பள்ளிக்கல்வித்துறை சார்பில் 386 பேருக்கு நாளை நல்லாசிரியர் விருது!

சென்னை: தமிழ்நாட்டில், தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித்துறை சார்பில் 386 பேருக்கு நல்லாசிரியர் விருது  அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விருதகளை நாளை வழங்கப்படுகிறது. 2022-23-ம் ஆண்டுக்கான டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதான நல்லாசிரியர் விருது பெறுபவர்களின் பட்டியலை பள்ளி கல்வித்துறை வெளியிட்டு இருக்கிறது இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதியான ராதாகிருஷ்ணன் பிறந்தநாளான செப்டம்பர் மாதம் 5ம் தேதி ஒவ்வொரு ஆண்டும் ஆசிரியர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாளில் இந்தியா முழுவதும் சிறப்பாக பணியாற்றி ஆசிரியர்களின் சேவையை பாராட்டி மத்திய, மாநில அரசுகள் … Read more

ஜெயிலர் படத்தின் மாபெரும் வெற்றிக் கொண்டாட்டம்… அனிருத்துக்கு போர்ஷே கார் பரிசளித்த கலாநிதி மாறன்…

விக்ரம், பொன்னியின் செல்வன் ஏற்படுத்திய வசூல் சாதனையை முறியடித்து 600 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது ரஜினியின் ஜெயிலர் திரைப்படம். இந்தப் படத்தின் சூப்பர் டூப்பர் வெற்றியைத் தொடர்ந்து ரஜினிகாந்தை ஊக்கப்படுத்தும் விதமாக பெரிய தொகைக்கு செக் ஒன்றும் பி.எம்.டபுள்யூ காரையும் பரிசளித்தார் படத்தின் தயாரிப்பாளர் கலாநிதி மாறன். அதேபோல் இயக்குனர் நெல்சனுக்கும் ஊக்கத்தொகையும் போர்ஷே கார் ஒன்றையும் பரிசளித்தார். இந்த நிலையில் இந்தப் படத்தின் வெற்றிக்கு மற்றொரு காரணமாக இருந்த இசையமைப்பாளர் அனிருத்துக்கு போர்ஷே கார் … Read more

பருவமழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ரூ.181.40 கோடியில் நிவாரணம் வழங்கினார் முதலமைச்சர் ஸ்டாலின்…

சென்னை: பருவமழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ரூ.181.40 கோடியில் தலமைச்சர் ஸ்டாலின் நிவாரணம் வழங்கினார் . சென்னை தலைமைச்செயலகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில்,  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விவசாயிகளுக்கு வேளாண் வளர்ச்சி நிவாரண நிதி ஆணைகளை  வழங்கினார். மேலும்,  பருவமழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ரூ.181.40 கோடியில் நிவாரணம் வழங்கினார். மேலும், விவசாயிகளுக்கு பவர் டில்லர்கள், விசை களையெடுப்பான் கருவிகளையும் முதல்வர் வழங்கினார். உழவர் நலத்துறை சார்பில் ரூ.62.42 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள கட்டடங்கள் திறப்பு ரூ.35 கோடியில் 3907 பவர்டில்லர்கள், … Read more

செந்தில் பாலாஜி ஜாமின் மனுவை சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் விசாரிக்கலாம்! சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் மனுவை சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் விசாரிக்கலாம் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில், அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள அமைச்சர்  செந்தில் பாலாஜி ஜாமின் மனு மீதான விசாரணை குறித்து,  சிறப்பு நீதிமன்றம் மற்றும்  சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம்  விசாரிக்க மறுத்த நிலையில்,  சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் அமர்வு, தலைமை … Read more

தேசிய அளவில் பதக்கம் வென்ற 134 வீரர், வீராங்கணைகளுக்கு ஊக்கத்தொகை! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

சென்னை:  தேசிய அளவில் பதக்கம் வென்ற 134 வீரர், வீராங்கணைகளுக்கு ஊக்கத்தொகையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார் சென்னை தலைமைச்செயலகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சயில், கேலோ இந்தியா உள்ளிட்ட போட்டிகள் மற்றும் தேசிய அளவில் பதக்கம் வென்ற  தங்கப்பதக்கம் பதக்கம் வென்ற 134 வீரர், வீராங்கணைகளுக்கு ரூ.2.24 கோடி ஊக்கத்தொகையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

நிலவில் தாவி குதித்து இருப்பிடத்தை ஒரு அடி தூரத்தில் மாற்றியது விக்ரம் லேண்டர்! வைரல் வீடியோ…

பெங்களூரு: நிலவை ஆராய்வதற்காக  அங்கு தரை  இறங்கிய விக்ரம் லேண்டரின் இருப்பிடத்தை  சுமார் 30 முதல் 40 செ.மீ தூரத்துக்கு இஸ்ரோ  மாற்றி  சாதனை படைத்து உள்ளது. விக்ரம் லேண்டர் தாவி குதித்த வீடியோ வைரலாகி வருகிறது. சந்திரயான் லேண்டர் விக்ரம்  நிலவின் தென்துருவத்தில் தரையிறக்கப்பட்டது. இதையடுத்து அந்த இடத்துக்கு சிவசக்தி என பிரதமர் மோடி பெயரிட்டார். அந்த பகுதியில் நிலை கொண்டிருந்த லேண்டர், அங்கிருந்து சற்று  மேல் எழுப்பி தாவி குவித்து, அருகே உள்ள இடத்தில் … Read more

செப்டம்பர் 16ந்தேதி திமுக எம்.பி.க்கள் கூட்டம்! துரைமுருகன் அறிவிப்பு..

சென்னை:  பாராளுமன்ற சிறப்பு கூட்டத்தொடருக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், செப்டம்பர் 16ந்தேதி திமுக எம்.பி.க்கள் கூட்டம் நடைபெறும் என திமுக பொதுச்செயலாளர் அமைச்சர் துரைமுருகன் அறிவித்து உள்ளார். பார்லிமென்ட் சிறப்புக் கூட்டத்தொடர் வரும் செப்டம்பர் 18 முதல் 22ம் தேதி வரை நடைபெற உள்ளது.  இந்த கூட்டத்தொடரில் கேள்வி நேரம் இடம்பெறாது என்பதுடன், ஒரே நாடு ஒரே தேர்தலை நடத்துவதற்கான சட்ட திருத்தத்தை கொண்டுவர மத்திய பாஜக அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், நாடாளுமன்ற … Read more

கானா பாடல் பாடி அசத்திய சுதா ரகுநாதன்…

சிம்புதேவன் இயக்கத்தில் யோகி பாபு நடிப்பில் உருவாகி வரும் படம் போட். முழுக்க முழுக்க கடலில் நடப்பது போல் எடுக்கப்பட உள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு இரண்டு மாதங்களுக்கு முன் துவங்கி நடைபெற்று வருகிறது. தற்போது இந்தப் படத்திற்காக பிரபல கர்நாடக இசை பாடகி சுதா ரகுநாதன் ஒரு கானா பாடலை (ஃபியூஷன்) பாடியுள்ளார். ஜிப்ரான் இசையில் உருவாகி இருக்கும் இந்த பாடல் குறித்து சிம்புதேவன் தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ளார். நண்பர் @GhibranVaibodha இசையில்.. இசை … Read more

நெல்லை பாஜக பிரமுகர் கொலை வழக்கில் தி.மு.க., முன்னாள் மேயர் உமாமகேஸ்வரியின் உறவினர் கைது!

நெல்லை: நெல்லை பாஜக பிரமுகர் ஜெகன் கொலை செய்யப்பட்டது தொடர்பாக கொலையாளிகளை கைது செய்ய வலியுறுத்தி இன்று பாஜக சார்பில் போராட்டம் அறிவித்த நிலையில், இந்த கொலை தொடர்பாக திமுக முன்னாள் மேயர் உமாமகேஸ்வரியின் உறவினர்  பிரமுகரான பிரபு என்பவர்  சரண்டர் ஆகி  உள்ளார். இதையடுத்து அவரை காவல்துறையினர் கைது செய்தனர். தலைமறைவாக இருந்த தி.மு.க., நிர்வாகி பிரபு  என்பவர், பாஜகவின் போராட்ட அறிவிப்பை தொடர்பாக வக்கீல்கள் முன்னிலையில் போலீசில் சரணடைந்தார். இதையடுத்து போலீசை கண்டித்து பா.ஜ. … Read more

மழைநீர் வடிகால் பணிகள் 45நாளில் முடிக்க தலைமைச்செயலாளர் கெடு!

சென்னை:  மழைநீர் தேங்குவதால் பாதிப்புள்ளாக்கி வரும், சென்னை கிளாம்பாக்கம் பேருந்துநிலையம் எதிரில், ஜிஎஸ்டி சாலையில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணியை 45 நாட்களில் முடிக்குமாறு தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா அறிவுறுத்தியுள்ளார். தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா தலைமையில் வெள்ளத் தடுப்பு நடவடிக்கை, வடகிழக்குப் பருவமழையை எதிர்கொள்ளுதல், சென்னையில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் தொடர்பாக தலைமைச் செயலகத்தில்  ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில்,   நீர்வள ஆதாரம், நெடுஞ்சாலை, நகராட்சி நிர்வாகம், வருவாய்த் துறை செயலர்கள், மாநகராட்சி … Read more