பா.ம.கவில் டிசம்பர் 14 முதல் விருப்ப மனு வாங்கலாம்! அன்புமணி அறிவிப்பு…

சென்னை: 2026 சட்ட மன்ற தேர்தலில் பாமக சார்பில் போட்டியிட விரும்புபவர்கள், கட்சி தலைமை அலுவலகத்தில்  டிசம்பர் 14ந்தேதி முதல் விருப்ப மனு வாங்கலாம்  என பாமக தலைவர் அன்புமணி அறிவித்து உள்ளார். தமிழ்நாட்டில்  2026 சட்டமன்றத் தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர். இந்தமுறை தமிழ்நாட்டில், 4 முனை போட்டி ஏற்பட்டுள்ளது.  திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, தவெக, நாம் தமிழர் கட்சி … Read more

வார இறுதி நாட்கள் விடுமுறை: தமிழகம் முழுவதும் 860 சிறப்பு பஸ்கள் இயக்கம்…

சென்னை: வார இறுதி நாட்களை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 860 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளதாக தமிழ்நாடு விரைவு போக்குவரத்து கழகம் அறிவித்து உள்ளது. இது தொடர்பாக  தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் வெளியிட்டு உள்ள அறிக்கையில் , வார இறுதி நாட்களை முன்னிட்டு நாளை (12-ந்தேதி) முதல் வருகிற 14-ந்தேதி வரை சென்னையில் இருந்து பல்வேறு இடங்களுக்கும். பிற இடங்களில் இருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை கருத்தில் … Read more

திருப்பரங்குன்றம் சிக்கந்தர் தர்காவுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

மதுரை: திருப்பரங்குன்றம் மலையின் ஒரு பகுதியில் அமைந்துள்ள சிக்கந்தர் தர்காவுக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.  திருப்பரங்குன்றம் மலைக்கு யாரும் செல்லக்கூடாது என தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், தடையை மீறி,  கோவில் இடத்தில் உள்ள கல்லத்தி மரத்தில், பிறை நிலா போட்ட கொடி புதிதாக கட்டப்பட்டுள்ளது. இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள நிலையில், தர்காவுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.  திருப்பரங்குன்றம் மலை மீது  கார்த்திகை தீபம் ஏற்ற திமுக அரசு தடை விதித்த விவகாரம் தென்மாவட்ட மக்களிடையே … Read more

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபமேற்ற வலியுறுத்தி டிச.13-ல் உண்ணாவிரதம்! நிபந்தனைகளுடன் உயர்நீதிமன்றம் அனுமதி

மதுரை: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணியில் தீபம் ஏற்ற வலியுறுத்தி திருப்பரங்குன்றத்தில் டிச.13ந்தேதி (சனிக்கிழமை) உண்ணாவிரதப் போராட்டம் நடத்த உயர் நீதிமன்றம் நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி உண்ணாவிரத போராட்டத்தில் 50 பேர் மட்டுமே பங்கேற்க வேண்டும் என கூறி உள்ளது. மதுரை அருகே உள்ள திருப்பரங்குன்றம் மலையில், கார்த்திகை தீபம் ஏற்ற நீதிமன்றம் உத்தரவிட்டும், அதை செயல்படுத்த திமுக அரசு தடை விதித்தது. இந்த விவகாரம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பான … Read more

பூர்த்தி செய்த எஸ்ஐஆர் படிவத்தை ஒப்படைப்பதற்கான கால அவகாசம் டிச. 14 ஆம் தேதி வரை நீட்டிப்பு! தேர்தல் ஆணையம்

சென்னை: தமிழ்நாடு உள்பட 6 மாநிலங்களில் பூர்த்தி செய்த எஸ்ஐஆர் படிவத்தை ஒப்படைப்பதற்கான கால அவகாசம் இன்றுடன் முடிவடையும் நிலையில், மேலும் 3 நாட்கள் நீட்டிப்புசெய்து,  டிச. 14 ஆம் தேதி வரை அவகாசம் வழங்கி உள்ளது இந்திய தேர்தல் ஆணையம், வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த நடைமுறையான, எஸ்ஐஆர் படிவத்தை பூர்த்தி செய்து ஒப்படைப்பதற்கான கால அவகாசம் டிச. 14 ஆம் தேதி வரை ந நீட்டித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதைத்தொடர்ந்துருரைவு வாக்காளர்கள் பட்டியல் … Read more

13 ஆண்டு சிறை தண்டனை: சென்னை உயர்நீதிமன்றத்தில் பி.ஆர்.பாண்டியன் மேல்முறையீடு!

சென்னை: டெல்டா மாவட்டங்களில் ஓஎன்ஜிசியின் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிர்த்துபோராடிய விவசாய சங்க தலைவர் பிஆர்.பாண்டியன் உள்பட நிர்வாகிகளுக்கு விதிக்கப்பட்ட 13 ஆண்டு கால சிறை தண்டனையை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டு உள்ளது. திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியைச் சேர்ந்த பி.ஆர்.பாண்டியன் தமிழக அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பு குழுத் தலைவராகவும், காவிரி விவசாயிகள் சங்க பொதுச் செயலாளராகவும் இருந்து வருகிறார். இவர் சமீப காலமாக திமுகஅரசை கடுமையாக விமர்சித்து வருவதுடன், கடந்த மாதம், பிரதமர் … Read more

“பொறுப்பு டிஜிபிக்கே பொறுப்பு டிஜிபியா?”! திமுக அரசை சாடிய தவெக…

சென்னை: தமிழகத்தின் பொறுப்பு டிஜிபி மருத்துவ விடுப்பில் சென்றதால் அவருக்குப் பதில் மீண்டும் ஒரு பொறுப்பு டிஜிபி-யை நியமிப்பதா என தமிழக வெற்றிக் கழகம் கேள்வி எழுப்பியுள்ளது. தமிழ்நாடு அரசு இதுவரை டிஜியை நியமிக்காத நிலையில், பொறுப்பு டிஜிபியாக இருந்த வெங்கட்ராமன் மனஅழுத்தம் காரணமாக இருதய நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ள நிலையில், புதிய பொறுப்பு டிஜிபியாக அபய் குமார் சிங் நியமனம்  செய்யப்பட்டு உள்ளார். இது விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக தமிழக … Read more

டிஎஸ்பியை கைது செய்ய உத்தரவிட்ட மாவட்டநீதிபதி சஸ்பெண்ட்! உயர்நீதிமன்றம் அதிரடி

சென்னை: காஞ்சிபுரம் காவல்துறை டிஎஸ்பியை தனிப்பட்ட முன்விரோதம் காரணமாக சிறையில் அடைக்க உத்தரவிட்ட சம்பவத்தில்  மாவட்ட  நீதிபதி செம்மல்-ஐ சஸ்பெண்ட்  செய்து சென்னை உயர்நீதிமன்ற பதிவாளர் உத்தரவிட்டுள்ளார். காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள வலாஜாபாத் பகுதியில் சிவக்குமார் என்பவர் பேக்கரி கடையை நடத்தி வருகிறார். அந்த கடைக்கு பொருட்கள் வாங்க வந்த முருகன் என்பவருக்கும் சிவக்குமார் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து சிவக்குமாரின் மருமகனும் காவல் துறையில் பணியாற்றி வருபவருமான லோகேஸ்வரன் உள்பட நான்கு பேர், தாக்கியதாக வாலாஜாபாத் … Read more

14வது ஆடவர் ஹாக்கி ஜூனியர் உலகக் கோப்பை 2025: வெற்றிபெற்ற அணிக்கு வெற்றி கோப்பை வழங்கினார் துணைமுதல்வர்…

சென்னை: தமிழ்நாட்டில் நடைபெற்ற 14 வது ஆடவர் ஹாக்கி ஜூனியர் உலகக் கோப்பை 2025 போட்டியில் வெற்றிபெற்ற ஜெர்மனிஅணிக்கு  துணைமுதல்வர் உதயநிதி ஸ்டாலின் வெற்றி கோப்பை வழங்கி பாராட்டினார். தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 10.12.2025 அன்று சென்னை எழும்பூர் மேயர் இராதாகிருஷ்ணன் ஹாக்கி விளையாட்டரங்கத்தில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் ஹாக்கி இந்தியா இணைந்து நடத்திய 14-வது ஆடவர் ஹாக்கி ஜூனியர் உலகக் கோப்பை 2025 இறுதிப் போட்டியில் வெற்றி பெற்ற ஜெர்மனி … Read more

ரோஹிங்கியா அகதிகள் விவகாரம்: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கருத்தை விமர்சிப்பவர்களுக்கு 44 முன்னாள் நீதிபதிகள் கண்டனம்…

டெல்லி: ரோஹிங்கயா அகதிகள் வழக்கில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கருத்துக்கு எதிராக எதிர்க்கட்சியினர் உள்பட சிலர் பேசி வருவதை க முன்னாள் நீதிபதிகள் கடுமையாக கண்டித்துள்ளனர். ரோஹிங்கியா அகதிகள் குறித்து  உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தெரிவித்த கருத்தில் தவறில்லை என்றும், அவரது  கருத்துகள் தொடர்பாக தலைமை நீதிபதி சூர்யா காந்த் மீது ‘உந்துதல் பிரச்சாரம்’ நடத்தப்படுவதாக ஓய்வுபெற்ற 44 நீதிபதிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர். அதில், “ரோஹிங்கியா புலம்பெயர்ந்தோர் தொடர்பான வழக்கில் மாண்புமிகு இந்தியத் தலைமை நீதிபதி தெரிவித்த … Read more