2025ம் ஆண்டுக்கான சமூக சேவை மற்​றும் சுற்​றுச்​சூழலுக்கான ஆளுநர் விருது அறிவிப்பு…

சென்னை: தமிழ்நாட்டில் 2025ம் ஆண்டுக்கான சமூக சேவை, சுற்றுச்சூழல் பாதுகாப்பில் சிறப்பான பணி ஆகியவைக்கான  ஆளுநர் விருது அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த விருதுகளை குடியரசு  தினமான  ஜன.26-ம் தேதி ஆளுநர் ஆர்.என்.ரவி வழங்குகிறார். சமூகசேவை மற்​றும் சுற்​றுச்​சூழல் பாது​காப்​பில் சிறப்​பான பணிக்​காக 2025-ம் ஆண்​டுக்​கான தமிழக ஆளுநர் விருதுகள் அறிவிக்​கப்​பட்​டுள்​ளன. தமிழ்நாடு, லோக் பவன், சமூக சேவை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்புத் துறைகளில் சிறப்பான பங்களிப்புகளை வழங்கியவர்களைக் கௌரவிக்கும் நான்காவது ஆண்டாக, ஆளுநர் விருதுகள்–2025-ஐ அறிவிக்கிறது. விருது … Read more

சென்னைக்கு சீரான குடிநீர் வழங்க ரூ.3,108 கோடியில் புதிய திட்டம்! முதல்வர் உத்தரவு

சென்னை: சென்னையில் சீரான குடிநீருக்காக ரூ.3,108 கோடியில் புதிய திட்டம் தொடங்க கொள்கை அளவில் ஒப்புதல் வழங்கி முதல்வர் உத்தரவிட்டு உள்ளார். சென்னை பெருநகர குடிநீர் வழங்​கல் மற்​றும் கழி​வுநீரகற்று வாரி​யம் 85 குடிநீர் விநி​யோக அமைப்​பு​கள் வாயி​லாக சென்​னை​யில் உள்ள 85.7 லட்​சம் மக்​களுக்கு தின​மும் 1,200 மில்​லியன் லிட்​டர் குடிநீர் வழங்கி வரு​கிறது. ஒவ்​வொரு நிலை​யத்​திலிருந்​தும் குடிநீர் விநி​யோகம் நகரின் பல்​வேறு பகு​தி​களுக்கு பிர​தான குழாய்​கள் மூலம் தனித்​தனி​யாக வடிவ​மைக்​கப்​பட்​டுள்​ளது. இக்​கட்​டான காலங்​களில் ஒரு … Read more

யாருடன் கூட்டணி? “இம்மாத இறுதிக்குள் கூட்டணியை அறிவிப்போம்” என்கிறார் பிரேமலதா….

சென்னை: கோயம்பேடு தேமுதிக அலுவலகத்தில் நடைபெற்ற பொங்கல் விழாவில் கலந்துகொண்டு பேசிய  தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா, இந்த மாத இறுதிக்குள் கூட்டணி குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிப்போம் என்று கூறினார். ஏற்கனவே கடலூர் கட்சி மாநாட்டில் அறிவிப்பேன் என்றவர், அதை செய்யாமல் பின்வாங்கிய நிலையில், தற்போது இந்த மாத இறு​திக்​குள் கூட்​டணி அறிவிக்​கப்​படும் என தேமு​திக பொதுச்​செய​லா​ளர் பிரேமலதா தெரி​வித்​துள்​ளார். தேமு​திக சார்​பில் சமத்​துவ பொங்​கல் விழா கோயம்​பேட்​டில் உள்ள கட்​சி​யின் தலைமை அலு​வல​கத்​தில்  நடை​பெற்​றது. இந்த விழா​வில் … Read more

ஜனவரி 20ம் தேதி திமுக மாவட்ட செயலாளர் கூட்டம்! துரைமுருகன் அறிவிப்பு

சென்னை: ஜனவரி.20ம் தேதி திமுக மாவட்ட செயலாளர் கூட்டம் நடைபெறும் என திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். கழகத் தலைவர் திரு மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் தி.மு.க. மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டம்  நடைபெற உள்ளது. சட்டப்பேரவை தேர்தல் தொடர்பாக ஆலோசனை நடத்த, வரும் ஜன.20ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்ட செயலாளர் கூட்டம் நடைபெறுகிறது. தமிழக சட்டப்பேரவைக்கு வரும் மார்ச், ஏப்ரல் மாதங்களில் தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளது. இதை முன்னிட்டு, தேர்தல் ஆணையம் … Read more

109-வது பிறந்த நாள்: ஜன.17-ம் தேதி எம்ஜிஆரின் உருவ சிலைக்கு எடப்பாடி பழனிசாமி மரியாதை

சென்னை:  மறைந்த தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் 109-வது பிறந்த நாள் வரும்  17-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, தலைமைக்கழகத்தில் உள்ள  எம்ஜிஆரின் உருவ சிலைக்கு எடப்பாடி பழனிசாமி மரியாதை செய்கிறார். எம்ஜிஆரின் 109ஆவது பிறந்தநாள் விழாவையொட்டி வரும் 17ஆம் தேதி அதிமுக தலைமை அலுவலகத்தில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார். அன்று காலை 10.30 மணிக்கு, சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகமான எம்.ஜி.ஆர். … Read more

பொங்கல் பண்டிகை: பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து…

சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக மக்களுக்கு பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து உள்ளனர். நாடு முழுவதும் தமிழ்ர் திருநாளாம் பொங்கல் பண்டிகை நாளை (ஜனவரி 15)  கொண்டாடப்பட உள்ளது. இந்த பொங்கல் திருநாளை முன்னிட்டு .  வளமான தமிழ் பாரம்பரியங்களின் உன்னதமான அடையாளமாக பொங்கல் பண்டிகை திகழ்கிறது என்று பிரதமர் மோடியும், அனைவரது உள்ளங்களிலும் இல்லங்களிலும் மகிழ்ச்சி பொங்கட்டும் என்று  முதல்வர் ஸ்டாலினும் வாழ்த்து தெரிவித்து உள்ளனர். பிரதமர் வாழ்த்து இதுகுறித்து பிரதமர் … Read more

நாளை பொங்கல் பண்டிகை: பொங்கல் வைக்கும் நேரம் – விவரம்…

சென்னை:  தமிழர் திருநாளான, பொங்கல் பண்டிகை நாளை கொண்டாடப்படுகிறது. இதையொட்டில், பொங்கல் வைப்பதற்கான நல்ல நேரம் கணித்து வழங்கப்பட்டுள்ளது. பொங்கல் என்பது இந்தியா மற்றும் உலகம் முழுவதும் வாழும் தமிழர்களால் கொண்டாடப்படும் மிகவும் அங்கீகரிக்கப்பட்ட இந்து அறுவடைத் திருவிழாக்களில் ஒன்றாகும்.  தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை முடிந்து, ஊரெல்லாம் பசுமையாகவும், செழிப்பாகவும் காட்சியளிக்கும். மேலும் இந்த சமயம் அறுவடை காலம் என்பதால் உழவுத்தொழிலுக்கும், இயற்கை அன்னைக்கும் நன்றி தெரிவிக்கும் விழாவாக ஒவ்வொரு ஆண்டும் தை மாதம் முதல் நாள் … Read more

கரூர் 41 பேர் பலியான சம்பவம்: விஜய் மீண்டும் ஆஜராக சிபிஐ சம்மன்….

டெல்லி: கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த விவகாரத்தில்  வழக்கை விசாரித்து வரும் சிபிஐ, மீண்டும் விஜய் ஆஜராக சம்மன் அனுப்பி உள்ளது. அதனப்டி,  விஜய்யை வரும் 19ம் தேதி = ஆஜராக சிபிஐ உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே 12ந்தேதி விசாரணைக்கு ஆஜரான நிலையில், மீண்டும் வரும் 19ந்தேதி விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பி உள்ளது.  தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்கிய  நடிகர், 2025ம் ஆண்டு முதல்  தீவிர அரசியலை மேற்கொண்டு வருகிறார். மத்திய, … Read more

வணிகர்கள் தொழில் உரிமத்தை 3 மாதத்துக்கு முன்பே புதுப்பிக்க வேண்டும்! சென்னை மாநகராட்சி

சென்னை: வணிகர்கள் தொழில் உரிமத்தை 3 மாதத்துக்கு முன்பே புதுப்பிக்க வேண்டும்  என  சென்னை மாநகராட்சி அறிவுறுத்தி உள்ளது. இதுதொடர்பாக சென்னை மாநக​ராட்சி வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பில், சென்னை மாநக​ராட்​சிக்கு உட்​பட்ட பகு​தி​யில் வர்த்தகம் செய்​வதற்​கு, பரிந்​துரைக்​கப்​பட்ட கட்​ட​ணத்தை செலுத்தி வணி​கர்​கள், மாநக​ராட்​சி​யிடம் இருந்து தொழில் உரிமம் பெற்​றிருக்க வேண்​டும். அந்த உரிமத்தை உரிமைக்​காலம் முடிவடைவதற்கு 3 மாதங்​களுக்கு முன்பே தவறாமல் புதுப்​பித்​துக் கொள்​ளு​மாறு அறி​வுறுத்​தப்​படு​கிறது. https://chennaicorporation.gov.in/gcc/online-services/trade-licence என்ற இணை​யதளத்​தில் தொழில் உரிமத்தை உரிய கட்​ட​ணம் செலுத்தி புதுப்​பித்​துக்​கொள்​ளலாம். … Read more

பொங்கல் பண்டிகை: இதுவரை அரசுப் பேருந்துகளில் 6.90 லட்சம் பேரும், ஆம்னி பேருந்துகளில் இருந்து 2.72 லட்சம் பேரும் பயணம்…

சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு,  இதுவரை (ஜனவரி 13ந்தேதி இரவு வரை)  அரசுப் பேருந்துகளில் 6.90 லட்சம் பேரும், ஆம்னி பேருந்துகளில் இருந்து 2.72 லட்சம் பேரும் பயணம் செய்துள்ளனர்  தகவல்கள் தெரிவிக்கின்றன. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ஜன.09 முதல் நேற்று (ஜனவரி 13)  நள்ளிரவு 12 மணி வரை 6.90 லட்சம் பேர் பயணம் மேற்கொண்டுள்ளனர் என தமிழ்நாடு அரசும், ஆம்னி பேருந்துகள் மூலம் 2.72 லட்சம் பேர் பயணம் மேற்கொண்டுள்ளதாக ஆம்னி பேருந்துகள் உரிமையாளர்கள் … Read more