தமிழ்நாட்டில் SIR படிவங்கள் 100% விநியோகம் – 100% பதிவேற்றம்! தேர்தல் ஆணையம் தகவல்…

சென்னை: தமிழ்நாட்டில் SIR படிவங்கள் 100% விநியோகம்  செய்யப்பட்டு,  அவை பூர்த்தி செய்து திரும்ப பெறப்பட்டு,  இணையதளத்தில் 100% பதிவேற்றம் செய்யப்பட்டு விட்டதாக  தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதையடுத்து, இம்மாதம் 19ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியாக உள்ளது. தமிழகத்தில் வாக்காளர் பட்டியர் சீர்திருத்த பணிகள் (எஸ்ஐஆர்)   நவம்பர்  4ந் தேதி முதல் டிசம்பர் 4ந்தேதியுடன் முடிவடைவதாக அறிவிக்கப்பட்டது.  இதற்கான அரசு அலுவலகர்கள் வீடு வீடாக சென்று எஸ்ஐஆர் பாரங்களை கொடுத்து,  அதை பூர்த்தி செய்ய … Read more

கணினிப் பூக்கள் – கவிதைத் தொகுப்பு – பகுதி 45

கணினிப் பூக்கள் கவிதைத் தொகுப்பு – பகுதி 45 பா. தேவிமயில் குமார்   மழைக் காதலன் யாரிடம் கோபம் எதற்காக கண்ணீர்? என்னோடு வா!! தூரத்தில் இருந்த நீ எனக்கு துணையாக மாறினாய்! கார்முகில் துண்டால் என் கருங்கூந்தல் துவட்ட வந்தாயோ?? என்வீட்டு முற்றம் முன்பாக உனை மறந்து நிற்பதேன்?? உனை தடுப்பது யார்? கலர் குடை பிடித்து காதலனே உனை கரம் பற்றிடுவேன்!! பருவம் தவறாது எனை பார்க்கவே பயணம் செய்து வருகிறாயோ? மழைக் … Read more

மீண்டும் கைது? சவுக்கு சங்கர் வீட்டை சுற்றி போலீஸ் குவிப்பு….

சென்னை: பிரபல பத்திரிகையாளரான சவுக்கு சங்கர் வீட்டை சுற்றி போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.   அவரை  கைது செய்ய தமிழ்நாடு காவல்துறை முடிவு செய்துள்ளது.  இதுபெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பிரபல யுடியூபரான சவுக்கு சங்கர்,  திமுக அரசு மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை வீடியோவாக வெளியிட்டு வருகிறார்.  மேலும் காவல்துறையினரின் அராஜகம்  அத்துமீறல் உள்பட பல தகவல்களை மக்களிடையே வெளியிட்டு வருகிறார்.  இது மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் சமூக ஊடங்களிலும் அவரது பேட்டி, வீடியோ வைரலாகி … Read more

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற வலியுறுத்தி ஊர் பொதுமக்கள் சார்பாக உண்ணாவிரதம்! போலீசார் குவிப்பு…

மதுரை:  உயர்நீதிமன்றம் அனுமதியுடன்  இன்று திருப்பரங்குன்றத்தில் உள்ளூர் மக்கள் சார்பாக திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்துாணில் கார்த்திகை தீபம் ஏற்ற வலியுறுத்தி,  இன்று உண்ணாவிரத போரட்டம் தொடங்கியுள்ளது. இந்த போராட்டம், திருப்பரங்குன்றம் மயில் மண்டபம் அருகே காலை 9மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தபோராட்டம் மாலை 5மணி வரை நடைபெற உள்ளது. ஏற்கனவே திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற  வலியுறுத்தி  திருப்பரங்குன்றம் மற்றும் ஹார்விப்பட்டி பகுதியில் உள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் முன்பு பெண்கள் … Read more

சென்னையில் சேதமடைந்த சாலைகளை சீரமைக்க ரூ.13.35 கோடி ஒதுக்கீடு…

சென்னை: வடகிழக்கு பருவமழை காரணமாக சென்னையில் சேதமடைந்துள்ள சாலைகளில் பேட்ச் ஒர்க் செய்ய  ரூ.13.35 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து, விரைவில் பணிகள் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்தது. இன்னும் மழை இருக்கு என்று கூறப்பட்டாலும, அதிகரித்து வரும் குளிர் காரணமாக மழைக்கான வாய்ப்பு குறைவு என்ற கருதப்படுகிறது. இதற்கிடையில், கடந்த மாதம்  வங்கக்கடலில் உருவான டிட்வா புயல், கனமழை காரணமாக சென்னை உள்பட பல பகுதிகளில் … Read more

பெண் குழந்தைகளுக்கான கருப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி திட்டம் விரைவில் தொடக்கம்! அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: தமிழகத்​தில்  பெண் குழந்தைகள் பயன்பெறும் வகையில் கருப்பைவாய் புற்றுநோய் தடுப்பூசி திட்டம் விரைவில் தொடங்கப்பட உள்ளதாக அமைச்சர் மா.சுப்பிர மணியன் தெரிவித்துள்ளார். இந்த திட்டத்தின்படி, சுமார்  3.38 லட்​சம் பெண் குழந்​தைகள் பயன்​பெறுவார்கள் என்றும் கூறினார். சென்​னை​யில் அரசு பன்​னோக்கு உயர் சிறப்பு மருத்​து​வ​மனை​யில் உலக எய்ட்ஸ் தினம்​-2025 நிகழ்வு நேற்று நடை​பெற்​றது. இதில் பங்​கேற்ற அமைச்​சர் மா.சுப்​பிரமணி​யன், உலக எய்ட்ஸ் தின உறு​தி​மொழி ஏற்று எச்​ஐ​வி-எய்ட்ஸ் குறித்த விழிப்​புணர்வு பதாகைகள், விழிப்​புணர்வு குறும்​படத்​துக்​கான குறுந்​தகடை … Read more

தெரு நாய்களுக்கு பொருத்த மைக்ரோ சிப் கொள்முதல் செய்யும் தமிழ்நாடு அரசின் டெண்டருக்கு தடை!

சென்னை: தமிழ்நாட்டில்,  கருத்தடை செய்யப்பட்ட தெரு நாய்களுக்கு பொருத்த மைக்ரோ சிப் கொள்முதல் செய்யும் டெண்டருக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டு உள்ளது. உச்ச நீதி​மன்ற உத்​தர​வுப்​படி நாடு முழு​வதும் உள்ள தெரு​நாய்​களுக்கு கருத்​தடை செய்​யப்​பட்​டு, அந்த நாய்​களுக்கு மைக்ரோ சிப் பொருத்​தும் பணி​கள் நடை​பெற்று வரு​கின்றன. அதன்​படி, தமிழகத்​தி​லும் தெரு​நாய்​களுக்கு கருத்​தடை செய்​து, அவற்​றுக்கு மைக்ரோ சிப் பொருத்த தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வரு​கிறது. அதன்​படி, தமிழ்​நாடு கால்​நடைகள் அபி​விருத்தி முகமை … Read more

அரசி​யல் நிர்​பந்​தங்​களுக்கு நீதிப​தி​களை அடிபணிய வைக்க முயற்சி! நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனை நீக்கக் கோரிய எதிர்க்கட்சிகளுக்கு கடும் கண்டனம்…

டெல்லி: அரசி​யல் நிர்​பந்​தங்​களுக்கு நீதிப​தி​களை அடிபணிய வைக்க முயற்சி என திருப்பரங்குன்றம் வழக்கில் தீபம் ஏற்ற உத்தரவிட்ட நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனை பதவி  நீக்கக் கோரி எதிர்க்கட்சி எம்.பி.க்கள் மக்களவை சபாநாயகரிடம் மனு கொடுத்தை  56 முன்​னாள் நீதிப​தி​கள்  கொண்டு குழு கடும் எதிர்ப்பு தெரி​வித்​துள்​ளது. எதிர்க்​கட்சி எம்​பிக்​கள் தீர்​மானத்​தில் சுட்​டிக் காட்​டி​யிருக்​கும் காரணங்​கள் திருப்​தி​கர​மாக இல்​லை, அரசி​யல் நிர்​பந்​தங்​களுக்கு நீதிப​தி​களை அடிபணிய வைக்க முயற்சி செய்​வது ஜனநாயக விரோத நடவடிக்கை. இது, அரசி​யலமைப்பு சட்​டத்​துக்கு எதி​ரானது என … Read more

இளம்வயதிலேயே மாரடைப்பு… சென்னையில் நடத்தப்பட்ட ஆய்வில் அதிர்ச்சித் தகவல்…

சென்னையில் நடத்தப்பட்ட ஆறு வருட ஆய்வு ஒன்றில், இரத்த ஓட்டத்தில் ஏற்படும் திடீர் அடைப்பான அக்யூட் கரோனரி சிண்ட்ரோம் (ACS) எனும் மாரடைப்புக்கு வழிவகுக்கும் இதய பாதிப்புகள், 18 வயதுடைய இளம் வயதினரிடையே வேகமாக அதிகரித்து வருவதாக டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழ் வெளியிட்டிருக்கும் செய்தியில் தெரியவந்துள்ளது. தமிழ்நாடு அரசு பன்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையின் இருதயநோய் நிபுணர்கள் குழுவால் ஜனவரி 2018 முதல் டிசம்பர் 2023 வரை மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வு குறித்து, கடந்த மாதம் … Read more

திமுகவுக்கு எதிராக நீதித்துறையை திருப்பி விட சதி! அமைச்சர் ரகுபதி

புதுக்கோட்டை:  திருப்பரங்குன்றம் விவகாரத்தை வைத்து நீதித்துறையை திமுக அரசுக்கு எதிராகத் திருப்பி விட முயற்சிக்கிறது பாஜக அரசு. இது து கண்டிக்கத்தக்கது என்று தமிழ்நாடு அமைச்சர்  அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார். திருப்பரங்குன்றம் விவகாரத்தில், தீபம் ஏற்ற உத்தரவிட்ட நீதிபதி சுவாமிநாதனை பதவி நீக்கம் செய்ய திமுக உள்பட கூட்டணி கட்சிகள் பாராளுமன்ற சபாநாயகரிடம் வலியுறுத்தியதற்கு  56  ஓய்வுபெற்ற  நீதிப​தி​கள்  கொண்டு குழு கடும் கண்டனம் தெரிவித்தது. இது அரசி​யல் நிர்​பந்​தங்​களுக்கு நீதிப​தி​களை அடிபணிய வைக்கும் முயற்சி, அரசியல் … Read more