மெட்ரோ ரயில் பணிக்காக வேளச்சேரி மேம்பாலம் கட்டும் பணி தற்காலிகமாக ஒத்திவைப்பு…

சென்னை:  மெட்ரோ ரயில் பணிக்காக சிஎம்ஆர்எல்  கோரிக்கையை ஏற்று வேளச்சேரி மேம்பாலம் கட்டும் பணி  தற்காலிகமாக தள்ளி வைக்கப்படுவதாக சென்னை மாநகராட்சி அறிவித்து உள்ளது. வேளச்சேரி சாலை சந்திப்பு (பீனிக்ஸ் மால் அருகே) மற்றும் ஐந்து பர்லாங் ரோடு சந்திப்பில் போக்குவரத்து நெரிசலை குறைக்க, ஐந்து பர்லாங் ரோடு சந்திப்பில் இருந்து குருநானக் கல்லூரி சந்திப்பு வரையிலான வேளச்சேரி சாலையில் ரூ.310 கோடி மதிப்பீட்டில் மேம்பாலம் கட்ட சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. இதற்கான டெண்டர் விடப்பட்டு பணிகள் … Read more

சோனியா, ராகுல்மீது புதிய வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது பாஜகவின் வெறி! மூத்த காங்கிரஸ் பிரமுகர் மற்றும் வழக்கறிஞர் அபிசேங் மனு சிங்வி விமரசனம்…

டெல்லி: காங்கிரஸ் தலைவர்கள், சோனியா, ராகுல்மீது,  புதிய வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது, பாஜகவின் வெறி, பழிவாங்கும் நடவடிக்கை என்றும், இது தேசிய துன்புறுத்தல் வழக்கு என்றும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், பிரபல  வழக்கறிஞருமான  அபிசேங் மனு சிங்வி காட்டமாக விமர்சனம் செய்துள்ளார். நேஷனல் ஹெரால்டு பணமோசடி வழக்கில் ராகுல் காந்தி, சோனியா காந்தி மீது டெல்லி பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறை சதித்திட்டம் தீட்டியதாக புதிய வழக்குப்பதிவு செய்துள்ளது. இது கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டுள்ளது. நேஷனல் ஹெரால்டு … Read more

மழை வெள்ள பாதிப்பு: அமைச்சர்கள் அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை!

சென்னை:  டிட்வா புயல் காரணமாக தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள மழை வெள்ள பாதிப்பு தொடர்பாக  சென்னை கோட்டையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். கடந்த ஒரு வாரமாக டிட்வா புயல் காரணமாக தமிழ்நாடு முழுவதும் பரவலாக நல்ல மழை பெய்து வந்தது. குறிப்பாக கடற்கரை மாவட்டங்கள் மற்றும்  டெல்டா மாவட்டங்களில் கனமழை கொட்டியது. தற்போது வரை சென்னை உள்பட பல பல  மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், டெல்டா மாவட்டங்களில் மழையால் … Read more

எதிர்க்கட்சிகள் தங்கள் நாடகத்தை அவைக்கு வெளியே வைத்துக் கொள்ள வேண்டும்! நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் மோடி

டெல்லி: எதிர்க்கட்சிகள் தங்கள்  டிராமா மற்றும் அமளியை அவைக்கு வெளியே வைத்துக் கொள்ள வேண்டும்; உள்ளே வேண்டாம் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். பரபரப்பான அரசியல் சூழலில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் இன்று தொடங்கி வரும் 19ம் தேதி வரை 15 அமர்வுகளாக நடக்க உள்ளது. இந்த கூட்டத்தொடரில் பல்வேறு முக்கிய மசோதாக்களை நிறைவேற்றி பல முக்கிய சீர்த்திருத்தங்களை மேற்கொள்ள ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது. இதில், வாக்காளர் பட்டியல் … Read more

விவசாயி மகன், குடியரசு துணைத் தலைவராகியுள்ளார்! சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு பிரதமர் மோடி, கார்கே புகழாரம்…

டெல்லி: விவசாயி மகன், குடியரசு துணைத் தலைவராகியுள்ளார்  என புதிய துணை குடியரசு தலைவரும், மாநிலங்களை தலைவருமான  சி.பி. ராதாகிருஷ்ணனை வரவேற்று மோடி  அவையில் உரையாற்றினார். எதிர்க்கட்சி தலைவர் கார்கே பேசுகையில் ,சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் மரபில் சேர்ந்தவர் அல்லது அவரது பெயரையே கொண்டிருப்பவர். எனவே நீங்களும் அதே போன்று நடுநிலையாக இருக்க வேண்டும் என வலியுறுத்தினார்.  மேலும் திமுக எம்.பி. சிவா உள்பட அனைத்து கட்சி தலைவர்களும் வரவேற்று பேசினார். நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கி … Read more

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்: பிரதமர் மோடி உரையை ‘நாடகம்’ என விமர்சித்த காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே….

டெல்லி: நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கிய நிலையில்,  பிரதமர் மோடி உரையை ‘நாடகம்’ என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே விமர்சித்தார். முன்னதாக, நாடாளுமன்ற வளாகத்தில் பேசிய பிரதமர் மோடி எதிர்க்கட்சிகள், அவையை முழுமையாக நடத்த ஒத்துழைப்பு வழங்க வேண்டும், “இந்தியா எப்போதும் ஜனநாயகத்தை காக்கும் நாடாக விளங்குகிறது. பீகார் தேர்தல் முடிவுகள் ஜனநாயகத்தின் வலிமையை பறைசாற்றுகிறது. பீகார் மாநில தேர்தல் தோல்வி எதிர்க்கட்சிகளை அமைதியற்றவர்களாக மாற்றியுள்ளது. வெற்றியின் ஆணவத்தையும் தோல்வியின் விரக்தியையும் அவையில் (“நாடகம் … Read more

சென்னை, திருவள்ளூருக்கு ‘ ஆரஞ்ச் அலர்ட்! வானிலை ஆய்வு மையம்

சென்னை: டிட்வா புயல் வலுவிழந்து விட்டதால், சென்னை, திருவள்ளூருக்கு  விடுக்கப்பட்ட  ரெட்  அலர்ட் எச்சரிக்கை நேற்று வாபஸ் பெறப்பட்ட நிலையில், தொடர்ந்து மழை பெய்து வருவதால், தற்போது ஆரங்சு  அலர்ட் விடுக்கப்பட்டு உள்ளது. வங்கக்கடலில் உருவான டிட்வா புயல்,  இலங்கையில் பேரழிவை ஏற்படுத்தி விட்டு, தமிழ்நாடு நோக்கி வந்தது. இதற்கிடையில், அதன் வேகம் குறைவாக வானிலை ஆய்வுகள் தெரிவித்த நிலையில், நேற்று இரவு ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய வடதமிழக … Read more

2 வாரத்தில் 1000 பேர் வரை பலி… தெற்கு மற்றும் தென் கிழக்கு ஆசிய நாடுகளில் மழையின் கோரத்தாண்டவம்…

தீவிரமான வானிலை காரணமாக தெற்கு மற்றும் தென்-கிழக்கு ஆசியா முழுவதும் இதுவரை சுமார் ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். சூறாவளிகளால் அதிகரித்த மழை மற்றும் வெள்ளம் பல நாடுகளில் பெரும் அழிவை ஏற்படுத்தியுள்ளது. இந்தோனேஷியாவில் நிலைமை மிக மோசமாக உள்ளது. கடந்த வாரம் தொடங்கிய வெள்ள பாதிப்பில் இதுவரை 442 பேர் உயிரிழந்துள்ளனர். சுமார் 3 லட்சம் மக்கள் பாதுகாப்பு மையங்களுக்கு இடம்பெயர்ந்துள்ளனர், மேலும் 827 வீடுகள் முழுமையாக அழிந்துள்ளன. சுமாத்திரா தீவில், உணவு மற்றும் மருந்து கிடைக்காத … Read more

எதிர்க்கட்சிகள் கடும் அமளி காரணமாக மக்களவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைப்பு…

டெல்லி: பரபரப்பான அரசியல் சூழலில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கிய நிலையில், எஸ்ஐஆர் உள்பட பல்வேறு நிகழ்வுகள் குறித்து விவாதிக்க வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால், அவை முடங்கியது. இதையடுத்து, அவை பகல் 2மணி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் இன்று தொடங்கி வரும் 19ம் தேதி வரை 15 அமர்வுகளாக நடக்க உள்ளது. இந்த கூட்டத்தொடரில் பல்வேறு முக்கிய மசோதாக்களை நிறைவேற்றி பல முக்கிய சீர்த்திருத்தங்களை மேற்கொள்ள ஒன்றிய அரசு … Read more

சிறுவர்களின் ஆபாச வீடியோ தொடர்பாக சிட்னியைச் சேர்ந்த 4 பேரை ஆஸ்திரேலிய போலீசார் கைது செய்துள்ளனர்.

“சர்வதேச அளவில் செயல்படும் சிறுவர்கள் மற்றும் குழந்தைகள் துஷ்பிரயோக வலையமைப்பு” குறித்து விசாரித்து வரும் நியூ சவுத் வேல்ஸ் போலீசார் சிட்னியைச் சேர்ந்த நான்கு பேரை கைது செய்துள்ளனர். வெளிநாடுகளில் இயங்கும் ஒரு இணையதளம் மூலமாக குழந்தை துஷ்பிரயோகப் படங்கள், வீடியோக்களை வைத்திருந்ததும், பகிர்ந்ததும், பரப்ப உதவியும் செய்ததாக இவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. வியாழக்கிழமை நடந்த ரெய்டில், 26 வயது இளைஞர் உட்பட நான்கு பேரையும் போலீசார் கைது செய்துள்ளனர். இந்த 26 வயது நபர் … Read more