ஜல்லிக்கட்டு போட்டியின்போது காளை முட்டி 5ஆண்டுகளில் 102 பேர் பலி!

மும்பை:  கடந்த 5 ஆண்டுகளில் ஜல்லிக்கட்டு போட்டிகளில் காளை முட்டியதில் 102 பேர் உயிரிழந்திருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. மும்பையை சேர்ந்த எல்சா (ELSA) பவுண்டேசன் என்ற அமைப்பு தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு போட்டிகளில் நிகழ்ந்த மரணங்கள் குறித்து ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், ஜல்லிக்கட்டு போட்டிக்கு புதிய சட்டம் கொண்டுவரப்பட்ட பிறகு 2017-ம் ஆண்டு முதல் தற்போது வரை காளைகள் முட்டியதில் 81 பார்வையாளர்கள், 21 மாடுபிடி வீரர்கள் உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு … Read more

மதுரை எய்ம்ஸ் பணிகள் தாமதத்திற்கு மத்தியஅரசுதான் காரணம்! அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை:  மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணிகள் தாமதத்திற்கு மத்தியஅரசுதான் காரணம் என அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்து உள்ளார். மதுரை எய்ம்ஸ் தொடர்பாக நாடாளுமன்றத்தில் தமிழக எம்.பி.க்கள் எழுப்பிய கேள்விக்கு மத்திய அமைச்சர் கடுமையான முறையில் பதில் அளித்தார். திமுக எம்.பி.க்கள் வேண்டுமென்றே இந்த விஷயத்தில் அரசியல் செய்வதாக குற்றம் சாட்டினார். இது பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து இன்று செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன்,  ‘மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை 750 படுக்கைகளுடன் 45 மாதங்களில் … Read more

விமான நிலையத்துக்கு எதிரான பரந்தூர் 13 கிராம மக்களின் போராட்டம் 200வது நாளை எட்டியது… தவாக தலைவர் வேல்முருகன் பங்கேற்பு…

சென்னை: காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைய உள்ள புதிய விமான நிலையத்துக்கு அந்த பகுதியைச் சேர்ந்த பரந்தூர் உள்பட  13 கிராம மக்கள் நடத்தி போராட்டம் இன்று  200வது நாளை எட்டி உள்ளது. இன்றைய போராட்டத்தில் திமுக கூட்டணி கட்சியான தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் கலந்துகொள்ள உள்ளதாக கூறப்படுகிறது. இன்றைய போராட்டத்தில் கலந்துகொள்ள சென்ற பூவுலகின் நண்பர்கள் குழுவை சேர்ந்தவர்களை காவல்துறை, அங்கே செல்ல விடாமல் தடுத்து நிறுத்தி, காவல்நிலையத்துக்கு அழைத்துச் சென்றுள்ளது. அதுபோல வேல்முருகனும் … Read more

ஈரோடு கிழக்கு தொகுதி மேலும் 2 கம்பெனி பாதுகாப்பு: ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் 5 மின்னணு இயந்திரங்கள்…

ஈரோடு: இடைத்தேர்தல் நடைபெற உள்ள ஈரோடு கிழக்கு தொகுதியில், ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் 5 மின்னணு இயந்திரங்கள் வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட 2 கம்பெனியை சேர்ந்த 180 மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் வந்துள்ளனர். இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதியில் வரும் 27-ந் தேதி வாக்குப்பதிவு  நடைபெறுகிறது. இந்த  இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு கடந்த மாதம் 31-ந் தேதி தொடங்கி கடந்த 7-ந் தேதி  முடிவடைந்தது. வேட்புமனுக்கள் பரிசீலனை, … Read more

மேற்குவங்கத்தில் முறைகேடாக ஆசிரியர் பணி நியமனம் பெற்ற 1,911 பேர் பணி நீக்கம்! நீதிமன்றம் அதிரடி

கொல்கத்தா: மம்தா பானர்ஜி முதல்வராக உள்ள மேற்குவங்க மாநிலத்தில் நடைபெற்ற மாபெரும் ஆசிரியர் நியமன ஊழல் தொடர்பான வழக்கில், முறைகேடாக பணி நியமனம் பெற்ற 1911 ஆசிரியர்களின் நியமனங்களை ரத்து செய்து கொல்கத்தா உயர்நீதிமன்றம் அதிரடி அதிர்ச்சி தீர்ப்பு வழங்கி உள்ளது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேற்குவங்கத்தில்  பள்ளி ஆசிரியர் நியமனத்தில் பெரும்  ஊழல் நடைபெற்றது வெளிச்சத்துக்கு வந்தது. இது தொடர்பாக, மம்தா பானர்ஜி அமைச்சரவையில் இருந்த பார்த்தா சாட்டர்ஜி  மற்றும் அவருக்கு உதவியாக … Read more

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு ஆதரவாக வரும் 19ம் தேதி கமல்ஹாசன் பிரசாரம் செய்ய இருக்கிறார்

சென்னை: இடைத்தேர்தல் நடைபெறும் ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர்  ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு ஆதரவாக  வரும் 19ம் தேதி மநீம தலைவர் கமல்ஹாசன் பிரசாரம் மேற்கொள்வார் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இடைத்தேர்தல் நடைபெறும் ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் இவிகேஎஸ் இளங்கோவன் போட்டி யிடுகிறார். அவருக்கு ஆதரவாக திமுக கூட்டணி கட்சியினர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், ஏற்கனவே ஆதரவு தெரிவித்த மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர்  … Read more

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: தேமுதிக வேட்பாளருக்கு ஆதவராக பிரேமலதா 6நாள் பிரசாரம்…

சென்னை: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளருக்கு ஆதவராக, கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த்  6நாள் பிரசாரம் மேற்கொள்ள உள்ளதாக தகவல் அறிவிக்கப்பட்டு உள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்த திருமகன் ஈவெரா ஜனவரி 4ஆம் தேதி மாரடைப்பால் காலமானார். இதையடுத்து, அந்தத் தொகுதி காலியான தாக அறிவிக்கப்பட்டு,  இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து, அங்கு ஜனவரி 31முதல் வேட்புமத்தாக்கல் நடைபெற்ற பிப்ரவரி 6ந்தேதியுடன் முடிவடைந்தது. இதைத்தொடர்ந்து வேட்புமனுக்கள் பரிசீலனை மற்றும் வாபஸ்-க்கான … Read more

எல்.ஐ.சி. கடந்த ஆண்டைவிட 27% உயர்வு, வரிக்குப் பிறகு 3வது காலாண்டு லாபம் ரூ.6,334 கோடி…

டெல்லி: LIC Q3 லாபம் கடந்த ஆண்டின் காலாண்டை விட 27 மடங்கு உயர்ந்துள்ளது, Q3 PAT ரூ 6,334 கோடியாக உயர்ந்துள்ளது இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் (எல்ஐசி) 2.47% முன்னேறி ரூ. 628.50 ஆக இருந்தது,  நிதியாண்டின் மூன்றாம் காலாண்டில் ரூ. 6,334.2 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளது. டிசம்பர் 31, 2022 இல் முடிவடைந்த காலாண்டில் காப்பீட்டாளரின் மொத்த பிரீமியம் வருமானம் 14.51% அதிகரித்து ரூ.1,11,787.60 கோடியாக இருந்தது, முந்தைய ஆண்டின் இதே … Read more

திமுக எம்.பி. ஆ.ராசா மீதான சொத்துக்குவிப்பு வழக்கு 22ந்தேதிக்கு ஒத்திவைப்பு…

சென்னை: திமுக எம்.பி. ஆ.ராசா தீமதான சொத்துக்குவிப்பு வழக்கின் விசாரணையின்போது, நாடாளுமன்றம் நடைபெறுவதை ராசா தரப்பு காரணம் காட்டியதால் வழக்கை சிறப்பு நீதிமன்றம் வரும் 22ந்தேதிக்கு தள்ளி வைத்துள்ளது. திமுக துணை பொதுச்செயலாளரும், தற்போது நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ.ராசா வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கடந்த 2015ம் ஆண்டு சிபிஐ வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கு தொடர்பாக ஆ.ராசாவுக்கு சொந்தமான இடங்களில் சென்னை, திருச்சி, கோவை, பெரம்பலூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை நடைபெற்றது. சுமார் … Read more

2047க்குள் இந்தியாவை இஸ்லாமிய நாடாக மாற்ற பிஎஃப் அமைப்பு முயற்சி! ஏடிஎஸ் குற்றப்பத்திரிகையில் தகவல்..

மும்பை: 2047க்குள் இந்தியாவை ஷரியாவுக்கு இணங்க இஸ்லாமிய நாடாக மாற்ற PFI விரும்புகிறது என மகாராஷ்டிர ஏடிஎஸ் (Maharashtra Anti-Terrorist Squad (ATS)) நீதிமன்றத்தில் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் தெரிவித்து உள்ளது. அதாவத, கலப்பு திருமணம் (லவ்ஜிகாத்) மூலம் இஸ்லாமிய சமூகத்தை பெருக்க திட்டமிட்டு வந்தது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இது பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. ஐஎஸ் உள்ளிட்ட தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பு இருப்பதாகக் கூறி பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா (பிஎஃப்ஐ) அமைப்புக்கு 5 ஆண்டுகள் … Read more