு சம்மன் அனுப்ப உத்தரவிட்ட நீதிபதி, அவர்கள் வரும்   17 ஆம் தேதி  விசாரணைக்கு காணொலி மூலம் ஆஜராக உத்தரவிட்டுள்ளார். திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்ற நீதிமன்றம் உத்தரவிட்டும், அதை அமல்படுத்தாததாக கூறி தாக்கல் செய்யப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், தலைமைச்செயலாளர் மற்றும் கூடுதல் டி.ஜி.பி (ஏ.டி.ஜி.பி) … Read more