நாளை மூதறிஞர் இராஜாஜியின் 147-வது பிறந்த நாள்! தமிழ்நாடு அரசு அறிவிப்பு…

சென்னை: மூதறிஞர் இராஜாஜியின் 147-வது பிறந்த நாளான டிசம்பர் 10 அன்று அவருடைய திருவுருவச் சிலைக்கு அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்துவார்கள் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திராவிட மாடல் அரசின் சார்பில், மூதறிஞர் இராஜாஜியின் 147-வது பிறந்த நாளான 10.12.2025 அன்று காலை 9.30 மணியளவில் அமைச்சர் பெருமக்கள், சென்னை பாரிமுனை, உயர்நீதிமன்ற வளாகத்தில் அமைந்துள்ள அவருடைய திருவுருவச்சிலைக்கு மாலை … Read more

2025ம் ஆண்டிற்கான தமிழக அரசின் ”சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது”! பரிந்துரைகள் வரவேற்பு…

சென்னை:  2025ம் ஆண்டிற்கான தமிழக அரசின் ”சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது” வழங்குவதற்கு உரிய விருதாளரை தேர்ந்தெடுக்க பரிந்துரைகள் வரவேற்கப்படு வதாக சென்னை  மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு  வளியிட்டு உள்ளது. 2025ம் ஆண்டிற்கான தமிழக அரசின் ”சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது” வழங்குவதற்கு உரிய விருதாளரை தேர்ந்தெடுக்க பரிந்துரைகள் வரவேற்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார். இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், சமூக நீதிக்காக பாடுபடுபவர்களை சிறப்பு செய்வதற்காக ”சமூக நீதிக்கான தந்தை பெரியார் … Read more

சென்னையில் பன்னாட்டு புத்தகக் கண்காட்சி ஜனவரி 16 முதல் 18 வரை நடைபெறும்! அமைச்சர் அன்பில் மகேஷ்

சென்னை: சென்னையில் பன்னாட்டு புத்தகக் கண்காட்சி ஜனவரி 16 முதல் 18 வரை நடைபெறுகிறது என கல்வி அமைச்சர்  அன்பில் மகேஷ் அறிவிததுள்ளார்.  தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் (பபாசி) சார்பில் ஆண்டுதோறும் நடைபெறும் புத்த கண்காட்சி 2026ம் ஆண்டு ஜனவரி 7ந்தேதி தொடங்குகிறது.  பபாசியின்  49-வது சென்னை புத்தகக் கண்காட்சி, ஜனவரி 7 முதல் 19 வரை (13 நாட்கள்) நந்தனம் YMCA திடலில் நடைபெறுகிறது. இந்த புத்த கண்காட்சியை முதலமைச்சர் மு.க. … Read more

சுயவேலைவாய்ப்பு, மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு ரூ.20 லட்சம் வரை கடன் வசதி! தமிழ்நாடு அரசு அறிவிப்பு…

சென்னை: மகளிர் சுய உதவிக் குழு மற்றும் சுயவேலைவாய்ப்பு தொடர்பாக ரூ.20 லட்சம் லோன் பெறுவது தொடர்பான இரண்டு முக்கிய திட்டங்கள் குறித்த அப்டேட்டை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.  தமிழக மக்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து தமிழ்நாடு அரசு சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. அனைத்துத் துறைகளில் இந்தியாவிற்கே முன்மாதிரி மாநிலமாகவும் திகழ்கிறது. பெண்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த, ஏராளமான திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. குறிப்பாக மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலம் குறைந்த வட்டியில் கடனுதவி வழங்குவதுடன், … Read more

‘சித்த மருத்துவப் பல்கலைக்கழக மசோதா’வை குடியரசுத் தலைவர் ஒப்புலுக்கு அனுப்பினார் ஆளுநர் ஆர்.என்.ரவி…

சென்னை:  தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றிய தமிழ்நாடு சித்த மருத்துவப் பல்கலைக்கழக மசோதா 2025,க்கு ஒப்புதல் அளிக்காத ஆளுநர்  ஆன்.என்.ரவி, அதை குடியரசு தலைவருக்கு அனுப்பி வைத்துள்ளார். இது தமிழ்நாடு  சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழ்நாடு சித்த மருத்துவப் பல்கலைக்கழக மசோதா, 2025, தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு கிட்டத்தட்ட 50 நாட்களுக்குப் பிறகு, ஆளுநர் ஆர். என். ரவி இந்த மசோதாவை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவின் ஒப்புதலுக்காக அனுப்பி வைத்துள்ளதாக கூறப்படுகிறது. தமிழ்நாடு சட்டமன்றத்தில் கடந்த 2022ம் … Read more

புதுச்சேரியில் நாளை  தவெக பொதுக்கூட்டம் – கியூர் கோடு மூலம் அனுமதி!

சென்னை: தவெக தலைவர் விஜயின் புதுச்சேரி பொதுக்கூட்டத்துக்கு அம்மாநில காவல்துறை கடுமையான  கெடுபிடிகளை அறிவித்து உள்ளது. பொதுக்கூட்டத்திற்கு வருவோர்  கியூர் கோடு மூலமே அனுமதிக்கப்படுவர் என்றும், தமிழ்நாட்டில் இருந்து வரும் தவெகவினருக்கு அனுமதிகிடையாது என்றும் கூறி உள்ளது. புதுச்சேரி உப்பளம் ஹெலிபேடு மைதானத்தில் நாளை (டிச.9) தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் பிரமாண்டமான பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. ‘ஏற்கனவே ரோடு ஷோ நடத்த அனுமதி கேட்டிருந்த நிலையில், புதுச்சேரி அரசு அதற்கு அனுமதி மறுத்தது. ரோடு ஷோக்கு … Read more

தமிழ்நாடு வானிலை நிலவரம்: டெல்டா வெதர்மேன், தமிழ்நாடு வெதர்மேன் தகவல்…

சென்னை: தமிழ்நாடு வானிலை நிலவரம் எப்படி உள்ளது என்பது குறித்த  டெல்டா வெதர்மேன், தமிழ்நாடு வெதர்மேன் தகவல் வெளியிட்டு உள்ளனர். அந்தமானை ஒட்டிய தென்கிழக்கு வங்ககடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது. இதன் காரணமாக 5ம் சுற்று வடகிழக்கு பருவமழை டிசம் 9 முதல் 12 வரை பரவலாக பதிவாகும் என குறிப்பிட்டுள்ளார். புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி டிசம்பர் 15ம் தேதி உருவாகி, 5ம் சுற்று வடகிழக்கு பருவமழை டிசம் 16 முதல் 20 … Read more

அமைச்சர் நேருவின் ரூ.888 கோடி ஊழல்: விசாரணைக்கு அஞ்சி திமுக அரசு தப்பி ஓடுவது ஏன்? அன்புமணி கேள்வி

சென்னை: திமுக அமைச்சர் கே.என்.நேருவின் ரூ.888 கோடி ஊழல் தொடர்பான விசாரணைக்கு அஞ்சி  திராவிட மாடல் அரசு என கூறிக்கொள்ளும் திமுக அரசு,  விசாரணைக்கு அஞ்சி தப்பி ஓடுவது ஏன்? என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பி உள்ளார். தமிழ்நாட்டில் 1.30 கோடி இளைஞர்கள் படித்துவிட்டு தகுதிக்கு ஏற்ற வேலை கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர். லட்சக்கணக்கான இளைஞர்களின் அரசு வேலை கனவுகளை திமுக அரசு தட்டிப் பறித்திருக்கிறது என கடுமையாக சாடியுள்ளார். இதுகுறித்து பா.ம.க. … Read more

திமுகவினர் இன்னும் தீவிரமாக பணியாற்ற வேண்டும்! மாவட்டச்செயலாளர்கள் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின்

சென்னை: வரைவு வாக்காளர் பட்டியலுக்குப் பிறகு திமுகவினர் இன்னும் தீவிரமாக பணியாற்ற வேண்டும் என திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் திமுக தலைவரும், முதல்வருமான   மு.க. ஸ்டாலின்  கூறினார். திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் டிச.8ம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறும் என கட்சியின் பொதுச்செயலாளரான அமைச்சர் துரைமுருகன் ஏற்கனவே அறிவித்திருந்தார். அதன்படி இன்று காலை அண்ணா அறிவாலயத்தில்,  முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் காணொலி காட்சி மூலம் கூட்டம் நடைபெற்றது. இதில்,   ‘என் … Read more

ஓபிஎஸ் உடன் அண்ணாமலை திடீர் சந்திப்பு… அரசியல் பரபரப்பு…

கோவை: கோவையில்   நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை திடீரென சந்தித்து பேசியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதிமுக கூட்டணியில் பாஜக உள்ள நிலையில், அதிமுக மூத்த தலைவர் செங்கோட்டையன் உள்பட சில தலைவர்கள், தவெக, திமுக என மாற்றுக்கட்சிகளில் இணைந்து வருகின்றனர். அதிமுகவில் இருந்து பிரிந்து சென்ற தலைவர்களை மீண்டும் அதிமுகவில் இணைக்க வேண்டும்‘ கூறிய  செங்கோட்டையனை கட்சியின் பொதுச்செயலாளர் செங்கோட்டையில், நீக்கிய நிலையில், … Read more