சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் காவல்துறையினர் 9 பேரும் குற்றவாளிகள்! நீதிபதி அதிரடி தீர்ப்பு….

மதுரை:  நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய சாத்தான்குளம் தந்தை, மகன்  காவல்துறையினரால் அடித்து கொலை செய்யப்பட்டகொடூர சம்பவத்தில் ஈடுபட்ட 9 காவலர்களும் குற்றவாளிகள் என நீதிபதி அதிரடி தீர்ப்பு வழங்கி உள்ளார்.  குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் வரும் 30ந்தேதி வெளியிடப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார். சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கை சிபிஐ விசாரணை நடத்திய நிலையில், விசாரணை முடிவடைந்து  ஒத்தி வைக்கப்பட்ட தீர்ப்பு மார்ச் 23ந்தேதி மாலை வெளியிடப்பட்டது. தீர்ப்பை வாசித்தத உயர்நீதிமன்ற மதுரை அமர்வு நீதிபதி, … Read more

தமிழ்நாட்டில் மேல்நிலைப்பள்ளிகளில் மாணவிகள் சேர்க்கை 76% அதிகரிப்பு! மத்திய அரசின் ஆய்வு அறிக்கையில் தகவல்

சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான  pதிமக ஆட்சியில் தமிழ்நாட்டில் மேல்நிலைப்பள்ளிகளில் மாணவிகள் சேர்க்கை 76% அதிகரித்து உள்ளதாக மத்தியஅரசின் ஆய்வு அறிக்கையில்  தெரிவிக்கப்பட்டு உள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் ஆட்சியில் தமிழ்நாட்டில் மேல்நிலைப்பள்ளிகளில் மாணவிகள் சேர்க்கை 76 சதவீதமாகவும், மாணவர்கள் சேர்க்கை 71 சதவீதமாகவும் உயர்ந்து உள்ளதாக ஒன்றிய அரசின் ஒருங்கிணைந்த மாவட்ட கல்வி ஆய்வு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திகுறிப்பில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டின் முன்னேற்றம் ஒன்றே என் வாழ்வின் … Read more

தானியங்கி சிக்னல் அமைக்கும் பணி: நாளை கோவை இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் உள்பட 6 ரயில்கள் ரத்து உள்பட 13 ரயில்களின் சேவையில் மாற்றம்

சென்னை: ஜோலார்​பேட்டை – தொட்​டம்​பட்டி இடையே தானியங்கி சிக்​னல் அமைக்​கும் பணி நடை​பெறு​வ​தால், அந்த வழியாக இயக்கப்படும்  13 ரயில்​களின் சேவை​யில் நாளை மாற்​றம் செய்​யப்பட உள்​ளது. 6 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுஉள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள ரயில்வே செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,. ரத்து செய்யப்பட்டுள்ள 6 ரயில்கள் விவரம்: * அரக்கோணம் – சேலம் MEMU விரைவு ரயில் (காலை 05:15) * சேலம் – அரக்கோணம் MEMU விரைவு ரயில் (பிற்பகல் 03:30) * கோவை – … Read more

தங்கம் விலை அதிரடி குறைவு – சவரனுக்கு ரூ.5360 குறைவு!

சென்னை: தங்கம் விலை சவரனுக்கு ரூ.5360 குறைந்து ரூ.1,03,600-க்கு விற்பனைகிறது. இது மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.  சென்னையில் இன்று  ஒரு கிராம் தங்கம் ரூ.670 குறைந்து ரூ.12,950-க்கு விற்பனையாகிறது. தங்கத்திற்கான தேவை மற்றும் அளிப்பு, பணவீக்கம், ரூபாய்-டாலர் மாற்று மதிப்பு போன்ற பல்வேறு காரணிகளால் சென்னையில் தங்கத்தின் விலை நாள்தோறும் ஏற்ற இறக்கங்களுக்கு உள்ளாகிறது. இந்தியாவில் தங்கம் மிகவும் மதிப்புமிக்க ஒரு உலோகமாகக் கருதப்படுகிறது; மக்கள், குறிப்பாகப் பெண்கள், தங்கத்தின் மீது ஆழ்ந்த பற்றுதலைக் கொண்டுள்ளனர். தங்கத்தின் … Read more

33 சிறுவர்களின் கனவுகளை நாசம் செய்த ‘அங்கிள்-ஆண்ட்டி’க்கு மரண தண்டனை… பாண்டா வழக்கின் முழு கதை

உத்தரப் பிரதேசத்தின் பாண்டா மாவட்டத்தில் நடந்த அதிர்ச்சிகரமான குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை வழக்கில், கணவன்-மனைவி இருவருக்கும் மரண தண்டனை விதித்து POCSO சிறப்பு நீதிமன்றம் கடுமையான தீர்ப்பு வழங்கியுள்ளது. பல ஆண்டுகளாக சிறுவர்களை ஏமாற்றி, பாலியல் வன்முறைக்கு உட்படுத்தி, அந்த காட்சிகளை பதிவு செய்து இணையத்தில் விற்பனை செய்ததாக நீதிமன்றம் உறுதிப்படுத்தியுள்ளது. இந்த வழக்கின் விவரங்களின்படி, ராம் பவன் மற்றும் அவரது மனைவி துர்காவதி ஆகியோர் 2010 முதல் 2020 வரை பாண்டாவில் வசித்து, அருகிலுள்ள … Read more

அதிமுக கூட்டணியில் இன்றாவது உடன்பாடு எட்டப்படுமா? சென்னை வந்தார் பியூஸ் கோயல்…

சென்னை: அதிமுக கூட்டணியில் இன்று தொகுதி பங்கீடு குறித்து இன்று நடைபெறும் பேச்சு வார்த்தையில் உடன்பாடு எட்டப்படும் என தெரிகிறது. அதற்காக மத்திய அமைச்சரும், தமிழ்நாடு பாஜக பொறுப்பாளருமான பியூஸ் கோயல் இன்று காலை சென்னை வருகை தந்துள்ளார். தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சரியாக 30 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், தேர்தல் பணியை அரசியல் கட்சிகள் இறுதி கட்டத்தை நோக்கி நகர்ந்து வருகிறது. திமுக  தலைமையில் 23 கட்சிகள் கொண்ட கூட்டணி அமைக்கப்பட்டு, தொகுதி … Read more

பங்குனி உத்திரம்: சபரி அய்யப்பன் கோவிலில் கொடியேற்றம்…

திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோயிலில் பங்குனி உத்திரம் ஆராட்டு திருவிழா ஒவ்வொரு ஆண்டும் 10 நாட்கள் அதிவிமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி பங்குனி உத்திரவிழாவுக்காக கோயிலில் கொடி ஏற்றப்பட்டது. ஏப்ரல் 1ந்தேதி பங்குனி உத்திரம் திருவிழா கொண்டாடப்பட உள்ளதால், பங்குனி உத்திர திருவிழா மற்றும் ஆராட்டு விழாவை முன்னிட்டு  அய்யப்பன் கோவிலில் (இன்று) காலை கொடியேற்றத்துடன்  விழா தொடங்கியது. சபரிமலை  ஐயப்பன் கோயிலில் மண்டல மகர விளக்கு காலங்களிலும், தமிழ் மாதங்களிலும் கோயில் நடை திறக்கப்படுவது வழக்கம். … Read more

துரந்தர் 2 : தமிழ்நாட்டில் திரையிட தடை விதிக்கக் கோரி உயர்நீதிமன்றத்தில் முறையீடு…

சென்னை:   நாடு முழுவதும் பெரும் வரவேற்பை  பெற்றுள்ள துரந்தர் 2 திரைப்படத்தை தமிழ்நாட்டில் திரையிட தடை விதிக்கக் கோரி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில்  மாதவன், ரன்வீர்சிங் நடித்த துரந்தர்-2  படத்தின் இரண்டாம் பாகம்  மார்ச் 19ந்தேதி அன்று  உலகம் முழுவதும் வெளியானது. இந்த படம்   வசூலில் சாதனை படைத்து வருகிறது. ஆதித்யா தார் இயக்கத்தில், ரன்வீர் சிங் நடிப்பில் 2026-ல் வெளியான அதிரடித் திரைப்படம் துரந்தர் 2 .  … Read more

கடுமையான நிதி நெருக்கடி: ஹிமாச்சல் பிரதேசத்தில் அமைச்சர்கள் மற்றும் உயரதிகாரிகளின் சம்பளத்தில் ஒரு பகுதி நிறுத்தி வைப்பு..

ஷில்லாங்: கடும் நிதி நெருக்கடியில்  சிக்கி  தவிக்கும் இமாச்சல் பிரதேசத்தில்  முதலமைச்சர்,  அமைச்சர்கள் மற்றும் உயரதிகாரிகளின் சம்பளத்தில ஒரு பகுதி 6 மாதங்களுக்கு நிறுத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடுமையான நிதி நெருக்கடியைச் சந்தித்துவரும் இமாச்சலப் பிரதேச காங்கிரஸ்  அரசு, நிதிசார் அழுத்தங்களைக் கையாள்வதற்காக, முதலமைச்சர், அமைச்சரவை அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் உயர்நிலை அரசு அதிகாரிகளின் ஊதியத்தை ஆறு மாதங்களுக்குத் தற்காலிகமாக ஒத்திவைப்பதாக அறிவித்துள்ளது. காரணம்: மத்திய அரசு ‘வருவாய் பற்றாக்குறை மானியத்தை’ (Revenue Deficit Grant … Read more

திமுக கூட்டணி 180 தொகுதிகளில் வெற்றி பெறும்! ANS நிறுவனம் கருத்துக்கணிப்பு

சென்னை :  நடைபெற உள்ள தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில்  திமுக கூட்டணி  180 தொகுதிகளில் வெற்றி பெறும் என  ANS நிறுவனம் கருத்துக்கணிப்பை வெளியிட்டு உள்ளது. தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் தேதியை  இந்திய தேர்தல் ஆணையம்  மார்ச் 15ந்தேதி அன்று மாலை அறிவித்தது. அதன்படி, மார்ச் 30ம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கி, ஏப்ரல் 23ம் தேதி 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. தொடர்ந்து மே 4ம் தேதி பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு … Read more